விஷ்ணு விஷால் மமீதா பைஜூ நடிக்கும் #IranduVaanam
திரைப்படத்தின் first single "வெள்ளிச் சுடரே"..
தற்போது நீக்கமற நிறைந்திருக்கும் pressure சூழலில் மெல்லிய தென்றலாய் அன்பை விதைக்கும் ஒரு பாடல்.
இசையமைப்பாளர் @dhibuofficial கொடுத்துள்ள ஒரு அற்புதமான மெலடி பாடல் ♥️♥️ ♥️
ரிப்பீட்டில் கேட்கும் படியாய் பாடலும் இசையும். இந்த கோடைக்கு ஏற்ற குளிர் தென்றல்.
https://t.co/EnCceEjE3x
இனியொருவர் வாழவே முடியாத உன்னத வாழ்வு உங்களது. இனியொருவர் செய்யவே முடியாத மக்களுக்கான போராட்ட அரசியல் உங்களது. அரசு மருத்துவமனையில் உயிர் பிரிவது என்பது உங்களைப் போன்ற இடதுசாரி இயக்க தலைவர்களுக்கு மட்டுமே உரிய வரலாறு. சொல்லுக்கும் வாழ்வுக்கும் இடைவெளியற்ற, இணையற்ற எங்கள் ஆர்.என்.கே தோழரே... போய் வாருங்கள். உங்கள் கைகளின் வெப்பம் எப்போதும் எங்கள் நெஞ்சங்களில் தகித்திருக்கும். இந்தக் கடினமான சமூக சூழலில், உங்கள் அறத்தின் நிழல் வரும் தலைமுறைகளின் மீது பரவட்டுமாக.
செவ்வணக்கம் தோழர்! ✊
#redsalute #ComradeNallakannu
The curse returns and the king’s hunt reloads 🔥
#MaragadhaNaanayam2 officially takes off with a stellar crew. Adding to the excitement, @priyabhavanishankar and #Sathyaraj join the star-studded and our favourite lineup of #MaragadhaNaanayam !
🔗 https://t.co/NjjmfZCvPy
அதனால் தான் அவர் தமிழ்நாட்டின்தந்தை 🖤🖤
பெரியார்
90-வது வயதில் 180 கூட்டம்.
91-வது வயதில் 150 கூட்டம்.
93-வது வயதில் 249 கூட்டம்.
94-வது வயதில் 229 கூட்டம்.
வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில் (95-வது வயதில்) 42 கூட்டம்.
இத்தனையும், கடும் நோயின் வலிகளுடன்...
ஹெர்னியா பிரச்னையினால் சரிந்துவிழும் குடலை பெல்ட் வைத்துக் கட்டிக்கொண்டு கூட்டம் பேசச் சென்றார்..
சிறுநீர் கழிக்க வயிற்றுக்குப் பக்கவாட்டில் ஓட்டைப்போட்டு குழாய் செருகப்பட்டிருக்கும்..
இதையெல்லாம் எந்த ஆட்சியை பிடிக்க செய்தார்.?
எத்தனை தலைமுறைக்கு சொத்து சேர்க்க செய்தார்.?
அவருக்கும் கடவுளுக்கும் வாய்க்கால் தகராறா.?
மதங்களுக்கும் அவருக்கும் முன் விரோதமா.?
நான் சொல்வதை கேட்டால் தான்
உனக்கு சொர்கம்;
என்னை வணங்காவிட்டால் நரகம்
என்று கூறும் கடவுள்கள், சாமியார்களுக்கிடையில்...
நான் தலைவன் நான் தவறே செய்தாலும் எனக்கு நீ முட்டு கொடுத்தே ஆக வேண்டுமென்று கட்டளையிடும் தலைவர்கள் மத்தியில்,
யார் சொன்னாலும், நானே சொன்னாலும் உன் அறிவைக் கொண்டு, அனுபவத்தைக் கொண்டு, படிப்பினையைக் கொண்டு ஆராய்ந்து உன் அறிவு ஏற்றுக்கொண்டால் ஏற்றுக்கொள், இல்லையென்றால் விட்டுவிடு என்று சொன்ன ஒரே தலைவர் இவர் மட்டும்.
அதனால்தான் அவர் பெரியார். மறைந்தும் வாழ்கிறார் தத்துவமாக.
கொள்கை எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக...
#PeriyarForever #Periyar #SocialJusticeDay
கோபி சுதாகரின் Society பாவங்கள் வீடியோ வெளியானபோது அது வழக்கம்போல அந்த நேரத்து Contentஐ தேற்றி போட்ட வீடியோ போல இருந்தது..
ஆனால் வீடியோ ஜாதிய பெருமை பேசிய கூட்டத்தை கடும் கேலி செய்து அப்பெருமை பேசிக்கொண்டு திரிந்தவர்களை அமைதியாக்கிவிட்டது.. ஆணவ"க்கொ"லை நடந்து அதை வைத்து வீரப்பரம்பரை வசனம் பேச எத்தனித்த கூட்டத்தை கண்ணுல மொளகா பொடிய போட்டு வெ"ட்டிருக்க நீ வீரனா என இறங்கி துப்பியுள்ளது..
நம்ம பரம்பரை எப்புடி தெரியுமானு பேசும் கூட்டத்தை பஸ்டாண்ட்ல பொரி கடலை கடை போட்ருந்தார் வள்ளலார் மடத்துல ஓசில சோறு வாங்கி தின்னாருனு கடும் கிண்டலால் வறுத்து எடுத்திருக்கிறது..
ஜாதிய கூட்டத்தின் படிப்பறிவில்லாத தன்மை, ஜாதிக்காக ஏத்தி விட்டு குற்றம் நடந்ததும் கழன்றுகொள்ளும் கோமாளிகள் இருபக்க நியாயத்தையும் பாருங்கள் என வித்தியாசமாக உருளும் ஜந்துகள் என அனைத்தையும் உடைத்திருக்கிறார்கள்
ஜாதி ஒழிப்பை நீண்டகால குத்தகைக்கு எடுத்தது போல் திரியும் கூட்டம் எல்லாம் சட்டம் வந்தால் ஆணவக்கொ"லை நடக்காமல் இருக்குமா அதுவும் வரட்டும் என பல்லுபடாமல் பாத்து பாத்து செய்து கொண்டு இருந்த நிலையில் இந்த வீடியோ ஒரு கூட்டத்தின் பெருமையை பகடியாக்கி அதுல ஒன்னும் இல்ல கீழ போட்ரு என உச்சியில் அடித்தாற்போல் சொல்லியிருக்கிறது.
இந்த ஜாதிய கோமாளித்தனங்களை இங்கே மாஸ் மீடியாவில் அவை கோமாளித்தனம் என கூறி பகடி செய்து விட ஆள் இல்லாமல் கிடந்தது.. இந்த வீடியோ அதை கச்சிதமாக கடுமையாக செய்திருக்கிறது.
கோபி சுதாகர் டீமுக்கு வாழ்த்துகள் அவர்களுக்கு வரக்கூடிய அழுத்தத்திற்கு உடன்நிற்க வேண்டியது அவசியம்.
பள்ளியில் தங்களை விட நன்றாக படித்து விட்டால் துரத்தும் சாதி
கபடி போட்டியில் வெற்றி பெற்று விட்டால் துரத்தும் சாதி
தங்கள் கண்ணெதிரே பைக் ஓட்டினால் துரத்தும் சாதி
காதலித்தால் துரத்தும் சாதி
இறந்த பின் சுடுகாட்டிலும் துரத்தும் சாதி
இந்த சாதிய சமூகம் மிக கொடும் அச்சத்தை விதைத்து கொண்டு இருக்கிறது.. இந்த சாதியை தூக்கி திரிபவர்கள் எல்லாம் பரிணாம வளர்ச்சியில் கடைசி படிநிலையில் இருக்கும் உயிரினங்கள் பட்டியலில் கூட இடம்பெற தகுதியற்றவர்கள்..
பிள்ளைகளை இழந்த தாயின் கதறல்தான் உலகில் துயரமானது..
ஜாதிகளற்ற ஓர் இடத்தில் அமைதியாக ஓய்வெடு நண்பா 💔
- Che Karthikeyan
கவின்குமார் நண்பர்களுடன் சந்தோசமாக இருக்கும் வீடியோவை பார்க்கும் போது மனசு அவ்வளவு கணக்கிறது
ஒரு அறிவாளி பிள்ளை வெறும் சாதி வெறிக்கு பலியாகி இருப்பதை ஏற்றுகொள்ளவே முடியவில்லை ஆணவ கொலைகளை அரசின் திவிர நடவடிக்கையால் மட்டுமே இதை கட்டுபடுத்த முடியும்
#JusticeForKavinkumar
பாளையங்கோட்டையில் கவின் செல்வகணேஷ் எனும் 27 வயது ஐடி ஊழியர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கொடும்குற்றத்தைச் செய்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தரவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். கவினை இழந்து வாடும் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சாதிய வன்கொடுமை எனும் சமூக இழிவிற்கு எதிராக அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்று திரள வேண்டும். சாதிதான் நம்முடைய முதல் எதிரி என்பதை உணர வேண்டும். முற்றுப்புள்ளி எட்டும் வரை போராட வேண்டும்.