எனக்கு புரியல... ஆட்சிக்கு வந்து 60 நாள் ஆகிடுச்சி....
ஒரு பொருளின் விலைவாசி கூட குறையல ? சொன்ன வாக்குறுதியை ஒன்றுகூட நிறைவேற்றவில்லை
200 யூனிட் மின்சாரம் இலவசம்னு சொன்னான் .... 1000 ரூபாய் கட்டுனவன் எல்லாம் 3000 ரூபாய் கட்டுறேன்னு ஆதாரத்தோடு பதிவு போடுறான்
விவசாய கடன் தள்ளுபடி ஆகலனு டெல்டா விவசாயி ரோட்டுல நின்று போராடுறான் .... ஜூன் 12 ந்தேதி திறக்க வேண்டிய காவேரி தண்ணீர் இன்னும் திறக்கவில்லை. டெல்டாவிற்கு தண்ணீர் சரியான நேரத்தில் போய் சேராமல் இருந்தால் இந்த வருடம் விவசாயம் பாழாகிவிடும் ... அடுத்த வருடம் சோற்றுக்கு சிங்கி தான் அடிக்கணும். இப்பவே 25 Kg அரிசி 1800 ரூபாய்க்கு போய்டுச்சி
கவர்ச்சி அரசு அறிவித்த சிங்க பெண் படை நாலு நாள் ரீல்ஸ் போட்டுட்டு எங்க போய் ஒழிஞ்சிக்கிச்சினு தெரியல...
717 டாஸ்மாக் கடைகளை மூடிட்டோம்னு அறிவிப்பு விட்டுட்டு .... 1500க்கு மேற்பட்ட எலைட் கடைகளை திறந்து வெளிமாநில மதுபானங்களை விற்க போறோம்னு அறிவித்தாகி விட்டது ...
டாஸ்மாக் ஊழியரின் சம்பளத்தை உயர்த்தி 10 ரூபாய் வாங்குவதை ஒழிக்க போறோம்னு சொன்னானுங்க.... அதெல்லாம் கூந்தல்ல கூட முடியாதுடா ... நாங்க இப்ப 20 ரூபாய் வாங்குவோம்டானு முடிஞ்சத பாருனு டாஸ்மாக் ஊழியரே வீடியோ போடுறான்....
அப்புறம் பத்திரபதிவு துறை ஊழலை ஒழிச்சிட்டோம்னு சொல்லி பழனில 100 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை இரண்டு கோடிக்கு தனியாருக்கு தாரை வார்த்தானுங்க... இது மீடியா வெளிச்சத்தில் வந்தது ... வரமால் இன்னும் எவ்வளவு நடந்து இருக்கோ தெரியல .... ?
சத்தியமா வேற எதுவும் செய்த மாதிரி எனக்கு தெரியல... உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட் செய்யவும் ...
இப்படி எதுவுமே செய்யாத ஒருத்தன சினிமா என்ற மாய பிம்பத்தை வைத்து மதிப்பிட்டு அவனுக்காக ஆனந்தக் கண்ணீர் விடுவது அழுவது எல்லாம் மக்களின் அறியாமையா ? அல்லது முட்டாள்கள் உருவாக்கப்படுகிறார்களா ? என்பது சத்தியமாக தெரியவில்லை...
நான் கல்லூரி முடித்த காலம் முதல் அறிவேன் “சீமான் ஏதாவது எங்கேயாவது போராட்டம் மேடைகள் என பேசி வருவது”. பின்னாளில் ஈழத்து போர் காலத்தில் தமிழகத்தில் பல கல்லூரிகளை இணைத்து போராட்டங்களை கட்டமைத்து கொண்டிருந்தார் என நியாபகம். ஒரு முறை நான் அண்ணா காசரே ஊழலுக்கு எதிரான போராட்டத்தை 20 நாட்கள் மேலாக மதுரையில் முன்னின்று நடத்தி கொண்டி இருந்த போது - ஒரு சிறுவன் பள்ளி சிறுவன் வந்து “அண்ணே 7 பேர் விடுதலைக்கு சீமான் அண்ணே செய்கிறார் - நீங்களும் மதுரையில் உங்கள் குழுவோடு இணைந்து ஆதரவு தெரிவிக்க வேண்டும்” என்று. இப்படி அப்போதே பள்ளி மாணவர்களுக்கு கூட தெரியும் சீமான் யார் என. நீ என்ன பண்ணிடு இருந்த ? “தொட்ட பெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்” என வாயை போலந்து சினிமா கவர்ச்சி பாடல் பாடிட்டு திறந்திருப்ப. உனக்கு எப்படி அவரை தெரியும்.
சித்தாந்தம் சண்டைகள் உண்டு கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால் அவர் களத்தில் யார் என கேட்கும் தகுதி எவனுக்கும் இல்லை. முதலில் பிளாக் டிக்கெட் விற்றுக் கொண்டு திரிந்து - திடீரென்று அதிஷ்டத்தில் அதிகாரத்தில் கோட்டைக்கு போனவனுகளுக்கு இல்லையே இல்லை.
நாடு மக்கள் பொருளாதாரம் சித்ததம் என எந்த அறிவும் இல்லாமல் சினிமா தியாட்டர் பக்கம் திரிந்தவனை எல்லாம் மினிஸ்டர் ஆக்கினால் “யார் அவர்” என கேட்க தானே செய்வீர்.. எல்லாம் இந்த மக்களை சொல்லனும்..
ஏதோ ஒன்னு ரெண்டு பொய்ய சொல்லி ஆட்சி பிடிசாங்கன்னு நினைக்காதீங்க..
ஒட்டுமொத்தமாக பொய்யை மட்டுமே சொல்லி ஆட்சி புடிச்சிருக்காங்க..
பொய்யை மட்டுமே சொல்லி ஆட்சியும் பண்ணிட்டு இருக்காங்க.
#TVKFails#TVKVijayFails
திராவிடம்-முதலாலித்துவத்திற்கும் கம்யூனிசத்துக்குமான பாலம்
இருக்கும் அமைப்பில் எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் சட்டங்களை இயற்றி எல்லாத்துக்கும் எல்லாம் கிடைக்கப்பெறுவதுதான் அதன் கொள்கை
திமுகவால் முதலாலித்துவத்திலும் அரசியல் செய்ய முடியும் கம்யூனிசத்திலும் அரசியல் செய்ய முடியும்
இந்தியா சோசலிச license Raj ஆக இருந்தப்போது SIPCOT, TADCO உருவாக்கியது
Open market சென்றப்போது IT & Industrial Policy create செய்து Engineering & Medical courseல் Entranceஐ நீக்கி Counselling cutoff கொண்டுவந்து அனைவரையும் Engineer & Doctor ஆக்கியது
திமுக ஆட்சியில் அம்மாவை தவிர அதிமுக MLA க்கள் எல்லோரையும் சஸ்பெண்ட் செய்த கருணாநிதி, ஒரே ஒரு பெண்ணால் என்ன செய்து விட முடியும் என நினைக்க ஓட்டு மொத்த திமுக ஆட்சியாளர்களையும் ஒற்றை ஆளாக சட்டமன்றம் வந்து கர்ஜித்தார் அம்மா.
அப்பேர்ப்பட்ட சட்ட மன்றம் இன்று தற்குறிகளின் கையில் அதுவும் காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வருக்கு பேச டூப் போட்டு பேச வேண்டிய நிலையில் தமிழகம்...
நல்ல மாற்றம் 😡
7 மணி நேரமா எழுத்து கூட்டி படிச்சத
7 நிமிஷத்துல முடிச்சிட்டு போயிட்டாரு🤣🤣
தமிழ்நாட்டின் கடன் வரம்பு ஒன்றிய அரசு நிர்ணயித்த வரம்புக்குள் கட்டுப்பாடில்தான் இருக்கிறது
The name is தி.மு.கழகம் ❤️🖤💥💥💥
பாட்டிலுக்கு ₹10 செந்தில் பாலாஜிக்கும், ஸ்டாலினுக்கும் போகுதுன்னு பாட்டு பாடி ஆட்சியை புடிச்சுட்டு… இப்போ கேட்டா அது வந்து EB bill க்கும் & கடை ரெண்ட் க்காகவாம் 🤡
நெல்லு ஒரு மூட்டைக்கு ₹40 வாங்குறாங்கன்னு அலறிட்டு … இப்போ கேட்டா அது “நிர்வாக செலவு”க்குனு லெக்சர் 📚
எலக்ஷன் டைம் ல 50-வருஷமா திமுக தமிழ்நாட்டை சீரழிச்சிட்டீங்கன்னு கதறிட்டு … இப்போ NITI Aayogல போய் “நாங்க top state”னு self review குடுத்துட்டு இருக்கான் தற்குறி😂
மொத்தத்துல அண்ணன் ஆட்சி யை புடிச்சதே fullஆ scam பண்ணி தான்னு அவரே கன்பர்ம் பண்ணிட்டாரு.✔️
2025-ல ஸ்டாலின் NITI Aayog photo-வை வைச்சு பாஜக வுடன் கள்ள கூட்டணி “பூனைக்குட்டி வெளியே வந்துச்சு”ன்னு சொன்ன ஆளு இப்போ எங்க நீக்கிறாருன்னு பாத்தா அதே front rowல, அதுவும் பம்மிகிட்டு — இப்போ எந்த குட்டி வெளியே வந்துச்சு ப்ரோ? 🤔
இப்போ இதுக்கும் இந்த தற்குறிங்க ஃபயர் விட்டுட்டு இருக்கானுங்க🤣
அச்சா.. பகுத்!!! அச்சா!!! @TVKVijayHQ
அதெப்புடி
திமுக ஆட்சில பெண்கள் பாதுகாப்பு சரி இல்லைன்னா ஒழுங்கா ஆட்சி பண்ணலன்னு சொன்ன அதே வாய்
இன்னைக்கு உங்க ஆட்சியில பெண்கள் பாதுகாப்பு சரி இல்லைன்னா தனி மனித ஒழுக்கம் வேணும்ன்னு சொல்லுது 🤦♀️
#TVKFails
தமிழ்நாடு மக்கள் திமுகவுக்கு கொடுத்த வாய்ப்பு வெறும் 19 வருடங்கள் தான்..!
அந்த 19 வருடங்களில் திமுக சாதித்தது இமாலாயம் அளவில்..!
திமுக என்ன கிழித்ததுனு சொல்ரவனுங்க.. இந்தா படிச்சு தெறிஞ்சுக்கங்க.
1. அரசு போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது கலைஞர்.
2. பஸ் போக்குவரத்தை தேசியமையமாக்கியது கலைஞர்.
3. மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர்.
4. 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர்.
5. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது கலைஞர்.
6. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர்.
7. இலவச கண்ணொளித் திட்டம் கொடுத்தது கலைஞர்.
8. பிச்சைகாரர்கள் மறுவாழ்வு இல்லம் அமைத்தது கலைஞர்.
9. கை ரிக்ஷா ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷா கொடுத்தது கலைஞர்.
10. இலவச கான்கிரீட் வீடுகளை ஒடுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தது கலைஞர்.
11. குடியிருப்புச்சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது கலைஞர்.
12. இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர்.
13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்தது கலைஞர்.
14. அரசியலமைப்பில் பிற்படுத்தபபட்டோருக்கான அமைப்பை அமைத்தது கலைஞர்.
15. அரசியலமைப்பில் இட ஒதுக்கீடு BC - 31%, SC - 18 % ஆக உயர்த்தியது கலைஞர்.
16. +2 வரை இலவசக்கல்வி உருவாக்கியது கலைஞர்.
17. மே 1, சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்.
18. வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்தது கலைஞர்.
19. முதல் விவசாயக்கல்லூரி (கோவை) உருவாக்கியது கலைஞர்.
20. அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் தந்தது கலைஞர்.
21. அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது கலைஞர்.
22. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது கலைஞர்.
23. கோவில்களில் குழந்தைகளுக்கான "கருணை இல்லம்" தந்தது கலைஞர்.
24. சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது கலைஞர்.
25. நில விற்பனை வரையரை சட்டம் அமைத்தது கலைஞர்.
26. இரண்டாம் அலகு நிலக்கரி மின்உற்பத்தி நெய்வேலி கொண்டுவந்தது கலைஞர்.
27. பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடி கொண்டுவந்தது கலைஞர்.
28. SIDCO உருவாக்கியது கலைஞர், உப்பு வாரியம் அமைத்தவர் கலைஞர்.
29. SIPCOT உருவாக்கியது கலைஞர், தேயிலை வாரியம் அமைத்தவர் கலைஞர்.
30. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தபபட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தது கலைஞர்.
31. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டுவந்தது கலைஞர்.
32. மனு நீதி திட்டம் தந்தது கலைஞர்.
33. பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது கலைஞர்.
34. பசுமை புரட்சி திட்டம் தந்தது கலைஞர்.
35. கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தபபட்டோரில் இணைத்தது கலைஞர்.
36. மிக பிறப்படுத்தபபட்டோரில் வன்னியர், சீர் மரபினரை சேர்த்தது கலைஞர்.
37. மிக பிற்படுத்தபபட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்.
38. அருந்ததியின மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்.
39. பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்.
40. மிகபிற்படுத்தப் பட்டோருக்கு இலவச கல்வி தந்தது கலைஞர்.
41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளம்கலை
பட்டப்படிப்பு வரை தந்தது கலைஞர்.
42. தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது.
43. இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்க்கு இலவச மின்சாரம் தந்தது கலைஞர்.
44. சொத்தில் பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியது கலைஞர்.
45. அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு தந்தது கலைஞர்.
46. ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம்
அமைத்தது கலைஞர்.
47. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்.
48. விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்.
49. நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது கலைஞர்.
50. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தது கலைஞர்.
51. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் அமைத்தது கலைஞர்.
52. கர்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்.
53. பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது கலைஞர்.
54. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்.
55. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்.
56. டாக்டர் MGR மருத்துவ கல்லூரி நிறுவியது கலைஞர்.
57. காவிரி நடுவர்மன்றம் அமைந்ததற்கு காரணம் கலைஞர்.
58. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டுவந்தது கலைஞர்.
59. உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்தது கலைஞர்.
60. இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தது கலைஞர்.
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்!
சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாகத் திட்டமிடப்பட்ட பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு விஜய் தலைமையிலான அரசு முட்டுக்கட்டை போட்டுள்ள நிலையில், தற்போது அங்கு கைப்பற்றப்பட்ட 1700 ஏக்கர் நிலத்தில் சிப்காட் கட்டுவதற்கான பேச்சுவாத்தை நடப்பதாகவும், அதேவேளையில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் எவ்விதமான முடிவும் எடுக்காமல் அப்படியே வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் சொன்ன நோ, வெறும் ஒரு விமான நிலையத்தோடு மட்டும் முடிவடையாமல், அதனைச் சுற்றி திட்டமிட்டு இருந்த சுமார் 50,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மெகா உள்கட்டமைப்புத் திட்டங்களையும், 1 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் என மொத்தமாகப் பாதிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.
சீட்டுக்கட்டுப்போல் சரியும் திட்டங்கள்
பரந்தூர் திட்டத்தை மையமாகக் கொண்டு சென்னைக்கு மேற்கே உருவாக்கப்படவிருந்த பிரம்மாண்டமான பொருளாதார மற்றும் தொழில்துறை காரிடார் (Economic Corridor) தற்போது சீட்டுக்கட்டுப்போல் சரிந்து விழுமோ என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியிலும், சென்னை மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
விமான நிலையம், அதிவேக மெட்ரோ ரயில், விரைவுச்சாலை இணைப்புகள், AeroCity எனத் தமிழகத்தின் அடுத்த 20 ஆண்டுகால வளர்ச்சியைத் தீர்மானிக்கவிருந்த திட்டங்கள் அனைத்தும் முடங்கும் அபாயத்தில் உள்ளது.
32,700 கோடி பரந்தூர் பசுமை விமான நிலையம்
தமிழ்நாட்டின் வான்வழிப் போக்குவரத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், சுமார் 32,700 கோடி ரூபாய் வரையிலான முதலீட்டில் இந்த பரந்தூர் பசுமை விமான நிலையம் திட்டமிடப்பட்டது. ஆண்டுக்குச் சுமார் 10 கோடி பயணிகளைக் கையாளுவது, இரண்டு அதிநவீன ஓடுதளங்கள் (Runways), பிரம்மாண்டமான சரக்கு போக்குவரத்து மையம் (Cargo Hub) மற்றும் பன்னாட்டு வர்த்தகங்களை ஈர்க்கும் ஏரோசிட்டி (AeroCity) ஆகியவை இந்த மெகா திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.
இத்தகைய மாபெரும் விமான நிலையம் கைவிடப்படும் பட்சத்தில், அதனைச் சார்ந்து வரவிருந்த பல்லாயிர கோடி மதிப்பிலான தனியார் முதலீடுகளும், உலகளாவிய விநியோகச் சங்கிலி (Supply Chain) உள்கட்டமைப்புகளும் தமிழகத்தை விட்டு வெளியேறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பரந்தூர் மெட்ரோ காரிடார்
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தால் சென்னை நகரின் போக்குவரத்து முகவரியே மாறவிருந்தது. குறிப்பாக, பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் ஆகிய முக்கியத் தொழில்துறை பகுதிகளைப் பரந்தூர் விமான நிலையத்துடன் இணைக்கும் வகையில் 15,906 கோடி ரூபாய் மதிப்பில் 53 கிலோமீட்டர் நீளத்திற்கு அதிவேக மெட்ரோ ரயில் காரிடார் திட்டமிடப்பட்டிருந்தது.
சுமார் 20 மெட்ரோ ரயில் நிலையங்களுடன் அமையவிருந்த இந்த வழித்தடத்திற்கான நில கைப்பற்றல் மற்றும் ஆரம்பகட்டப் பணிகளுக்காக 2,126 கோடி ரூபாய் ஏற்கனவே முந்தைய தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டிருந்தது.
தற்போதைய சூழலில் விமான நிலையத் திட்டம் முடக்கம் காரணத்தால், சென்னை மாநகரையும் அதன் மேற்குத் தொழில் மண்டலங்களையும் இணைக்கவிருந்த இந்த அதிவேக மெட்ரோ கனவுத் திட்டமும் முழுமையாகக் கைவிடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
பெங்களூரு விரைவுச்சாலை, அதிவேக ரயில்
இதேபோல் பரந்தூர் விமான நிலையத்தை ஒரு சர்வதேச லாஜிஸ்டிக்ஸ் மையமாக மாற்றுவதற்குப் போக்குவரத்து இணைப்புகள் மிக முக்கியப் பங்கு வகிக்கவிருந்தன. சென்னை - பெங்களூரு விரைவுச்சாலையுடன் (Chennai-Bengaluru Expressway) பரந்தூர் நேரடியாக இணைக்கப்படவிருந்தது.
இதுமட்டுமன்றி, சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களுக்கு இடையே திட்டமிடப்பட்டுள்ள அதிவேக ரயில் காரிடாரில் (HSR Corridor) பரந்தூர் ஒரு முக்கிய நிறுத்தமாக அமையவிருந்தது.
மேலும், விமான நிலையப் போக்குவரத்தை எளிதாக்க இரண்டு முக்கிய சாலை வழித்தடங்கள் இறுதி செய்யப்பட்டிருந்தன. முதலாவதாக, பல்லூர் முதல் சோகண்டி வரையிலான மாநில நெடுஞ்சாலை-58 (SH-58) பகுதியை 23.8 கிலோமீட்டர் நீளத்திற்குச் சேவைச் சாலைகளுடன் கூடிய 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டது.
இரண்டாவதாக, ஒரகடம் தொழில்துறை காரிடாரை இணைக்கும் வகையில் சிங்கபெருமாள் கோவில் முதல் பரந்தூர் வரை சென்னை பெரிபரெல் ரிங் ரோடு (CPRR) வழியாக 30.7 கிலோமீட்டர் நீள புதிய சாலை வழித்தடமும் வடிவமைக்கப்பட்டிருந்தது.
முடங்கும் தொழில் வாய்ப்புகள்
ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் மற்றும் சிப்காட் (SIPCOT) தொழிற்பேட்டைகளை உள்ளடக்கிய தமிழகத்தின் மிகப்பெரிய உற்பத்தி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பகுதியை பரந்தூர் விமான நிலையம், மெட்ரோ, விரைவுச்சாலை மற்றும்
----(1)
😳😳😳😳must watch video...
தமிழ்நாடு முழுவதும் இந்த வீடியோவை vairal ஆக்க வேண்டும்...
விஜய் மற்றும் அவரது PR team செய்யும் அயோக்கியத்தனம் மக்களுக்கு தெரிய வேண்டும்.