பொருளாதார சூழல் குடும்பங்களில் மன உளைச்சலை உருவாக்கும் சூழலில் ‘செமஸ்டர் கட்டணத்தை கட்டாவிட்டால் அறிவிப்பு பலகையில் பெயர் வெளியிட்டு அவர்களை நீக்குக’ என்னும் அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு எந்த வகையில் நியாயம்? மனித நேயமற்ற செயல் இது!
தேர்வுக் கட்டணம் செலுத்தாத மாணவர்களையும்-தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என்ற என் வேண்டுகோள் குறித்தும் @CMOTamilNadu உடனடியாக மவுனம் கலைக்க வேண்டும்!
#EqualityForNPStudents
#COVID19 பேரிடர் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பல கல்லூரிகளில் 70% மேலான மாணவர்கள் தேர்வுக்கட்டணத்தைச் செலுத்தவில்லை. இதனை யோசிக்காமல் ‘தேர்வுக் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு மட்டும் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு’ என @CMOTamilNadu அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது!