100 நாள் வேலைத் திட்டத்தில், தான் கூறும் நபர்களுக்கு தான் வேலை வழங்க வேண்டும்.. பணிக்கு வந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட த.வெ.க நிர்வாகி
#Salem | #TVK | #Polimernews
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் - ஆலந்தூர் தெற்குப்பகுதி - 164-வது வட்டக்கழக செயலாளராகவும், மாமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய நங்கநல்லூர் நேரு காலனியைச் சேர்ந்த அண்ணன் ஏசு (எ) ஜேசுதாஸ் அண்மையில் மறைந்தார்.
இன்றைய தினம் அண்ணனின் இல்லம் சென்று அவரது திருவுருவப்படத்தைத் திறந்து வைத்து மலர்தூவி மரியாதைச் செலுத்தினோம்.
மாவட்டக்கழகம் சார்பில் அண்ணன் ஏசு அவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.11 லட்சத்தை நிதியுதவியாக வழங்கினோம்.
அவரது துணைவியாரும் - மாமன்ற உறுப்பினருமான அக்கா தேவி உள்ளிட்ட குடும்பத்தார் - நண்பர்களுக்கு நம்முடைய ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்தோம்.
அண்ணன் ஏசு அவர்களின் கழகப்பற்றும் - கலைஞர் மீதும், கழகத்தலைவர் அவர்கள் மீதும் அவர் கொண்டிருந்த பாசமும் போற்றுதலுக்குரியவை.
கழக நிகழ்ச்சிகளில் கருப்பு - சிவப்புக் கொடியோடு அண்ணன் ஏசு எழுப்பிய கொள்கை முழக்கங்கள் உடன்பிறப்புகளின் செவிகளில் என்றென்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
அண்ணன் ஏசுவின் பணிகள் என்றும் நிலைத்திருக்கும்!
@thamoanbarasan
இதேபோல முழு கேமரா செட்டப்புடன் தவெக அமைச்சரவைக் கூட்டத்திற்கு வந்து, தமிழ்நாடு குறித்த சில அடிப்படை கேள்விகள் கேட்டு, ரீல்ஸ் எடுத்து போடலாமா @Keerthana4VNR ? உங்கள் முதலமைச்சர் உட்பட பல அமைச்சர்களின் IQ level என்னவென்று ஊருக்கு ரீல்ஸ் எடுத்துக் காட்டுவோமா? https://t.co/XA9uoqTWBt
ஸ்டிக்கர் விஜய் அரசே.. வெட்கமே இல்லையா?
சென்னையின் குடிநீர்த் தேவையைத் தீர்ப்பதற்காக 2006ஆம் ஆண்டில் தி.மு.க அரசு நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது. முத்தமிழறிஞர் கலைஞர் முதல்வராக இருந்போது, உள்ளாட்சித் துறை முதலமைச்சராக இருந்த கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தத் திட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து நிறைவேற்றினார். 2021ஆம் ஆண்டு அவரே முதலமைச்சரான நிலையில், பெருகி வரும் சென்னையின் மக்கள் தொகையையும், விரிந்து வரும் சென்னை மாநகராட்சியின் பரப்பளவையும் கருத்தில் கொண்டு 24-02.2024 அன்று நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாவது பெரிய அலகுக்கான அடிக்கல்லை நாட்டி, தற்போது பணிகள் ஏறத்தாழ நிறைவடையும் நிலையில், இதனைப் பார்வையிட முதல்வர் விஜய் வருகிறார் என்கிற அற்ப காரணத்திற்காக, இரண்டாம் அலகு திட்டத்தின் கல்வெட்டை அகற்றியிருக்கிறது த.வெ.க அரசு. ஆட்சிக்கு வந்த 50 நாட்களில் எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் உருவாக்க வக்கில்லாத விஜய் அரசு, திராவிட மாடல் அரசின் முதல்வர் தொடங்கிய திட்டத்தின் அடிக்கல்லை அகற்றுவது அதன் பயபீதியையே காட்டுகிறது. முடிவடையும் நிலையில் உள்ள திராவிட மாடல் அரசின் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக, கல்வெட்டை அகற்றுவது வெட்கமாயில்லையா திறமையற்ற விஜய் அரசே?
அடுத்த கட்சி எம்.எல்.ஏகள் ஒவ்வொருத்தரா இளநீர் புல்லிங் மாதிரி, இன்னைக்கு இருக்கக்கூடிய அரசு, இன்னைக்கு இருக்கக்கூடிய முதலமைச்சர்கள் இழுத்துட்டு இருக்காரு.
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
#TVKCorruption | அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் இமாலய ஊழல்! வந்த 40 நாளிலேயே ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து கொள்ளை அடிக்கக் கிளம்பிவிட்டார்கள் என மாரிதாஸ் குற்றச்சாட்டு.
புஸ்ஸி ஆனந்த் உத்தரவின் பேரில், TVK மாவட்ட செயலாளர்கள் கூட்டாகச் சேர்ந்து இந்த ஊழலை அரங்கேற்றியுள்ளதாக மாரிதாஸ் கூறியுள்ளார்.
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு நேரடியாகவே வசூல் வேட்டை நடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் புஸ்ஸி ஆனந்த் தரப்பில் மட்டும் சுமார் 120 கோடி ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் கொடுத்துள்ளார்.
#BussyAnand #TVKOozhal #CBIForTVK #TamilnaduPolitics #TVKScam #GovernmentLawyerScam #PoliticsTN #DMK #ADMK #TVK #CorruptionAlert #TNPolitics2026 #CBIInvestigation #BreakingNewsTN #SaveTamilnadu
"Hands off to all of you" அல்ல.
அது "Hats off to all of you".
"Stand such a wonderful" அல்ல.
அது "Stand in front of such a wonderful...".
மூன்று பேரின் பெயர்களைச் சொன்னால், அதற்கடுத்து பயன்படுத்த வேண்டியது 'has' அல்ல, 'have'.
"Any of the sports minister" அல்ல.
அது "Any of the sports ministers".
"have a breakfast" அல்ல.
அது "have breakfast".
அமைச்சர் @Keerthana4VNR அவர்கள் மேடைகளில் பேசும் ஆங்கிலத்தில் பல அடிப்படைப் பிழைகள் இருந்தாலும், திமுக தரப்பில் இருந்து யாரும் அதை ஒரு குறையாகச் சுட்டிக்காட்டி விமர்சிக்கவில்லை. ஏனென்றால், மொழி என்பது வெறும் தொடர்பு சாதனம் மட்டுமே. ஒருவருக்கு மொழியை விடச் செயல்பாடுகளே முக்கியம் என்பது எங்களுடைய நம்பிக்கை.
ஆனால், இவ்வளவு பெரிய பொறுப்பில் இருக்கும் ஒரு அமைச்சர், பள்ளிகளுக்கு ஆய்வுக்குச் செல்லும்போது குழந்தைகளிடம் எப்படிப் பேச வேண்டும் என்கிற அடிப்படைப் பக்குவம் கூட இல்லாமல் நடந்துகொள்வதுதான் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பள்ளிகளுக்குச் செல்லும்போது மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். பெண் குழந்தைகளுக்குக் கல்வியின் அவசியத்தை உணர்த்தி அவர்களின் எதிர்காலத்திற்குத் தன்னம்பிக்கை கொடுக்க வேண்டும்.
அதை விடுத்து, மாணவர்களின் தன்னம்பிக்கையை உடைக்கும் வகையிலும், அவர்கள் பள்ளிக்கே வர பயப்படும் வகையிலும் நடந்துகொள்வது ஒரு அமைச்சருக்கு அழகல்ல. மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்கும் இதுபோன்ற அமைச்சர்கள் பள்ளிகளுக்குள் செல்லாமல் இருப்பதே நல்லது.
குழந்தைகளிடம் எப்படிப் பேச வேண்டும், அவர்களுக்கு எவ்வாறு நம்பிக்கை கொடுக்க வேண்டும் என்பதை தவெக அமைச்சர்கள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்!