எரிகாற்று உருளை விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்!
வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிகாற்று உருளையின் விலையை இந்திய ஒன்றிய அரசு 29 ரூபாய் அளவிற்கு அதிகரித்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. எவ்வித முன்னறிவிப்புமின்றி எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தியுள்ளது ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கும் சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மையாகும்.
ஏற்கனவே பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கட்டுக்கடங்காது நாளுக்கு நாள் உயர்வதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால் மக்கள் செய்வதறியாது தவித்து நிற்கையில், எரிகாற்று உருளை விலையையும் உயர்த்துவது, இந்த நாட்டில் வாழும் கோடிக்கணக்கான குடும்பங்களின் குருதியை உறிஞ்சும் கொடுஞ்செயலாகும்.
இந்திய ஒன்றிய அரசின் கையிலிருந்த வாகன எரிபொருள் விலை நிர்ணய அதிகாரத்தை தனியார் எரிஎண்ணெய் நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கும் வகையில், கடந்த 2010ஆம் ஆண்டு சூன் மாதம் பெட்ரோல் விலை நிர்ணய உரிமையை காங்கிரசு அரசும், 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டீசல் விலை நிர்ணய உரிமையை பாஜக அரசும் மொத்தமாகக் கையளித்ததன் விளைவே தற்போது மக்கள் சந்திக்கும் துயரங்களுக்கு அடிப்படை காரணமாகும்.
1200 ரூபாய் அளவிற்கு விற்ற சமையல் எரிகாற்று உருளையின் விலை கடந்த நாடாளுமன்றத்தேர்தலை முன்னிட்டுதான் 1000 ரூபாய்க்கு கீழாக குறைக்கப்பட்டது. தற்போது அதனை மீண்டும் 1000 ரூபாய் அளவிற்கு உயர்த்தும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் மாதந்தோறும் பாதிக்கும் அறமற்றச் செயலாகும்.
ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு எரிகாற்று உருளை விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமெனவும், எரிபொருள் விலை நிர்ணய அதிகாரத்தை மீண்டும் இந்திய ஒன்றிய அரசே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
இத்தகைய நெருக்கடியானச் சூழலில் எரிகாற்று உருளை விலை உயர்வால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்படாமல் காக்க, தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு, உடனடியாக தான் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அனைத்து குடும்பங்களுக்கும் வருடத்திற்கு 6 எரிகாற்று உருளைக்கான செலவை முழுமையாக ஏற்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஸ்டாலின் Tax என ஒன்று இருக்கிறது. எல்லாத்திலும் 30 விழுக்காடு கமிஷன் அடிக்கிறார்கள். அதில் 10 விழுக்காடு அமைச்சர்களுக்கும், 20 விழுக்காடு ஸ்டாலினுக்கும் செல்கிறது. அந்த 30 விழுக்காட்டை மக்களுக்காகப் பயன்படுத்தினாலே சிறப்பான ஆட்சியைக் கொடுக்கலாம் எனக் கடந்தாட்சியின்போது குறிப்பிட்டார் விஜய்.
அந்த 30 விழுக்காடு Tax என்னாச்சு? அதனை மிச்சப்படுத்தி, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற திட்டம் தீட்டப்பட்டுவிட்டதா?
ஈழ விடுதலை வரலாறை சமகால இளைஞர் படை தங்களது கலையினது ஊடே உயிர்ப்புடன் வைத்திருப்பது உலகத்தமிழர்கள் அனைவருக்கும் பெரும் நம்பிக்கையை விதைக்கிறது.
கோவில் திருவிழாவில் மாவீரர் வரலாறை பாடிய தம்பி சங்கீத்சனை பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள இனவாத இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.
தம்பி சங்கீத்சனை உடனே விடுதலை செய்ய வேண்டும்!
#FreeSangee #ReleaseSangeethsan #TamilEelam #FreedomOfExpression #eelamtamilvoices
முதல்வர் விஜய் தலைமையில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 10.05 முதல் 11.20 வரை நடந்திருக்கிறது.
இதில் 436 திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறுகிறார் அமைச்சர் நிர்மல்குமார்.
அதாவது, 75 நிமிடங்களில் 436 திட்டங்கள் குறித்து ஆலோசித்திருக்கிறார்கள். ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 5 திட்டங்கள் குறித்துப் பேசியிருக்கிறார்கள். சொல்லப் போனால், 12 நொடிக்கு ஒரு திட்டம் என விவாதித்து இருக்கிறார்கள். அந்த 12 நொடிகளிலேயே முதல்வர், துறைசார்ந்த அமைச்சர் என இருவரும் தலா 6 நொடிகள் பேசி, திட்டம் குறித்த ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
ஒரு அமைச்சரவைக் கூட்டத்தில், இவ்வளவு குறைவான காலநேரத்தில் இவ்வளவு அதிகமானத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது உலக வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாக இருக்கும். ஆகவே, கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பிக்க வேண்டுமென தவெக அரசை உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் அமைந்துள்ள அச்சம்தவிர்த்தான் கிராமத்தில் ஆதித்தமிழர்கள் வாழும் பகுதி 'பறைச்சேரி' என்று அழைக்கப்பட்டு, அரசு ஆவணங்களிலும் அவ்வாறே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனால், பெரும் அவமதிப்பும், புறக்கணிப்பும், ஒதுக்கல் போக்கும் அம்மக்களுக்கு நாள்தோறும் நடக்கிறது.
அப்பெயரை நீக்கக்கோரி 15 ஆண்டுகளாக அம்மண்ணின் மக்கள் போராடி வருகிறார்கள். தாங்கள் வாழும் பகுதியை 'வடக்கு அச்சம்தவிர்த்தான்' என அழைக்கப்பட வேண்டும் என்பது அம்மக்களின் விருப்பம்; கோரிக்கை. இதனை வலியுறுத்தி சட்டமன்றத் தேர்தலையும் புறக்கணித்திருக்கிறார்கள்.
சமூக நீதித்துறை அமைச்சர் @VanniTamizhVCK அவர்கள் தலையிட்டு, அப்பகுதி மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சாதியப் பட்டத்தைத் துடைத்தெறிந்து, அம்மக்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டுமெனக் கோருகிறேன்.
கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட தவெக நிர்வாகிகள்!
தூயசக்தி ஆட்சியிலும் தொடரும் சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் பாலியல் வன்கொடுமைகள்!
#சீமான்#ntk#ntkitwing#seeman#tamilnationalism
நாம் தமிழர் கட்சி - சிவகங்கை சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்
அன்புத்தம்பி இராம்குமார் அவர்களின் தாயார்
அம்மா பவானி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.
அன்னையை இழந்து வாடும் தம்பி இராம்குமார் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா பவானி அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்
அரசு மருத்துவர்களின் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான 50% இட ஒதுக்கீடு தட்டிப் பறிக்கப்படுவதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் |
நாம் தமிழர் கட்சி
#சீமான்#ntk#ntkitwing#seeman#tamilnationalism
திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டமன்ற தொகுதி பெரியாயிபாளையம் கிராமத்தில் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் கொட்டப்பட்டு இருந்த குப்பைகளை அகற்றி நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது.
#சீமான்#ntk#ntkitwing#seeman#tamilnationalism
Tvk ஆட்சியின் 1 month சாதனைகள் List 🔥🔥 தளபதி blast
1. 70 கொலை
2.30 பாலியல் குற்றங்கள்
3.100 பாலியல் சீன்றல் கள்
4.10 ஜாதி கொலை கள்
5. Tvk கந்து வட்டி
6. Current cut daily 5 hours 🔥
7.Tasmac la bottle ku 30 ரூபாய் increase
8.industry sector 📉📉 downfall
9. TNSTC Downfall 📉
10.Daily சட்டம் ஒழுங்கு பிரச்சனை
11. Daily மக்கள் போராட்டம்
12.அரசு துறைகளில் ஊழல்
13. பெண் போலீஸ் கு கூட பாதுகாப்பு இல்லை
14.tvk கட்சி காரர் களே, கஞ்சா போதை supply 🔥🔥