பாட்டிலுக்கு ரூ.20 வாங்கினால் சஸ்பெண்ட் ஆனால் கோவிலில் ரூ.4000 வாங்கினாலும் மன்னிப்பு கடிதம் போதும்..
"சூத்திரனுக்கு ஒரு நீதி, பார்ப்பானுக்கு வேறொரு நீதி" என அன்றே சொன்னார் பாரதியார் 👌
அறநிலையத்துறை அமைச்சர் @RameshOffcl அவர்கள் திருச்சி, திருவரங்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் சக்கர நாற்காலி தள்ளுவதற்கு 100, 200 ரூபாய் என பணம்பெற்ற 4 கடைநிலை மருத்துவப் பணியாளர்களை இடைநீக்கம் செய்தார். அதிரடி நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டது.
அமைச்சர் ரமேஷின் இன்றைய திருச்செந்தூர் ஆய்வில் VIP தரிசனத்துக்காக அமைச்சரென்று தெரியாது அவரிடமே 4,000 ரூபாய் இலஞ்சம் கேட்டு அர்ச்சகர்கள் பிடிபட்டிருக்கிறார்கள். அதேசமயம், அந்த அர்ச்சகர்கள் இடைநீக்கம் செய்யப்படாது, மன்னிப்புக்கடிதம் எழுதிக் கொடுக்கச் சொல்லி, எச்சரித்து அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
கடைநிலை மருத்துவப் பணியாளர்கள் என்றால், இடைநீக்கம். அர்ச்சகர்கள் என்றால், மன்னிப்புக்கடிதம்!
இரண்டு பேரும் வாங்கியது இலஞ்சமென்றால் அவர்கள் மீதான நடவடிக்கையில் மட்டும் பாரபட்சம் எதற்கு?
எல்லோருக்கும் நீதி ஒன்றாகத்தானே இருக்க முடியும். ஏன் அது ஆட்களைப் பொறுத்து மாறுபடுகிறது?
நாம் தமிழர் கட்சியினருக்கு
ஒரு முன் மாதிரி!
நாம் தமிழர் கட்சி சார்பில் கன்னியாகுமரித் தொகுதியில் போட்டியிட்ட அக்கா மரிய ஜெனிபர் அவர்கள் மேற்கொண்ட தேர்தல் பரப்புரைத் திட்டம் நாம் தமிழர் கட்யினர் அனைவருக்கும் ஒரு முன்மாதிரி!
தொடக்கத்திலிருந்தே இணையத்தை சரியான முறையில் பயன்படுத்தி எந்த வித தேவையில்லாத விவாதங்களிலும் தலையிட்டு தன்னைத் தானே திசைமாற்றிக் கொள்ளாமல் உறுதியாக ஒரே நேர்க்கோட்டில் பயனித்து மிகச் சிறப்பாக களப்பணி செய்து வருகிறார்.
நடந்து முடிந்த தேர்தலில் கனவுக் கன்னியாகுமரி என்னும் ஆகச் சிறந்த வேலைத் திட்டத்தை விளக்கி மக்களைச் சந்தித்தார். அவரைத் தோற்கடித்ததற்காக மக்கள் உறுதியாக வரும் காலங்களில் வருத்தப்படுவார்கள்.
நாம் தமிழர் கட்சி இனி வரும் தேர்தலில் இதே போல் சிறந்த வேலைத்திட்டத்தை உருவாக்கி Stategical Campaign மேற்கொண்டால் வெற்றி உறுதி!
@jennifer_ntk@Sunandha_TS@PackiaSe
10,396 !
நாம் தமிழர் கட்சியின் கருத்தியல் மீதும், அரசியல் மீதும் நம்பிக்கை கொண்டு, வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில் வாக்குச் செலுத்திய தாய்த்தமிழ் உறவுகளுக்கு உளப்பூர்வமான நன்றி!
வேதாரண்யம் தொகுதி முழுக்க நிலவும் குடிநீர்த்தட்டுப்பாடு உள்ளிட்ட அத்தியாவசியச் சிக்கல்களைத் தீர்க்கப் போராட்டக்களத்திலும், ஊடகத் தளத்திலும் குரலெழுப்புவேனென உறுதியளிக்கிறேன்.
தேர்தல் வெற்றி / தோல்விகளைக் கடந்து கருத்தியல் பரப்புரையையும், களப்பணிகளையும் வீரியமாகத் தொடருவோம்.
தமிழ்த்தாய் வாழ்க!
தலைவர் பிரபாகரன் வாழ்க!