இன்று (25.08.2026), பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவினர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களைச் சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காக தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.
அவர்களைத் தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார் அவர்கள் வரவேற்று, கலந்துரையாடினார்.
விரைவில் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களைச் சந்திப்பதற்கும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
#ntk #seeman #parandur
Of late, You must have seen lot and lots of Hindi Influencers on Instagram praising Tamil Nadu CM @actorvijay@CMOTamilnadu. Most of the claims are either Fake or Exaggerated claims. Most these misleading video get 'views' in crores and 'likes' in Millions.
For some reason, Most influencers repeat the exact same script.
Here's such claim that TN CM Joseph Vijay appeals in High court that nobody in Tamil will be allowed to do a cow slaughter in Tamil Nadu?
No, This is Fake News! 'Thalapathy Vijay' did not appeal in court to stop or ban cow slaughter. In fact, the reverse happened. The state government challenged a court-ordered ban.
Look at the number of people repeating the same fake News.
தவெகவின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் விஜய் மோகன், பதவி தருவதாகச் சொல்லி இளம்பெண்ணிற்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தும் இன்னும் கைது செய்யாமல் இருப்பது ஏன்?
சிங்கப்பெண் சிறப்புப் படை நடவடிக்கை எடுக்குமா?
கட்சிப் பெண்களைப் பதவி ஆசை காட்டித் தன் ஆசைக்கு இணங்க வைப்பவனை இன்னும் கட்சியில் வைத்திருக்கும் காரணம் என்ன?
இதுதான் உங்கள் பெண்கள் பாதுகாப்பா?
பெண்களுக்குத் தவெக பாதுகாப்பு என்று சொன்னீங்களே முதல்வரே! தவெக பெண்களை உங்கள் கட்சிக்காரர்களிடமிருந்து யார் பாதுகாப்பது?
@CMOTamilnadu@tnpoliceoffl@BussyAnand@AadhavArjuna@TVKVijayHQ
Not Just Investigating Irregularities; The Fraudulent NEET Itself Must Be Completely Abolished!
As a continuation of the massive youth protest held in Delhi against the irregularities and bungling in the National Eligibility cum Entrance Test (NEET), while protests are spreading across Northern states, the TVK government’s action of suppressing Tamil Nadu's students and youth using the police when they attempt to take to the streets in protest is deeply condemnable. The state government's tendency to suppress the spontaneous protest of the younger generation against NEET, while claiming to oppose the exam itself, is a betrayal of democracy.
Is it fair for Chief Minister Vijay—who brands himself a. "Democrat" (Jananayagan) on screen—to unleash state violence through the police on students and youth on the ground, committing a brutal murder of democracy? Is he a democrat only in movies? While Northern youth stand on the streets of Delhi fighting for their right to education, keeping Tamil Nadu youth lined up outside cinema halls is an unacceptable cruelty. On one hand, claiming to condemn the BJP government's suppression of the youth protest in Delhi, while on the other, attempting to crush the youth protests against NEET in Tamil Nadu—is this not double standards by the TVK government?
Calling the BJP an ideological enemy while secretly serving their interests—is this not indirect service by the TVK government? What a farce!
While protests in Northern states condemn the irregularities in NEET, it is only in Tamil Nadu that protests emphasize that the NEET system itself is a fraud. When a system brought in under the pretext of producing quality doctors—claiming to be better than the previous method—suffers from so many irregularities, confusions, and bunglings, what is the purpose of this examination system? What guarantee is there that irregularities did not occur in this same NEET system in the past?
Therefore, not only investigating the irregularities in NEET, but completely abolishing this fraudulent NEET system altogether is the best opportunity to safeguard the healthcare infrastructure of this country. In a country lacking uniform learning opportunities and facilities, conducting a standardized entrance examination is inherently unequal. Thus, Naam Tamilar Katchi strongly opposes the anti-equality NEET system.
When political parties and movements lead protests against NEET, they are often viewed merely as symbolic demonstrations. However, when students, youth, and the general public take to the streets to protest, it explodes into a democratic revolution, forcing the ruling class to submit and fulfilling their demands. I fully support and welcome the peaceful struggle of the youth gathering working toward this goal.
May the peaceful struggle of the youth in Tamil Nadu triumph!
May the NEET be completely abolished!
My wishes and love to all my brothers and sisters fighting with a militant spirit against injustice!
- Senthamizhan Seeman
Chief Coordinator | NTK
நீட் தேர்வில் முறைகேடு செய்த குற்றவாளிகளைக் கைதுசெய்யாமல், நீதிவிசாரணை கோரிப் போராடும் இளைஞர் கூட்டத்தின் மீது அரச வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவதா?
நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கெதிராக, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எனும் அமைப்பின் சார்பாக டெல்லி, ஜந்தர் மந்தரில் 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் அறப்போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறேன். அப்போராட்டத்தின் நீட்சியாக, நேற்றையதினம் அக்கட்சியின் செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என யாவரும் நாடாளுமன்றம் நோக்கிப் பேரணியாய் செல்ல முயன்ற நிலையில், அவர்கள் மீது கொடும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு, காவல்துறையின் மூலம் கண்மூடித்தனமாகத் தாக்கியிருக்கும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்காமல், அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து, கைதுசெய்யாமல், முறைகேட்டுக்கு நீதிவிசாரணை கோரி, அறவழியில் போராடும் இளைய தலைமுறையினர் மீது தாக்குதல் தொடுப்பது ஏற்கவே முடியாத பேரவலம்; சகித்துக் கொள்ள முடியாத அரச வன்முறையாகும். மதக்கலவரம் ஏற்பட வாய்ப்பிருந்தும் பாபர் மசூதியை நோக்கிச் செல்ல மதவெறியர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட இதே நாட்டில், நாடாளுமன்றம் நோக்கி அறவழியில் பேரணியாய் செல்லக்கூட இளைஞர் கூட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படாதது கேலிக்கூத்தானது. நாடாளுமன்றம் என்பது நாட்டின் குடிமக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்களின் அவை. அந்த அவை மக்களுக்கான நீதியையும், சமவாய்ப்பையும் நிலைநாட்டாதபோது, அந்த அவையை நோக்கிச் சென்று, நீதிகேட்பதைத் தவிர, எளிய மக்களுக்கு வேறு வழியென்ன இருக்கிறது? மன்னராட்சிக்காலத்தில்கூட மன்னனின் அரசவைக்குள்ளேயே சென்று, சாதாரண குடிமக்களால் நீதிகேட்க முடிந்தது; அரசனை நோக்கி விரல்நீட்டிக் கேள்வியெழுப்ப முடிந்தது. ஆனால், மக்களாட்சிக்காலத்தில் பாராளுமன்றத்தை நோக்கிப் பேரணியாய்கூட செல்ல முடியவில்லை என்பது வெட்கக்கேடானது இல்லையா? வெள்ளையர்களுக்கு எதிராக, பாராளுமன்றக் கட்டிடத்திற்குள் குண்டுவீசி, ‘புரட்சி ஓங்குக’ என வீரமுழக்கமிட்ட இளையப் புரட்சியாளர் பகத் சிங்கைக் கொண்டாடும் திருநாட்டில், பாராளுமன்றத்தை நோக்கிப் பேரணியாய் செல்வதற்குக்கூட ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு தடைவிதித்து, போராடுவோர் மீது ஒடுக்குமுறையைப் பாய்ச்சுமென்றால், இது சனநாயகப்பேரவலம் இல்லையா? இவ்வளவு நடந்தும் நாட்டின் நிர்வாகத் தலைவரான பிரதமர் நரேந்திரமோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வாய்மூடி மௌனமாக இருப்பது அதிகாரத்திமிர் இல்லையா? நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் எதிராகப் போராடும் இளையோர் கூட்டத்தின் அறச்சீற்றம் நியாயமானது. அதேசமயம், நீட் தேர்வு என்பதே மிகப்பெரும் முறைகேடு; மோசடி. அதனை முற்றாகத் துடைத்தெறிய வேண்டும் என்பதற்காகவே தமிழர் நிலத்தில் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆகவே, நீட் தேர்வுக்குரிய வினாத்தாள்கள் கசிவு எனும் கல்வித்துறையின் முறைகேடுகளுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவிவிலக வேண்டும் எனும் கோரிக்கை முழக்கம் மிகச் சரியானது. அதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக வரவேற்கிறது.
நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டுக்கு எதிராகப் போராடும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் மீது ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு அரசப்பயங்கரவாதத்தை ஏவிவிட்டு, போராட்டக்களத்தை வன்முறைக்களமாக மாற்றியது ஒட்டுமொத்த நாட்டுக்குமானப் பேரவமானம்; வரலாற்றில் கறுப்புப்பக்கங்களாகப் பதிவுசெய்யப்படும் கோர நிகழ்வாகும்.
ஆகவே, நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வுகளில் ஏற்பட்ட முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் முறையான நீதிவிசாரணை செய்ய வேண்டுமெனவும், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானைப் பதவிநீக்கம் செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் மீது ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பிய யூடியூபர் பிஸ்மி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மதுரை மாநகர கமிஷனர் மற்றும் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இருவரையும் சந்தித்து யூடியூபர் பிஸ்மி பரப்பி வரும் செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்று ஆதாரங்களுடன் புகார் மனு கொடுக்கப்பட்டது.
இரு உயர் அதிகாரிகளும் நிச்சயமாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளித்துள்ளனர்!
நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒரு வாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை கண்டிப்பாக பாயும்!
மதுரை மாவட்டம்
நாம் தமிழர் கட்சி
மாற்றத்தை விரும்பி வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்திருக்கும் தவெக அரசு.
கன்னியாகுமரிமாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க IREL விரிவாக்கப்பணிக்கான 1144.06 ஹெக்டேர் ஓதுக்கீட்டு ஆணை காலாவதி ஆகும் நிலையில்,அதை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பது கன்னியாகுமரி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தேர்தலுக்கு முந்தைய செயற்குழு கூட்டத்தில்இதே தவெக, இத்திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி நாடகம் அரங்கேற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மண்ணுக்கும் மக்களுக்கும் எதிரான அழிவுத்திட்டங்களை திணிக்கும் பாஜக ஒன்றிய அரசின் கைப்பாவையாக மாறி நிற்கும் தமிழ்நாடு தவெக அரசின் இரட்டை வேடம் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கிறது.
முழு காணொளி மனிதி வலையொளியில்.
https://t.co/PhXtnCrTvr
தனது உடன்பிறந்த தங்கை வித்யாவின் மரணத்துக்கு இணையாகப் பாதிப்பை ஏற்படுத்தியது தங்கை அனிதாவின் மரணம் என விக்கிரவாண்டி மாநாட்டில் உருகினார் தவெகவின் தலைவர் விஜய்.
ஜூன் 17 - அனுகீர்த்தனா ( 19 வயது )
ஜூன் 19 - கோபிகா ( 19 வயது)
ஜூன் 20 - ரோஷினி ( 19 வயது)
ஜூன் 20- வெற்றியானந்தம் ( 20 )
கடந்த ஒரு வாரத்திற்குள் நீட் தேர்வால் இத்தனைப் பிஞ்சுகள் கருகியிருக்கிறது.
சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் இறந்தப் பிஞ்சுகளுக்கு இரங்கல் தெரிவித்தாரா? அம்மரணங்கள் குறித்து வாய்திறந்தாரா?
தமிழ்நாட்டுச் சட்டமன்றம்!
நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட பேரவை! தமிழ்நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் தலைமைக்கூடம்! மாண்புமிகு பிரதிநிதிகள் மக்களுக்காக முழக்கமிடும் மாமன்றம்!
பெருந்தலைவர் காமராசரும், பேரறிஞர் அண்ணாவும், பேராசான் ஜீவானந்தமும், கண்ணியமிகு காயிதே மில்லத்தும், நாவலர் நெடுஞ்செழியனும், பெருமகன் சங்கரய்யாவுமென பெரும் பெரும் தலைவர்களும், அறிஞர்களும், ஆளுமைகளும், மேதைகளும் உரையாற்றிய மகத்தான மன்றமிது.
இங்குதான் அரும்பெருந்தலைவர்கள் சமூக மாற்றத்துக்கான வாதப் பிரதிவாதங்களை எடுத்து வைத்தார்கள்; மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகப் போட்டிப் போட்டுக் கொண்டு விவாதித்தார்கள்; சமூக அவலங்களை நாடறிய எடுத்துரைத்தார்கள்; கடைக்கோடி மக்களின் கனவுகளை ஈடேற்றத் திட்டங்களையும், சட்டங்களையும் தீட்டினார்கள்.
எப்பேர்ப்பட்ட அவை? எப்படிப்பட்ட ஆளுமைகள் உரையாற்றிய இடம்? எப்படிப்பட்ட தலைவர்களைக் கண்ட மன்றம்? அதனை எங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள் ஆச்சர்யக்குறி ஆட்சியாளர்?
‘ஒரு கோமாளி அரண்மனைக்குச் சென்றால் அவன் அரசனாகி விடுவதில்லை, அரண்மனைதான் சர்க்கஸ் கூடாரமாகிவிடும்’ என்கிறது துருக்கியப் பழமொழி. அதனை தமிழ்நாட்டில் மெய்ப்பித்துக் காட்டிய பெருமை முதல்வர் விஜய்யையே சாரும்.
சட்டமன்றத்துக்கென்று ஒரு கண்ணியம் இருக்கிறது; சட்டமன்றத்தில் இருப்பவர்களுக்கென்று ஒரு பொறுப்புணர்வு இருக்கிறது. முதலமைச்சர் பதவிக்கென்று ஒரு மாண்பு இருக்கிறது. அமைச்சர் பெருமக்களுக்கென்று ஒரு மரபு இருக்கிறது. அவை யாவற்றையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, கைகொட்டிச் சிரித்து, விசிலடிக்கும் பொழுதுபோக்குக் கூடாரமாக சட்டமன்றத்தை மாற்றி, சந்திச் சிரிக்க வைத்திருக்கிறார் முன்னாள் நடிகரும், இந்நாள் முதல்வருமான விஜய்.
திரைப்படங்களில் நடிப்பதைவிட்டவர், நடிப்பதை மட்டும் ஏனோ விட மறுக்கிறார்? சபாநாயகரை இயக்குநராகவும், அமைச்சர்களை துணை நடிகர்களாவும் நினைத்து, சட்டசபையை நாடகசபா ஆக்கியிருக்கிறார்.
நான்கு நாட்கள் சட்டமன்றக் கூட்டத்தொடரில், மூன்று நாட்கள் மௌனவிரதம்; இல்லை! இல்லை! மௌனப் புரட்சி! தனக்கு இன்றைக்கு, ‘Scene இல்லை’ என்று நினைத்தாரோ என்னவோ, கால்கள் மரத்து போனாலும் சரி! மறந்தும், எந்திரிக்க மாட்டேன்; ‘எந்திரித்தால் பேசச் சொல்லிவிடுவார்கள்’ என மந்திரித்துவிட்டவர் போல, சபையை வெறித்துப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தார்.
சட்டமன்றத்தில் முன்வைக்கப்படும் எல்லா அமைச்சகங்கள் குறித்தக் கேள்விகளுக்கும் பதில் சொல்லக் கடமையும், உரிமையும் கொண்ட தலைமை நிர்வாகிதான் முதல் அமைச்சர். தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் இருக்கும் துறைகள் மட்டுமல்லாது, மற்ற துறைகள் தொடர்பான கேள்விகளுக்கும் முதல்வரே பதில் சொல்லலாம். அதற்கான எல்லா உரிமையும் அவருக்குண்டு. ஆனால், ‘வாய்ல நல்லா வந்துரும்’ என்று வாயில் வருவதற்கும் எழுதிக் கொடுக்க வேண்டிய பரிதாப நிலையிலிருக்கும் முதல்வரிடம் போய், அதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா? தர்க்க ஆற்றல், சமயோசிதத்திறன் எல்லாம் பனையூரிலிருந்து பல கோடி கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதால்தானே ஊடகங்களைக் கண்டாலே உதறல் எடுத்து, ‘மெர்சல்’ ஆகிறார் மாண்புமிகு ‘மக்கு’ முதல்வர். இதனால், முதல்வரின் துறை சார்ந்த கேள்விகளுக்கு பதில்சொல்கிறேன் பேர்வழியென அரைவேக்காடு அமைச்சர்கள் கிளம்பி வாய்க்கு வந்ததை அடித்துவிட, சபாநாயகரே அவைக்குறிப்பிலிருந்து நீக்க உத்தரவிடும் அளவுக்கு விபரீதமாகிப் போனது சபையின் நிலை.
கூட்டத் தொடரின் கடைசி நாளில் முதல்வர் பதில் சொல்வார் என முந்தைய நாட்களிலேயே அறிவித்துவிட, கேள்விகளும், விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் முன்பே வைக்கப்பட்டுவிட வசதியாய் போனது ஆளுமையே இல்லாத ஆளுங்கட்சிக்கு. பதில்களை எல்லாம் பல பக்கத் தாள்களில் எழுதிக் கொடுத்துவிட, அதனை அள்ளிக் கொண்டு வந்து, அள்ளி அளந்து வாசித்தார் ஆச்சர்யக்குறி ஆட்சியாளர்.
அதிலாவது ஏதாவது உருப்படியாக, ஆக்கப்பூர்வமாகப் பேசினாரா? இல்லை!
தவெக ஆட்சிப் பொறுப்பேற்று அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் ஒன்றரை மாதத்தில் ஓராயிரம் சட்டம் ஒழுங்குச் சிக்கல்கள். கொலை, கொள்ளை, பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை, வன்முறை என சமூக அமைதி சகட்டுமேனிக்கு சிதைக்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பொறுப்பேற்று, சிக்கலின் வேர் முதல் தீர்வுவரை எதுகுறித்தாவது உருப்படியாகப் பேசினாரா? இல்லை!
மின்வெட்டு பூதாகரப் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. இப்போதுவரை பிரச்சினைத் தீர்ந்தபாடில்லை. உழைத்துக் களைத்த மக்கள் இரவில் ஓய்வெடுக்க முடியாது, வீதிக்கு வந்து போராடுகிறார்கள். வெப்பத்தால் அழும் குழந்தைகளை ஆசுவாசப்படுத்த முடியாது நள்ளிரவில் பெற்றோர்கள் புலம்பித் தவிக்கிறார்கள். எதனால் மின்வெட்டு? நியாயமானக் காரணத்தைச் சொல்ல முடிந்ததா? அமைச்சர் ஒரு பதில்! அதிகாரிகள் ஒரு பதில்! இப்போது முதல்வராவது பிரச்சினையைத் தெளிவுப்படுத்தினாரா? இல்லை!
நீட் தேர்வினால் இறந்த தங்கை அனிதாவைக் குறிப்பிட்டு, தன்னுடைய உடன்பிறந்த தங்கை வித்யா மரணம் அளவுக்குப் பாதித்ததாக விக்கிரவாண்டி மாநாட்டிலேயே மனமுருகினார் இன்றைய முதல்வர் விஜய். அணுகீர்த்தனா, கோபிகா, ரோஷினி, வெற்றியானந்தம் என 10 நாட்களுக்குள் நான்கு பிஞ்சுகள் கருகியிருக்கின்றன. அவர்களுக்கு இரங்கல் கூறவாவது வாய்திறந்தாரா? அவர்கள் இறந்தது தெரிந்தாவது மனமிரங்கினாரா? இல்லை!
பெரியப்பாளையம் அருகே, கன்னிகைப்பேரில் 9 பெண்கள் அமோனியா கசிவால் உயிரிழந்திருக்கிறார்கள். 60க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள். செய்தியைக் கேட்டதும் பதறித் துடித்து நேரில் செல்லத்தான் மனமில்லை. அவர்களது குடும்பத்தினருக்கு உரிய துயர்துடைப்புத்தொகை அளிக்கப் பணமுமா இல்லை? சுயவிளம்பரத்துக்காக காசைக் கரியாக்கும் முதல்வருக்கு இறந்துபோன தொழிலாளர்கள் மீது கரிசனம் வந்ததா? இல்லை!
‘விவசாயியாக அடுத்தப் பிறவியில் பிறக்க வேண்டும்’ எனப் பரப்புரைக் கூட்டத்தில் அள்ளி அளந்துவிட்டுவிட்டு, இப்போது தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பயிர்க்கடனைக்கூட தள்ளுபடி செய்யாது தட்டிக் கழித்து, விவசாயிகளை வேதனையின் விளிம்பில் தள்ளுகிறார் முதல்வர் விஜய். போதாதென்று, எதிர்க்கட்சிகள் தூண்டிவிட்டுத்தான் விவசாயிகள் போராடுவதாகக் கொச்சைப்படுத்தவும் செய்கிறார். அவர்களுக்கான உரிய தீர்வும், நீதியும் கிடைக்கச் செய்தாரா? இல்லை!
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டத் துடிக்கிறது கர்நாடகா. அதனை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்க வேண்டுமெனத் தீர்மானம் இயற்றுகிறார் முதல்வர் விஜய். நடுவர் மன்றம் என்பது நயவஞ்சக முடிவெனத் தனக்குத் தெரியவில்லை என்றால், எழுதித் தருபவரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டாமா? சுயபுத்திதான் இல்லையென்றால், சொல்புத்திகூடவா இல்லை? கர்நாடகத்தின் அடாவடித்தனத்தை எதிர்த்துப் போரிட போர்க்குணம்தான் இல்லை; சட்டமன்றத்தில் ஒழுங்காக ஒரு தீர்மானம் இயற்றவாவது திறன் இருந்ததா? இல்லை!
மொத்தத்தில், முதல்வரின் பேச்சில் சுரத்தும் இல்லை; சரக்கும் இல்லை. முதல்வரைக் குறைசொல்வதா? எழுதிக் கொடுத்தவரைத் திட்டித் தீர்ப்பதா என இரட்டைக்குழப்பம்!
முதல்வரின் உரையில்,
சமகால மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் இல்லை. ஆனால், ‘Theme Music’ போடும் அளவுக்கு வசனங்களுக்குக் குறைவில்லாது இருந்தது.
மாநில உரிமைகள் சார்ந்த பொறுப்புணர்வுக்குரல் இல்லை; ஆனால், பொறிபறக்கும் அளவுக்கு ‘Herioc Mannerism ’ இருந்தது.
விமர்சனங்களுக்கு உரிய விளக்கம் இல்லை; ஆனால், வில்லனைத் மிரட்டும் கதாநாயகனின் ‘Body Language’ இருந்தது.
கேள்விகளுக்கு உரிய பதில்கள் இல்லை; ஆனால், ‘Catchy’ வார்த்தைகள் மட்டும் உரை முழுமைக்கும் விரவிக் கிடந்தது.
ஆக்கப்பூர்வக் கருத்துகள் இல்லை; ‘Audience Engaging’ அம்சங்கள் அளவில்லாது இருந்தது.
மொத்தத்தில், .OTTயில் ஓசியில் படம் போட்டதுபோல, பேரவையை நேரலையில் ஆக்கியிருக்கிறார் வரலாறு கண்டிராத விசித்திர முதல்வர்!
‘வெட்டிக்கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறாரே’ என்று நினைத்தால், கடைசியில் குட்டிக்கதை வேறு! அதுசரி! ‘Vulgar warriors ’ Goosebumbs ஆகவும், Fire விட்டு Reels போடவும் ‘Content’ தேற்ற வேண்டாமா?
‘அப்பாவைக் காணும்’ என்று யாரையோ தேடுகிறார். அதுசரி! உங்கள் கதையில் அப்பாவைக் காணாதது போல, சபையில் உங்களிடம் ஆளுமை என்பதையே காண முடியவில்லையே, ஏன் முதல்வரே? சொந்தத் துறையைச் சார்ந்தக் கேள்விகளுக்கும் சொந்தமாகப் பதில் சொல்ல வக்கற்று நிற்கிறீர்களே? தமிழ்நாட்டுச் சட்டமன்றம் காணாத கந்தர்வக்கோலமாக அல்லவா இருக்கிறது! யாரோ எழுதிக் கொடுத்ததை ஏற்ற இறக்கமாக வாசித்து, உடல்மொழி காட்டுவதில் மட்டும்தானே வீரம் இருக்கிறது உங்களிடம்! மற்றபடி, ‘ A4 Paper’ இல்லையென்றால், முதல்வரே! நீங்களே Waste Paperதானே!
ஆளுவதென்பது குற்றமில்லை; ஆளுமையே இல்லாதிருப்பதுதான் குற்றம்!
அறியாமை குற்றமில்லை; அறிந்துகொள்ள நினையாமைதான் குற்றம்!
எழுதிக் கொடுத்ததைப் பார்த்துப் பேசுவதுப் குற்றமில்லை; எழுதிக் கொடுத்தால் மட்டும்தான் பேசுவேன் என்பதுதான் குற்றம்!
புரிந்துகொள்ளுங்கள் முதல்வரே! கொஞ்சமாவது திருந்திச் செயல்படுங்கள். ஆட்சியைப் பிடிக்க Reels போட்டிருக்கலாம். ஆட்சியைப் பிடித்தப் பிறகும், Reels மட்டுமே போட்டுக் கொண்டிருந்தால் நல்லாவா இருக்கு?
ஆச்சர்யக்குறி ஆட்சியாளரே! மாண்புமிகு ‘மக்கு’ முதல்வரே!
‘சுறா’ படத்தையும் ‘Super’ எனும் சொல்லுமளவுக்கு உங்களுக்கு ரசிகர்கள் இருக்கலாம். ஆனால், சுமாருக்குக் கீழான உங்களது படுபாதக ஆட்சியையும் ‘Blockbuster’ எனப் பாராட்டுமளவுக்கு தமிழ் மக்கள் ரசிக மனப்பான்மையிலேயே மூழ்கிக் கிடக்க மாட்டார்கள் என்பதை இனியாவது புரிந்துகொள்ளுங்கள்!