Transforming Tamil Nadu’s spiritual landscape! 🛕✨
Between 2021 and 2026, the #HRCE Department achieved monumental milestones
💰 ₹7,701 Crore worth temple properties recovered
🕉️ 3,500+ Temple Consecrations completed
🤝 Appointment of Archakas from all communities & Women Othuvars
An era of transparency, restoration,
and social justice. 📈
@PKSekarbabu ♥️🔥
#TamilNadu #AranilayaThurai #TempleGovernance #Mkstalin #Udhayanidhistalin #Sekarbabu
தொட விடமாட்டேன், தொட்டால் விடமாட்டேன், தொட்டவர்களையும் விட மாட்டேன் என ரீல்ஸ் கண்டெண்டுக்கு ஏற்றார் போல திரைப்பட வசனங்களை அடுக்கிய முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள், தன் சொந்தக் கட்சிக்குள் நிரம்பியிருக்கும் ஊழல்வாதிகளை எப்போது ? எப்படி ஒழிக்கப் போகிறார் ?.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சியின் தலைவரும், தவெக நிர்வாகியுமான திரு.வீராசாமி அவர்கள், ஒப்பந்ததாரர் ஒருவரிடம் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
ஏற்கனவே ஊழல் புகார்களுக்கு உள்ளாகி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இருந்து விலகி, தவெகவில் வெள்ளாவி வைத்து வெளுக்கப்பட்ட திரு.வீராசாமி அவர்கள், தற்போது ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்குவது போல வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள், அவர் மீது ஏற்கனவே குவிந்திருக்கும் ஊழல் புகார்களையும், பொதுமக்கள் அவர் மீதி வைத்த குற்றச்சாட்டுகளையும் உறுதிபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு சொந்தமான கோயில் நிலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக புகார் எழுந்திருக்கும் நிலையில், தற்போது தவெக நிர்வாகி ஒருவர் லஞ்சம் வாங்குவது போல வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள், தவெகவின் வெளிப்படையான நிர்வாகம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆகியவற்றின் லட்சணத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
எனவே, ஒப்பந்ததாரரிடம் தவெக நிர்வாகி லஞ்சம் வாங்குவது போல சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கும் வீடியோக் காட்சிகளை முழுமையாக ஆய்வுக்குட்படுத்தி, லஞ்சம் வாங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, வரும் காலங்களில் ஊழல் ஒழிப்பை பெயரளவில் இல்லாமல் செயல் அளவில் கொண்டு வர வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே உள்ள ஈத்தங்காடு கிராமத்தில், சிறிய அளவில் பெட்டிக்கடை நடத்தி வந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மன் (34), கடந்த ஜூலை 9-ஆம் தேதி தடை செய்யப்பட்ட குட்கா விற்றதாகக் கூறி தென்தாமரைக்குளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜூலை 13-ஆம் தேதி சபரிவர்மனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாகச் சிறைத்துறை காவலர்கள் அவரது குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத, கைது செய்யப்படும்போது ஆரோக்கியமாக இருந்த ஒருவருக்கு எப்படி மாரடைப்பு வரும்? இது திட்டமிட்ட "காவல்நிலையப் படுகொலை" எனக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
தற்போது சபரிவர்மனின் உடற்கூராய்வு (Autopsy) முடிவுகள் வெளியாகியுள்ளன. அவரது உடலில் 19 இடங்களில் கடுமையான இரத்தக் காயங்கள் இருந்துள்ளன. வலது கையில் 6 இடங்களிலும், வலது மற்றும் இடது கால்களிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் நெஞ்சுப்பகுதியில் கடுமையான காயமும், பின்னங்கழுத்து மற்றும் தலைப்பகுதியில் பலத்த காயங்களும் ஏற்பட்டுள்ளன; முகம் முழுவதும் சிவந்து போயிருந்தது.
இதைப் பார்க்கும்போது மிகக் கொடுமையான சித்திரவதைக்கு ஆட்படுத்தப்பட்டு சபரிவர்மன் கொல்லப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. இது சிறையில் நடந்த மரணமாக இருந்தாலும், இதற்குச் சிறைக்காவலர்கள் மட்டுமே பொறுப்பல்ல.
இது திட்டமிட்ட காவல் படுகொலை. சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ், திருப்புவனம் அஜித்குமார் ஆகியோருக்கு என்ன நடந்ததோ, அதுதான் தற்போது சபரிவர்மனுக்கும் நடந்துள்ளது.
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை! கடந்த ஆட்சியில் நடந்த காவல்நிலைய மரணங்களைக் கண்டித்து, "சாரி (Sorry) வேண்டாம், நீதி வேண்டும்" என்று அறிக்கை விட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், இந்தப் பச்சைப்படுகொலைக்கு இதுவரை வாய் திறக்காதது ஏன்?
நாகர்கோவிலில் லாக்கப் டெ**த் | உடம்பெங்கும் காயம் | கதறும் உறவினர்கள் | கண்டுகொள்ளாத முதல்வர் |
https://t.co/TLErhAEE4J
#JusticeForSabarivarman #PoliceBrutality #TamilNadu #TVKVijay @TVKVijayHQ
திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி
இப்படி அசிங்கப்படத்தான் ஓடு ஓடு ஓடுன்னு cringe act எல்லா செஞ்சீங்களா முதல்வர் அவர்களே ???
அமைச்சர் ரமேசு இங்கே வாப்பா..
இந்த பழனி நிலம் மீட்கப்பட்டது 2025.
அதற்கான ஆணையை நீதிமன்றம் கொடுத்து அது பின் யாருக்கும் பாத்தியமாகாத வகையில் சர்குலர் அனுப்பட்டது.
இது ஒட்டுமொத்த பத்திர பதிவாலளார் அலுவகமும் அறியும்.
பின் எப்படி ஒரு பத்திர பதிவாளார் லீவில் சென்ற நேரத்தில் இன்னொரு பதிவாளர் 100 கோடி நிலத்தை விற்பனை செய்ய அனுமதித்தார்?
ஆக இது தெரியாமல் நடந்தது அல்ல.
சரி அவர் ஒருவர் தான் குற்றவாளியா? இல்லை..
100 கோடி அளவு மதிப்புள்ள நிலம் என்றால் மாவட்ட சார்பதிவாளாருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கும். அல்லது அவர் கேட்டுக் கொண்டால் மட்டுமே கீழே இருக்கும் பத்திர பதிவாளார்கள் பதிவு செய்ய வாய்ப்புண்டு - ஆக ஏன் மாவட்ட பதிவாளர் மீது விசாரனை இல்லை?
இதில் சந்தேகமே அமைச்சர் ரமேஷ் தரப்பில் இந்த நிலத்திற்கு உரிய முறையீடு செய்ய வேண்டிய அதிகாரி மாரிமுத்து சந்தேகத்திற்கு இடமான வகையில் விற்பனை ஆனதும் மாற்றப்பட்டது தான்.
சரி இந்த இடம் விற்பனை செய்ய அனுமதித்த அந்த மர்ம நபர் யார்?
{கீழே இணைக்கப்பட்டுள்ள ஆதாரத்தில் அதிகாரி மாரிமுத்து இந்த நிலம் பற்றி மாவட்ட பத்திர பதிவாளருக்கு கடிதம் 2 ஆம் தேதி எழுதுகிறார். அதையும் மீறு தான் பத்திரம் பதிவு செய்துள்ளனர். அதிகாரி மாரிமுத்துவிற்கு இந்த புகார் கொடுக்கப்பட்டதும் சில மாதம் முன்பு தான். ஆக அனைத்து அதிகாரிகளும் நன்கு தெரிந்தே செய்துள்ளனர்! ஆக வேலை முடிந்ததும் மாரிமுத்துவை சென்னைக்கு பதவி உயர்வு கொடுத்து அனுப்பி வைத்தது அமைச்சரா இல்லை IAS அதிகாரியா? இருவர் தவிர யாரும் முடியாது..}
இரண்டு துறைகள்(கோவில் + நிலம்) சம்மந்தபப்ட்ட ஒரு 100 கோடி ரூபாய் நிலம் மோசடியாக பதிவாக - இந்த இரண்டு துறையிலும் வழுவான influence இருக்கும் நபரால் தான் முடியும் ! அது யார் என்று தேடினால் கிடைப்பவர் இந்த இரண்டு துறைக்கும் இன்று செயல் அலுவலராக இருக்கும் குமரகுருபரன் IAS. நம்ம அமைச்சர் ரமேஷ்க்கு ஆளிலானல் அழகுராஜா அவர் தான்.
ஆக இந்து சமய அறநிலையத் துறை & பத்திர பதிவு துறை இரண்டுக்கும் Secretary to Government ஆக இருப்பவரான குமரகுருபரன் IAS முக்கியமாக விசாரிக்கப்பட வேண்டியவர்.
ஆக இந்த வழக்கில் ஒரே ஒரு பத்திர பதிவாளார் தான் காரணம் என்று முடிப்பதே - தவறு.
இதில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் விசாரனை செய்யப்பட வேண்டியவர்களே.
1.சார் பதிவாளார் : பத்திர பதிவு செய்தவர்.
2.மாவட்ட சார் பதிவாளர் : அந்த நிலம் பதிவு செய்ய கூடாது என தெரிந்தும் புகார் வந்தும் நடவடிக்கை எடுக்காதவர்.
3. மாரிமுத்து இணை ஆணையர் : நிலத்தை மீட்கவேண்டிய பொறுப்பு உள்ளவர் - மர்மமாக பதவி உயர்வு பெற்றவர்.
4.குமரகுருபாரன் IAS - கோவில் + நிலம் : இந்த இரண்டு சம்மந்தப்பட்ட துறை இரண்டுக்குமே இவர் தான் செயலாளார். இவர் மீது அதிக சந்தேகம் வழுக்கிறது.
5.இறுதியாக நம்ம அமைச்சர் ரமேஷ்.. Expire date கூட ஸ்டிக்ட்டா பார்க்கும் அமைச்சருக்கு இந்த மொத்த விசயமும் தெரியாம நடந்துட்டது? அதிலும் பதவி உயர்வு எல்லாம் இவருக்கே தெரியாம நடந்தது என்பதை ஏற்க முடியவில்லை. இவர் தெரிந்து நடந்தால் இவர் மீதும் வழக்கு பதிவு செய்வது அவசியம். தெரியாமல் நடந்தது என்றால் பதவில் இருக்க தகுதியே இல்லை.
என்ன அமைச்சர் ரமேஷ் எப்போ வழக்கு போடுவீர்? iphone பரிசாக வந்ததா என்ன என்று ஆரம்பித்து அனைத்திற்கு துறை அமைச்சர் பதில் கொடுத்தாக வேண்டும். இது விஜய் படம் அல்ல - தீ சாரதீ என்று நீதிமன்றத்தில் வசனம் பேச...
ஆக மக்கள் முன் வைக்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கொடுங்க... முடிந்தால் இந்த அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுங்க.. முதலில் அந்த IAS அவர வச்சு ஆரம்பிங்க..
பழனி முருகன் கோவில் 100 கோடி ரூபாய் சொத்து விவகாரத்தில் சிக்கிய அமைச்சர் ரமேஷ் "நான் வழக்கு போடுவேன்" என்று மிரட்டலுக்கு என் பதில் - எங்கே போடு பார்க்கலாம்... அதுக்கு முன்பு மக்கள் கேள்விக்கு பதில் சொல்லு மேன்..
பழனி கோவில் இணை ஆணையராக இருந்த மாரிமுத்துக்கு - இந்து அற நிலைத்துறை இணை ஆணையர் செயல் அலுவலர் பதவி உயர்வு கொடுத்தது நீங்களா இல்லையா? (ஆதாரம் இணைத்துள்ளேன்)
100கோடி நிலம் கைமாறியவுடன் அடுத்த 2 நாளில் அந்த ஆளுக்கு பதவி உயர்வு கொடுத்தது எதனால்? அதற்கு என்ன அர்த்தம்? பழனி கோவில் சொத்து விவகாரத்தில் முறையிட்டு அதை மீட்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர் மாரிமுத்து, ஆக சரியா முடிந்த உடனே பதவி உயர்வு என்று கொடுத்து சென்னை நகர்த்த என்ன அவசியம் அவசரம் உங்களுக்கு?
கோவில் நிலம் விற்பனை செய்யப்பட்ட தேதி 06 ஆம் தேதி ஜுலை இந்த மாதம் முடித்துள்ளனர். (ஆதாரம் இணைத்துள்ளேன்)
மாரிமுத்து பதவி உயர்வு அறிவிக்கப்பட்டு சென்னைக்கு செல்வதற்கு ஆணையை ஜுலை 9ஆம் தேதி வெளியிடுகிறீர்!
சரி நிலம் விற்பனை உங்களுக்கு தெரியாது என வைத்துக் கொள்வோம் - இந்த அதிகாரி பதவி உயர்வுமா உங்களுக்கு தெரியாது ? இணை ஆணையராக உங்கள் அமைச்சரவையில் பெரிய பொறுப்பில் வரும் நபரை கூட தெரியாது என்றால் - பின் என்ன வேலை பார்த்துட்டு இருக்க? உங்கள் விஜய் வார்தையில் சொல்வது என்றால் "நல்லா வருது வாயில".
சரி இந்த மாரிமுத்து மீது என்ன என்ன புகார் இதுவரை உள்ளது சொல்லுங்க! இல்லை நான் சொல்லவா?
மக்கள் கேள்விக்கு பதில் சொல்ல துப்பு இல்லை "வழக்கு போடுவேன் " என்றி மிரட்டல்? வழக்கு போடுங்க.. அதற்கு முன் பதில் சொல்லுங்க...
இப்போ அப்படியே சார் பதிவாளார் பக்கம் மொத்தமா திருப்பி மொத்த விவகாரதை ஒருத்தர் மேல் வைத்து முடிக்க பார்கிறீர்? அதற்கும் கேள்வி - அதிலும் சிக்குவீர்... இதற்கு பதில் சொல்லு Next அதை வெளியிடுகிறேன்.
🔴 லாக்-அப் மரணம்! TVK ஆட்சியிலும் அதே அராஜகம்! 😡
நாகர்கோயில் கிளை சிறைச்சாலையில் ஒரு வாலிபர் மரணம்... ஆனால் அதற்கு முன் தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் அவர் முழு ஆரோக்கியத்துடன் அமர்ந்திருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது!
அந்த வீடியோவில் அவர் சரியாக இருந்தார். சில மணி நேரங்களில் சிறையில் இறந்து போனார். இது லாக்-அப் மரணம் தானே? TN Police-யின் காவலில் இருந்து ஒருவர் எப்படி இப்படி மரணமடைகிறார்?
*தொட்டால் தீட்டா என்ன.. ஏன் இவர்களுக்கு கைகொடுத்தால் தான் என்ன..?அந்த சகோதரியே அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று பேட்டி கொடுத்தாலும் ஆச்சரியப்பட இல்லை...*
Watch | ”உடலின் 19 இடங்களில் காயங்கள்.. குறைபாடு கொண்ட வலது கையில் 3 இடங்களில் உடைத்துள்ளனர்..”
நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரிவர்மனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியான நிலையில், காவலர்களை கைது செய்யும் வரை உடலைப் பெற மாட்டோம் என உறவினர்கள் திட்டவட்டம்
#SunNews | #Nagarcoil | #CustodyDeath
செங்கல்பட்டு மாவட்டத்தில் த.வெ.க நிர்வாகி லஞ்சம் வாங்கும் தூய காட்சி !
தூயசக்தி முதல்வர் கண்ணில் பட்டால் விடவே மாட்டார் .
தொடவும் மாட்டேன்
தொடவும் விட மாட்டேன்
தொட்டவனையும் விடமாட்டேன் .
என்ன பண்ணுவீங்கன்னு இப்ப நாங்க பாக்கனும் மு தல்வரே …
@TVKVijayHQ
நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன் காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றக்காவலில் மரணம் அடைந்து இருப்பது அறிந்து அதிர்ச்சியுற்றேன்.
கைதானபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த சபரிவர்மன், விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்ட போது, உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் என்று காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.
ஆனால், மரணமடைந்த சபரிவர்மனின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும், அவரை மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் காவல்துறையினர் அடித்தே கொலை செய்துள்ளதாகவும் சபரிவர்மனின் குடும்பத்தார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் இதற்கு உரிய பதில் சொல்ல வேண்டும்.
சபரிவர்மனின் கடையில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாக, அவரை கைது செய்த காவல்துறையினர், ஈரோட்டில் குட்கா விற்றதாக கைது செய்யப்பட்ட த.வெ.க. நிர்வாகி அருணை அன்றே சொந்த ஜாமினில் விடுவித்துள்ளனர்.
சபரிவர்மன் எனும் சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகி என்றால் வேறொரு சட்டம் என்னும் காவல்துறையின் போக்குக் கண்டிக்கத்தக்கது.
இந்தச்சம்பவத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, சபரிவர்மனின் மரணத்திற்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும்.
சபரிவர்மனின் மரணத்துக்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்.
#நீதி_வேண்டும் #Custodial_Death
விஜய் ஊழல் இல்லாத ஆட்சியை தருவேன் என்று கூறி வரும் நிலையில், மாம்பாக்கம் தவெக ஊராட்சி மன்ற தலைவரும், தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா என்பவர் ஒப்பந்ததாரரிடம் 1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல்.