#HBDIlaiyaraaja
“ஒரு மனிதரா எப்படியோ.. இசையா என்னைக்குமே ராஜா is great” னு நிறைய பதிவுகள் பாப்பேன் ராஜாவோட எல்லா பிறந்தநாள் அப்பவும்.. நிச்சயமா இன்னைக்கும் வரும்..
ஆனா எத்தனையோ விஷயங்கள்ல ராஜாவோட பண்பு என்னைய வியக்க வெச்சிருக்கு.. ஏனோ ராஜா பற்றியான அந்த செய்திகள் எப்போமே Mainstream ல பேசுபொருளே ஆகாது..
கீழ இருக்கற ஒரு நாலு நிமிட வீடியோல எத்தனை உயரிய பண்புகள் இருக்கு பாருங்க :-
*ஒரு ரெண்டு ADs “Music set ஆகல அந்த இடத்துக்கு, இந்த பாட்டு மாதிரி இருக்கனும்”னு வேற ஒரு பாட்டு Reference கொடுத்ததும், அது சரியா இருக்குனு அதைப்போல பாட்டை மாத்தி போட்டு கொடுத்தது..
* மொதல்ல ஜெயிச்சிட்டு வாங்க யா அப்புறம் பாத்துக்கலாம்னு Free யா இசையமைத்து கொடுத்தது..
*அது ஞாபகமே இல்லாத அளவுக்கு எத்தனையோ பேருக்கு இப்டி இலவசமா Music போட்டு கொடுத்தது..
*உங்க கம்பெனிக்கு MSV தானே இசையமைப்பாரு? இப்போ நான் போட்டா நல்லாருக்காது வேண்டாம்னு சொன்னது..
Security தண்ணி எடுத்துட்டு வந்ததுக்காக அவர்கிட்ட கடிஞ்சிக்கிட்டாரு அப்டினு விமர்சிக்கற issue ல கூட அவரோட actual point காசு கொடுத்து concert பாக்க வர்றவங்களோட experience கெட்டு போயிட கூடாதுன்றது தானே? நேத்து Concert ல கூட, சுருதி விலகி ஒரு பாடகி பாடினதை உடனே Stop பண்ணிட்டாரு.. அறிவு இருக்கானு அந்த Journalist அ பார்த்து கேட்டதுக்கு ராஜாவ விமர்சனம் பண்ற யாருமே “Beep song பற்றி என்ன நினைக்கறீங்க?”னு ராஜா கிட்ட ஏன் டா போயி கேட்டாரு அந்த Journalist னு கேட்கல.. Tone Policing ஐ எப்போமே ராஜாவுக்கு தான் பண்றாங்க..
இதுபோக Royalty issue ல அவர் உரிமைக்காக போராடறத கூட பணத்தாசை பிடித்தவருனு மடைமாற்றி விடறாங்க.. T Siva, RK Selvamani எல்லாம் ஓபனா மேடைலயே சொல்லிட்டாங்க அவர் போராடறது அவருக்காக மட்டுமில்ல, அதுல பெரும் பங்கு நலிந்த தயாரிப்பாளர்கள், பாடலாசிரியர்கள், இசை கலைஞர்கள் எல்லாருக்கும் போகும்னு.. ஒருநாள் கூட அவர் வந்து என்னைய இப்டி திட்டுறீங்களேனு பொலம்பினதோ, இல்ல என் பக்க நியாயத்தை கேளுங்கனு விளக்கினதோ இல்ல.. வெகுஜன மக்கள் புரிஞ்சிக்காம கலாய்க்கிறது கூட எனக்கு பிரச்சனை இல்ல.. ஆனா Corporate அ எதிர்த்து, எல்லா படிப்புகள், கிண்டல் கேலிகளையும் தாண்டியும் எளிய கலைஞர்களுக்காக போராடற ஒருத்தர, சமீபத்துல #Karuppu படத்துல RJ Balaji செய்த மாதிரி சக கலைஞர்கள் கேலி கிண்டல் பண்றது தான் ஆகப்பெரும் கேவலம்..
Life ல அவர் எடுத்த Political stance மேல எனக்கு விமர்சனம் இருந்தாலும், அதை வெச்சு அவர என்னைக்கும் திட்டிட முடியாது.. ஏன்னா அது அவரோட arrogance லேந்து வரல, சுய ஆதாயத்துக்காகவோ அல்லது பதவியோ பணமோ பெறுவதற்கோ பேசல, அவரோட Ignorance லேந்து வருது.. இந்த Narrative அ system உருவாக்கின Constructs அ நம்பி அதுக்கு accustom ஆகிக்கிட்ட ஒரு victim ஆ தான் பாக்கறேன் அப்டி Political stances விஷயத்துல இளையராஜாவை.. இளையராஜாவோட Life தான் அவரோட political statement ஏ.. இளையராஜா என்ன statement கொடுத்துருக்காருன்றது அதுக்கு முன்னாடி ரொம்ப சின்னது தான்..
Bison படத்துல ஒரு வசனம் வரும்.. “இந்த புழுதி காட்டுல இருந்து ஒருத்தன் அவ்ளோ தூரம் போயிருக்கான்.. அவனை இழிவுபடுத்துவியா? வேலிய உடைச்சு எரியறது மட்டும் சாதனை இல்ல.. வேலியே போடமுடியாத உயரத்துக்கு தன் திறமையால ஒருத்தன் போறதும் சாதனை தான்னு.. அப்படி தன் 84 வயதுலயும், 50வது வருடத்துலயும், 1540 படங்கள் கடந்தும், மனைவி மகள்னு தன் கூட இருந்த பல தூண்களை இழந்த பிறகும், Markets, Gadgets, Business, Trends, Competitors, Process னு எல்லாமே மாறின பின்னாடியும் இன்னும் விடாப்பிடியா நான் செய்யறத செஞ்சே உங்கள ரசிக்க வெப்பேன்னு ஒருத்தர் இருக்கறதும்.. கார்த்திக் சுப்பராஜ், வெற்றிமாறன், மிஸ்கின், குமாரராஜா, மாரி செல்வராஜ்னு அடுத்த தலைமுறையோட Iconic directors எல்லாரும் போயி அவர் கிட்ட உங்களுக்கு தகுதியான கதையோட நான் வந்துருக்கேன் அப்டினு போயி நிக்கறதும்.. பேசறவன் பேசிகிட்டே இரு, நான் போயி ஒரு Symphony முடிச்சிட்டு வரேன்னு இன்னுமும் குறையாத தாகமும், passion உம், Skill உம் Retain பண்ணிக்கிட்டதும்னு Ilaiyaraaja இன்னும் உயர உயர உயர பறந்துக்கிட்டே இருக்காரு.. ஒரு கலைஞனா இதைவிட ஒரு Benchmark இனி யாராலையும் Set பண்ணவே முடியாது!! He’s the Only GENIUS in music world!!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
இசைஞானி இளையராஜா ஐயா!! பிறந்ததற்கு நன்றி!! 🙏
ராஜாவோட மிக அதிஅற்புதமான பாடல்கள்ண்ணா "ஈரவிழி காவியங்கள்" முதலிடத்துல இருக்கும்.ஆணோட கனவை தொறத்துற ஆரம்ப காலங்களில் "கனவில் மிதக்கும்" தொடங்கி அதை கைவிடுற நிலைல "பழைய சோகங்கள்''ன்னு மனுஷன் அவர் வாழ்க்கைய நினைச்சு பண்ணாப்லயே இருக்கும் பாடல்கள்❤️❤️❤️❤️
ரஜினி மற்றும் கமலை விட வயதால் வேண்டுமானால் விஜய் சிறியவராக இருக்கலாம் ஆனால் தைரியத்தால் இவர்கள் இருவரை விடவும் உயர்ந்தவர். தன்னை நம்பிய ரசிகர்களுக்கு நல்ல நடிகனாகவும் இப்போது தலைவனாகவேம் உயர்ந்து நிற்கிறார்.