"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்"
"சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்"
என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?
மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?
கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?
மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?
இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?
#WhySilentCM?
@timesofindia
தோல்விக்கான காரணங்கள் குறித்து, உடன்பிறப்புகள் வெளிப்படையா தகவல் சொல்றதுக்காக தனி Website நாளைக்கே அறிவிக்கப்படும்.
- கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்
#DMK
கழகத்தின் அமைப்பு முறையில் அவசியமான மாற்றங்களை முன்னெடுப்பது பற்றி இன்றைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசினேன்.
தோல்விக்கு யாரும் யாரையும் குறை சொல்ல வேண்டாம். கட்சித் தலைவர் என்கிற முறையில நானே இதுக்கு பொறுப்பேத்துக்குறேன்.
பின்னடைவை வென்று முன்னேறுவோம்! மீண்டு வருவோம், மீண்டும் வருவோம்!
#DMKDistrictSecretariesMeet
@Ahmedshabbir20 Shab.. you missed a few things.. Personal lawyer to Vijay, appeared for Vijay in a tax evasion case and a former Advocate General during the EPS period
“தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது” என்ற எனது நிலைப்பாட்டுக்கேற்ப திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.
அதேபோன்று சட்டமன்றத்தில் இருக்கும் எங்கள் தோழமை இயக்க உறுப்பினர்களான சகோதரி திருமதி. பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர் தமிமுன் அன்சாரி, சகோதரர் நித்தியானந்தம் ஆகிய உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய தோழமைக் கட்சிகள், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அவர்களின் நிலைப்பாட்டையும் நாங்கள் மதிக்கிறோம்.
ஆனால், இந்த ஆட்சி அமைய வழிவகுத்த எல்லாரோட நம்பிக்கையையும் சிதைக்கும் வேலையில தமிழக வெற்றிக் கழகம் இறங்கியிருக்கு.
அதற்கு சாட்சி, ஆளுங்கட்சியின் கடந்த 3 நாட்களின் செயல்பாடுகளும், அதற்கு எங்க தோழமைக் கட்சியினர் கொடுத்த அறிக்கைகளும்!
ஆட்சி நிலைக்கத் தேவையான எண்ணிக்கை எங்கள் தோழமை இயக்க நிலைப்பாட்டால் இருந்தாலும், இன்றைய ஆளுங்கட்சி என்ன செய்திருக்கிறது?
Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, Dirty Politics பண்ணிட்டிருக்காங்க.
பிளவுபட்ட அ.தி.மு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க.
“உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இருக்கும்? இது தூய சக்தியா இல்ல, அடுத்த கட்சி MLA-க்களைத் தூக்குற சக்தியா?” எனத் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களிச்ச மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகிடுச்சு.
மாண்புமிகு முதல்வர் அவர்களே,
உங்க செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்க்குறாங்க. அடுத்து, பிளவுபட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு நீங்க என்ன Return Gift கொடுக்கப் போறீங்க என்பதையும் மக்கள் பார்க்கத்தான் போறாங்க.
எங்களைப் பொறுத்தவரை,
திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தன் கொள்கையில உறுதியா இருந்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியா செயல்படும்!
சென்னையின் வளர்ச்சிக்கான 6 முக்கிய வாக்குறுதிகள்!
நமது மாண்புமிகு முதலமைச்சர் திரு@mkstalin அவர்கள், சென்னையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றும் நோக்கில் 'சென்னை சூப்பர்-6' திட்டங்களை வெளியிட்டார்.
#voteForDMK#OraeThalaivanMKS
இது வெறும் ட்ரைலர் தான்... மெயின் பிக்சர் டெல்லியில்!
தமிழ்நாட்டின் உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்கமாட்டோம்! தொகுதி மறுவரையறைக்கு எதிரான எங்கள் முழக்கம் ஓயாது.
#TNvsNDA
ஜோலார்பேட்டை, அரூர், ஏற்காடு, வீரபாண்டி, சேலம் தெற்கு, சேலம் மேற்கு, ஆகிய தொகுதிகளில் கழக துணை பொதுச் செயலாளர் திருமிகு @KanimozhiDMK எம்.பி அவர்கள் கழக வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்தார்.
மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தொடரவும் மீண்டும் உதயசூரியன் உதிக்கட்டும்!🌄
#VoteForDMK
சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி பல சாதனைகளைப் புரிந்த மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் மக்கள் அமோக வரவேற்பு அளிக்கிறார்கள்.
கழகத் தலைவரின் எழுச்சியுரைகளை கேட்கும்போது எதிரணிகள் இந்த தேர்தல் மட்டுமல்ல இனி எந்த தேர்தலிலும் தி.மு.கழகத்தை வெல்ல முடியாது என்பதை அனைவருக்கும் உணர்த்துகிறது.
நம் தாய் தமிழ்நாட்டை காக்க அனைவரும் ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!
வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄
#VoteForDMK
தேர்தல் களத்தின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளில் வழங்கவிருக்கும் மாதந்திர தொகைத் திட்டங்களைப் பார்த்து மக்கள் பெரும் மகிழ்ச்சிடைந்துள்ளனர்!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK
கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்களை ஒன்றிய அரசு கையகப்படுத்தும் நோக்கில் வெளிநாட்டு நிதி உதவி திருத்தச் சட்டம் FCRA மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. தொண்டு நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் உரிமையை ரத்து செய்து கையகப்படுத்த முடியும் என்ற நிலையை உருவாக்கியுள்ளது. இது ஒரு கொடூரமான சட்டம், துப்பாக்கி முனையில் வீட்டுக்குள் நுழைந்து கொள்ளையடிப்பதற்கு இணையானது!
- மூத்த வழக்கறிஞர் திரு @PWilsonDMK எம்.பி அவர்கள்
#FCRABill2026 #BJPFails