விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய, அண்ணன் திரு @thirumaofficial அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணன் திரு @thirumaofficial அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தொடர்ந்து தனது மக்கள் பணிகள் மேற்கொள்ள, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
பிறப்பினால் எவரும் எவருக்கும் தாழ்ந்தவரும் அல்ல உயர்ந்தவரும் அல்ல எனும் மானுட சமத்துவத்தை அரசியல் சித்தாந்தமாகக் கொண்டு களமாடும் என் உடன் பிறவாச் சகோதரர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், எழுச்சித் தமிழர் திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்து.
@thirumaofficial
என் நன்றியும் வாழ்த்துக்களும்💐ஒர் ஆட்டோ ஓட்டுனரின் ஆட்டிசம் பாதித்த மகள் (23) உடனடி மருத்துவ சிகிச்சைக்காக என் நண்பர் அமைச்சர்வன்னிஅரசு , அமைச்சர் விக்னேஷ் இருவரையும் காலையில் நடைபயிற்சியில் பார்த்த போது சொன்னேன். இருவரின் உடனடி நடவடிக்கையால் ஸ்டான்லியில் சிகிச்சை ஆரம்பம்.🙏
சேலத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை திறப்பை தடுக்கும் சாதிகளில் 'குற்றப்பரம்பரை' என ஒடுக்குமுறை சட்டத்தால்' முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்பட்ட சாதியும் இருக்கிறது.
இந்த சாதியில் பிறந்த அனைவரையும் பிறவி-குற்றவாளிகள் என கிட்டதட்ட 88 சாதிகளை ஆங்கிலேயர் சட்டமியற்றி கொடுமை படுத்தினர். இந்த குற்றப்பரம்பரை சட்டத்தை நீக்கவேண்டுமென இவர்களுக்காக வெள்ளையரிடத்தில் வாதம் நடத்தியவர் அண்ணல் அம்பேத்கர்.
"ஒருவர் பிறப்பால் குற்றவாளியாக முடியாது, சூழ்நிலையே ஒருவரை குற்றவாளியாக்குகிறது" என்ற அறிவியல் பூர்வமான உண்மையை அம்பேத்கர் உரக்கச் சொன்னார். பிறப்பிலேயே ஒரு சமூகத்தை குற்றப்பரம்பரை என்று அழைப்பது அநாகரிகமானது என்று அவர் கடுமையாக வாதிட்டார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் போது, ஜாதி, மத, இன வேறுபாடின்றி அனைவருக்கும் சம உரிமை, சுதந்திரம் மற்றும் வாழ்வுரிமை வழங்கும் சட்டப்பிரிவுகளை (குறிப்பாக பிரிவு 14, 15, 19, 21) அம்பேத்கர் சேர்த்தார். இந்த அடிப்படை உரிமைகள், குற்றப்பரம்பரை சட்டம் போன்ற கொடூரமான சட்டங்கள் சுதந்திர இந்தியாவில் நீடிப்பதற்கான வழியை முற்றிலும் அடைத்தன.
சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கர், இந்த ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும், அவர்களின் மீதான அவதூறு முத்திரையை அகற்றுவதற்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தார். இந்தியா சுதந்திரமடைந்த பிறகு 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று இச்சட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
வரலாறு சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்தால், அண்ணலின் சிலையை இந்த சாதியை சார்ந்தவர்களே நிறுவியிருப்பார்கள். வரலாறை மறந்தவர்கள் நன்றியுணர்வற்று சாதிய வன்மத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
இந்த வரலாறு அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தால் அவர்களாவது சொல்லி சிலையை திறந்திருப்பார்கள்.
மாவட்ட காவல்துறை அதிகாரிக்கும், வருவாய்-நிர்வாக அதிகாரிகளுக்கும் வரலாறு தெரியவில்லை. விடுதலையான மக்களுக்கும் வரலாறு தெரியவில்லை. ஆட்சியாளர்களுக்கும் வரலாறு தெரியவில்லை.
காவல்துறையை ஏவிய தவெக ஆட்சியாளர்கள் அண்ணலின் சிலையை நிறுவ முன்வரவில்லை. தவெக ஆட்சியாளர்களின் காவல்துறை ஒடுக்குமுறையை திமுக-அதிமுக ஆகிய எதிர்கட்சிகளும் கேள்வி எழுப்பவில்லை.
கற்றறிந்த அதிகாரிகளும், காவல்துறையினரும், ஆட்சியாளர்களும், எதிர்கட்சியினரும் வரலாறு அறியாதவர்களெனில்
இங்கே யார் 'தற்குறி' ??
இந்த தற்குறிகளுக்கு மத்தியில் இனிமேல் அண்ணல் அம்பேத்கர் சிலைகள் ' கால் மேல் கால்' போட்டவாறுதான் வடிவமைக்கப்பட்டு திறக்கப்பட வேண்டும்.
தற்குறிகளுக்கு மத்தியில் அறிவாளி கால்-மேல்-கால் போட்டு திமிராக அமர்வதுதான் கற்றோர்க்குச் சிறப்பு
#BREAKING | “திமுக ஆட்சியில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கையைப் பெற்று, தவெக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும்” -ஆளுர் ஷா நவாஸ்
#SunNews | #AloorShaNavas | #TVKVijay | #VCK
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டேன்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எனது சமீபத்திய தொலைக்காட்சி நேர்காணலை கண்டதாகவும்,
அதில் SOFA MODEL ஆட்சிக்கு (Social Justice - Organised Action - Freedom - Anti-Caste/Corruption) கொடுத்த விளக்கத்தை மிகவும் ரசித்ததாகவும் தெரிவித்தார். தொடர்ந்து துறை ரீதியான பணிகளில் சிறப்பாக செயல்படுமாறு வாழ்த்தினார்.
@CMOTamilnadu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டேன்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எனது சமீபத்திய தொலைக்காட்சி நேர்காணலை கண்டதாகவும்,
அதில் SOFA MODEL ஆட்சிக்கு (Social Justice - Organised Action - Freedom - Anti-Caste/Corruption) கொடுத்த விளக்கத்தை மிகவும் ரசித்ததாகவும் தெரிவித்தார். தொடர்ந்து துறை ரீதியான பணிகளில் சிறப்பாக செயல்படுமாறு வாழ்த்தினார்.
@CMOTamilnadu
ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி கீரனூரில் கடந்த 30 வருடங்களாக ஆக்கிரமிப்பில் இருந்த அருந்ததியர் மக்களுக்கான சுடுகாட்டை மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர்
அண்ணன் வன்னி அரசு அவர்கள் நடவடிக்கையால் மீட்கப்பட்டது...🔥
திரையில் பார்த்திருக்கிறோம்
தரையில் பார்த்ததில்லை...!
எல்லாம் மாண்புமிகு சமூகநீதி துறை அமைச்சர் அண்ணன் வன்னி அரசு @VanniTamizhVCK அவர்கள் சாத்தியப்படுத்துகிறார்...🔥
@thirumaofficial@CMOTamilnadu
காங்கிரஸ் பேரியக்கத்தின் இளம்தலைவர் @RahulGandhi அவர்களுக்கு எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கூறுகளைப் பாதுகாத்திடும் போர்வாளாக அரசியலரங்கில் களமாடும்
திரு. ராகுல் காந்தி அவர்களின் அளப்பரிய முயற்சி வெற்றிபெற விசிக சார்பில் மனமுவந்து வாழ்த்துகிறோம் .