மக்கள் நீதி மய்யம் சார்பில் கோரிக்கை மனு!
சைதாப்பேட்டை ம.நீ.ம மாவட்டம் சார்பில், தொகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை, சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. அருள் பிரகாசம் அவர்களிடம், சென்னை மண்டல செயலாளர் திரு. T.மயில்வாகனன் @imayilvagan மற்றும் சைதாப்பேட்டை மநீம மாவட்டச் செயலாளர் திரு. ஜெ. கதிர் @SaidaiKathir வழங்கினர்.
இந்தக் கோரிக்கை மனுவில், திறக்கப்படாமல் உள்ள அம்மா பூங்காவை உடனடியாகப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வருதல், அம்பேத்கர் கால்பந்து மைதானம் (140 வது வட்டம்) மற்றும் இதர கால்பந்து மைதானங்களை மேம்படுத்தி விளையாட்டு வீரர்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருதல், ஒலிம்பியா பார்க்கிலுள்ள (168 வது வட்டம்) மாநகராட்சிப் பூங்காவை சீரமைத்தல், கலைமகள் நகரில் உடற்பயிற்சிக் கூடம் அமைத்தல், அம்மா பூங்கா பின்புறமுள்ள ஃபுட்பால் மைதானம் சீர் செய்தல் மற்றும் 139 வது வட்டம் R6 விளையாட்டுத் திடலில் உடற்பயிற்சி செய்யும் தளவாடங்கள், அங்குள்ள மோசமான இருக்கைகள் ஆகியவற்றை விரைந்து சரி செய்தல் உள்ளிட்ட சாராம்சங்கள் அடங்கியுள்ளன.
சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்
திரு. அருள்பிரகாசம் அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ள கோரிக்கைகளைப் பரிசீலித்து, நடவடிக்கை எடுக்க ஆவன செய்வதாக உறுதியளித்தார்.
மேலும் இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் திருமதி.பாக்கியம், திரு. போலீஸ் மோகன், திரு. முத்துக்குமார், மாவட்ட அமைப்பாளர் திரு.சந்தர், மாவட்ட துணை அமைப்பாளர் திரு. சுல்தான் பாய், பகுதி செயலாளர் திரு. செல்வகுமார், வட்டச் செயலாளர்கள் திரு. ராஜேஷ், திரு. முனுசாமி, திரு. ஆறுமுகம், திரு. சத்திய நாராயணன், திரு. பரந்தாமன், திரு. தனசேகரன், திருமதி. புவனா சுரேஷ், திரு. ஹரிஷ், திரு. கார்த்திக், திருமதி. ஜெனிபர் உள்ளிட்ட மய்ய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
பிரான்ஸ் சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டியில், தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் மகளிர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் அசத்தலாக விளையாடி 2 தங்கம் மற்றும் 1 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள அவருக்கு, மக்கள் நீதி மய்யம் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவினால் தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதும், பலர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருவதும் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்டோர் விரைவில் குணமடைய விழைகிறேன்.
உயிராபத்து விளைவிக்கும் ரசாயனங்களைக் கையாளும் தொழிற்சாலைகளில் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் சமரசமின்றிக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். அலட்சியம் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்யவேண்டும்!!
மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்!
நேற்றைய சட்டமன்றக் கூட்டத்தின்போது இரங்கல் தீர்மானங்கள் வாசிப்பு, மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்நாடு அரசின் தனி தீர்மானத்தின் மீதான விவாதங்கள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டன.
ஆனால் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கவர்னர் உரையின் மீதான விவாதங்களுக்கு நேரலை தரப்படவில்லை. சட்டமன்றத்தின் அனைத்து நிகழ்வுகளையும் அறிந்து கொள்ளும் உரிமை பொதுமக்களுக்கும், ஊடகங்களுக்கும் இருக்கிறது. ஆகவே, இனிவரும் நாட்களில் சட்டமன்றத்தின் அனைத்து நிகழ்வுகளையும் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. மேலும், நேரடி ஒளிபரப்பு குறித்து தொடர்ந்து பல ஆண்டுகளாக மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி வருவதை நினைவு கூர்கிறோம்.
வெளிப்படைத் தன்மையோடு செயல்படவிரும்பும் தவெக அரசு இதனை உடனடியாகச் செயல்படுத்தும் என்று நம்புகிறோம்.
A.G.மெளரியா, I.P.S., (ஓய்வு)., @MouryaMNM
துணைத் தலைவர்,
மக்கள் நீதி மய்யம்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
The Union Government has approved 40 Sainik Schools under the PPP model
Military-oriented education should remain firmly in the public domain
We cannot allow the creeping privatization of institutions linked to our defence ecosystem
@DefenceMinIndia#KamalHaasan@maiamofficial
@PttvNewsX உன் துர் நாற்ற பேச்சால் ஆட்சியை இழந்து விடும் காலம் விரைவில் வரும் என்று தெரிகிறது!
இன்னும் அதிகமாக பேசுங்க ஆதவ்!
பில்டிங் ஸ்ட்ராங்
பேஸ்மென்ட் வீக்,💯 %இதான் உண்மை!
இதை மறக்க வேண்டாம்! 🤣
டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க தமிழக அரசு (தவெக) தனது அறிவிப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – @maiamofficial வலியுறுத்தல்!
தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் டெல்டா பகுதி விவசாயிகளின் தற்போதைய அவல நிலையைக் கண்டு மக்கள் நீதி மய்யம் ஆழ்ந்த கவலை கொள்கிறது. விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதில் தற்போதைய தமிழக அரசு (தவெக) காட்டும் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரியும் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.
1. மேட்டூர் அணை மூடல் & மின்வெட்டு துயரம்:
வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு (2026) அணையில் முழு கொள்ளளவு எட்டப்படாததால் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் டெல்டா பாசனம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றாக, நிலத்தடி நீரை (போர்வெல் மூலம்) இறைத்து பாசனம் செய்யலாம் என்று விவசாயிகள் முயன்றால், டெல்டா மாவட்டங்களில் நிலவும் கடுமையான மும்முனை மின்சார (Three-Phase Connection) மின்வெட்டு அவர்களின் கைகளைக் கட்டிப் போட்டு வைத்துள்ளது. போதிய மின்சாரம் இல்லாததால் போர்வெல் மூலமும் அவர்களால் விவசாயம் செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
2. போதாத 'குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு':
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையை ஈடுகட்ட, கடந்த இரண்டு ஆண்டுகளில் முந்தைய திமுக அரசு விவசாயிகளுக்குக் கூடுதல் நிதியுடன் கூடிய குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பை வழங்கியிருந்தது.
ஆனால், தற்போதைய தவேக அரசு அறிவித்துள்ள குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்பு வெறும் ரூ. 134.83 கோடி மட்டுமே. இது முந்தைய அரசு வழங்கிய தொகையை விட மிகவும் குறைவானதாகும்.
முக்கியக் குறிப்பு: இந்த ஆண்டு 'எல் நினோ' (El Niño) விளைவினால் 90% மழைப்பொழிவு குறைந்துள்ளது. வறட்சி அதிகமாக இருக்கும் இந்த ஆண்டில்தான் தண்ணீருக்கான தேவையும், விவசாயிகளுக்கான நிதி உதவியின் தேவையும் மிக அதிகம். இத்தகைய சூழலில், அரசு மிகக் குறைந்த தொகையை அறிவித்திருப்பது டெல்டா விவசாயிகளின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
3. தேர்தல் வாக்குறுதியும், ஏமாற்றமும்:
தேர்தல் அறிக்கையில் "விவசாயக் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்" என்று தற்போதைய ஆளுங்கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், நடைமுறையில் அது முழுமையாகச் செய்யப்படவில்லை.
பல்வேறு கடுமையான நிபந்தனைகளை (Terms and Conditions) விதித்து, ஒரு பகுதி மக்களுக்கு மட்டுமே கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இது ஒட்டுமொத்த விவசாயப் பெருங்குடி மக்களையும் ஏமாற்றும் செயலாகவே பார்க்கப்படுகிறது.
மக்கள் நீதி மய்யத்தின் கோரிக்கைகள்:
தமிழக விவசாயிகளின் நலனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும் தற்போதைய அரசு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்:
குறுவை சிறப்புத் தொகுப்பு நிதியை வறட்சிக் காலத்தைக் கருத்தில் கொண்டு உடனடியாக உயர்த்த வேண்டும்.
டெல்டா பகுதிகளில் போர்வெல் பாசனத்திற்கு தடையற்ற மும்முனை மின்சாரத்தை (3-Phase Power) தடையின்றி வழங்க வேண்டும்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற விவசாயக் கடன்களை எந்தவித நிபந்தனையுமின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு விளையாடாமல், இந்த அறிவிப்புகள் அனைத்தையும் தவெக அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.
#MakkalNeedhiMaiam
#KamalHaasan_MP
#cheifministerofTamilnadu
#deltafarmers
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6 ம் 9-ம் வகுப்புகளில்,
குறைந்தது ஒரு பிரிவிலாவது சமஸ்கிருதம் கற்பிக்கப்படுவது கட்டாயம் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பு,மும்மொழி கொள்கை திணிப்பு.
கேந்திர வித்யாலயா
பள்ளிகளை தமிழ் நாட்டில் தடை செய்ய வேண்டும்
@TVKVijayHQ#KamalHaasan@maiamofficial
Ethanol-Blended Fuel — Consumer Rights & Transparency
As India advances its ethanol-blending programme, the transition must remain informed, transparent, fair, and consumer-conscious.
1. Mandatory Disclosure at Point of Sale
Petrol bunks must prominently display clear signage whenever ethanol-blended fuel is being dispensed. Consumers have a fundamental right to know what fuel they are purchasing and whether it is compatible with their vehicles.
2. Public Awareness on Technical Risks
Ethanol is hygroscopic — it absorbs moisture from the atmosphere. Legitimate concerns persist among motorists regarding:
Water contamination in fuel systems
Impact on fuel injectors and fuel pumps
Long-term vehicle maintenance implications
Public awareness campaigns and transparent, accessible information are essential to address these concerns responsibly.
3. Clarity on Warranty, Insurance & Liability
There must be unambiguous frameworks governing warranty, insurance, and liability in cases where fuel contamination or fuel-related damage occurs. Consumers must not be left in uncertainty about who bears responsibility when problems arise — the fuel supplier, the distributor, the retailer, or the manufacturer.
Our leader and honourable MP @ikamalhaasan also had raised this question on 19 Dec 2025 in the parliament.
Makkal Needhi Maiam @maiamofficial calls upon the Government of India and relevant regulatory authorities to mandate.
Strong, defensible disclosure standards at all fuel retail points
Clear warning labels on blended fuel dispensers
Explicit guidance on warranty and insurance coverage for fuel-related damage
A defined liability framework protecting consumer interests.
Consumers deserve clarity, not ambiguity, as India navigates this energy transition.
#E85 #Ethanol
@nitin_gadkari@HardeepSPuri@PetroleumMin@Secretary_MoPNG@neerajmittalias