Er.பி.நாகராஜன்.B.Tech.,MBA
மாவட்ட செயலாளர் - தகவல் தொழில்நுட்ப பிரிவு, திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம்
Entrepreneur | Start-up Consultant | Politician
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழகத்தில் குதிரை பேரம் நடத்தி வரும் தமிழக வெற்றி கழகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல்துறை இயக்குனரிடம் அஇஅதிமுக சார்பில் கழக சட்டமன்றக் கொறடா திரு. அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி மற்றும் கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் @IInbadurai ஆகியோர் புகார் மனு அளித்தனர்.
இன்று கரூரில் மேடை…
இல்லை இல்லை… 41 அப்பாவி உயிர்களைப் பலிகொண்ட இம்சை அரசன் வண்டியில் ஏறிய இன்றைய முதலமைச்சர், “கூட்டுக் களவாணிகள்” என்ற தரங்கெட்ட சொல்லை பயன்படுத்தியுள்ளார்.
யார் கூட்டுக் களவாணிகள்?
திமுக-வை எதிர்த்து 234 தொகுதிகளிலும் களம் கண்டு, இன்று வரை தனித்த அடையாளம் கொண்ட எதிர்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நாங்களா?
அல்லது, திமுக-வின் வாக்குகளைப் பெற்று வெற்றி அடைந்த திமுகவின் கூட்டணிக் கட்சிகளை இழுத்து, கூட்டுக் களவாணித்தனம் செய்து ஆட்சியில் அமர்ந்திருக்கும் நீங்களா?
“அன்று கரூருக்கு தாமதமாக வந்துவிட்டேன். மன்னித்து விடுங்கள்” என்று ஒரு வார்த்தை உங்களது உரையில் இருந்ததா? தனது தவறுகளை ஒப்புக்கொள்ள மனமில்லாத ஒருவர் எப்படி தலைவராக முடியும்?
ஊதிப் பெரிதாக்கப்பட்ட வெற்று பிம்ப முதல்வர் தான் நீங்கள்!
கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் எத்தனை மக்களை சந்தித்தீர்கள்? மக்களுக்கான அரசியல் என்று என்ன பேசினீர்கள்?
குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போல கூட அல்ல- மிட்டாய்க்கு அடம் பிடிப்பது போலவே அடம் பிடியுங்கள் என்று கூறி தவறான வழியில் வாக்கு கேட்ட நீங்கள் எல்லாம் பேசலாமா?
கரூர் துயரம் நடந்த போது “ஓடி ஒளிந்ததை” ஓடி ஒளிந்தீர்கள் என்று தானே சொல்ல முடியும்? விழுப்புரத்தில் முன்பொரு முறை பார்த்த உங்கள் ஓட்டத்தை திருச்சி விமான நிலையத்தில் தமிழகமே பார்த்ததே?
கரூர் துயரம் நடந்த மூன்றே மாதங்களில் மலேசியா ஆடியோ லாஞ்ச் மேடையில் “Blastu Blastu” என்று போட்டீர்களே… அது என்ன “ஜனநாயகக் குத்தாட்டமா?” மக்கள் துயரத்தைப் பற்றி கொஞ்சம் கூட கவலையே இல்லாமல் குத்தாட்டம் போட்ட நீங்கள் எங்களைப் பற்றி பேசுவதா?
@AIADMKOfficial மக்கள் நலத் திட்டங்கள் வழங்குவதில் ISI முத்திரை கொடுக்கும் அளவிற்கு மக்களுக்கு அள்ளிக் கொடுத்த பொன்விழா கண்ட இயக்கம்.
டயருக்கு அடியில் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு கட்சிக்கெல்லாம் எங்களைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை!
“ஊரிலேயே நான் மட்டும் தான் ஒரே உத்தமன்” என்பது போல பிரசங்கம் செய்யும் இன்றைய முதலமைச்சர், அவ்வளவு பெரிய உத்தமராக இருந்தால், தனிப் பெரும்பான்மை இல்லாத, திமுக-வின் தயவில் அமையும் ஆட்சி எனக்கு தேவையில்லை என்று உதறிவிட்டு மறு தேர்தலை சந்திக்க வேண்டியது தானே? அதற்கு வக்கில்லாதவருக்கு எதற்கு இந்த வெட்டிப் பேச்சு?
அதுவும் இன்றைய உரையில் ஒரு முதலமைச்சர் பேசக்கூடாத மொழியில் அவர் பேசுகிறார் . வெட்கக்கேடு!
இது தான் மக்களுக்கான அரசியலா?
இதனால் மக்களுக்கு எதாவது நன்மை இருக்கிறதா?
நீங்கள் கரூரில் “ஓடு ஓடு ஓடு” என்று பாடிக்கொண்டிருந்த வேளையில், ஹூண்டாய் நிறுவனத்தின் ரூ. 38,000 கோடி மதிப்பிலான முக்கிய முதலீடு தமிழ்நாட்டை விட்டு போனதாக செய்திகள் வந்திருக்கின்றன. இதைப் பற்றி எதாவது பேசுவீர்களா?
நாள்தோறும் மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு என மக்கள் அவதிப் படுவதை தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள் என்பதைப் பற்றி ஒரு வார்த்தை பேசுவீர்களா?
அதெல்லாம் இல்லை.
@CMOTamilNadu அவர்களே- எதிரிகளே இல்லை என்று 6 மாதத்திற்கு முன்னால் சொன்ன கட்சி இன்று தோல்வியை சந்தித்து எதிர்கட்சி வரிசையில் இருக்கிறது.
நான் எப்போதும் சொல்வது போல, காலச்சக்கரம் சுழலும்- இன்று கீழே இருப்பது நாளை மேலே வரும்!
(Or in Your Words, “வாழ்க்கை ஒரு வட்டம்!”)
பதவி வரும்போது பணிவு வரவேண்டும்!
ஆட்சி இருக்கும் ஆணவத்தில் தரம் தாழாதீர்கள்!
மக்கள் பகுத்தறிந்து பார்த்தால் இந்த ஆட்சி இமைப் பொழுதில் பல்லிளித்து விடும்!
We are waiting..!!
(பி.கு. : #KarurTragedy வழக்கில் நீங்கள் சொல்வது மட்டுமே வேதவாக்கு அல்ல. CBI விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் அதன் உண்மைகள் எல்லாம் வெளிவந்த பிறகு எது யார் தவறு என்பதெல்லாம் மக்களுக்கு புரிய வரும். அதுவரை, Wait and See!)
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வேலைக்குச் சென்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரச் சம்பவம், ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 17 வயது சிறுவன் உட்பட போதை கும்பல் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயலில் ஈடுபட்டிருப்பது, சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை அப்பட்டமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.
பெண்களின் பாதுகாப்பு நாளுக்கு நாள் கேள்விக்குறியாகும் நிலையில், குற்றங்களைத் தடுக்க வேண்டிய பொய்த்தால் குதிரை அரசின் முதல்வர், மக்கள் நலனில் அக்கறை காட்டாமல், அதிகாரத்தைத் தக்க வைப்பதற்காக குதிரை பேரத்தில் மட்டும் குறியாக இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு!!
#பொய்க்கால்_குதிரை_அரசு
சொந்தக் கட்சிப் பெண் நிர்வாகியால் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டது, ஏரல் வாரச்சந்தைக் குத்தகைதாரர்களிடம் கமிஷன் கேட்டது எனத் தொடர் சர்ச்சைகளுக்குச் சொந்தக்காரரான ஸ்ரீவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினர் விஜி சரவணன்,
வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் செய்ய வேண்டிய பணியில் தலையிட்டு, அதிகப்பிரசங்கித்தனமாகச் செயல்பட்டு தன்னையே கேலிப்பொருளாக்கிக்கொண்டார்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
தர்மபுரி பேருந்து நிலையம் போன்ற மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்திலேயே, இளம்பெண் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.
பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டது என்று தம்பட்டம் அடிக்கும் 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை' என்ன செய்து கொண்டிருக்கிறது?
#பொய்க்கால்_குதிரை_அரசு
தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாறுவதால் மாநில அரசுக்கு ஏற்படும் இட ஒதுக்கீட்டு இழப்பை சரிசெய்ய மத்திய அரசும், தமிழகத்தை ஆளும் த.வெ.க. அரசும் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
சேலம் மாவட்டத்தில் 125 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிபுரிந்த பெண் பணியாளர்களிடம், "இனி நீங்கள் வேலைக்கு வரக்கூடாது; தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு மட்டும்தான் வேலை வழங்கப்படும்" என்று கூறி, தவெக நிர்வாகி சக்தி என்பவர் மதுபோதையில் அரிவாளை எடுத்து மிரட்டித் தாக்க முற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.
ஆட்சி அதிகாரம் கிடைத்து இரண்டு மாதங்கள் கூட முழுமையாகாத போதே தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வரும் நிலையில், தவெக நிர்வாகிகளிடமிருந்து பெண்களைப் பாதுகாக்கத் தனி அதிரடிப்படையை உருவாக்கும் அளவிற்குச் சூழல் மாறியுள்ளது.
பொய்க்கால் குதிரை அரசினுடைய முதல்வர், தனது சொந்தக் கட்சி நிர்வாகிகளைக் கூடக் கட்டுப்படுத்த முடியாத மற்றுமொரு பொம்மை முதல்வராகவே உள்ளார் என்பதற்குத் தொடர்ந்து நடைபெறும் இத்தகைய குற்றச் சம்பவங்களே சாட்சியாக உள்ளது.
#பொய்க்கால்_குதிரை_அரசு
சொந்தக் கட்சியைச் சேர்ந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அறிவுறுத்தல்களை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல், பள்ளிகளில் தொடர்ந்து ரீல்ஸ் (Reels) எடுத்து அத்துமீறலில் ஈடுபடும் தவெக நிர்வாகிகள்
#பொய்க்கால்_குதிரை_அரசு
ஆட்சியில் இருந்த வரைக்கும் எப்படி பேசினார், இப்ப எப்படி பேசுறாரு.. இந்த மாதிரி சந்தர்ப்பவாதிகளை நாம அடையாளம் கண்டுபிடிக்கணும்..
அதிக மரியாதை கொடுத்ததால் தான் இப்படி.. - கே.பி.முனுசாமி சாடல்
#ADMK | #KPMunusamy | #TVK | #PolimerNews
இருள் வந்தபோது விளக்கொன்று உண்டு..
எதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டு..
உண்மை என்பது என்றும் உள்ளது
தெய்வத்தின் மொழியாகும்...
நன்மை என்பது நாளை வருவது
நம்பிக்கை ஒளியாகும்...
இப்போதைக்கு தலைவர் பாடல் தான் மன ஆறுதல் தருகிறது 🚶🚶
ஒரு பெண்ணை பொதுவெளியில் கொடூரமாகத் தாக்கும் அளவுக்கு தவெக நிர்வாகிகளுக்கு துணிச்சலைக் கொடுப்பது யார்? ஆளுங்கட்சி என்ற அதிகார போதையா, அல்லது சட்டத்தின் மீதான அச்சமின்மையா??
#பொய்க்கால்_குதிரை_அரசு