ஜனநாயக சோபாவில் அமர்ந்திருக்கும்
பக்கா மாஸ் கட்சியின் தலைவரே!
மகத்தான மங்குனி முதல்வரே!
என்னாச்சு உங்களுக்கு?
உலக மானுடக்கூட்டத்தின் ஆணவத்தையும், அகம்பாவத்தையும் ஒட்டுமொத்தமாகக் குத்தகை எடுத்ததுபோல, பரப்புரைக்கூட்டங்களில் மிதப்போடும், இறுமாப்போடும் ஆவேசம் பொங்கப் பேசும் (!) நீங்கள், சட்டமன்றத்தில் அமைதியின் திருவுருவாய், தன்னடக்கத்தின் மனித வடிவமாக அமர்ந்திருப்பது ஏனோ? சாந்தச்சொரூபியாக மாறிப் போன மர்மம் என்ன? எங்கே போனது உங்கள் ஆவேசம்? எங்கே போனது உங்கள் கோபக் கணைகள்? எங்கே போனது உங்களது சீற்றக்குரல்?
சட்டம் ஒழுங்கு குறித்துக் கேட்டால் உள்துறை அமைச்சகத்தைக் கையில் வைத்திருக்கும் நீங்கள் பதில் சொல்லாது, கல்வித்துறை அமைச்சரைப் பதில் சொல்ல வைப்பது ஏன்? திரைப்படங்களில் உங்களது ‘பஞ்ச் டயலாக்குகளை’ துணை நடிகரை வைத்துப் பேசவிட்டால், அமைதியாக நிற்பீர்களா முதல்வரே? அதனைவிட அபத்தமாக அல்லவா இது இருக்கிறது. திரையில் காணும் ஆவேசமெல்லாம் தரையில் காணாமல் போனதேன்? ‘அவ்ளோ வொர்த் இல்ல’ என உங்களது கட்சியின் மகளிர் தினக் கூட்டத்தில் பேசினீர்களே, அதுபோல வொர்த் இல்லாத உங்களை உச்சாணிக் கொம்பில் அமரவைத்ததன் விளைவா இது?
‘வாரிசு’ அரசியலை எதிர்க்கிறேன்பேர்வழி எனக் கூறிக் கொண்டு, காங்கிரசின் அனுசரணையோடு அரியாசனத்தில் அமர்ந்திருக்கிற ரீல்ஸ் ‘மாஸ்டரே’ !
சட்டமன்றத்தில் நீங்கள் திரைப்படம் போல, ‘கத்தி’ எடுத்து சுழற்றி சண்டையிட வேண்டாம்; ‘சர்கார்’ நடத்தும் நீங்கள், எதிர்க்கட்சிகளின் கேள்விகளைப் பொறுப்புணர்வோடு எதிர்கொண்டு பதில் சொல்லி ‘ஜனநாயகனாக’ செயல்பட வேண்டாமா? அதனைவிடுத்து, கேள்விகேட்டாலே, ‘மெர்சல்’ ஆகலாமா? திரையில் மட்டும்தான் ‘புலி’ ஆகப் பாய்வீர்களா? ‘லியோ’ ஆகக் கர்ஜிப்பீர்களா? நிஜத்தில் மூச்சுவிடும் சத்தம்கூட கேட்க மறுக்கிறதே? எங்கே போனது உங்களது ‘பீஸ்ட்’ மோடு? பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா என ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ ஆக இருக்கும் பெரும் பெரும் தலைவர்கள் அமர்ந்திருந்த அவையிலே இப்படிப்பட்ட ஒருவரா? எனக் கேட்கும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டீர்களே? சட்டமன்றத்தில் ‘தெறி’க்க விடுவீர்கள் என உங்களுக்காக ‘பிகில்’ ஊதியவர்களை ஏமாற்றலாமா? ‘தலைவா’ என உங்களை விளித்தவர்களைத் தலைகுனியச் செய்திடலாமா? தமிழ்நாட்டின் மொத்த ‘ஜில்லாக்களையும்’ கட்டியாளும் உயர் பதவியிலிருக்கும் நீங்கள், சட்டமன்றத்தில் இப்படித் தூங்கி வழியலாமா?
மாண்புமிகு மங்குனி முதல்வரே!
நீங்கள் நிகழ்த்திய ‘விசில் புரட்சியே’ போதும். இந்த மௌனப்புரட்சி எல்லாம் வேண்டாம். இனியும் நாடு தாங்காது. கொஞ்சமாவது வாய்திறங்கள்! @CMOTamilnadu
Do your duty sincerely, without expecting anything in return.
After watching this video, please share your advice and guidance in the comments. If you say “No,” I will not enter politics and will continue my selfless service to society. But if you say “Yes,” I am ready to enter politics. I will reveal when and with who I intend to start this journey with all your blessings.
#ServiceIsGod 🙏🏼