IREL அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்கான நில ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு மேலும் ஒரு ஆண்டு நீட்டித்துள்ளதை கண்டித்து வரும் வெள்ளிக்கிழமை நாம் தமிழர் கட்சி குமரி மாவட்டம் சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு அருகில் மாலை 4 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.!
#SaveKanyakumari
"சிகை கொற்றனை" அடுத்து "அளர் வைரதன்"
===
இரண்டு நாட்களுக்குமுன் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற அகழாய்வில் கிடைத்த மோதிரத்தில் உள்ள எழுத்துக்கள் தமிழி எழுத்துக்கள்தான் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது
---
" அளர் வைரதன் "
என்பதுதான் சரியான வாசிப்புமுறையாக இருக்கிறது.
ஏற்கனவே கரூரில் கிடைத்த மோதிரம் ஒன்றில் தமிழி எழுத்துப் பொறிப்பில் இருந்த பெயர் - #பேரஅவதன்.
இதே தாய்லாந்தில் கிடைத்த உரைகல் ஒன்றில் இருந்த தமிழி எழுத்துப்பொறிப்பில் இருந்த பெயர் -
#பெரும்பதன்கல்.
இந்த வரிசையில் இப்போது கிடைத்த மோதிரத்தில் உள்ள தமிழிப்பெயர் -
#அளர்வைரதன்.
தொடர்ந்து மீண்டெழும்
தமிழ் வரலாற்று பழமை.
#இந்தோனேசியா
#அளர்வைரதன்
#தமிழி
#தமிழர்வரலாறு
இந்த காணொளியை Report அடிச்சு தூக்கிருக்கானுங்க "ROUTE IT WING MAFIA" கும்பல்
இவங்கள வச்சு ஓட்டு கேட்கும் போது இனிச்சது இப்ப Expose பண்ணும் போது கசக்குதோ !
#TVK_Fails
தமிழ் இறையோன், எங்களின் முப்பாட்டன் முருகப்பெருமான் வரலாற்றைத் திரித்து, தமிழர்களை இழிவுபடுத்தினால் கடும் எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்!
தமிழ் இறையோன் முருகப்பெருமானை மையப்படுத்தி "என்.டி.ஆர்-திரிவிக்ரம் என்ற பெயரில் ஆந்திராவில் தயாரிக்கப்படும் திரைப்படத்தில், ‘தமிழர் இறையோன்’ முருகன் வடபுலத்தில் பிறந்தவர் என்ற கருத்துருவாக்கத்துடன் உருவாவதை உறுதிப்படுத்தும் விதமாகப் படக்குழு பதிவிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கலைப்படைப்பு என்ற பெயரில் அடிப்படை புரிதலற்று, இதுபோன்ற வரலாற்றுத் திரிபுகளை உண்மையெனக் கட்டமைக்க முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த தொன்ம வரலாறு கொண்ட தமிழப்பேரினம், தனக்கென்று தனித்த கலை, இலக்கியம், பண்பாடு, நாகரீகம், வாழ்வியல், மெய்யியல் கோட்பாடு, இறை வழிபாடு என யாவற்றையும் கொண்டதாகும். இயற்கையை தொழுது போற்றுவதும், புகழோடு மறைந்த மூத்தோரை நடுகல்லிட்டு வணங்குவதும் தமிழரின் ஆதிமரபாகும். அதனடிப்படையில், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த தமிழ் முன்னோர்களையும், மூத்தோர்களையும் காலங்காலமாக தெய்வமாகப் போற்றி வணங்கி வருதல் தமிழரின் மெய்யியல் கோட்பாடாக இருந்து வருகிறது. அதன் அடிப்படையிலேயே தமிழர்களின் ஐவகைத் திணை நிலங்களுள் முதன்மை நிலமாகத் திகழும் குறிஞ்சித்திணையின் தலைவன் மூத்தோன் முருகனை முப்பாட்டன் என அழைப்பதும், வணங்கிப் போற்றுவதும் தமிழரின் மரபு சார்ந்த தொடர்ச்சியான வழிபாட்டு முறையாகும்.வரலாற்றின் வீதிகளில் தொடர்ச்சியாக அடிமைப்படுத்தப்பட்டு, அழித்தொழிக்கப்பட்ட இனத்தின் மறைக்கப்பட்ட வீரவரலாற்றையும், பண்டைய அடையாளங்களையும் மீட்டெடுக்கும் பெரும்பணியைச் செய்து மீண்டெழத் துடிக்கும் நேரத்தில், கற்பனை படைப்புகள் மூலம் இதுபோன்று உண்மைக்குப் புறம்பான திரிபுகள் திணிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
தனக்கெனத் தனித்த அடையாளத்தையோ, பண்பாட்டுக்கூறுகளையோ, வழிபாட்டு முறைமைகளையோ, இறையியல் மரபுகளையோ கொண்டிராத மாற்றினங்கள் தமிழின முன்னோர்கள் சிவன், முருகன், கண்ணன், திருமால், கொற்றவை என யாவற்றையும் தங்கள் கடவுளரென திருடிச்சேர்த்துக் கொண்டனர். தமிழர்த் திணை நிலங்களின் வாழ்ந்த தெய்வங்கள் மீதும், தமிழரின் பண்பாட்டு விழுமியங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தி மொத்தமாய் அபகரித்துவிட்டனர். அதன் விளைவாக, முருகனை சுப்ரமணியனாக்கினார்கள். கண்ணனை கிருஷ்ணனாக்கினார்கள். திருமாலை விஷ்ணுவாக்கினார்கள். கொற்றவையைப் பார்வதியாக்கினார்கள். சிவனை ருத்திரனாக்கினார்கள். தமிழர் முன்னோர்களை மொத்தமாய்ப் புராணப்பாத்திரங்களாக மாற்றி நிறுத்தினார்கள். கடவுளையே கடன் கொடுத்த இனத்தின் பிள்ளைகள் நாங்கள்.
இரவலாக எங்களின் கடவுளர்களை எடுத்துக்கொண்டு போன பிறகும், இன்றளவும் முழுதாய் அபகரிக்க முடியாமல் தமிழர்களுக்கென்ற தனிப்பெரும் இறையோனாக இருப்பவர் தமிழ்க்கடவுள் முப்பாட்டன் முருகப்பெருமான். தொன்றுதொட்ட தமிழ்ப்பண்பாட்டோடு, வாழ்வியலோடு ஒன்றர கலந்த தமிழர்களின் மிக மூத்த ஆதி இறைவன் முருகப்பெருமான். அவரையும் தமிழ்ப்பேரினம் இழக்கவிட மாட்டோம். தமிழ்தான் முருகன்; முருகன்தான் தமிழ்; இரண்டும் பிரிக்க முடியாதது. தமிழர் இறையோன் முருகன் என்பது எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்த ஒன்று. முருகன் தமிழர்களின் முப்பாட்டன் என்பது அரசியல் அல்ல; அது எங்கள் பண்பாடு, வாழ்வியல்; தமிழர் போற்றும் தெய்வங்களை வணங்குவதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், வரலாற்றை தவறாக திரித்து கட்டமைத்து இழிவுப்படுத்த எவருக்கும் உரிமை இல்லை.
முதுபெரும் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் தொடங்கி திருமுருகாற்றுபடை உள்ளிட்ட பத்துப்பாட்டு நூல்கள், எட்டுத்தொகை நூல்கள், சிலப்பதிகாரம் சங்கத்தமிழ் இலக்கியங்கள் பலவும், சேயோன், செவ்வேள், சேவலங்கொடியோன், சேய், முதிர்கடவுள், நெடுவேள், தெய்வம், முருகு, அணங்கு, மலைவான், விறல்வேள், மலை உறைக்கடவுள், முருகன், சூர்செல்வன், நெடியோன், மால்மருகன் என்று பற்பல செந்தமிழ் பெயர்களால் முருகனைப் போற்றிப் புகழ்கின்றன. மேலும், தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட பற்பல பக்தி இலக்கியங்களும் தமிழ் இறையோன் முருகனை போற்றுகின்றன. சங்க இலக்கியங்களில் வேலன் வெறியாட்டு என்ற தொல்குடி மக்களின் சடங்கும் வியந்து குறிப்பிடப்பட்டுள்ளது.
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று தமிழ் கூறும் முதுமொழியை மெய்ப்பிக்கும் விதமாகவே முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் உட்பட தமிழ்நாட்டின் குன்றுகள் தோறும் குமரனின் கோட்டங்கள் நிறைந்துள்ளன. எனவே, முருகன் தமிழர்களுக்கு உரித்தான தனிப்பெருங்கடவுள் என்ற பேருண்மையை நிறுவும் வல்லமை தமிழுக்கும், தமிழர்களுக்கும் எப்போதும் உண்டு. மிகக் கடுமையான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கின்றேன்.
(1/2)
மாற்றத்தை விரும்பி வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்திருக்கும் தவெக அரசு.
கன்னியாகுமரிமாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க IREL விரிவாக்கப்பணிக்கான 1144.06 ஹெக்டேர் ஓதுக்கீட்டு ஆணை காலாவதி ஆகும் நிலையில்,அதை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருப்பது கன்னியாகுமரி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தேர்தலுக்கு முந்தைய செயற்குழு கூட்டத்தில்இதே தவெக, இத்திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி நாடகம் அரங்கேற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மண்ணுக்கும் மக்களுக்கும் எதிரான அழிவுத்திட்டங்களை திணிக்கும் பாஜக ஒன்றிய அரசின் கைப்பாவையாக மாறி நிற்கும் தமிழ்நாடு தவெக அரசின் இரட்டை வேடம் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்கிறது.
முழு காணொளி மனிதி வலையொளியில்.
https://t.co/PhXtnCrTvr
நான்
இருக்கும் வரை
எந்த நச்சுத்
திட்டமும்
வராது!
செந்தமிழன் சீமான்
கன்னியாகுமரியில் 1144.06.18 ஹெக்டர் பரப்பளவில் அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்கான நில ஒதுக்கீட்டு ஆணையை, அது காலாவதியாகும் கடைசி நாளில் இருந்து மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஒருபுறம் சீமான் மீது திமுக /திராவிட ஆதரவு முத்திரை குத்த ஒரு கூட்டம் இரவு பகலாக வேலை பார்க்கிறது! மறுபுறம் திமுக மேடை போட்டு சீமான் விஜயை விட ஆயிரம் மடங்கு ஆபத்தானவர் என்று கதறுகிறது! சீமான் எனும் பேராயுதம் 🔥
🚨 BREAKING NEWS 🚨
Thiruvika Nagar MLA M.R. Pallavi (TVK) is a Christian who contested and won from the SC Reserved Constituency!
How did a Christian candidate claim the Scheduled Caste reserved seat meant for Dalit representation? Is this not a clear misuse of reservation benefits? Where is the social justice now ?
Pallavi's victory in Thiru-Vi-Ka-Nagar (SC) raises serious questions on eligibility and the real intent behind fielding her in a seat reserved for oppressed communities.
Demanding immediate probe!
@ECI@TNelectionsCEO (Archana Patnaik)
@RajenArlekar (Governor)
#ThiruvikaMLA #PallaviExposed #ReservationMisuse #TamilNaduPolitics #ElectionCommission
ஜனநாயக சோபாவில் அமர்ந்திருக்கும்
பக்கா மாஸ் கட்சியின் தலைவரே!
மகத்தான மங்குனி முதல்வரே!
என்னாச்சு உங்களுக்கு?
உலக மானுடக்கூட்டத்தின் ஆணவத்தையும், அகம்பாவத்தையும் ஒட்டுமொத்தமாகக் குத்தகை எடுத்ததுபோல, பரப்புரைக்கூட்டங்களில் மிதப்போடும், இறுமாப்போடும் ஆவேசம் பொங்கப் பேசும் (!) நீங்கள், சட்டமன்றத்தில் அமைதியின் திருவுருவாய், தன்னடக்கத்தின் மனித வடிவமாக அமர்ந்திருப்பது ஏனோ? சாந்தச்சொரூபியாக மாறிப் போன மர்மம் என்ன? எங்கே போனது உங்கள் ஆவேசம்? எங்கே போனது உங்கள் கோபக் கணைகள்? எங்கே போனது உங்களது சீற்றக்குரல்?
சட்டம் ஒழுங்கு குறித்துக் கேட்டால் உள்துறை அமைச்சகத்தைக் கையில் வைத்திருக்கும் நீங்கள் பதில் சொல்லாது, கல்வித்துறை அமைச்சரைப் பதில் சொல்ல வைப்பது ஏன்? திரைப்படங்களில் உங்களது ‘பஞ்ச் டயலாக்குகளை’ துணை நடிகரை வைத்துப் பேசவிட்டால், அமைதியாக நிற்பீர்களா முதல்வரே? அதனைவிட அபத்தமாக அல்லவா இது இருக்கிறது. திரையில் காணும் ஆவேசமெல்லாம் தரையில் காணாமல் போனதேன்? ‘அவ்ளோ வொர்த் இல்ல’ என உங்களது கட்சியின் மகளிர் தினக் கூட்டத்தில் பேசினீர்களே, அதுபோல வொர்த் இல்லாத உங்களை உச்சாணிக் கொம்பில் அமரவைத்ததன் விளைவா இது?
‘வாரிசு’ அரசியலை எதிர்க்கிறேன்பேர்வழி எனக் கூறிக் கொண்டு, காங்கிரசின் அனுசரணையோடு அரியாசனத்தில் அமர்ந்திருக்கிற ரீல்ஸ் ‘மாஸ்டரே’ !
சட்டமன்றத்தில் நீங்கள் திரைப்படம் போல, ‘கத்தி’ எடுத்து சுழற்றி சண்டையிட வேண்டாம்; ‘சர்கார்’ நடத்தும் நீங்கள், எதிர்க்கட்சிகளின் கேள்விகளைப் பொறுப்புணர்வோடு எதிர்கொண்டு பதில் சொல்லி ‘ஜனநாயகனாக’ செயல்பட வேண்டாமா? அதனைவிடுத்து, கேள்விகேட்டாலே, ‘மெர்சல்’ ஆகலாமா? திரையில் மட்டும்தான் ‘புலி’ ஆகப் பாய்வீர்களா? ‘லியோ’ ஆகக் கர்ஜிப்பீர்களா? நிஜத்தில் மூச்சுவிடும் சத்தம்கூட கேட்க மறுக்கிறதே? எங்கே போனது உங்களது ‘பீஸ்ட்’ மோடு? பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா என ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ ஆக இருக்கும் பெரும் பெரும் தலைவர்கள் அமர்ந்திருந்த அவையிலே இப்படிப்பட்ட ஒருவரா? எனக் கேட்கும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டீர்களே? சட்டமன்றத்தில் ‘தெறி’க்க விடுவீர்கள் என உங்களுக்காக ‘பிகில்’ ஊதியவர்களை ஏமாற்றலாமா? ‘தலைவா’ என உங்களை விளித்தவர்களைத் தலைகுனியச் செய்திடலாமா? தமிழ்நாட்டின் மொத்த ‘ஜில்லாக்களையும்’ கட்டியாளும் உயர் பதவியிலிருக்கும் நீங்கள், சட்டமன்றத்தில் இப்படித் தூங்கி வழியலாமா?
மாண்புமிகு மங்குனி முதல்வரே!
நீங்கள் நிகழ்த்திய ‘விசில் புரட்சியே’ போதும். இந்த மௌனப்புரட்சி எல்லாம் வேண்டாம். இனியும் நாடு தாங்காது. கொஞ்சமாவது வாய்திறங்கள்! @CMOTamilnadu
3.25 லட்சம் ரூபாய் செலவில் நாம் மேம்படுத்தி, #தக்கலை கல்வி வட்டாரத்திலேயே முதல் ஐஎஸ்ஓ 9001:2015 தரச் சான்றிதழ் பெற்ற #ஓலவிளை#குழந்தைகள்மையம் , தரச் சான்றிதழ் நீட்டிப்புக்கான முதலாம் ஆண்டு தணிக்கையை வெற்றிகரமாக நிறைவு செய்தது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற்ற அரசுப் பள்ளி, அங்கன்வாடி, தேசிய தரச் சான்றிதழ் பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம், அதிக கண்காணிப்பு கருவிகள் உள்ள கிராமம், குமரி மாவட்டத்திலேயே அதிக சதவீத மக்கள் அரசு மருத்துவ காப்பீட்டு அட்டை வைத்திருக்கும் கிராமம், எச்சரிக்கை வண்ணம் பூசப்பட்ட 100% மின்கம்பங்கள், சுமார் ஒரு கிலோமீட்டர் புதிய மண் சாலை, சுமார் ஒரு கிலோமீட்டர் புதிய காங்கிரிட் சாலை, சட்டவிரோத கல்குவாரி அடைப்பு, நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம் & மேம்பாடு, இளைஞர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகள் விளையாட்டுப் போட்டிகள் என நான்காண்டுகளில் தமிழகத்தின் தலைசிறந்த ஊராக நமது ஊரை மாற்றும் நோக்கத்தோடு எண்ணற்ற சாதனைகள் புரிய வாய்ப்பு தந்த இறைவனுக்கும், வாக்களித்த மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
என்றும் மக்கள் பணியில்
லா. ஆன்சி சோபா ராணி M.E, MBA,
#கப்பியறை பேரூராட்சி மன்ற உறுப்பினர்.
#ntk
காங்கிரஸ் தமிழ் நாட்டில் நடக்க பயந்தது!.
யாரால்?
அவன் பெயர் செந்தமிழன்
@Seeman4TN
எங்கள் இனத்தை அழித்து ஒழித்த காங்கிரஸ எவன் தோலில் சுமந்தாலும் அவனும் எங்களுக்கு எதிரியே.
இம்மண்ணில் வீழ்த்தப்பட வேண்டிய தீய சக்தி. #TVK