கடலூர் பரங்கிப்பேட்டை கடற்பகுதியில் புதிதாக 4 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக்கூடாது!
@CMOTamilnadu@TVKVijayHQ
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகிலுள்ள கடற்பகுதியில் புதிதாக மேலும் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. சுற்றுச்சூழலைச் சீரழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எக்காரணம் கொண்டும் தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது என்று போராடி வரும் நிலையில் ஹிந்துஸ்தான் நிறுவனம் 4 ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு விண்ணப்பித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
நிலத்தையும், நீரையும் மாசுபடுத்திச் சுற்றுச்சூழலை சீர் கெடுக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழ்நாட்டின் எந்தவொரு பகுதியிலும் அனுமதிக்கக்கூடாது என்று நாம் தமிழர் கட்சி தொடர்ந்து போராடி வருகின்றது. காவிரிப்படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகள் திட்டங்களை அனுமதிக்கமாட்டோம் என்று உறுதியளித்தது. அதனையடுத்து, திமுக ஆட்சிக்காலத்தில் திருவாரூர் மாவட்டம் பெரியகுடி, இராமநாதபுரம் கடற்கரை பகுதி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் தொடங்கவிருந்த ஹைட்ரோ கார்பன் திட்டங்களும் கடும் எதிர்ப்புப்போராட்டங்கள் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையிலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் கடலுக்குள் ரூ.425 கோடி மதிப்பீட்டில் 4 புதிய ஹைட்ரோகார்பன் எண்ணெய் கிணறுகள் அமைக்க ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் (TNCZMA) சுற்றுச்சூழல் அனுமதிகோரி விண்ணப்பித்துள்ளது. கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கடற்பகுதி பாரம்பரிய மீன்பிடித் தொழில் பகுதி மட்டுமல்லாது சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். இப்பகுதியில் தொடங்கப்படும் ஹைட்ரோ கார்பன் திட்டமானது கடல் நீரை மாசுபடுத்தி, மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் பல்லுயிர் பெருக்கத்தை அழித்து, பாரம்பரிய மீன்பிடித் தொழிலுக்கே பேராபத்தை ஏற்படுத்தும்.
தனியார் பெருநிறுவனங்களின் நலனுக்காக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், பல்லுயிர் பெருக்கத்தையும், கடல் வளத்தையும் அழித்தொழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தவெக அரசு அனுமதியளிக்க வேண்டாமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதி சேர்ந்த மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர், திருமதி.இந்திரா அவர்கள், பாரா சர்வதேச கைப்பந்து போட்டியில் இந்தியா, இந்தோனேஷியா, தாய்லாந்து, கம்போடியா நான்கு நாடுகளுக்கு வைத்த போட்டியில் இந்தியா பெண்கள் அணி வெற்றி பெற்றது. Asian game Malaysia தங்கை இந்திரா அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரிக்கு வாழ்த்துகள். 🎉🎉
புரட்சித் தமிழகம் கட்சி பறையர் பேரவைத் தலைவர், என் பேரன்பிற்கும், பாசத்திற்கும் உரிய அண்ணன் ஏர்போர்ட் த.மூர்த்தி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
பல நூற்றாண்டுகளாக அடக்கி ஒடுக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்ட ஆதித்தமிழ்க்குடி மக்களின் உரிமை மீட்சிக்கும், உண்மையான எழுச்சிக்கும் அயராது பாடுபட்டுவரும் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் நலமோடு வாழ்ந்து பொதுத்தொண்டு புரிந்திட எனது அன்பும், வாழ்த்துகளும்!
@airportmoorthy
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்-2026இல் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடவிருக்கும் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும், மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு – 2026 மாசி 09ஆம் நாள்
(21-02-2026) மாலை 04 மணியளவில் திருச்சியில் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.
தீவிரமா வேலை செய்வோம்.. நாம ஜெயிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்
நாம இல்லாம போனா இந்த தமிழ்நாட்டையே அழிச்சிருவானுங்க -ங்குறத மனசுல வச்சிட்டு வெறித்தனமா வேலை செய்வோம்🔥💪❤️
நாம் தமிழர்!💪❤️
If Mr. Stalin is truly opposed to SIR, he should have convened the Legislative Assembly and passed a resolution against SIR!
Senthamizhan Seeman
Chief Coordinator
Naam Tamilar Katchi
@Seeman4TN