"வரலாறு ஒருபோதும் உண்மையை மறைக்காது!"
பட்டிதொட்டியெங்கும் பறக்கும் நமது கழகத்தின் கொடி, எளிய உடன்பிறப்புகளின் வியர்வையாலும் தியாகத்தாலும் உயர்ந்தது. தடைகளை உடைத்து தமிழினத்தின் உரிமைக்காக என்றும் தொடர்ந்து களத்தில் நிற்போம்!
#vaiko#mdmk
"Vaiko in Parliament"
A four-volume compilation of speeches delivered in Parliament by the veteran parliamentarian and fiery leader from Tamil Nadu, Shri Vaiko, spanning his nearly 30-year-long parliamentary career, has been published. The books were released by the Leader of the Opposition in the Lok Sabha, Shri Rahul Gandhi.
The event was attended by Samajwadi Party National President Shri Akhilesh Yadav, CPI(M) General Secretary Comrade M.A. Baby, CPI General Secretary Comrade D. Raja, Shri Farooq Abdullah, Shri Manoj Kumar Jha, Shri Thol. Thirumavalavan, Smt. Sagarika Ghose, Shri Manickam Tagore, and other distinguished dignitaries.
Shri Vaiko is a political leader I have admired with great awe since my student days. After being elected as a Rajya Sabha MP, I had the privilege of working alongside him, and my seat in the House was right next to his. I am deeply delighted to have served as the compère for the launch event of his parliamentary speeches.
He is a leader who has pursued his political journey with immense courage, never compromising on his principles. To borrow the words of CPI(M) General Secretary Comrade M.A. Baby, Vaiko is truly a "Global Citizen."
I extend my warmest wishes to him.
#vaikoinparliament
VC : @thedebatetamil
My dear young brother Comrade @johnbrittas, your deeply moving words have filled my heart with immense warmth and pride. Thank you from the bottom of my heart for steering the book launch event with such dignity, brilliance, and grace.
In you, I see the fearless intellect, fiery spirit, and unshakeable integrity that our nation truly needs. India desperately requires dynamic young leaders like you today to safeguard our democracy, constitutional values, and the rights of the people. Your affection and steadfast camaraderie mean the world to me. Thank you for your beautiful brotherhood and solidarity! ✊
நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல்செய்ய உள்ள, தொகுதி மறுவரையறை திருத்த மசோதா குறித்து தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டம், நேற்று (08.08.2026) மதியம் 3 மணியளவில், கலைவாணர் அரங்கத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அன்புச் சகோதரர் திரு ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
தோழமை கட்சி நாடாளுமன்ற உறுபினர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் கலந்துகொண்டேன்.
மிகக்குறிப்பாக, தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவில் உள்ள பாதகங்களை அலசி ஆராய்ந்தோம். அதை நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் விவாதித்தோம்.
எல்லா மாநிலங்களுக்கும் 50 விழுக்காடு கூடுதல் தொகுதிகள் வழங்கப்படும் என்று ஒன்றிய பாஜக அரசு எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளித்தாலும், குறிப்பாக அதனால் தமிழ்நாட்டிற்கும், சிறுபான்மை மக்களுக்கும் ஏற்படவுள்ள பாதகங்களை மிக விரிவாக எடுத்துரைத்து, அதை நாம் எதிர்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்திதேன்.
அத்துடன், சிறுபான்மை மக்கள் முதல்வர் மீது வைத்துள்ள நம்பிக்கையை சுட்டிக்காட்டி, நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள, வெளிநாட்டிலிருந்து நிதி பெறும் தொண்டு நிறுவனங்களை முடக்கும் FCRA திருத்தச் சட்டத்தையும் நாம் எதிர்க்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறினேன்.
தமிழ்நாட்டிற்கு கேடு விளைவிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசும், தோழமை கட்சிகளும் வலுவாய் எதிர்ப்போம் என்று ஒருமித்த குரலோடு, இரண்டு மணிநேரம் தொடர்ந்த இந்த ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நிறைவுபெற்றது.
தமிழ்நாடு மாநில உரிமைக்கும், சிறுபான்மை மக்களுக்கும் எதிரான இந்த தொகுதி மறுவரையறை மசோதாவை தனது தலைமையிலான தமிழ்நாடு அரசு முழுமையாக எதிர்க்கும் என்றும், அதற்கான தீர்மானத்தை எதிர்வரும் நாட்களின் சட்டமன்றத்தில் நிறைவேற்றுவோம் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார்.
அன்புடன்,
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
மறுமலர்ச்சி திமுக
09.08.2026
#DuraiVaiko #mdmk #tvk #cmotamilnadu #delimitation
இன்று (05.08.2026) மாண்புமிகு ஒன்றிய ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை புதுடெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து, எனது திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதி மக்களின் நீண்டகால ரயில்வே கோரிக்கைகள் மற்றும் மத்திய தமிழ்நாட்டின் ரயில்வே இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஆறு முக்கிய கோரிக்கை மனுக்களை வழங்கினேன்.
முதலாவதாக, 07355/07356 ஹூப்ளி – இராமேஸ்வரம் சிறப்பு விரைவு ரயில் மற்றும் 06243/06244 மைசூரு – காரைக்குடி சிறப்பு விரைவு ரயில் ஆகியவை தொடர்ந்து அதிக பயணிகள் பயன்பாட்டைப் பெற்று வருவதால், அவற்றை நிரந்தர ரயில் சேவைகளாக மாற்றுமாறு கோரிக்கை வைத்தேன்.
இரண்டாவதாக, மத்திய தமிழ்நாட்டிற்கும் தெற்கு கர்நாடகாவிற்கும் இடையேயான நேரடி இரவு நேர ரயில் இணைப்பை ஏற்படுத்தும் வகையில், திருச்சிராப்பள்ளி – சாமராஜநகர் இரவு நேர விரைவு ரயிலை அறிமுகப்படுத்துமாறு வலியுறுத்தினேன்.
மூன்றாவதாக, சமீபத்தில் நிரந்தர சேவையாக மாற்றப்பட்ட 17077/17078 திருச்சிராப்பள்ளி – சார்லப்பள்ளி விரைவு ரயிலை வாராந்திர சேவையிலிருந்து தினசரி (Daily )அதிவிரைவு ரயிலாக இயக்க கேட்டுக்கொண்டேன்.
நான்காவதாக, இந்திய ரயில்வேயின் Vision 2030 திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் ரயில்கள் புறப்படும் (Train Originating Capacity) திறனை இரட்டிப்பாக்கும் திட்டத்தில் திருச்சிராப்பள்ளியையும் இணைத்து, கூடுதல் நடைமேடைகள், பராமரிப்பு வசதிகள் மற்றும் முனைய உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஏற்கனவே நான் கடந்த 04.02.2026 மற்றும் 26.05.2026 அன்று கோரிக்கை விடுத்ததையும் அமைச்சர் அவர்கள் அந்த நகரங்களின் பட்டியலில் திருச்சியையும் சேர்ப்பதாக உறுதியளித்ததையும் நினைவு படுத்தியபோது திருச்சியை அந்த பட்டியலில் இணைக்க ஏற்கனவே உத்தரவிட்டுள்ள தகவலையும், உறுதியாக பட்டியலில் திருச்சி இருக்கும் என்ற தகவலையும் என்னிடம் தெரிவித்தார்.
ஐந்தாவதாக, 09125/09126 கான்பூர் – மதுரை சிறப்பு ரயிலை, கரூர் – திண்டுக்கல் வழித்தடத்திற்கு பதிலாக திருச்சிராப்பள்ளி வழியாக நிரந்தரமாக இயக்கி, திருச்சிராப்பள்ளி சந்திப்பில் நிறுத்தம் வழங்குமாறு கேட்டுக்கொண்டேன். இந்த ரயில் முன்னர் கான்பூர் – திருச்சிராப்பள்ளி சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டபோது பயணிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்ததையும் எடுத்துரைத்தேன்.
ஆறாவதாக, புதுக்கோட்டை, காரைக்குடி, அருப்புக்கோட்டை வழியாக திருச்சிராப்பள்ளி – திருச்செந்தூர் தினசரி பகல் நேர இன்டர்சிட்டி விரைவு ரயிலை அறிமுகப்படுத்துமாறு வலியுறுத்தினேன். இந்த ரயில் சேவை மாணவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமான பயணிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் என்பதையும் எடுத்துரைத்தேன்.
மேற்கண்ட அனைத்து கோரிக்கைகளையும் மாண்புமிகு ஒன்றிய ரயில்வே அமைச்சர் அவர்கள் கவனத்துடன் கேட்டறிந்து, உரிய பரிசீலனை செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
அன்புடன்,
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க.)
05.08.2026 | புதுடெல்லி
#DuraiVaiko #trichy #pudukottai #tvk #mdmk
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆய்வு மையம் சார்பில் சென்னை, ரம்ஜான் மஹாலில் இன்று நடைபெற்ற விழாவில், எனக்கு 'டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தேசிய விருது 2026' வழங்கப்பட்டதில் பெருமகிழ்ச்சியும் எல்லையற்ற பெருமிதமும் அடைகிறேன்.
இவ்விழாவினைத் தொடங்கி வைத்து, விருதினை எனக்கு வழங்கி கௌரவித்த தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் மாண்புமிகு @jcd_prabhakar திரு. ஜெ.சி.டி. பிரபாகர் அவர்களுக்கும், பாராட்டுச் சான்றிதழை வழங்கிய மாண்புமிகு அமைச்சர் @AadhavArjuna திரு. ஆதவ் அர்ஜுனா அவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.
விழாவில் சிறப்பானதொரு ஆசியுரை வழங்கிய தகைசால் தமிழர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் @IUMLTNOfficial கே.எம். காதர் மொய்தீன் அவர்களுக்கும், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்பித்த மாண்புமிகு அமைச்சர் திரு. ஏ.எம். ஷாஜகான் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், வருகை தந்து சிறப்பித்து தங்களின் இனிய வாழ்த்துரைகளை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் திரு. கே.வி. விஜய் தாமு மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. அபுபக்கர் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இந்தச் சிறப்பான விழாவினை ஒருங்கிணைத்த ஆய்வு மையத்தின் இயக்குநர் திரு. பூவச்சல் சுதீர், ஆலோசனைக் குழுத் தலைவர் திரு. பி.எம். உசேன் ஜிப்ரி தாங்கல் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும், நிகழ்வில் கலந்துகொண்டு என்னை வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன். மாபெரும் அறிஞர் டாக்டர் கலாம் அவர்களின் பெயரால் அமைந்துள்ள இவ்விருது எனது பொதுவாழ்வில் மேலும் உத்வேகத்தை அளிக்கிறது.
#Vaiko #MDMK #APJAbdulKalamNationalAward
நேற்று ANI செய்தி நிறுவனத்திற்கு வந்தே மாதரம் தொடர்பான ( The Prevention of Insults to National Honour (Amendment) Bill, 2026) மசோதா நாடாளுமன்றத்தில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது குறித்து நான் அளித்த பேட்டி.
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் - திருச்சி
மறுமலர்ச்சி திமுக
31.07.2026
புதுடெல்லி.
#DuraiVaiko #cmvijay #tvk #mdmk #VandheMaatharam
திமுகவிற்கு கமிஷன் வரவில்லை; மணல் கொள்ளை நின்றுவிட்டது என்பது அவர்களுக்குப் பொறுக்கவில்லை!
அவர்கள் @TVKVijayHQ விஜய் தலைமையிலான ஆட்சியை கலைக்கத் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள்.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு மதிமுக என்றும் உறுதுணையாக இருக்கும்.
#mdmk#vaiko #CMVijay #TVKVijay #duraivaiko @CMOTamilnadu
இன்று (31.07.2026) மாண்புமிகு ஒன்றிய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் திரு. ஜோதிராதித்ய எம். சிந்தியா அவர்களை புதுடெல்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து, திருச்சிராப்பள்ளி மாவட்டம், கீழப்பத்து பகுதியில் டிஜிட்டல் பாரத் நிதி (Digital Bharat Nidhi - DBN) திட்டத்தின் கீழ் புதிய 4G மொபைல் கோபுரம் அமைக்க கோரி விரிவான மனுவை வழங்கினேன்.
இக்கோரிக்கை தொடர்பாக, கடந்த 13.10.2025 அன்று நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டத்தில் கீழப்பத்து, பாலூர் அக்கிரஹாரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நிலவி வரும் மொபைல் சேவை குறைபாடு குறித்து நான் எழுப்பியிருந்தேன். மேலும், 16.02.2026 அன்று இதுதொடர்பாக ஒன்றிய அரசுக்கு விரிவான கோரிக்கை மனுவையும் அனுப்பியிருந்தேன்.
அதன் தொடர்ச்சியாக, பி.எஸ்.என்.எல். (BSNL) திருச்சிராப்பள்ளி முதன்மை பொது மேலாளர் மேற்கொண்ட கள ஆய்வு மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டில், தற்போதுள்ள மொபைல் கோபுரத்திலிருந்து கிடைக்கும் 4G சேவை கீழப்பத்து மற்றும் பாலூர் அக்கிரஹாரம் பகுதிகளில் போதுமானதாக இல்லை என்பதும், புதிய 4G மொபைல் கோபுரம் அமைப்பது தொழில்நுட்ப ரீதியாக அவசியம் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.
மேலும், கீழப்பத்து, பாலூர் அக்கிரஹாரம், மேக்குடி, லட்சுமி நகர் மற்றும் பேரூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10,000 -க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் எந்த தொலைத்தொடர்பு நிறுவனமும் போதுமான சேவையை வழங்காததால், கல்வி, அவசரத் தொடர்பு, அரசு சேவைகள் மற்றும் டிஜிட்டல் சேவைகளைப் பெறுவதில் பொதுமக்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்பதை எடுத்துரைத்தேன்.
எனவே, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பரிந்துரையை ஏற்று, டிஜிட்டல் பாரத் நிதி (DBN) திட்டத்தின் கீழ் கீழப்பத்தில் புதிய 4G மொபைல் கோபுரம் அமைக்க விரைவில் ஒப்புதல் வழங்கி, பணிகளை தொடங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன்.
இக்கோரிக்கையை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கவனத்துடன் கேட்டறிந்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
அன்புடன்,
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
மறுமலர்ச்சி திமுக
31.07.2026
புதுடெல்லி
#DuraiViko #trichy #BSNL #cmvijay #Jyotiradityamscindia