மருத்துவமனை சென்றால் மருத்துவர் இல்லை
பேருந்து நிலையம் சென்றால் பேருந்து இல்லை
பள்ளிக்கூடம் சென்றால் கழிவறை இல்லை
இதுவா நீங்கள் சொன்ன மாற்றம் @CMOTamilNadu#பொய்க்கால்_குதிரை_அரசு
வணக்கம் @tn_factcheck…
3 சேனல்கள் முடக்கப்பட்ட செய்தியை “தவறான செய்தி” என போட்டுள்ள நீங்கள், அதை தொழில்நுட்பக் கோளாறு என உருட்டியுள்ளதை கண்டோம்.
அது என்ன தொழில்நுட்பக் கோளாறு?
கடந்த 5 ஆண்டுகளாக எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்தாலே நேரலை துண்டிப்பு ஆகுமே.. அந்த மாதிரி கோளாறா?
இந்த மூன்று சேனல்களை முடக்கியது போல சன் நியூஸ் சேனலை இந்த அரசால் முடக்க முடியவில்லை ? அப்படி செய்தால் சன் குழுமத்தின் அனைத்து சேனல்களும் தங்களை விட்டு போகும் என்ற பயத்தால் தானே?
அப்புறம், உங்கள் மீதான வழக்கை இன்றைய அமைச்சர் @CTR_Nirmalkumar வாபஸ் பெற்றுவிட்டாராமே… வாழ்த்துகள்.
அது எப்படி, 2023-ல் உங்களை Unconstitutional எனக் கூறி வழக்கு போட்டவர், 2026-ல் நீங்கள் Constitutional தான் என்று Compromise ஆனார்?
கட்சி மாறுவதால்,
ஆட்சி அதிகாரம் வருவதால்,
Constitutional Status மட்டும் மாறுமா?
“தகவல் சரிபார்ப்பகம்” என்பதை விட, “த.வெ.க. உருட்டகம்” என்ற பெயர் தான் உங்களுக்கு பொருத்தமாக உள்ளது!
#பொய்க்கால்_குதிரை_அரசு
விசில் ஊதுங்கள்… ஊதிட்டாங்க ஒரேடியா..!!
தமிழகம் முழுக்க உள்ள இந்த தொடர் மின்வெட்டுக்கு, அடுத்து என்னென்ன உருட்டுகளை ஆச்சரியக்குறி அரசு உருட்டும் என்பது இளைஞர்களுக்கே தெரிந்துவிட்டது.
@actorvijay ப்ரோ… Coin Fight எப்போ தான் முடியும்?
மக்களால முடியல..!!
#பொய்க்கால்_குதிரை_அரசு
When the police band plays movie songs to flatter a star entertainer turned CM,
it’s high time we called it what it is:
The Secretariat is no longer a seat of administration… it has become a Circus!🤡
தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர்
முத்து ரமேஷ் நாடார் அவர்களின் தந்தை ஜெ.முத்துலிங்க நாடார் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.
பாசமிகு தந்தையாரை இழந்து வாடும்
திரு. முத்து ரமேஷ் நாடார் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மறைந்த திரு. முத்துலிங்க நாடார் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial
தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து @polimernews, @NewsTamilTV24x7, @TamilJanamNews ஆகிய சேனல்கள் முடக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.
ஏற்கனவே டெல்லிக்கு சென்ற இன்றைய முதல்வர், செய்தியாளர்களை சந்திக்க திராணியின்றி தவிர்த்ததை கேள்வி எழுப்பிய @PTTVNewsX சேனலும் முடக்கப்பட்டு, எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்களில் கடும் எதிர்ப்புக்கு பின் மீண்டும் ஒளிபரப்பு தொடர்ந்தது.
தற்போது சட்டம் ஒழுங்கு, ஆளுங்கட்சியினரின் அராஜகம், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை, போதைப்பொருள் புழக்கம் ஆகியவை பற்றிய செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருவதாலோ என்னமோ, மேற்கூறிய மூன்று சேனல்களையும் இந்த பொய்க்கால் குதிரை அரசு முடக்கியுள்ளதாக தகவல் வருகின்றது.
யூட்யூபில் விமர்சித்தால் கைது,
செய்தி வெளியிட்டால் Blackout,
உங்கள் ஆட்சியில் நடப்பதை சொல்வதற்கு கூட Censor Board எதாவது உண்டா @CMOTamilNadu?
அரசு கேபிள் நிர்வாகம் மந்த்ரா என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனம் வாயிலாக, அமைச்சர் அலுவலகம் எனக் கூறி ஊடகங்களுக்கு மிரட்டல்கள் வருகின்றன.
இது தான் ஜனநாயகமா?
இதற்கு தான் நீங்கள் ஜனநாயகனா?
அல்லது, இது எதுவுமே தெரியாமல் ஒரு பொம்மை போல யாராலோ ஆட்டுவிக்கப்படுகிறீர்களா?
ஊடகங்களை தனது சினிமா பாட்டு வாசிக்கும் Band வாத்தியங்களாக மாற்ற நினைக்கும் இன்றைய ஆட்சி செல்லும் திசையை பார்த்தால், “The Dictator” என்ற ஆங்கில திரைப்படத்தின் காட்சிகளை நிஜத்திலும் பார்ப்போம் போல!
ஜனநாயகத்தின் நான்காம் தூண் மீது இன்றைய அரசு தொடுக்கும் அதிகாரத் தாக்குதலுக்கு எனது கடும் கண்டனம்.
உடனடியாக ஊடகங்கள் மீதான முடக்கத்தை நீக்கி, ஒளிபரப்பு தொடர்வதை உறுதி செய்யுமாறு இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
இயக்குனர் இமயம்
பத்மஶ்ரீ திரு. பாரதிராஜா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.
தென் தமிழகத்தின் கிராமத்தில்
இருந்து புறப்பட்டு,
தமிழ் சினிமாவின் கேமராவை கிராமங்களை நோக்கி திருப்பியவர்;
திரைத் துறையை மண் வாசனையால் நிரப்பியவர்;
தமிழ் சினிமாவை தமிழ் மண்ணுக்குரிய விழுமியங்களோடு உலகம் திரும்பிப் பார்க்கச் செய்தவர் திரு. பாரதிராஜா அவர்கள்.
அவர்தம் மறைவு என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
“என் இனிய தமிழ் மக்களே” என்ற அவரது குரல் சினிமா உள்ளவரை நிலைத்து நிற்கும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திரைத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த திரு. பாரதிராஜா அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial
My heartfelt congratulations to the Hon’ble Prime Minister of India,
Thiru. @narendramodi avl, on achieving a historic milestone by serving the nation and contributing to its development for 4,399 days as Prime Minister.
Having earned the overwhelming mandate of the people in three consecutive general elections,
Our Hon’ble Prime Minister has emerged as a globally respected statesman and a leader admired by nations across the world.
I extend my sincere best wishes to him for his continued dedicated service towards the growth, progress, and prosperity of our beloved motherland.
@PMOIndia@AIADMKOfficial
#LongestServingElectedPMModi
இந்திய வரலாற்றில் புதியதோர் சாதனையாக அதிக நாட்கள் (4,399) பிரதமராக நாட்டின் வளர்ச்சிக்கு பணியாற்றி வரும் பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
தொடர்ந்து மூன்று தேர்தல்களாக நாட்டு மக்களின் பெருவாரியான ஆதரவைப் பெற்று, உலக நாடுகள் போற்றும் ஆளுமையாகத் திகழும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள், தொடர்ந்து நமது தாய்த்திருநாட்டின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிட எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@PMOIndia@AIADMKOfficial
#LongestServingElectedPMModi
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் தனக்கெனக் கொண்ட இசைஞானி திரு. @ilaiyaraaja அவர்களுக்கு இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
உங்கள் Harmonium கொடுத்த மெட்டுக்கள் பல உள்ளங்களில் Harmony-ஐ விதைத்துள்ளது. அன்னக்கிளியில் ஆரம்பித்த அந்த அரும்பணி, மஞ்சணத்தியும் தாண்டி தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
#HBDIlaiyaraaja @AIADMKOfficial
நம் இரும்பெரும் தலைவர்களின் நல்லாசியோடும், உங்களின் ஒத்துழைப்போடும் 'கழகப் பொதுச் செயலாளர்' பொறுப்பினை ஏற்று,
இரவு பகல் பாராமல் பணியாற்றி வரும் நான், பல்வேறு இன்னல்களையும், சோதனைகளையும், துரோகங்களையும், கழக நிர்வாகிகள் மற்றும் கோடானு கோடி கழகத் தொண்டர்களின் துணையோடு எதிர்கொண்டு தொடர்ந்து பயணித்து வருகிறேன் என்பதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்.
நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் கழகம் 47 இடங்களைப் பெற்ற நிலையில், கழகத்தில் பல்வேறு பதவி சுகங்களை அனுபவித்துவிட்டு இன்று கழகத்தை அழிப்பதற்கான செயல்களில் ஒருசிலர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. நமக்கு எப்பொழுதும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது ஆன்மா உறுதுணையாக இருக்கும்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ள சோதனையைக் கண்டு கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் அனைவரும் மனம் தளர வேண்டாம்; எவ்வித விபரீதமான செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் உங்கள் அனைவரையும் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.
கழகம் தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீண்டெழுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நான் மேற்கொண்டு வருகிறேன். இதற்கு கழக நிர்வாகிகளும், கோடானு கோடி கழகத் தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
“எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்ற
இதய தெய்வம் அம்மா அவர்களின் எண்ணவோட்டத்தை, நாம் அனைவரும் ஒன்றிணைந்து மெய்ப்பித்துக் காட்டுவோம்.
கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் தற்போதைய சூழ்நிலையை எண்ணி எவ்வித அச்சத்திற்கும், பதற்றத்திற்கும் ஆளாக வேண்டாம் என்று மீண்டும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
களப் பணி ஆற்றுவோம்! கழகம் காப்போம்!
@AIADMKOfficial
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க,
கழக சட்டமன்றக் கட்சிக் கொறடா, முன்னாள் அமைச்சர் திரு. அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி MLA அவர்களும், கழக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @dr_dhanapal_mp அவர்களும் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. @rajendraarlekar அவர்களை மக்கள் மாளிகையில் நேரில் சந்தித்து,
தமிழக அரசியல் இதுவரை கண்டிராத வகையில், தலைமைச் செயலகத்தை கட்சி அலுவலகம் போல மாற்றி, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை குறிவைத்து ஆளுங்கட்சி நடத்தும் குதிரை பேரம் குறித்து CBI விசாரணை நடத்திட வேண்டி அஇஅதிமுக சார்பில் கோரிக்கை மனு அளித்தனர்.
@lokbhavan_tn@AIADMKOfficial
திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரும் , கார் பந்தய வீரருமான சகோதரர்
திரு. #AjithKumar அவர்களின்
தாயார் திருமதி. மோகினி மணி அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.
பாசமிகு தாயாரை இழந்து வாடும் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களுக்கும்,
அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த திருமதி. மோகினி மணி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial@SureshChandraa
அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து புதிய தலைமுறை செய்தி சேனல் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
“திமுக ஆட்சிக்கும், இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்சிக்கும் ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்க” என கேட்டால் யாராக இருந்தாலும் கண்டுபிடிக்க முடியாது.
ஆட்சிக்கு வந்தவுடனே சமூக வலைதள பதிவுகள் மீது வழக்குகள், எதிர்கட்சியினரின் சமூக ஊடகக் கணக்குகளை முடக்க காவல்துறை வாயிலாக X, Meta ஆகிய நிறுவனங்களுக்கு கடிதங்கள், அரசை விமர்சித்த நபர் கைது, தற்போது செய்தி சேனல் முடக்கம்… இது அப்பட்டமான திமுக மாடல்!
அப்படி எதற்காக புதிய தலைமுறை Blackout செய்யப்படுகிறது என்று பார்த்தால், டெல்லியில் இன்றைய முதல்வர் செய்தியாளர்களை சந்திக்காமல் தெறித்து ஓடிய செய்தியை வெளியிட்டது என சொல்லப் படுகிறது.
டெல்லியில் மட்டுமல்ல, கட்சி ஆரம்பித்த நாள் முதல் ஒருமுறை கூட செய்தியாளர்களை இவர் சந்திக்கவே இல்லையே? கரூர் துயரம் நடந்த போது கூட, “30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்” என்று செய்தியாளர்கள் கூறிய போது கூட அதை கண்டுகொள்ளாமல் ஓட்டம் பிடித்தவர் தானே இவர்?
மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு இருந்து, தனக்கென ஒரு போலியான Demigod இமேஜ் உருவாக்கிக் கொள்ள இவர்கள் செய்யும் தந்திரம் தான் ஊடகங்களில் இருந்து ஒதுங்கி நிற்பது. ஆனால், இது சினிமா அல்ல; பொதுவாழ்க்கை! மக்களின் கேள்விகளை கேட்கும் எதிர்கட்சிகள், ஊடகங்களை நேருக்கு நேர் சந்தித்து பதில் சொல்லத் திராணி இருக்க வேண்டும். அது இன்றைய முதல்வருக்கு இருக்கிறதா? இனியாவது வருமா?
உங்கள் பக்கம் இருக்கும் தவறை ஒரு ஊடகமோ, தனிநபரோ சுட்டிக் காட்டினால், அதை திருத்திக்கொள்ள பாருங்கள்; அல்லது, மறுத்து உங்கள் கருத்தை தெரிவியுங்கள். அதை விடுத்து ஊடகத்தை முடக்குவது, தனிநபர்களை கைது செய்வது என ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்காதீர்கள்.
புதிய தலைமுறை மீண்டும் அரசு கேபிளில் பழைய வரிசை எண்ணிலேயே ஒளிபரப்பு செய்திட வேண்டும் என இவ்வரசை வலியுறுத்துகிறோம்.
@PTTVNewsX@CMOTamilNadu
டெல்டா மாவட்டங்களில் முறையாக தூர் வாரவும், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்யவும் அரசுக்கு வலியுறுத்தல்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தனக்கு ஒதுக்கப் பட்ட எட்டு தொகுதி களில் 7 ல் வென்று; இயக்கத்துக்கு பெருமை சேர்த்ததோடு தன்னை நம்பிய தொண்டனை தலை நிமிர்ந்து நடக்க செய்தவர்.
தவறிய ஒரே ஒரு வீரபாண்டி தொகுதி தோல்வி யை யும் ஏற்று கொள்ள முடியாது மனம் வெதும்பிய ஒரு அக்மார்க் அதிமுக காரர்.
இயக்கத்தின் உயர்விலும் தாழ்விலும் தளராமல் தலைமைக்கு துணை நின்றவர்.
அண்ணார் ஆர்.இளங்கோவன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
#HBDThalaivaa @EPSTamilNadu@ElangovanAiadmk@ErGobinath_Admk@SKD999755577464
இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்தத் தியாகத்திற்கும் தயங்கமாட்டார்கள் என்ற தத்துவத்தைப் பறைசாற்றும் திருநாளாம் #பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த 'பக்ரீத்' திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடும் இந்த இனிய திருநாளில், உலகில் அன்பும், அமைதியும் தழைத்தோங்கிட, அனைவரும் மனிதநேயத்துடனும், சகோதரத்துவத்துடனும், தியாகச் சிந்தனையுடனும் வாழ்ந்திட வேண்டுமென்று மனதார வாழ்த்துகிறேன்.
#EidMübarek
@AIADMKOfficial