தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க.
இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன்.
சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல.
கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம்.
மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன்.
பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன்.
நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் .
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!
பெரியாரிய சிந்தனையாளர், திராவிடர் இயக்கச் செயற்பாட்டாளர், கம்பீர கருப்புச்சட்டைக்கு சொந்தக்காரர் ஐயா தகடூர் சம்பத் அவர்கள் நேற்று மறைந்தார்.
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் வாயிலாக நெருக்கமாக அறிமுகமான செயல்வீரர் ஐயா தகடூர் சம்பத் அவர்கள். இனிமையான பேச்சும், கனிவான தோழமையும் எவரையும் அவர்பால் வசீகரிக்கும். தெளிந்த சிந்தனையுடன் பெரியாரியலை முன்னெடுத்தவர். அன்றாடம் பெரியார் குறித்த கருத்துகளை பகிர்பவர். திருக்குறள் மீது அளவுகடந்த பற்றுக்கொண்டவர். திருக்குறள் மீதான தனியா பற்றுக்காரணமாக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்திய திருக்குறள் மாநாட்டில் முன்களப்பணியையும், ஆவணப்படுத்தல், ஒருஙகிணைத்தல், நிதி நிர்வாகப் பணிகளை மேற்கொண்டவர். 2019 ஆண்டு முழுவதும் நடந்த மோடி-பாஜக-சனதான எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கெடுத்தவர். தர்மபுரி என வடமொழியாக்கம் செய்யப்பட்ட தனது ஊரின் சங்ககாலப்பெயரான 'தகடூர்' என்பதைத் தனது பெயரோடு இணைத்துக்கொண்டு தமிழ்ப்பற்றினை முன்னெடுத்த சான்றோராக திகழ்ந்தவர். இளைஞர்களை அரவணைத்து வளர்த்தெடுப்பவர், பெரியாரியலை குழந்தைகள் வரை கொண்டு செல்ல வேண்டுமென முனைப்புக் கொண்டவர். அவரது மறைவு அதிர்ச்சியைக் கொடுக்கிறது. அவரது இடத்தை நிரப்புவது எளிதல்ல.
தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்தபோதிலும், திருக்குறள் தொடர்பாக பல விடயங்களை தொகுத்துக் கொண்டிருந்தார். அப்பணி முடியுமுன்னர் நம்மை விட்டுப் பிரிந்திருப்பது நமக்குப் பேரிழப்பு.
திடீரென மிக மோசமான உடல்நிலை குறைவு ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்ட பொழுதில் தனது நினைவிழந்த நேரத்தில் கூட ' தந்தை பெரியார் வாழ்க, திராவிடம் வாழ்க, தமிழ் வாழ்க' என கையை உயர்த்தி முழக்கமிட்டிருக்கிறார். இப்படியான பற்றுக்கொண்டவரை இழப்பது பெரும் துயரம் தருகிறது.
மே பதினேழு இயக்கத்தோழர்கள் மீது பேரன்பு கொண்டவர். எமது தகடூர் நகரத்தோழர், சமரசமற்றப் போராளி மகாலிங்கம் மறைவுற்ற போது உறுதுணையாய் நின்றவர். அவருக்கான நினைவு நிகழ்ச்சியை எழுச்சியுடன் நடத்த உதவி செய்த பெருமகனார். ஐயா தகடூர் சம்பத் போன்றோரின் ஈடு இணையற்ற அர்ப்பணிப்பு செயல்பாடுகளால் தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது.
தமிழருக்கும், தமிழ் மொழிக்கும், திருக்குறளுக்கும், திராவிடத்திற்கும், தந்தை பெரியாருக்கும் பெரும்பங்காற்றிய ஐயா தகடூர் சம்பத் அவர்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம். அவர் புகழ் ஓங்கட்டும், அவர் பணி வெல்லட்டும்.
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
Satyaki Savarkar | 5 முறை மன்னிப்பு
‘‘சாவர்க்கர் 5 முறை மன்னிப்பு கடிதங்களை பிரிட்டிஷ் அரசுக்கு எழுதினார். அவர் பசுவை கடவுளாக எல்லாம் கருதவில்லை, பயன்பாட்டுக்கு உரிய விலங்காகவே பார்த்தார்’’
சாவர்க்கர் குறித்த சர்ச்சை பேச்சுக்காக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில், சாவர்க்கரின் கொள்ளுப்பேரன் சத்யாகி நீதிமன்றத்தில் வாக்குமூலம்
Satyaki Savarkar | Savarkar | Rahulgandhi
#SatyakiSavarkar #Savarkar #Rahulgandhi #TamilNews #NewsTamil24x7