நாளை 10.05.2026 தமிழக முதல்வராக பதவி ஏற்கும் மாண்புமிகு திரு.ஜோசப் விஜய் அவர்களுக்கு SSTA இயக்கத்தின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தங்களின் ஆட்சி காலங்களில் மக்கள் விரும்பிய மாற்றத்தை ஏற்படுத்திட இறைவன் அருள்புரிய வேண்டுகிறோம்.
SSTA-மாநில தலைமை
தேர்தல் வாக்குறுதி-311-சம வேலைக்கு சம ஊதியம் நிறைவேற்றக் கோரி 19 ஆம் நாளிலும் உயிரை வருத்திப் போராடும் இடைநிலை ஆசிரியர்கள்.மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொங்கலுக்கு முன்பாக சம ஊதியம் வழங்கிட வேண்டுகிறோம்
#Police#equalpay_protest_day20@Anbil_Mahesh@TThenarasu@CMOTamilnadu
சம ஊதியம் கோரி போராடிய ஆசிரியர்களை எட்டாம் நாளாக கைது செய்வதா? ஆசிரியரைத்
தாக்கிய காவல்துறை மீது நடவடிக்கை தேவை!
சமவேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் எட்டாம் நாளாக இன்றும் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டுள்ளனர்; இதேபோல் நேற்றைய போராட்டத்தின் போது ஆசிரியர்கள் சிலரை காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். நீதி கேட்டு போராடும் ஆசிரியர்கள் மீது திமுக அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது.
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. 2009- மே மாதம் 31-ஆம் நாள் வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஜூன் 1-ஆம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 ஊதிய முரண்பாடு நிலவுகிறது. இதனால் 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை குறைவான ஊதியம் தான் கிடைக்கிறது. இந்த அநீதியை இழைத்தது திமுக அரசு தான். அது தான் இந்த அநீதியைப் போக்க வேண்டும்.
திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது இந்தக் கோரிக்கையை ஆதரித்தது. போராடிய ஆசிரியர்களை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்களே நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதன்பின் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்படும் என்று வாக்குறுதி (எண். 311) அளித்தார். ஆனால், இப்போது அதிகாரம் கிடைத்ததும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு பதிலாக அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகிறார்.
தங்களுக்கான நீதியைக் கேட்டு போராடும் ஆசிரியர்களை ஒவ்வொரு நாளும் கைது செய்து திமுக அரசு அலைக்கழிக்கிறது. கைது செய்யப்படும் போது பெண் ஆசிரியர்கள் மனிதநேயமின்றி கொடூரமாக நடத்தப்படுகின்றனர். சென்னையில் நேற்று போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட ஆசிரியர் சங்கத் தலைவர் வில்லியம் என்பவரை காவல்துறை அதிகாரி ஒருவர் பேருந்துக்குள் குண்டுக்கட்டாக தூக்கி வீசியதுடன் கன்னத்தில் அறையும் காணொலி சமூக வலைத்தலங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஜானகிராமன் என்ற ஆசிரியரின் கை உடைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இத்தகைய அடக்குமுறைகளை மன்னிக்க முடியாது. இத்தகைய அடக்குமுறைகளின் மூலம் போராட்டத்தை முடக்கிவிடவும் முடியாது. ஆசிரியர்களை தாக்கிய காவல்துறையினர் மீது தமிழக அரசு சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கற்றறிந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கு முக்கியப் பங்களிக்கும் ஆசிரியர்களை போராடும் நிலைக்கு தள்ளும் எந்த அரசும் நீடித்த வரலாறு இல்லை. திமுக அரசு அதையும் கடந்து ஆசிரியர்களைத் தாக்குதல் உள்ளிட்ட அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு வருகிறது. இதற்கான பாடத்தை திமுகவுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் புகட்டுவார்கள்.
@CMOTamilnadu
#NewsTamil24x7JUSTNOW | வலுக்கும் ஆசிரியர்கள் போராட்டம்
சென்னையில் 5வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம்
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எழிலகத்தை முற்றுகையிட முயன்ற ஆசிரியர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா
#Chennai#Teachers#Protest#Police #TamilNews #NewsTamil #NewsTamil24x7
*#No:1 தமிழ்நாடு
அரசுப்பள்ளிகளில் கல்வித்தரத்தை உயர்த்தி மாணவர் சேர்க்கையை 4 லட்சங்களாக உயர்த்திய இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான ஊதியத்தை 16 ஆண்டுகளாக சுரண்டி அவர்களை வறுமையின் அடையாளமாக மாற்றிய தமிழ்நாடு*
#JusticeForSGT@CMOTamilnadu@TThenarasu@Udhaystalin
கல்வியில் சிறந்த தமிழ்நாட்டில், கல்வியிலும் பொருளாதாரத்திலும் முதலிடம்...
இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் கடைசி இடம்...
தரமான ஆசிரியர்கள் மட்டும் வேண்டும் ! தகுதியான ஊதியம் கொடுக்க முடியாதா...?
சம வேலைக்கு சம ஊதியம்" வழங்கிடுக.
#SstaEqualPayEqualWork@CMOTamilnadu@Anbil_Mahesh
*சம வேலைக்கு சம ஊதியம்" கல்வியில் சிறந்த தமிழ்நாட்டில், கல்வியிலும் பொருளாதாரத்திலும் முதலிடம்...
இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் கடைசி இடம்...
தரமான ஆசிரியர்கள் மட்டும் வேண்டும் ! தகுதியான ஊதியம் கொடுக்க முடியாதா...?
சம வேலைக்கு சம ஊதியம்" வழங்கிடுக.@CMOTamilnadu@Anbil_Mahesh