மாம்பழ விவசாயிகளின் பக்கம் மனசு வையுங்கள் முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களே!
சென்ற வாரம் கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் மாவட்ட மாம்பழ விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் மாம்பழங்களுக்கு சரியான விலை கிடைக்காத காரணத்தால் டன் கணக்கில் மாம்பழங்களை சாலைகளில் கொட்டி தங்களது ஆதங்கத்தையும் கொந்தளிப்பையும் வெளிப்படுத்தினார்கள். அதேபோல் இன்றும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் விலை வீழ்ச்சியால் மாம்பழங்கள் குப்பையில் கொட்டப்பட்டிருக்கின்றன.
இம்முறை இப்பகுதிகளில் நல்ல மழை பெய்த காரணத்தால் விளைச்சல் அதிகமாகி விட்டது. இந்த சூழ்நிலையை தனியார் மாம்பழக் கூழ் ஆலைகள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அடிமட்ட விலைக்கு மாம்பழங்களைக் கொள்முதல் செய்வதால், விவசாயிகள் பெரும் மன உளைச்சலுக்கும் கடுமையான நிதி நெருக்கடிக்கும் ஆளாகியுள்ளனர்.
கடன் வாங்கி, கஷ்டப்பட்டு விளைவித்த பழங்களின் விலை மதிப்பு, அதன் பறிப்புக் கூலிக்கு கூட கட்டுப்படியாகவில்லை என கண்ணீர் வடிக்கும் மாம்பழ விவசாயிகளின் வேதனையை முதல்வர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் சற்று கருணையுடன் அணுக வேண்டும். நிலைமை கை மீறிப் போவதற்குள், உடனடியாக மாம்பழ விவசாயிகளின் பக்கம் கவனத்தை செலுத்தி மாம்பழங்களுக்கான உரிய விலையை நிர்ணயித்து அவர்தம் கண்ணீரைத் துடைக்க வேண்டுமென முதல்வரை வலியுறுத்துகிறேன்.
அஜித்குமாரின் காவல் படுகொலைக்கு எதிராகப் பேசிவிட்டு, ஆகாஷின் காவல்நிலையப் படுகொலைக்கு நீதியைப் பெற்றுத் தர மறுத்து, அடக்குமுறையை ஏவிவிடுவதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
மானாமதுரையில் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட தம்பி ஆகாஷின் மரணத்துக்கு நீதிகேட்டு, அவரது உடலை வாங்க மறுத்து, மூன்று மாதங்களுக்கு மேலாகக் குடும்பத்தினரும், உறவுகளும் போராடி வரும் நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவைக் காரணமாகக் காட்டி, பெற்றோரைக் கைதுசெய்து, உடலைக் காவல்துறையினரே அடக்கம் செய்திருப்பது அரசப்பயங்கரவாதத்தின் உச்சமாகும். திமுகவின் ஆட்சியில் காவல்துறையினரால் நிகழ்த்தப்பட்ட தம்பி அஜித்குமாரின் படுகொலைக்கு எதிராக அன்றைக்கு நீதிகேட்டு பேசிய முதல்வர் விஜய் அவர்கள், அதே திமுக ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட தம்பி ஆகாஷின் படுகொலைக்கு நீதியைப் பெற்றுத் தர மறுத்து, அடக்குமுறையை ஏவிவிடுவது கடும் கண்டனத்திற்குரியது.
ஆகாஷ் குற்றமிழைத்திருந்தால் சட்டப்படி நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டுமே ஒழிய, அவரை அடித்துத் துன்புறுத்திக் கொலைசெய்வதற்கு காவல்துறையினருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? நல்ல உடல்நலத்தோடு திடகாத்திரமாக இருந்த ஆகாஷ் காவல்துறை விசாரணைக்குப் பின்னர், ஒரேநாளில் உயிரிழக்கிறாரென்றால், அம்மரணத்துக்குக் காவல்துறையினர்தான் முழுப்பொறுப்பு. இதனை நீதிமன்றம்கூட கேட்க மறுத்திருப்பது ஏமாற்றமும், வேதனையுமளிக்கிறது. திமுகவை அரசியல் எதிரி என மேடைதோறும் பேசிவிட்டு, திமுகவின் ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட காவல்நிலையப் படுகொலையை மூடி மறைக்கத் துணைபோவது வெட்கக்கேடானது இல்லையா?
பெற்றோர், குடும்பத்தினர் இல்லாது காவல்துறையே அடக்கம் செய்வதெல்லாம் ஏற்கவே முடியாதப் பேரவலம். தவெகவின் ஆட்சியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இறந்துபோன சூலூர் சிறுமியின் உடலைத் தாய்க்குத் தெரியாது, அடக்கம் செய்ததும், அதேபோல கும்மிடிப்பூண்டியில் இறந்துபோன சிறுமியின் உடலைப் பொன்னேரிக்கு கொண்டு சென்று அடக்கம் செய்திருப்பதும், இப்போது ஆகாஷின் உடலைப் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அடக்கம் செய்திருப்பதுமான காவல்துறையின் போக்குகள் தமிழ்நாட்டில்தான் வாழ்கிறோமா? இல்லை! உத்திரப்பிரதேசத்தில் வாழ்கிறோமா? எனும் கேள்வியை எழுப்புகிறது. உங்களது திரைப்படங்களில் வில்லன்கள்கூட செய்யத் துணியாத ஒன்றை, உங்களது ஆட்சியில் அதிகாரவர்க்கம் செய்யுமென்றால், இதுதான் மக்களுக்கான மாசற்ற ஆட்சியா முதல்வரே? திரைப்படங்களில் அநீதிக்கு எதிராகச் சண்டையிட்டு அந்த மாயப்பிம்பத்தைக் காட்டியே வாக்குகளைப் பெற்று, ஆட்சியதிகாரத்துக்கு வந்த நீங்கள், நிஜத்தில் கொடுங்கோன்மையைக் கட்டவிழ்த்துவிட்டு செய்யும் கொடுமையெல்லாம் வாக்குச் செலுத்திய மக்களுக்குச் செய்யும் சனநாயகத் துரோகமாகும்.
ஆகவே, தம்பி ஆகாஷ் மரணத்தைக் கொலை வழக்காகப் பதிவுசெய்து, தொடர்புடைய காவலர்களைக் கைதுசெய்ய வேண்டுமெனவும், ஆகாஷின் குடும்பத்தினருக்கு 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
கோவை: சமூக ஆர்வலர் ஒருவர், தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்று வரும் குற்றச்சம்பவங்கள் தொடர்பாக அரசின் நடவடிக்கையை வலியுறுத்தி, முதல்வருக்கு செவித்திறன் கருவி அனுப்பி நூதன போராட்டம்
#Coimbatore | #CMVijay
இவர் விஜயபாஸ்கரா இல்லை ஊழல் பாஸ்கரா?
2018ம் வருடம் அறப்போர் வெளியிட்ட இந்த வீடியோவை பாருங்க. இந்த ஊழல்வாதியை அரவணைக்க போகும் கட்சி எது என்பதை பார்க்க மக்கள் காத்திருக்கிறார்கள்.
#Vijayabaskar#Gutka
போலி மூனு நம்பர் இரண்டு நம்பர் லாட்டரி விற்பனை செய்த தவெக ஶ்ரீ வைண்குண்டம் MLA சரவணன் கும்பலின் கள்ள லாட்டரி தொடர்பும் - அதில் மார்டீன் லீமா ரோஸ் கும்பலின் நாகலாந்து Dream லாட்டரி தொடர்பு என்ன என்பதை விரிவாக கடந்த சில நாட்கள் முன் நான் வெளியிட்ட வீடியோவை தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி Remove செய்ய துணையாக நின்றுள்ளது விஜய் அரசு?!
இதில் இருந்தே தெளிவாக தெளிகிறது இந்த அரசு எந்த அளவுக்கு லாட்டரி மாபியா கும்பல் கட்டுப்பாட்டில் வைத்து ஆடுகிறார்கள் என்று...
ஆக ஶ்ரீ வைண்குண்டம் MLA சரவணன் சட்டத்திற்கு புறம்பாக லாட்டரி அதுவும் போலி லாட்டரி விற்பான் whatsapp குரூப் வச்சு... அதுவும் மார்டீன் குடும்பம் சம்மந்தப்பட்ட லாட்டரியை இங்கே தமிழகத்தில் விற்பனை செய்வான் - அதை கேள்வி கேட்டால் முடக்குவோம்? லாட்டரியால் இன்னும் எத்தனை குடும்பத்தை நாசம் செய்து ஓயும் இந்த மாபியா!
#Watch | திருவண்ணாமலை: அரசு விழாவில் செய்தியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தவெகவினர் உட்கார்ந்து கொண்டு, எழ மறுத்ததால், தரையில் அமர்ந்து தர்ணா செய்த செய்தியாளர்கள்!
#SunNews | #TVK | #Tiruvannamalai
📌14 ம் தேதி - நடிகர் மகேந்திரனின் சர்ச்சை பேச்சு
📌15 ம் தேதி - நடிகர் ராகவா லாரன்ஸ் சர்ச்சை பேச்சு
📌இன்று 16 ம் தேதி - நிதியமைச்சர் மரிய வில்சனின் வெள்ளை அறிக்கை இதெல்லாம் எதற்காக ❓
💥 இந்த அவலங்களை #மடைமாற்றம் செய்யத்தானா ❓
சற்று சிந்தியுங்கள் மக்களே 😡
#பெண்கள்_பாதுகாப்பு_எங்கே ❓
#சீரழியும்_தமிழ்நாடு
#சட்டம்ஒழுங்கு ❓
#TVKVijayFails
கட்சி உத்தரவை மீறி பேனர் வைப்பவர்களை கட்சியை விட்டு நீக்குவீர்களா?
சாலைகளில் பேனர் வைப்பது ஆபத்தானது என்று இதனால் தான் சொல்கிறோம். அது சட்டப்படியும் தவறு என்று மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறோம். நீதிமன்றமும் பல முறை பேனர் வைப்பதற்கு எதிராக உத்தரவுகளை பிறப்பித்துவிட்டது.
ஆனால் அதிமுக - திமுக ஆட்சிகளில் நடத்திய அதே நாடகத்தை தான் TVK ஆட்சியிலும் அரங்கேற்றி வருகிறார்கள். தலைமையில் இருந்து பேனர் வைக்க கூடாது என்று ஒரு அறிக்கையை பெயரளவுக்கு வெளியிட்டு விட்டு ஊர் முழுவதும் பேனர் வைத்து மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவது இவர்களுக்கு ஒரு வழக்கமாகிவிட்டது.
சட்டத்தை மீறி பேனர் வைத்து பொது மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துகிறீர்களே உங்களுக்கு அறிவு இருக்கா என்றும் கேட்டு விட்டோம். பேனர் வைக்கும் சுயநல சமூக விரோதிகளே என்றும் சொல்லி விட்டோம். ஆனால் இந்த கொலைகார விளம்பர பிரியர்களுக்கு இதெல்லாம் கொஞ்சம் கூட உரைப்பது இல்லை.
சாலைகளில் பேனர் வைக்கும் TVK சுயநலவாதிகளே... அறிக்கை அளித்து ஊரை ஏமாற்றும் TVK பொதுச் செயலாளர் அவர்களே... இது எதையும் கண்டு கொள்ளாமல் அமைதி காக்கும் முதல்வர் அவர்களே...
என்று தணியும் இந்த கொலை வெறி பேனர் தாகம்..!!
@BussyAnand@TVKPartyHQ@TVKVijayHQ