விஜய் உலக சாதனை:
1 மணி நேர அமைச்சரவை சந்திப்பில் 436 திட்டங்களை விசாதித்து ஆலோசனை கூறியுள்ளார்.. wow.. சூர்ப்பருங்க.. செம்ம வேகம்..
ஆனா பாருங்க மக்களே 1 நிமிடத்தில் 7 திட்டங்கள் எப்படி பேச முடியும்? அந்த திட்டத்தை எடுத்து பேசவே 5 நிமிடமாவது ஆகாதா? என்னடா உருட்டு இது..
இதை அமைச்சர் வெக்கமே இல்லாமல் விஜய் முதல்வராக 436 திட்டங்களை பற்றி வெவ்வேறு துறை அமைச்சரிடம் கேட்டு ஆலோசனை கூறினார் என வந்து பேட்டி கொடுக்கிறார் எனில் நம்மை எல்லாம் பார்த்தால் இவர்களுக்கு என் நினைப்பு தெரியவில்லை..
ஒன்று நம்பும் மக்கள் முட்டாள்கள் என நினைப்பா? இல்லை நாங்களே பெரிய முட்டாள் தாங்க என்ற வெளிப்படை தன்மையா!
ஒரு 3,4 மணி நெரம் செலவிட்டு ஆலோசனை வழங்க கூட விஜய்-க்கு ஆர்வம் இல்லை என தெரிகிறது…
புதுக்கோட்டை பகுதி 16 மணி நேரம் கரண்ட் இல்லைங்க.. என புலம்பும் மக்களுக்கு இனி கரண்ட் இல்லை மொத்த நிர்வாகமும் இவர்கள் நடத்தும் இந்த ஆட்சி லட்சணத்தில் காலி தான்… காரணம் விஜய் க்கு ஆர்வமே இல்லை.. வெறும் புழ்ச்சி பெயர் போதும் அவ்வளவு தான் அவர் வேண்டியது.
அடுத்த முறை மேடைக்கு வரப்போ, நல்லா prepare பண்ணிட்டு வரணும்;
போன முறை பேசுனதையே திரும்ப பேசக்கூடாது;
கஷ்டமான வார்த்தையெல்லாம் எழுதி கொடுக்க வேண்டாம்னு வீட்ல சொல்லிடுங்க!
இப்படியாக, பள்ளியில் மாணவருக்கு அறிவுரை வழங்கினார்கள்!
எப்போதுமே Mute-ல இருக்கவர் முதலமைச்சரா இருக்காருங்கிற தைரியத்துல ஆளுநர் மாளிகையில திருவள்ளுவருக்கு மறுபடியும் காவி Paint அடிச்சு இருக்காங்க.
தமிழ்நாடு அரசு ஜனவரி மாசத்துல திருவள்ளுவர் நாளை அதிகாரப்பூர்வமா கொண்டாடுது.
ஆனா, வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாள்னு புதுசா ஒரு உருட்டு எங்கே இருந்து வந்தது?
தி.மு.கழக ஆட்சியில இதே மாதிரி வேலையைப் பார்த்த அப்போதைய ஆளுநரை கடுமையா கண்டிச்சோம். சங்கிகளை திருத்துனோம்.
இப்போ மறுபடியும் தமிழர்களோட சுயமரியாதையை உரசிப்பார்க்குறாங்க.
வள்ளுவரை அவமதிக்கும் பாசிஸ்டுகளுக்கும் - அதை அனுமதிக்கும் #SofaModel அரசுக்கும் என்னுடைய கடும் கண்டனங்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்தை முதல்ல பாட permission கொடுங்கன்னு டெல்லியில கேட்ட மாதிரி, இந்த விஷயத்துலயும் முதலமைச்சர் பயந்து நடுங்கக் கூடாது.
சட்டம் ஒழுங்கு விஷயத்துல தான் முதலமைச்சர் Silent ஆ இருக்காருன்னா, கொள்கை எதிரிகள் வள்ளுவருக்கு காவி Paint அடிக்கிற அநியாயத்தை தட்டிக் கேட்கவும் தயங்குறது ஏன்? #Thiruvalluvar
@ActorVijay-க்கு வாக்களித்த வாக்காளர்களே,
விஜய் தனது 20 நிமிட உரையை இப்படி அமைத்திருந்தால் இடைத்தேர்தலில் விஜய்க்கு வாக்களிக்குமாறு திருச்சி கிழக்கில் உள்ள எனது உறவினர்களை நான் சம்மதிக்க வைத்திருப்பேன்.
* வாக்காளர்களுக்கு நன்றி - 3 நிமிடம்
* விவசாயிகள் பிரச்சனை - 3 நிமிடம்
* நீட் (NEET) மற்றும் சிபிஎஸ்இ (CBSE) பிரச்சனை - 3 நிமிடம்
* உலகளாவிய பெட்ரோல் நெருக்கடியை அவர் எப்படி கையாளப் போகிறார் - 5 நிமிடம்
* தமிழ்நாட்டில் அவரது லட்சியத் திட்டம் - 3 நிமிடம்
* சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை - 1 நிமிடம்
* Current cut பிரச்சனை - 1 நிமிடம்
* வாக்காளர்களுக்கு இறுதி நன்றி - 1 நிமிடம்
வெறுப்பு அரசியல் ஆட்சி அமைக்க உதவலாம், ஆட்சி நடத்த உதவாது CM saar 🤦🏻
ஆரோக்கியமான அரசியல் பேசலாம்… வாங்க. @Udhaystalin@Anbil_Mahesh@TVKVijayHQ
திருச்சியில் #நன்றி_வேண்டும் என்று விருப்பப்படும் நபர்கள்
QR code பெற்றுக்கொண்டு நன்றியினை வந்து வாங்கி செல்லவும்.
பிகு: 5000 நன்றிகள் மட்டுமே வழங்கப்படும்.
Extremely saddened to hear about the demise of Tmt. Mohini Mani, mother of Thiru Ajith Kumar. My heartfelt condolences to Thiru. Ajith and his entire family. Let her Rest in Peace🙏🏾
அன்புச் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் திரு. அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை.
அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். திரு. அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்.
நடிகரும் நண்பருமான அஜித்குமார் அவர்களுடைய அன்பு தாயார் திருமதி மோகினி மணி அம்மையார் அவர்கள் மறைந்த செய்திக் கேட்டு வருத்தமுற்றேன்.
அஜித் அவர்கள், வாழ்வில் பல்வேறு உயரங்களைத் தொட உறுதுணையாக இருந்தவர் அவருடைய தாயார்.
அவரை இழந்து வாடும் நண்பர் அஜித் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடலூரில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை எற்படுத்துகிறது.
இப்படி தொடர்ச்சியா நடக்குற குற்றச்சம்பவங்களை பார்க்கும் போது, தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்குன்ற ஒன்னு இருக்கா இல்லையான்னு மக்களுக்கு சந்தேகம் வருது.
இந்த #SofaModelஅரசு அமைஞ்சது முதல், கொலை - கொள்ளை - பாலியல் வன்கொடுமைன்னு இப்படி குற்றங்கள் நடக்காத நாளே இல்ல.
தேர்தல் பிரச்சாரத்துல பக்கம் பக்கமா பேப்பர் வச்சு, சட்டம் ஒழுங்கு பத்தி வாய்கிழிய Punch டயலாக் பேசினவர், முதலமைச்சர் ஆனதும் Deep Sleep Mode-க்கு போய்ட்டாரு.
பெண்கள் பாதுகாப்புக்காக நீங்க அறிவிச்ச சிங்கப்பெண்கள் படையோட தொடக்க விழாவை, கடைசி நேரத்துல ரத்து செஞ்சு இருக்கீங்க.
நிகழ்ச்சியை தள்ளி வைச்சு இருக்கீங்களா, இல்ல அந்த முயற்சியையே தள்ளிவச்சுட்டீங்களானு மக்கள் கேட்கிறாங்க.
சிங்கப்பெண் படைனு பேரையும், Uniform-ஐயும் மாத்துறது தான் மாற்றமா? இல்ல, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அவகாசம் வேணுமா?
நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir.
#LawAndOrder
சென்னை கோடம்பாக்கத்துல Police உட்பட 3 பேர் சேர்ந்து, ஒரு சிறுவனை கட்டாயப்படுத்தி மது அருந்த வச்சு, Sexual Harassment-க்கும் ஆளாக்குன சம்பவம் அதிர்ச்சியை தருது.
Police-ட்ட இருந்து காப்பாத்திக்க, அந்த சிறுவன் Police Station-க்கு ஓட வேண்டிய நிலையில தான் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீரழிஞ்சு போய் இருக்கு.
இதுமட்டுமல்ல, வேளச்சேரியில Walking போக வெளிய வந்த 61 வயசு பெண்மணியை, ஒரு கும்பல் Sexual Harassment-க்கு ஆளாக்கின கொடுமையும் நடந்துருக்கு.
கும்பகோணத்துல ஆளுங்கட்சியினர் தாக்கினதுல ஒரு போலீஸ்காரருக்கே கை உடைஞ்சு போனதாவும் செய்தி.
இந்த #SofaModelஆட்சி-யில, போலீசாலயும் பாதுகாப்பு இல்ல. போலீசுக்குமே பாதுகாப்பு இல்ல.
ஆட்சியை காப்பாத்திக்க MLA-க்கள் பிடிக்கிற வேலையை விட்டுட்டு, தன்னோட கட்டுப்பாட்டுல இருக்க Police Department-ஐ ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்க முதலமைச்சர் முயற்சி செய்யனும்.