நாக சைதன்யா சமந்தா நடித்த மஜிலி என்கிற தெலுங்கு திரைப்படம். அதில் நாக சைதன்யா ஒரு கிரிக்கெட் வீரர். வாழ்க்கையில் பல சம்பவங்களுக்குப் பிறகு நீண்ட வருடங்களுக்கு பிறகு அவருடைய கோச்சை மீட் செய்வார்.
அப்போது அந்த கோச் சொல்வார், முதல் மேட்ச் எங்க டீமுக்கு நீ ஆடுனப்ப எக்ஸ்ட்ரா கவரில் ஒரு சிக்ஸ் அடிச்சியே. அதை இன்னும் என்னால மறக்க முடியல என்பார்.
யோசித்துப் பார்த்தால் எல்லோருக்குமே வாழ்க்கையில் ஒவ்வொரு peak சம்பவம் இருக்கும். அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு அவரை அறிந்தவர்களுக்கு அந்த சம்பவத்தின் மூலம்தான் அவர் மீண்டும் மீண்டும் அறியப்படுவார்.
பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதல் மார்க் வாங்கியவனை, அந்த செட்டில் எல்லோருமே ஞாபகம் வைத்திருப்பார்கள். அவர் பின்னாளில் ஐஏஎஸ் ஆனாலும் சரி, சாதாரண நிறுவனத்தில் வேலை பார்த்தாலும் சரி அந்த செட்டில் உள்ள எல்லோருக்குமே அவன் ஸ்கூல் ஃபர்ஸ்ட். அவ்வளவுதான். எத்தனை ஆண்டு காலமானாலும் சரி. அந்த செட்டில் உள்ளவர்கள் பேரன்பேத்தி எடுத்துவிட்டாலும் சரி, அவன் ஸ்கூல் ஃபர்ஸ்ட் என்கிற அடையாளத்துடனே நினைக்கப்படுவான்.
அதுபோல சசிகுமாரின் peak சம்பவம் சுப்ரமணியபுரம். 1980 என்கிற கார்டு வந்தவுடன், கஞ்சா கருப்பு எண்பதின் மதுரை வீதிகளில் நடக்கத் துவங்குவார். அவர் நடக்கவில்லை நம்மை கைப்பிடித்து அந்த களத்திற்குள் இழுத்துச் சென்று விடுவார். அதன் பிறகு நடந்ததெல்லாம் ஒரு மாயாஜாலம். எத்தனை உயிர்ப்பான கேரக்டர்கள். சசிகுமாரின் நண்பர்கள் சித்தன் சவுண்ட் சர்வீஸ் மொக்கச்சாமி சமுத்திரக்கனியின் அண்ணன்கள், தோட்டம் கொண்ட ராசாவே, சிறு பொன்மணி அசையும் பாடல்களை பிளேஸ் செய்த விதம்.
இந்த மண்ணு மணக்குற கண்கள் இரண்டால் பாடல்கள் என.
படத்தின் முதல் பாதி முடிந்து வெளியே வந்ததும் தியேட்டர் கேண்டினில் கண்கள் கோன் ஐஸ் மெஷினையும், டீ கேன் முறுக்கு கடலை மிட்டாய் உள்ள ஸ்டாலையும் தேடின. ஆனால் அது 2008. நாம் 1980ல் இல்லை 1980 காலகட்ட படத்தை பார்த்திருக்கிறோம் என்று உணர ஒரு கணம் ஆனது.
இரண்டாம் பகுதியில் அப்படி ஒரு டென்ஷன்.
சுப்பிரமணியபுரத்தை துரோகத்தின் காவியம் என்று சொல்லலாம்.
படம் முழுவதும் எத்தனை எத்தனை துரோகங்கள்.
முழுக்க முழுக்க நம்பியவர்களும் காதலித்தவர்களுமே துரோகம் செய்கிறார்கள்.
படத்தின் திருப்புமுனையாக ஒரு சீன் வரும். அதுதான் படத்தின் அத்தனை துரோகங்களையும் தாங்கி நிற்பது. தன்னுடைய பதவி போய்விட்டது என்றவுடன் அவர் சத்தம் போடும் பொழுது அவர் மனைவி வெளி கோபத்தை ஏன் வீட்டில் காட்டுகிறீர்கள். அதுதான் பதவி போயிருச்சு ஏன் கத்துகிறீர்கள் என்பார்.
அந்த ஒரு சொல் அடுத்து நடக்கும் அத்தனை சம்பவங்களுக்கும் துரோகங்களுக்கும் கொலைகளுக்கும் காரணமாக இருக்கும்.
ஒரே ஒரு சொல் ஒருவரின் கோபம் எத்தனை சாம்ராஜ்யங்களையோ வீத்தி இருக்கிறது. அதுபோல ஒரு தெருவில் இருக்கும் பலரின் வாழ்க்கையையே புரட்டிப் போடுவது அந்த ஒரு கோபம்.
காதலி கடைக்கண் காட்டிவிட்டால் மண்ணின் மைந்தருக்கு மாமலையும் ஓர் கடுகாம் என்பது போல
இல்லத்தரசியின் ஒரு கோபம், ஒருவனுடைய சுயமரியாதையை சீண்டி விட்டு அவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணமாகிறது. ஆனால் அதை இலகுவாக கடந்திருந்தால்....
சசிகுமாரின் மாஸ்டர் பீஸ். தமிழ் சினிமாவின் பாதையை மாற்றிய ஒரு திரைப்படம்.
எத்தனை சினிமாக்களை சசிகுமார் கொடுத்தாலும், அவர் சுப்பிரமணியபுரம் சசிகுமார் தான்.
"தங்கம் வாங்க வேண்டாம்"
"கொரோனா காலத்தில் Work From Home, ஆன்லைன் கூட்டங்கள் போன்ற நடைமுறைகளுக்கு நாம் பழகியிருந்தோம். தேசநலன் கருதி இன்று நாம் மீண்டும் அந்த நடைமுறைகளை தொடருவது காலத்தின் கட்டாயமாகும்.
திருமணத்திற்காக ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம் என்று நான் மக்களை கேட்டுக்கொள்கிறேன். பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டும். தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும்."
- மத்திய கிழக்கு போர் பதற்றம், எரிவாயு நெருக்கடிக்கு மத்தியில் பிரதமர் மோடி வேண்டுகோள்
#pmmodi #gold #thanthitv
#WATCH | தவெகவை RSS பிள்ளைகள் என விமர்சித்தீர்கள்.. இப்போது ஏன் RSS பிள்ளைகளை ஆதரிக்கிறீர்கள்?
செய்தியாளர் கேட்ட கேள்விக்கு நச் என பதிலளித்த திருமாவளவன்
#SunNews | #TVKVijay | #RSS | @thirumaofficial
"We do not choose our destiny, yet we must do our duty, no?Great or small, we must do our duty." I know this election was a major setback for Kalagam, but Kalagam has faced far worse challenges in the past. One thing is certain Kalagam will recover from this loss, and MKS will 🌄
என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம்.
நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன்.
அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில், “கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்” எனத் தெரிவித்தேன்.
ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது.
எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன்.
கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கைகோத்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவித்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.
இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம்.
தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும்.
மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.