மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (1.7.2026) தலைமைச் செயலகத்தில், ரேலா மருத்துவமனையின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் முகமது ரேலா அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தலைவர் தளபதி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர்,கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் ஐயா அவர்களின் ஆலோசனைப் படி,
இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் சார்பில் நாளை (14.6.2026, ஞாயிற்றுக் கிழமை )மாலை நடைபெறும் பொதுக் கூட்டம் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறேன்.
#தமிழகவெற்றிக்கழகம்
கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள திரு.டி.கே. சிவகுமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
I convey my heartfelt congratulations to Thiru. D.K. Shivakumar on assuming office as the new Chief Minister of Karnataka.
#CMJosephVijay
@DKShivakumar
முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்தநாளில், தமிழ் மொழி, இலக்கியம், திரைத்துறை, அரசியல், ஆட்சி நிர்வாகம் மற்றும் மாநில உரிமைகள் போன்றவற்றில் அவரது பங்களிப்பை நினைவுகூர்கிறேன்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்.
#CMJosephVijay
இன்று (21.5.2026) சென்னை, கிண்டியிலுள்ள மக்கள் மாளிகையில் நடைபெற்ற அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான புதிய அமைச்சரவையின் குழு புகைப்படம்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் அமைச்சரவையில் மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் திரு. ஸ்ரீநாத் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
@CMOTamilnadu@srinathtvk
இன்று காலை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து, அவர்களின் வாழ்த்துகளையும் ஆசியையும் பணிவுடன் பெற்றுக் கொண்டேன்.
தொழில் வளர்ச்சி, முதலீட்டு முன்னேற்றம் மற்றும் தமிழ்நாட்டின் பொருளாதார எதிர்காலத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அவர்களின் வழிகாட்டுதல் பெரும் ஊக்கமாக அமைந்தது.
#CMJosephVijay #TamilNadu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (19.05.2026) தலைமைச் செயலகத்தில், மாற்றுப் பாலினத்தோர் உரிமைகள் ஆர்வலரும், உச்சநீதிமன்ற ஆலோசனைக் குழு உறுப்பினருமான கிரேஸ் பானு,
1/2
மனசாட்சி உள்ள மக்களாட்சி அமைத்துள்ள மக்கள் அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம், இன்று சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. மக்கள் நம்பிக்கை மூலம் அமைக்கப்பட்ட நமது அரசுக்கு ஆதரவு அளிக்கப்பட்டும் வாக்களிக்கப்பட்டும் நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றிக்குக் காரணமான, நம்மை ஆதரிக்கும் மதிப்பிற்குரிய அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், அக்கட்சிகளைச் சேர்ந்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதே வேளையில், என்றும் நம்முடன் நிற்கும் நம் கழகச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நமது அன்பினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த வேளையில், தேர்தலில் நம்மை நம்பிய மக்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவிக்க வேண்டியது நமது கடமை. தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி.