Mr.Ravi, you haven't learnt not even one Kural from his 1330 poems. You can't even understand a one minute Tamil speech. Yet, you have the audacity to tamper the very fabric of Thirukural. Its about equality, fraternity and democratic ruling, which your RSS couldn't and wouldn't inherit.
Thirukural is all against Sanatana System. Thiruvalluvar strongly condemns the very foundation if Sanatana philosophy. While Sanatana founded on discriminating people on four level hierarchical corrupt model, Thiruvalluvar stood tall to call all humans are equal.
Calling Thiruvalluvar as Sanatani is like calling Lord Ram as anti-Sanatani. Both are not true. Ram is not popular among Tamils since Tamils hate Sanatana system and fought against it.
ஆளுநரின் நிகழ்வில் தமிழ்மொழி வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டது. நேரு-நேதாஜி போன்றோரால் தேசியகீதமாக ஏற்கப்படாத ' வந்தே மாதரம்' பாடல் முன்னுக்கு இசைக்கப்பட்டது. இது தொடர் நிகழ்வாக நடந்துகொண்டிருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டு அரசு நடைமுறைப்படுத்தும் நிகழ்ச்சி நிரல்கள் ஆளுநர் அலுவலகத்தாலும், ஆளுநராலும் தொடர்ந்து நிராகரிக்கப்படுகிறது. வந்தே மாதரம் பாடல் மதவெறுப்பை விதிப்பதுடன், வங்க நிலப்பரப்பின் அழகை தேசிய அழகாக முன்னிறுத்துகிறது. இது இந்திய துணைக்கண்டத்தில் வாழும் அனைத்துத்தரப்பு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாடலாக அமையவில்லை என்பதாலேயே, வங்க மொழியறிந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இப்பாடலை தேசியகீதமாக அறிவிக்காமல், மறுப்பு தெரிவித்தார். 1936ம் ஆண்டுகளிலேயே இந்தப்பாடல் விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தலைவர்களால் நிராகரிக்கப்பட்டது. இப்பாடலை தமிழ்நாட்டில், தமிழ் மொழிக்கு முன்னுரிமை கொடுக்காமல் பின்னுக்கு தள்ளும் செயல் ஏற்புடையதல்ல.
மேலும், ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து, இந்துமத அடையாளங்களுடன் படத்தை வைத்து மரியாதை செய்யப்பட்டது தமிழர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. திருவள்ளுஜர் இயற்றிய திருக்குறள் உலகப்பொதுமறை எனுமளவில் சாதி-மதம்-இனம் கடந்த மானுடத்திற்கான படைப்பாக தமிழர்கள் கொண்டாடிக்கொண்டிருக்கும் சூழலில், திருவள்ளுவருக்கு மதச்சாயம் பூசுவது தமிழர்களையும், திருவள்ளுவரையும் அவமானப்படுத்தும் செயலாகும்.
ஆளுனரின் இந்த சனநாயக விரோத அரசியலையும், வன்ம அரசியலையும் கண்டித்து, ஆளுநரின் மதவெறி அரசியலை அம்பலப்படுத்தியும் மே17 இயக்கத்தால் சைதாப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மொழிப்போர் ஈகி சிவா திலீபன் அவர்களின் இணையர் தோழர் கீதா ( இசைமொழி ) அவர்கள் உரை நிகழ்த்தினார். நிகழ்வை தோழர் கொண்டல்சாமி தமிழ்நாடு அவர்கள் ஒருங்கிணைத்தார். கண்டன உரையை தோழர்கள் திருமுருகன் காந்தி மற்றும் த.பெதிகவின் தோழர் ஆவடி நாகராசன் ஆகியோர் நிகழ்த்தினர். கடுமையான காவல்துறை கெடுபிடியுடன் இந்நிகழ்விற்கான அனுபதி இழுத்தடிக்கப்பட்ட சமயத்தில் மே17 இயக்கத்தோழர்கள் உறுதியாக நிலைப்பாடு எடுத்து நடத்தினர்.
ஆளுநரின் போக்கு மாறவில்லையெனில், அனைத்து சனநாயக அமைப்புகளின் எதிர்ப்புகளையும், போராட்டத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை எச்சரிக்கையாக மே17 இயக்கம் வெளிப்படுத்தியது. மேலும், ஆளுநரின் மாளிகை அப்புறப்படுத்தப்பட்டு கண்ணகிநகர், பெரும்பாக்கத்தில் சாமானிய மக்களுடன் நகர்த்தப்பட வேண்டும் எனவும், சென்னையின் மையப்பகுதியில் பெருமளவிலான காட்டுப்பகுதியை ஆக்கிரமித்து ஆளுநர் இல்லம் அமைக்கப்பட்டிருப்பதை நீக்க வேண்டுமென கோரிக்கையை முன்வைத்தது. புதியாத ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் தமிழக வெற்றிக்கழகம் மற்றும் முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் ஆளுநரின் அவமதிபுச் செயலுக்கு போதிய வகையில் கண்டனம் தெரிவிக்க வேண்டும் மற்றும் தனது கட்சியனரை போராட்டகளத்திற்கு அழைத்து வந்து ஆளுநரின் அடவாடி செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமென கோரிக்கையை மே17 இயக்கம் முன்வைத்தது. தமிழ் மொழியை இழிவுபடுத்துபவரை துணிந்து எதிர்த்து நிற்கும் தலைமையையே தமிழர்கள் ஏற்பார்கள் என்பதை கவனமெடுத்து தவெக கட்சியினர் ஆளுநரை எதிர்த்து வீதிக்கு வரவேண்டுமென மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர்ப்திருமுருகன் காந்தி தனது கண்டன உரையில் தெரிவித்தார். தமிழ்மொழி காக்க தன்னுயிர் ஈந்த மொழிப்போர் ஈகி தோழர் சிவாதிலீபனின் நினைவில் ஏந்தி, தமிழ் மொழிக்காக தொடர் போராட்டத்திற்கு மே17 இயக்கம் அணியமாகவே எப்போதும் இருக்கும் என்பதை உறுதிபட தெரிவிக்கிறது.
@may17iyakkam
அன்னைத் தமிழ் மொழி
எங்கள் உயிரின் மொழி!
எங்கள் தோழன் சிவா திலீபன் நினைவினைப் போற்றி, விரட்டிடுவோம் வந்தேறி இந்துத்துவ அரசியலை!
அணி திரள வாருங்கள்.
ஆளுநரை கண்டிக்க வாருங்கள்!.
சென்னை-பனகல் மாளிகை, சைதாப்பேட்டை.
காலை 10:00 மணி.
31-05-2026
முனியனுக்கும், கருப்பனுக்கும் ஆடு-கிடா-கோழி-சேவல் வெட்டமுடியாதபடி சங்கித்தனமான தீர்ப்பை வாங்கி வைத்திருக்கும் பாஜகவினர், 'மாடு வெட்டுவது முஸ்லீம்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்துமென' திசை திருப்புகிறார்கள்.
இது அடிப்படையில் தமிழர்களுக்கு எதிரான தீர்ப்பு.
கவின் கொ**லைக்கு நியாயம் கேட்க வராத அனிதா ராதாகிருஷ்ணன், அர்ச்சகர் சுரண்டலுக்கு நியாயம் கேட்க வந்துள்ளார்.
இவ்வகையான ஒட்டுண்ணி, பார்ப்பனிய, சாதிய அரசியலைச் செய்த முன்னாள் அதிமுக, இன்னாள் திமுகவினரால் ஏற்பட்ட சேதங்களை தேர்தல் சொன்னது. 'திரிசுதந்திரர்' எனும் பார்ப்பன அர்ச்சகர்கள் குறித்து திரு. அனிதா ராதாகிருஷ்ணன் அறியாதவரா?
இளம் தலைமுறையை அரசியல்படுத்தாமல் போனதாலேயே, 'சமூகநீதி அரசியல்' புதுத்தலைமுறை அறியாமல் போனதென்கிறார்கள். ஜென்-ஜீ தலைமுறைக்கு அரசியலை சொல்லிக்கொடுக்காமல் போனதால் தோற்கவில்லை, பழம்பெரும் அமைச்சர்கள் திராவிடர் இயக்க/கொள்கை வரலாறே அறியாத 'தற்குறி'களாக இருந்தார்கள் என்பதுதான் அடிப்படை காரணம்.
உண்மை அதுமட்டுமல்ல,
திராவிடம் எனும் பெயரை வைத்துக்கொண்டு, 'திராவிடத்தை-பெரியாரை-அண்ணாவை கற்காத, அனிதா ராதாகிருஷ்ணன் போன்ற அமைச்சர்கள் சார்ந்த பழைய தலைமுறையே, திமுகவினை பின்னுக்கு இழுத்தது... இன்றும் இழுத்துக்கொண்டிருக்கிறது..' இப்படியாக எவ்வித திராவிட அரசியல் அறியாத அமைச்சர்கள் பட்டியலை தயாரித்தால், ஒரு சில பெயர்களைத் தவிர பெரும்பாலான அமைச்சர்களை பட்டியலில் காண இயலும்.
திராவிடர் இயக்க வரலாறு, பெரியாரியல், திராவிடர் இயக்க எழுத்துக்கள், உரைகள் பற்றிய விவரங்களெல்லாம் தெரியாத முன்னாள் அதிமுகவினரை, பெரியார் திடலுக்கு அரசியல் பயிற்சி வகுப்புக்கு அனுப்பி வைப்பது நல்லது. திராவிடர் இயக்கப் பெயரை களங்கப்படுத்தும் அரசியல் புரிதலற்ற முன்னாள் அமைச்சர்களுக்கு பெரியார் திடல் நடத்தும் கருத்தரங்கு, விடுதலை இதழ், பயிலரங்கு ஆகியவற்றில் கட்டாயம் பங்கெடுத்து, படித்து 'பாஸ்' செய்ய வேண்டும் எனும் கட்டுப்பாட்டை விதிக்காமல், திமுக தன்னுடைய சரிவை மீட்டெடுக்க இயலாது.
சீமான் வீட்டுக்குச் சென்றவர், அவரிடத்தில் பார்ப்பன கடப்பாரையை இரவல் வாங்கி வந்துள்ளாரா அனிதா ராதாகிருஷ்ணன்?
கவின் ஆணவப்படுகொ**லையில் முதன்மைக் குற்றவாளிகளான சுஜித்தின் பெற்றோர்களில் தாயாரை நீண்ட நாட்களுக்குப்பின்னர் கைது செய்துள்ளது காவல்துறை. இதற்கான போராட்டங்களை நடத்திய அனைத்து அமைப்புகளுக்கும் எமது வாழ்த்துகள். சுர்ஜித்தின் பெற்றோர்களை கைது செய்யக் கோரி முதல் போராட்டத்தை நடத்தியது மே17 இயக்கம். சாலை மறியலை நடத்தி கைதானோம். இப்போராட்டத்தில் மொழிப்போர் ஈகி சிவா திலீபன் அவர்களின் இணையரும் , மகளும் சாலை மறியலில் காவல்துறையால் இழுத்துச் செல்லப்பட்டு கைதாகினர். சாதியொழிப்புக் களத்தில் தனது நேசத்திற்குரியவர்கள் களப்போராட்டதில் முன்னனியில் இயங்கியதை சிவா திலீபன் கண்டு பெருமை கொண்டதாகச் சொல்வார். சாதிமறுப்பு திருமணம் செய்த ஓரிரு வாரத்தில் நடந்த இப்போராட்டத்தில் அவரது மகள் பங்கெடுத்தது அவருக்கு பெருமையைக் கொடுத்தது.
சாதி ஒழிந்த தமிழ்த்தேசியத்தை நேசித்த சிவாவின் எதிர்பார்ப்பில் ஒருபகுதி இன்று நிறைவேறியது எனும் வகையில் மனம் நிறைவு கொள்கிறது. இந்தக் குற்றவாளிகள் மீதான வழக்குகள் திறம்பட நடத்தப்பட்டு, கடும் தண்டனை விதிக்கபப்டும்வரை போராட்டம் தொடரட்டும். இதுபோன்ற சாதி ஆணவப்படுகொ**லைகளுக்கு முடிவுகட்டும் வரை நம் போராட்டம் ஓயாது.
சாதி ஒழிப்பே தமிழ்த்தேசியம் என்போம்.
முஸ்லீம்களுக்கு எதிராக செயல்படுவதில் ஒருவருக்கு ஒருவர் சளைப்பதில்லை. பக்ரீத்திற்கு முன்பாக வழக்குகளை ஏவுவது, தீர்ப்புகளை வழங்குவது, வழிமுறைகளைச் சொல்கிறேன் என உத்திரவிடுவது, வன்மமான சங்கித்தனம்.
தமிழ்நாட்டில் மதத்தின் மீதான உத்தரவுகளை விதிப்பதன் மூலம் கலவரத்தைக் கொண்டுவரலாமென முயல்கிறார்கள். 'முஸ்லீமின் சமாதிக்கருகே தீபத்தை ஏற்று' என சிக்கலை கொண்டுவர முயல்வது, அல்லது முஸ்லீம் வெறுப்பைக் காட்டி சிக்கலை உருவாக்குவது என ஏதாவது பதட்டத்தை உருவாக்கிக் கொண்டே இருப்பது இவர்கள் வழக்கம்.
இந்த நபர்களுக்கு மக்கள் வரிப்பணம் சம்பளமாக கொடுக்கப்படும் கொடுமையை என்னவெனச் சொல்வது.
மாடுகளை பொது இடங்களில் முஸ்லீம்கள் வெட்டுவதில்லை. அக்கிரகாரத்தை விட்டு வெளியே அம்பிகளுக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை.
சிவகங்கை, மணப்பாறை போன்ற தமிழகத்தில் எருதுகளை கோவில் விழாக்களில் பலியிடும் பழக்கமுண்டு. இவற்றையும் தடை செய்ய முயன்று வருகிறார்கள்.
ஆடுகளை தமிழர் கோயில்களில் பலியிடுகிறோம். கிடாவெட்டுகள் 'அரசால் ஒதுக்கப்பட்ட இடத்தில் நடப்பவை' அல்ல. தமிழர்/வெகுசன வழிபாடுகளின் மீது கைவைக்க சனாதனிகளுக்கு வெகுகாலம் ஆகாது எனும் ஆபத்தை தமிழர்கள் உணர்ந்தாக வேண்டும்.
அதேசமயம், சட்டை போடாமல், அரைகுறை ஆடையுடன் அர்ச்சகர்கள் கோவிலில் அனைவரின் முன்னால் அலைவதை தடுக்க எவரேனும் வழக்கு தொடுத்தல் நல்லது. எந்த கடவுளும் சட்டை போடக்கூடாதென சொல்லவில்லை.
'சட்டை போட்டால் தீட்டு' என சடங்குகள், ஆகமகங்கள், ஸ்மிருதிகள், ஆரண்யகங்கள், உபநிடதங்கள், புராணங்கள், வேதங்கள் சொல்லவில்லை.
உழைக்காமல் பெருத்த ஊளைச்சதையை காட்டிக்கொண்டு, பெருத்த வயிற்றை வெளியே தள்ளிக்கொண்டு ஆபாசமாய் அலையும், 'அர்ச்சகர்களின்' 'அருவருப்பான', 'இண்டீசண்ட்டான' நடைமுறை நிறுத்தித் தொலைக்கப்பட வேண்டும்.
பூணூல் தெரிய வேண்டுமென்பதற்காகத்தானே சட்டை போடாமல் அலைகிறார்கள். வேண்டுமானால் சட்டைக்கு வெளியே போட்டுக்கொள்ளச் சொல்லலாம், அல்லது எல்.இ.டி பல்புகளைக் கொண்ட நூல்களை தயாரித்து கொடுக்கலாம். பளிச்சென சட்டைக்குள்ளிருந்து காட்டிவிடும். இல்லையெனில் கணம்கோர்ட்டார்கள் போடுவதைப் போல கருப்பு/வெள்ளை கோட்டுகளை போட்டுக்கொண்டு கருவறைக்குள் நிற்கச் சொல்லலாம்.
"..பெண்கள்-குழந்தைகள் முன்பு சட்டை இல்லாமல் நிற்கும் அருவருப்பான, இண்டீசண்டான நடைமுறை நிறுத்தித்தொலைக்க ஒரு தீர்ப்பை கணம்கோர்ட்டார் மனமிறங்கி செய்தால் நல்லது..." தட்ஸ் ஆல் யுவர் ஆனர்.
".. மாடுகளை பொது இடத்தில் பலியிடுவதை கண்காணித்து தடை செய்ய வேண்டும்..." சென்னை நீதிமன்றம்
மாடுகளுக்காக ஒப்பாறி வைக்கும் நீதிமன்றங்கள் மனிதர்கள் பொது இடங்களில் வெட்டிக்கொலை செய்யப்படுவதைக் குறித்து, தன்னிச்சையாக சம்பவங்கள் குறித்து கண்டனம்/அதிருப்தி தெரிவிப்பதில்லை.
'மனுஸ்மிருதி' சொல்வதைப் போல கொல்லப்படுபவன்,
மாடுகளை விட கீழான சூத்திரனாக இருப்பதால் 'கணம் நிதிமன்றங்கள்' மனிதர்களை விட மாடுகளுக்கு அதிகம் கவலை கொள்கிறார்கள் போலும்.
"இசுலாத்தில் பக்ரீத்திற்கு மாடு பலியிடப்படுவது அத்தியாவசிய மதச்சடங்கு அல்ல..." உச்சநீதிமன்றத்தை முன்வைத்து சென்னை உயர்நீதிமன்றம் கருத்து.
திருப்பரங்குன்றத்தில், 'முஸ்லீம் சமாதியருகே தீபம் ஏற்றப்படுவது அத்தியாவசிய மதச் சடங்கா?' என கேள்விகேட்காமல், மலைமேல் ஏறிய நீதிமன்றம், இப்போது மாடு மீது ஏறி உள்ளது.
கோர்ட்டாவது, தயிராவது என எச்சை சொல்வது சரியானதாகி விட்டதோ?
ஆமாம், இவர்களுக்கு எதற்காக நம் வரிப்பணத்தில் இருந்து சம்பளம் கொடுக்க வேண்டும்? ஆர்.எஸ்.எஸ்-பாஜகவிடமே நேரடியாக வாங்கிக் கொள்ளலாமே?
2009ல் துரோகம் செய்தது காங்கிரஸ்-திமுக கூட்டணி மட்டுமல்ல, அன்றய எதிர்கட்சியாக இருந்த பாஜக இந்த கூட்டணியோடு கைகோர்த்துக்கொண்டு இனப்படுகொலையை ஆதரித்தீர்கள். விடுதலை புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் தனது மூத்த மகனுக்கு சார்லஸ் ஆண்டனி என (போராளியின் நினைவில் பெயரை வைத்ததை மறைத்து,)கிருத்துவ பெயரை வைத்ததால் விடுதலை புலிகள் இயக்கம் கிருத்துவ இயக்கம், கிருத்துவ மிஷனரிகள் ஆதரவுடன் நடத்தப்படும் இயக்கம் என பரப்புரை செய்தது ஆர்.எஸ்.எஸ் -பாஜக. மேலும், 2014ல் மோடி பதவி ஏற்றவுடன், விடுதலைபுலிகள் மீது விசாரணை கொண்டு வர வேண்டும் என ஐ.நாவில் தீர்மானத்தை திருத்தியது பாஜக. அதன்பின் 2014-2026 ஆண்டுகள் வரையில் 12 ஆண்டுகள் இலங்கையின் ராஜபக்சே, ரணில், மைத்ரிபால, கோத்தபய முதல் தற்போதைய அனுரா அரசு வரை தமிழர்கள் மீதான இனபப்டுகொலை, போர்க்குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றம் மீது சர்வதேச விசாரணை நடக்காமல் தடுத்து வைத்திருப்பவர் பாஜகவின் மோடி அரசு என்பதை உங்களால் மறுக்க இயலுமா மரியாதைக்குரிய @VanathiBJP அவர்களே.
இன்றுவரை இலங்கையில் தொடரும் தமிழர் மீதான தாக்குதலை பாஜக-மோடி-நயினார்-அண்ணாமலை என எவரேனும் உங்கள் கட்சியிலிருந்து கண்டித்திருக்கிறீர்களா?
இந்தியராக இருக்கும் தமிழ்நாட்டு மீனவரை கொலை செய்யும் போதுகூட 'இந்தியரை, இந்துவை கொலை செய்த' இலங்கையை கண்டிக்காமல் எதிரி நாடான இலங்கையை ஆதரித்த தேசதுரோகிதானே உங்கள் கட்சியினர்.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-பங்களாதேச நாடுகளின் 'இந்து'க்களுக்கு குடியுரிமை கொடுக்கலாம், ஆனால் இந்துக்கள் என நீங்கள் சொல்லும்
ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை கிடையாது என CAA சட்டத்தில் வரையறை செய்தாரே மோடி, அதற்கு பதில் சொல்ல இயலுமா?
இலங்கை அரசின் மீதான கொள்கையில் உங்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்குமான வேறுபாடுகளை சொல்ல இயலுமா?
தமிழர்களை பொறுத்தவரை காங்கிரஸை போல, சிங்கள இனவாதிகளோடு கைகோர்த்து இன்றும் செயல்படும் துரோகியாகத்தானே உங்களை பார்க்கிறார்கள்.
உங்கள் டில்லி தலைமையின் நிலைப்பாடுகளை மாற்ற இயலாத அடிமையாக எத்தனைக் காலம் தமிழர்களுக்கு துரோகம் செய்யப்போகிறீர்கள்?
17 ஆண்டுகளாக சாமானிய தமிழர்களை அரசியல்படுத்துகிறது மே17 இயக்கம். வெகுமக்களை பங்கேற்க வைக்கிறது.
தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலை, குடும்பம் குடும்பமாய் பங்கேற்கும் நிகழ்வுகளாக்கியது மே17 இயக்கத் தோழர்களின் அர்ப்பணிப்பு.
இந்நிகழ்வில் பங்கெடுப்பவர்களுக்கு கட்சி கிடையாது, சாதி-மத அடையாளங்கள் கிடையாது. நினைவேந்தலில் பங்கெடுப்பதற்காகவே நெடுந்தூரம் பயணம் செய்து வருபவர்களை அறிவோம். கைக்குழந்தையாய் முதல் நிகழ்வில் பங்கெடுத்து, கல்லூரி-பள்ளி மாணவராய், இளையோர்களாய் பங்கெடுப்பவர்களையும் அறிவோம்.
படித்தோர், பள்ளி செல்லாதோர், உழைப்போர், பிற மாநிலத்தவர், மருத்துவர், வழக்கறிஞர், பொறியிலாளர், ஆசிரியர், கலைஞர்கள் என எண்ணற்ற பின்புலத்திலிருந்து தவறாது பங்கெடுக்கும் நிகழ்வாக முதிர்ந்திருக்கிறது.
மெழுகுவர்த்தியோடு வந்தவர்கள், விடுதலைக் கனல் சுமந்து வீடு திரும்புவார்கள். கடற்கரை மணலில் அமர்ந்து, அக்கரையில் உள்ள முள்ளிவாய்க்காலின் வரலாறு பேசுவார்கள். பெருந்திரளாய், உணர்வோடும், உறுதியோடும் ஒன்றுகூடி நின்றால் வெல்லமுடியாத கோரிக்கையில்லை.
தமிழினத்தின் மாபெரும் துயரத்தை நினைவேந்துவதற்காக மாண்புமிகு முதலமைச்சர் திருமிகு ஜோசப் விஜய் அவர்களுக்கு எமது மே பதினேழு இயக்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மாபெரும் தமிழினத்தின் பெருநிலப்பரப்பான தாய்த் தமிழகத்தில் இருந்து ஆட்சியாளர்களின் ஆதரவு குரல் எழுவது நம்பிக்கையளிக்கிறது.
நம் ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கு இலங்கை அரசால் நிகழ்ந்த 'இனப்படுகொலை', 'போர்க்குற்றம்', 'மானுடகுலத்திற்கு எதிரான குற்றம்' எனும் சர்வதேசக்குற்றங்கள் குறித்து பல அறிக்கைகள், ஆவணங்கள் வெளியாகியுள்ளது. அவை,
** ஐ.நாவின் மூவர் குழுவான தருஸ்மன் அறிக்கை,
** ஐ.நாவின் தோல்வி குறித்து நடந்த உள்ளக விசாரணையான 'சார்லஸ் பெட்ரி' அறிக்கை,
** 2011ல் அயர்லாந்து நாட்டில் டப்ளின் நகரில் நடந்த மக்கள் தீர்ப்பாயம்,
** 2013ல் ஜெர்மன் நாட்டில் ப்ரேமன் நகரில் நடந்த, முன்னாள் ஐ.நா துணைத்தலைவர் தலைமையில் நடந்த தீர்ப்பாயம்,
**சர்வதேச நீதிமான்கள் அமைப்பு,
** ஐ.நாவின் சிறப்பு செயலர்கள் (special rapporteur-independent human right experts),
** யாஸ்மீன் சூக்கா ஆகியோர் தலைமையிலான @itjpsl உள்ளிட்டவர்களின் விசாரணைகள், தீர்ப்புகள், அறிக்கைகள் இந்த குற்றங்களை ஆவணப்படுத்தி விளக்கியுள்ளன. இவற்றின் அடிப்படையில் 2011-2014காலத்தில் அன்றய மரியாதைக்குரிய மறைந்த ஜெயலலிதா அம்மையார் தலைமையிலான அதிமுக அரசு வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானங்களை நிறைவேற்றியது. இதன் பின்னர் அவை எவ்வித முன்னேற்றமும் காணவில்லை.
2010ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் எங்களது மே17 இயக்கம் சட்டமன்ற தீர்மானத்தை தமிழ்நாடு நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை வைத்தது. இதைத் தொடர்ந்து 2014ம் ஆண்டு முதலாக தமிழ்நாட்டில் 'நினைவேந்தல்', ' நினைவுச்சின்னம்' ஆகியவற்றை பலியான அப்பாவி ஈழத்தமிழ் மக்களுக்காக உருவாக்க வேண்டுமெனும் கோரிக்கையை இன்றளவும் முன்வைத்து வருகிறோம்.
இவையனைத்தையும் உள்ளடக்கி, தங்களது அரசு பின்வரும் கோரிக்கைகளை சட்டமன்றத் தீர்மானமாகவும், அரசின் பணிகளாகவும் நிறைவேற்றக் கோரிக்கை வைக்கிறோம்.
1. 'ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்தியது இனப்படுகொலையே' எனவும்
2. ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் 1948-2009வரையிலாக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையை, வன்முறைகளைக் குறித்து சர்வதேச சுதந்திர விசாரணை (International Independent investigation) மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும்,
3. தொடர்ந்து நடக்கும் வன்முறையிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில், தமிழர்களுக்கு ஐ.நா அவையின் சாசனத்தின் இரண்டாம் உட்பிரிவில் சொல்லப்பட்டுள்ள Right-To-Selfdetermination எனும் சுயநிர்ணய உரிமையை உறுதி செய்யும் வகையில், சர்வதேச கண்காணிப்புடன் கூடிய 'பொதுவாக்கெடுப்பு' என்பதை புலம்பெயர் உள்ளிட்ட அனைத்து ஈழத்தமிழர்களிடத்தில் நடத்தப்பட வேண்டும் எனவும்,
4. ஈழத்தமிழர்கள் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டு மீனவர்கள் மீதும் இனவெறியோடு தாக்குதல் நடத்தி படுகொலை செய்யும் இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை கொண்டுவரும் வகையிலும்
தீர்மானங்களை சட்டமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றித்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மேலும்,
எங்களது மே17 இயக்கத்தின் கோரிக்கை மட்டுமல்லாமல், அனைத்து சனநாயக ஆற்றல்களின் வேண்டுகோளாக
1.தமிழீழ இனப்படுகொலைக்கான 'நினைவேந்தல் நிகழ்வை' தமிழ்நாடு அரசே ஏற்று,
தமிழர் கடற்கரையில் நடத்திடவும்,
2. இந்தப் பேரவலத்தை நினைவுகூறும் வகையில், யூத-ஆர்மீனிய-ருவாண்டா-செர்பிரெனிக-பொஸ்னிய இனப்படுகொலைகளை நினைவுகூறும் நினைவுச் சின்னங்களுக்கு ஒப்ப, தமிழ்நாட்டில் மாபெரும் நினைவுச்சின்னம் எழுப்பப்பட வேண்டும்
என வேண்டுகோள் வைக்கிறோம்.
வரலாற்று சிறப்பு மிக்க இக்கோரிக்கைகளை குறித்து கடந்த 16-மே-2026ல் மே17 இயக்கம் ஊடக சந்திப்பின் வாயிலாக கோரிக்கை வைத்தது.
தமிழினத்தின் வரலாற்று விருப்பமாக உள்ள இக்கோரிக்கைகளை தாங்கள் நிறைவேற்றித்தர வேண்டுகோள் வைக்கிறோம். நன்றி.
இங்ஙனம்
*திருமுருகன் காந்தி*
ஒருங்கிணைப்பாளர்
மே பதினேழு இயக்கம்.
இனப்படுகொலைக்கு உள்ளான தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழ் மக்களின் இன்னலுக்கு தீர்வு காணும் வகையில், தமிழ்நாட்டு அரசிற்கு பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திருமிகு ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு தீர்மானம் நிறைவேற்றிட கோரிக்கை வைக்கிறது மே பதினேழு இயக்கம்!
தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலை அரசே ஏற்று நடத்திடுக! தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவுச் சின்னம் எழுப்பிடுக! - மே பதினேழு இயக்கம்
ஈழத் தமிழர்கள் தங்கள் சுயநிர்ணய உரிமைக்காக போராடியதால் கடந்த 2009ம் ஆண்டு ஈழ மண்ணில் கொத்துக்கொத்தாக சிங்கள-பௌத்த பேரினவாத இலங்கை அரசால் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு தற்போது வரை நீதி கிடைக்கவில்லை. தமிழக வெற்றிக் கழகம் தற்போது தமிழ்நாட்டில் ஆட்சியமைத்துள்ள நிலையில், ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைத்திடும் வகையில் கடந்த 2013 ம் ஆண்டு அன்றைய அதிமுக அரசு நிறைவேற்றிய சட்டமன்றத் தீர்மானத்தை வழிமொழிந்து புதியதொரு சட்டமன்றத் தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டுமெனவும், தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்திடவும், இனப்படுகொலை நினைவாக கடற்கரையோரம் நினைவுச் சின்னம் ஒன்றை உருவாக்கிட வேண்டுமெனவும் மாண்புமிகு முதலமைச்சர் திருமிகு ஜோசப் விஜய் அவர்களிடம் மே பதினேழு இயக்கம் கோரிக்கை விடுக்கிறது.
சுதந்திர இலங்கையில் கால் நூற்றாண்டுக்கு மேலாக அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு மொழி, இனரீதியாக ஒடுக்குமுறைக்கு உள்ளான தமிழீழத் தமிழர்களின் அமைதிவழிப் போராட்டம் புறக்கணிக்கப்பட்டதால் தனித் தமிழீழமே ஒரேத் தீர்வு என்ற அடிப்படையில் போராடினர். தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையில் தமிழீழப் பகுதிகளை கட்டுப்படுத்தி ஒரு நடைமுறை அரசாங்கம் (De facto State) சிறப்பாக நிர்வாகம் செய்தது. பின்னர் இந்தியா-அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் உதவியுடன் கடந்த 2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு தமிழீழத் தமிழர்களை இனப்படுகொலை செய்தது சிங்கள-பௌத்த பேரினவாத இலங்கை அரசு. இந்த இனப்படுகொலையில் 169,796 பேர் கொல்லப்பட்டனர்.
இனப்படுகொலையின் போது, இலங்கை அரசு உலகில் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை பயன்படுத்தியும், வரையறுக்கப்பட்ட போர் விதிகளை மீறி மருத்துவமனைகளை மீது குண்டுகள் போட்டும், சரணடைந்தவர்களை சுட்டுக் கொன்றும் இனப்படுகொலை செய்தது. இலங்கை அரசு போர்க்குற்றம் செய்ததாக 2010ம் ஆண்டு டப்ளின் நகரில் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. தொடர்ந்து 2013ம் ஆண்டு பிரமேன் நகரில் நடைபெற்ற இரண்டாவது மக்கள் தீர்ப்பாயம், இலங்கை அரசு இனப்படுகொலை செய்ததை உறுதி செய்து அறிவித்தது. இந்த மக்கள் தீர்ப்பாயங்கள் ஐநா மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் உயரதிகாரிகளை நீதிபதிகளாகக் கொண்டது. மேலும், இனப்படுகொலையை விசாரிக்க ஐநா அமைத்த மூவர் குழு அறிக்கையும், ஐநா உள்ளக விசாரணையின் சார்லஸ் பெட்ரி அறிக்கையும் ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையின் பேரவலத்தை எடுத்துக்காட்டியது.
மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக முற்போக்கு அமைப்புகளின் தொடர் போராட்டங்கள் மற்றும் 2013ம் ஆண்டு மாணவர்கள் எழுச்சியின் காரணமாக அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அஇஅதிமுக அரசு, 'தனித் தமிழீழமே ஒரே தீர்வு, தமிழீழ இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடத்திட வேண்டும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்' என்ற வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்மானங்களை தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றியது. தொடர்ச்சியாக ஜெர்மனியின் பிரேமன் நகரில் நடைபெற்ற மக்கள் தீர்ப்பாயத்தில் பங்கேற்ற மே பதினேழு இயக்கம், அமெரிக்க-இங்கிலாந்து இலங்கையுடன் இணைந்து இனப்படுகொலையில் ஈடுபட்டதை உறுதி செய்ததோடு, இந்தியாவின் பங்களிப்பையும் அம்பலப்படுத்தியது.
2013 ம் ஆண்டு அம்மையார் ஜெயலலிதா தலைமையிலான அரசு மேற்கண்ட கோரிக்கைகளை தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானங்களாக நிறைவேற்றி 13 ஆண்டுகள் ஆன நிலையில், தமிழ்நாடு அரசு அதனை மக்கள் மன்றத்தில் நினவூட்ட வேண்டிய அவசியம் உள்ளது.
ஆகவே,
• 'ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட 'இனப்படுகொலை' மீது சர்வதேச விசாரணை நடத்திட வேண்டும், தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை பாதுகாத்திடும் வகையில் 'ஈழத்தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு' நடத்திட வேண்டும், இனப்படுகொலை நிகழ்த்திய 'இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை' விதித்திட வேண்டும்' என 2013 ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தைப் போல, முழுமையான, சர்வதேச வழிமுறைகளை முன்மொழியும் வகையிலானத் தீர்மானங்களை தவெக அரசு, தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானங்களாக நிறைவேற்றிட வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.
தமிழக வெற்றி கழகத்தின் 2026 தேர்தல் அறிக்கையில்,
.. (தொடர்ச்சி அடுத்த இழையில்)
இன்று த.வெ.க அரசால் நியமிக்கப்பட்டுள்ள முதல்வர் விஜயின் சிறப்புப்பணி அதிகாரி (Officer on Special Duty (OSD) எனும் பதவி தற்காலிக அலுவலக பணிகளையும், அரசு மேல்மட்ட நிர்வாகிகளான செகரட்டரி, அண்டர் செகரட்டரி போன்றோருக்கு இடையே செயல்படும் தொடர்பாளராக, நிர்வாகியாக செயல்படும் பதவியாக முதல்வருக்கு உதவியாளராக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பணிகள் என்பன சிறப்பு முடிவுகள், கவனத்திற்குரிய முடிவுகள், அவசர முடிவுகள் என பலவற்றை பொறுப்பேற்கும் பணியாகவும் அமைகிறது. முதல்வருக்கும் அதிகாரிகளுக்கும் இடையே செயல்படவும், முதல்வரின் தனிப்பட்ட பணிகளுக்கானவராகவும் இயங்குபவர் சோதிடராக இருப்பவர் என்பது அதிர்ச்சியளிப்பது.
காலத்தால் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள், குறிப்பிட்ட சூழலுக்கு எடுக்கப்பட வேண்டிய முடிவுகள், ஆலோசனை வழங்கும் நிலையிலுள்ள பதவி இவ்வாறான சோதிடர் கையில் சென்றிருப்பதற்கான காரணம் சோதிடம் மீதுள்ள நம்பிக்கையா அல்லது சோதிடர் மீதுள்ள நம்பிக்கையா... எப்படியாகினும், சோதிடர் எனவர் அறிவியல் பூர்வமானவர் அல்ல, மேலும், சோதிடர் பிற துறைகளைச் சார்ந்த அறிவுத்திறனை வளர்த்துக் கொண்டவருமல்ல.
சோதிடரையும், சோதிடத்தையும் நம்பிக் கெட்டவர்களின் பட்டியல் மிகநீளமானது. அதில் குறிப்பிடத்தக்கவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார். மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்துவிடுகிறேன்னென்று சொல்லி பெங்களூர் வழக்கிற்கு சென்றவர் பரப்பன அக்கிரகார சிறையில் அடைபட்டார். அவரது உடல்நிலை மோசமடையுமென எந்த சோதிடத்திலும் சொன்னதால தெரியவில்லை. அப்பல்லோ மருத்துவமனைக்கு அவசரத்திற்கு சென்றாரா, அல்லது சோதிடர் குறித்து சென்றாரா என அவருக்கு மட்டுமே தெரிந்த விடயம்.
சோதிடர்களால் காலத்தை கணிக்க முடியுமெனில், காலம்-நேரம்-நடப்பு என்பது முன்னரே நிர்ணயம் செய்யப்பட்டதென அர்த்தமாகிறது. ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது என்றால் அது மாற்றப்பட முடியாதது என அர்த்தம். அப்படியாக இருந்தால் மட்டுமே எதிர்காலத்தை-நடப்பை கணித்து சொல்ல முடியும். 'மாற்ற முடியாததை' கணித்து என்ன ஆகப்போகிறது? அல்லது சோதிடரால் மாற்றத்திற்குரிய முடிவுகளை எடுக்க ஆலோசனை கொடுக்க முடியுமெனில் மொத்த சிஸ்டமும் தற்காலிகமானதென அர்த்தமாகிறது. இப்படி குழப்பத்திற்குரிய நபர்களால் எப்படி நிர்வாக முடிவுகளில் சரியான வகையில் தலையிட முடியும்?
2026 தேர்தலில் அனைத்து கட்சியை சார்ந்த சில-பல முக்கிய வேட்பாளர்களும் சோதிடர்களிடத்தில் காலத்தை கணித்துதான் வேட்புமனு தாக்கல் செய்வதில் ஆரம்பித்து வீட்டு படிதாண்டுவது வரை செய்திருப்பார்கள். அவர்களின் தேர்தல் முடிவுகளை கணித்த சோதிடர் எவராவது திரு.விஜய் முதல்வராவார் என சொல்லி இருந்தால் அதிமுக-திமுக-பாஜக வேட்பாளர்களில் சோதிட நம்பிக்கையுள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட்டிருப்பார்களா? காரைக்குடியில்.கட்டுத்தொகை இழந்த, சங்கரமடத்திற்கு சென்ற 'கடப்பாரை' சோதிடரை பார்க்காமலா இருந்திருப்பார். தன் மீது நம்பிக்கையில்லாதவரே சோதிடரை நம்புவார்கள்.
ஆகவே சோதிடம் என்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் சூதாட்டம். அந்த சூதாட்டத்தை வைத்து தொழில் செய்யும் சோதிடரை மிகமுக்கிய பொறுப்பில் அமர்த்துவது த.வெ.க கட்சிக்கு அவமானத்தை தேடித்தரும், தமிழ்நாட்டு மக்களுக்கு கேட்டை கொண்டுவரும், முதல்வர் விஜய் மீது அவநம்பிக்கையை கொண்டுவரும். பாஜக-சங்கிகளின் சோதிடம் எனும் பித்தலாட்ட சூதாட்டத்தை தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாக திணிப்பது தவறான முடிவு.
முக்கியமான அரசு பொறுப்பினை ஒரு சோதிடர் கையில் கொடுப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
இன்றய தமி*ழீ*ழ இனப்படுகொ*லைக்கு மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்த பரப்புரை தோழர்களுடன் தி.நகரில் நடந்தது....
வருகின்ற 17ம் தேதி ஞாயிறு...
குடும்பத்துடனும், நண்பர்களுடனும் நினைவேந்த வாருங்கள்...
17-மே-2026
மாலை 5 மணி
பெசண்ட்நகர் கடற்கரை
சென்னை
@may17iyakkam