Top 10 Highest-Grossing Tamil Films Worldwide 🌏
1. 2.0
2. Jailer
3. Leo
4. Coolie
5. Ponniyin Selvan: I
6. The Greatest of All Time
7. Vikram
8. #Karuppu – ₹340+ crore* (still running)
9. Amaran
10. Ponniyin Selvan: II
தலைவர் ரஜினி அவர்கள் மீது சமீபத்தில் திட்டமிட்டு பரப்பப்படுதுவது அறிவேன்.. தொடர்ந்து பரப்பப்படும் அவதூறுகளுக்கு பதில் கொடுக்காமல் இருக்க விரும்பவில்லை எனவே ஒரே ஒரு விசயத்தை சொல்வது எளிதில் பலருக்கும் புரிய வைக்கும் என நம்புகிறேன்.
சமீபத்தில் தேர்தல் முடிவுக்கு பின் சில வாரங்களில் ரஜினி அவர்களை நான் சந்தித்து பேசின நேரத்தில் அவர் ஒரு விசயத்தை கூறினார். (அவர் செய்தியாளர்களை சந்திப்பதற்கு முன் நடந்த சந்திப்பு. )
எந்த அனுபவமும் இல்லாத , நேற்று வரை நிர்வாகம் ஆட்சி பற்றி எதுவும் தெரியாத நபர்கள் எல்லாம் இன்று அமைச்சர்களாக இருப்பது தமிழக அரசு நிர்வாகம் செயலற்று மோசமடையவது உறுதி என நான் அவரிடம் கூறிய போது..
மாரிதாஸ் இதே தான் MGR ஆட்சிக்கு வந்த போதும் கூறினார்கள்.. இது ஒரு நடிகர் தன் விஷ்வாசிகளை வைத்து அமைக்கும் எந்த ஆட்சிக்கும், எந்த அரசியல் கட்சிக்கும் வருகிற குற்றாச்சாட்டு தான் இது. MGR அதை ஒருவிதமாக கட்டமைத்து நிர்வாக திறனை காட்டினார். என்பவே விஜய் ஆட்சி அதிகாரத்தை எந்த அளவுக்கு தீவிரமாக எடுத்து செய்கிறார் தன் சக அமைச்சர்களை கண்காணிக்கிறார் வேலையை தீவிரமாக செய்வதற்கு முற்படுகிறார் என்பது தான் கேள்வி... குற்றச்சாட்டுகள் எல்லாம் வர தான் செய்யும். ஆனால் அது புதியது அல்ல.
இப்படி கூறிவிட்டு அந்த உரையாடல் நீண்டது. ஒரு இடத்திலும் விஜய் வீழ்ச்சி அடைவார் அல்லது நிர்வாக திறன் இருக்காது அல்லது இந்த ஆட்சி மீது அவமரியாதையாக எதையும் அவர் தெரிவிக்கவில்லை.. அவர் நான் பழகிய இத்தணை ஆண்டுகாலத்தில் எப்படி இருக்கிறாரோ அப்படியே தான் அதாவது யாரிடத்திலும் ஒட்டவே மாட்டார் அப்படியே தான் தனிச்சு இருக்கிறார் இன்றும்.
தனிப்பட்ட உரையாடல்களை நான் பொதுவாக வெளியில் சொல்லும் நபர் கிடையாது - ஆனால் இது கூறினால் தான் அவர் என்னவாக இருக்கிறார் என்பது புரியும் பலருக்கும். நேரில் சந்தித்தவன் என்ற வகையில் எங்களுக்கு மட்டுமே அது உணர கூடியது. சும்மா யார் ஆட்சி இருக்கனும் இருக்ககூடாது என அதில் சென்று கருத்து கூறும் நபர் அல்ல அவர். அதில் ஆர்வமும் இல்லாதவர்.
அவர் அரசியல் இல்லை என்று முழுமையாக தள்ளி நிற்கிறார் - ஆனாலும் அரசியல் அவரை விட்டபாடாக இல்லை.
இறுதியாக அவர் பேசிக்கொண்டிருக்கும் போது ரஜினி அவர்கள் இப்படி கூறினார்
"ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவனது செயல்களுக்கு ஏற்ப தலைவிதி இருப்பது போலவே, ஒரு நாட்டில் வாழும் மக்களின் ஒட்டுமொத்த கூட்டுச் செயல்களும் எண்ணங்களும் அந்த நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கின்றன.. காத்திருந்தால் தான் நல்லதா கெட்டதா என்பது புரியும்! " என்று அவரிடம் தயானந்த சரஸ்வதி சுவாமிகள் கூறியதாக கூறினார்.
அதாவது இப்படி நடக்கனும் இருந்தால் அது நடந்தே தீரும். ஆனால் குழப்பம் ஏற்படுவது, மொத்த சூழலும் மாறிவிட்டதோ என்ற ஒரு இருக்கமான இருட்டு உருவாவது, இனி அவ்வளவு தான் என நினைக்கும் அளவுக்கு தள்ளும் சில சூழலில் ஏற்படும் போது தான் நமக்கு எது நல்லது கெட்டது என்ற தெளிவே கொடுக்கும் - அது ஒரு பெரிய படிப்பினையையும், நல்ல தீர்வை தந்துவிட்டு செல்லும்".
விரைவில் மொத்த குழப்பத்தில் ஒரு தெளிவு கிடைக்கும்.
-மாரிதாஸ்