மாரிதாஸ் அவர்கள் அமைச்சர் கீர்த்தனா அவர்களைப் பற்றி ஒரு பொய்யான AI புகைப்படத்தை வைத்து வெளியிட்ட அவதூறு பதிவுகள் தவறு. அதற்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஆனால், இதைவிட இழிவாக ஒரு பெண்ணைப் பற்றி பேசிய முக்தார் என்ற நபர் இன்றளவும் காவல்துறையால் கைது செய்யப்படவில்லை! ஏன்?
எதனால் இந்த பாரபட்சம்?
மாரிதாஸ் அவர்கள் தொடர்ச்சியாக தவெக அரசாங்கத்தை விமர்சித்து வந்ததால் தான் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை யாரும் மறுக்க இயலாது.
பொதுத் தளங்களில் செயல்படுபவர்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டும். யானையாகவே இருந்தாலும், ஒரு அடி சருக்கினால் அதன் பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவோம்.
விரைவில் மாரிதாஸ் அவர்கள் பிணையில் வெளிவந்து, தொடர்ந்து ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை மேற்கொள்ள வேண்டும்.
நம் இயக்கத் தோழர்களுக்கு நான் கேட்டுக்கொள்வது ஒன்றுதான். பொதுத் தளங்களில் மிகவும் நாகரிகமான விமர்சனங்களை மட்டுமே முன்வைக்க வேண்டும்.
அறமற்ற விமர்சனங்கள் பின்னடைவை மட்டுமே ஏற்படுத்தும்!