பேசத் தெரியாத பேசி இப்ப கர்நாடகா ஸ்டேட்காரங்க கிட்ட அடி வாங்கிட்டு இருக்கான்..🤭😂
முதலமைச்சர் விஜய் நல்ல மனசுக்கு தான் ஆண்டவனா பார்த்து தண்ணீரை திறக்க வச்சான்... கர்நாடகாக்காரன் சொல்றான்...
மதிப்பு மரியாதையும் நாம வர வச்சிக்க கூடாது..
அதுவே தானா வரணும்...
சரியடா பிரபாகரா
முன்னாள் MLA ஸ்டாலின்: முதல்வர் விஜய் தனித்து விடப்பட்டுள்ளார் ‼️
அமைச்சர் ரமேஷ்: சொல்பவர் தான் தனியாக வீட்டில் அமர்ந்து, சட்டசபையை TV ல் பார்த்து கொண்டிருக்கிறார் 😂😂😂
#TVK#Vijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, நீட் தேர்வை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுகின்றன. இதர விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
As per the directions of the Hon’ble Chief Minister of Tamil Nadu, all cases registered against students who protested against the NEET examination will be withdrawn. Further details will be announced shortly. Heartfelt gratitude to the Hon’ble Chief Minister of Tamil Nadu.
- Rajmohan
கொத்துஸ் ஐடி விங் கவனத்திற்கு.
பிசினஸ் ஸ்டாண்டர்ட் நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை குறித்து சில உண்மைகளை மக்களின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
முதலில், அந்தக் கட்டுரை முழுவதும் ப்ராஜெக்ட்ஸ் டுடே (Projects Today) என்ற தனியார் இணையதளத்தின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. ஆனால் அந்த இணையதளத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் முழுமையாகவும், தற்போதைய நிலவரத்திற்கேற்பவும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் முதலீடுகள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை பராமரிக்கும் மாநில அரசின் முதலீட்டு மேம்பாட்டு முகமையான வழிகாட்டி நிறுவனம் வெளியிடும் தரவுகளே நம்பகமானவை.
தவெக அரசு பொறுப்பேற்ற முதல் காலாண்டிலேயே தனது முதல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) L&T குழுமத்துடன் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ₹18,600 கோடி முதலீடும், 8,200 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக உள்ளது. இதே நேரத்தில், முந்தைய திமுக அரசு தனது முதல் காலாண்டில் (Q1 FY21) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கூட கையெழுத்திடவில்லை என்பது அதிகாரப்பூர்வ பதிவுகளில் உள்ளது. எனவே, தவெக அரசின் செயல்பாடு குறித்த தவறான தகவல்களை பரப்பும் முயற்சிகள் உண்மைக்கு புறம்பானவை என்பது இதன்மூலம் தெளிவாகிறது.
அதுமட்டுமல்ல, திமுக அரசு தனது முதல் ஆறு மாதங்களில் (H1 FY21) மொத்தம் ₹21,021.54 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மட்டுமே கையெழுத்திட்டது. ஆனால் TVK அரசு வெறும் 50 நாட்களிலேயே அந்த அளவை எட்டும் வகையில் செயல்பட்டுள்ளது. மேலும், 2026 ஜூலை மாதத்தில் Hitachi Energy, Vikram Solar, Chubb, Nordex, MotiveLink, University of Western Australia உள்ளிட்ட உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்களையும் சேர்த்துக் கணக்கிட்டால், இதுவரை தவெக அரசு ₹35,062 கோடி மதிப்பிலான முதலீட்டு உறுதிமொழிகளைப் பெற்றுள்ளது. இது முந்தைய அரசின் செயல்திறனை ஏற்கனவே கடந்துவிட்டது என்பதையே அதிகாரப்பூர்வ தகவல்கள் காட்டுகின்றன.
மேலும், 2026 செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும் முதல் அரையாண்டிற்குள் இந்த முதலீட்டு எண்ணிக்கை இன்னும் கணிசமாக உயரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதன்பிறகு, தவெக அரசின் முதலீட்டு ஈர்ப்பு சாதனை மேலும் வலுவாக வெளிப்படும்.
எனவே, ப்ராஜெக்ட்ஸ் டுடே இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ₹7,143.23 கோடி என்ற முதலீட்டு விவரம் முழுமையற்றதும், தற்போதைய அதிகாரப்பூர்வ தகவல்களுடன் பொருந்தாததுமாகும். முதலீடு தொடர்பான விவரங்களை மதிப்பிடும்போது மாநில அரசின் அதிகாரப்பூர்வ அமைப்பான வழிகாட்டி நிறுவனம் வெளியிடும் தரவுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.