பேப்பர் படித்த போது தெரிந்து கொள்ளவும் cm sir 17வது இடத்துக்கு தள்ளபட்டது தமிழ்நாடு
முதலீடு எல்லாம் ஆந்திரா போயிடுச்சு cm sir பேப்பர் பார்த்து படித்து தெரிந்து கொள்ளவும்
என்ன அண்ணே @Udhaystalin சரிதானா
காஞ்சிபுரம் மாவட்டம், குமிழியில் அமைந்துள்ள பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளியில் இந்தாண்டு +2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களில் இருவர், மூத்த சகோதரி ஃபாத்திமா மற்றும் அவரது இளைய சகோதரர் சந்தோஷ் ஆவர்.
இவர்கள் இருவரும் தங்கள் பெற்றோர் கோபி - அஞ்சா ஆகியோருடன் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள சின்னையன் சத்திரம் கிராமத்தில் வசித்து வந்தனர். பின்னர் குமிழியில் உள்ள நமது உண்டி உறைவிட பள்ளியில் தங்கி கல்வி பயின்று வந்தனர்.
நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த இவர்களது பெற்றோர் ஊர் ஊராக சென்று ஊசி, பாசி மணிகள் விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சமூகத்தில் பெரும்பாலும் பெண் குழந்தைகளுக்கு பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு திருமணம் செய்து வழக்கம் இருந்து வருவதால், துறையின் முன் முயற்சியால், சிறு வயது முதல் தனது தம்பியுடன் இணைந்து அக்காவும் ஒரே வகுப்பில் படித்து வந்துள்ளார்.
நமது உண்டி உறைவிட பள்ளியில் பயின்று +2 தேர்வில் வென்ற இருவரும், அடுத்து அங்கேயே நடைபெற்ற உயர்கல்விக்கான பயிற்சி முகாமில் பங்குபெற்று, ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் அமைந்துள்ள ஒன்றிய அரசு நிறுவனமான Central Institute of Petrochemicals Engineering & Technology (CIPET)-ல் மூத்த சகோதரி ஃபாத்திமா https://t.co/xcigZN7GGZ - Manufacturing Engineering & Technology (MET) படிப்புக்கும், அவரது இளைய சகோதரர் சந்தோஷ் https://t.co/xcigZN7GGZ - Plastics Engineering (PE) படிப்புக்கும் தேர்வாகியுள்ளனர்.
இதுவரை பெண் குழந்தைகளை பள்ளிப் படிப்புக்கு அனுப்புவதற்கே பெரிதும் தயக்கம் காட்டி வந்த சமூகத்தில், பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, உயர்கல்வி கற்பதற்கு வேறொரு மாநிலத்துக்கு அனுப்புவதற்கு இவர்களது பெற்றோர் தயாராக இல்லை என்ற தகவல் நமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
நேற்று (04.07.26) சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்திற்கு இரு குழுந்தைகளும் அவர்களது பெற்றோருடன் அழைத்து வரப்பட்டனர். உடன் குமிழி ஏகலைவா மாதிரிப் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி. அ.சுமதி அவர்களும் வந்திருந்தார்.
இரு குழந்தைகளும் ஒடிசா சென்று கல்வி கற்பதற்கும், அவர்களது பாதுகாப்பிற்கும் நமது துறை முழுமையாக பொறுப்பேற்றுக் கொள்ளும் என்றும், எந்தவித அச்சமும் இல்லாமல் குழந்தைகளை அனுப்புமாறும் அவர்களது பெற்றோரிடம் உறுதி அளித்தோம். அவர்களும் குழந்தைகளை உயர்கல்விக்கு அனுப்ப சம்மதம் தெரிவித்தனர். உடன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் டாக்டர் என். சுப்பையன், ஆதிதிராவிடர் நல இயக்குநர் டாக்டர் கி. செந்தில் ராஜ், பழங்குடியினர் நல இயக்குநர் திரு. எஸ். அண்ணாதுரை, பழங்குடியினர் நலத்துறை கூடுதல் செயலாளர் திருமதி உமா மகேஸ்வரி மற்றும் வாசுகி பவுண்டேஷன் அமைப்பின் திருமதி. வாசுகி அவர்களும் இருந்தனர்.
நமது துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் இச்சமூகத்தை சேர்ந்த மேலும் பல மாணவர்கள் படித்துவரும் சூழலில், இந்த இரு குழந்தைகளின் வெற்றி, குறிப்பாக மாணவி ஃபாத்திமா அவர்கள் உயர்கல்விக்கு செல்வதன் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் தங்கள் எதிர்காலம் குறித்த தெளிவையும், தங்கள் வாழ்க்கையில் கல்வி ஏற்படுத்த உள்ள மாற்றம் குறித்த நம்பிக்கையையும் தரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
- வன்னி அரசு
அமைச்சர் - சமூகநீதித்துறை
தமிழ்நாடு
வீரவணக்கம்!
ஜூலை-05,
பகுஜன் சமாஜ் கட்சியின்
முன்னாள் மாநிலத் தலைவர்,
சமத்துவத் தலைவர் சகோதரர் K.ஆம்ஸ்ட்ராங் அவர்களின்
இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் வீரவணக்கம்...
அரசியல் படுக்கொலைக்கு நீதி வேண்டும்! படுகொலைக்கு காரணமான கயவர்களை கண்டுபிடிக்க முதல்வர் விஜய் தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்...
#JusticeForArmstrong
"சங்கத்தமிழன்" Er. M. SARAVANA
காட்டுமன்னார் கோவில்ல நான் ஏன் போட்டியிடலன்னு என்ன கேக்குறீங்களே, அதுக்கான காரணத்த யாராவது தி.மு.க கிட்ட கேட்டீங்களா.?
சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்து பின்வாங்கியது ஏன் என திருமாவளவன் சூசக பேச்சு.!
#Madurai | #Thirumavalavan | #VCK | #CMVijay | #MKStalin | #DMK | #TVK | #PolimerNews
"ரொம்ப நாள் வேல பாக்குறேன்னு சொல்லி திடீர்னு பஸ்ஸ நிறுத்தி பேக்கை புடிங்கி இனிமே வேலைக்கு வர கூடாதுனு இறக்கி விட்டுட்டாங்க.. சாப்பாட்டுக்கே வழி இல்லாம பிள்ளைகளுக்கு கஞ்சி தண்ணிய கொடுத்தேன், அத பாக்கும் போது என்னால தாங்கவே முடியல”…
நெல்லை மாவட்ட அரசு போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக நடத்துனராக பணிபுரிந்தவருக்கு திடீரென பணி வழங்கப்படாததால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக கதறி அழுதபடி பேட்டி
#Tirunelveli | #Conductor | #TransportCorporation | #Issue | #PolimerNews
MLA பல்லவி மீதுதான் தவறு என்று அன்றே நாம் சொன்னோம்.. ஆனால் பலரும் தவறு செய்த MLA பல்லவியை விட்டுவிட்டு தவறே செய்யாத மேயர் பிரியா அவர்களுக்கு வகுப்பெடுத்துக்கொண்டு இருந்தார்கள்.. இன்று சபாநாயகரே கொட்டு வச்சிருக்காப்ல..
"2006 சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக கூட்டணியில் திருமாவளவனுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் பேசினார்" - விசிகவின் தேர்தல் வரலாற்றை விரிவாக எடுத்துச் சொன்ன திருமாவளவன்
#Thirumavalavan | #VCK | #PMK | #Ramadoss
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உடனான நேற்றைய (16.06.26) சந்திப்பின் போது, திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 65 ஈழத்தமிழர்களின் விடுதலை கோரிக்கையினை முன்வைத்தேன்.
ஈழத்தமிழர்கள் சிறுவழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்டாலோ, பிணையில் விடுவிக்கப்படாமல் சிறையிலிருந்து வழக்கை நடத்தி நிரபராதி என நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டாலோ அல்லது ஒரு குற்ற வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு தண்டனைக்காலம் முடிந்து சிறையிலிருந்து வெளிவரும் பொழுதோ மீண்டும் கைது செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- தங்களை அகதிகளாகப் பதிவு செய்து கொண்ட ஈழத்தமிழர்கள் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
- அகதிப்பதிவு ரத்தானவர்களுக்கும், அகதிப்பதிவு இல்லாதவர்களுக்கும், புதிய பதிவுகள் வழங்கப்பட்டு சிறப்பு முகாமிலிருந்து விடுவிக்க வேண்டும்
- திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளி பாஸ்கரன் த/பெ. குமாரசாமி என்பவருக்கு எதிரான நாடுகடத்தல் உத்தரவு திரும்பப்பெறப்பட்டு, அவர் விரும்பும் நாட்டிற்கு செல்வதற்கு ஆவன செய்ய வேண்டும்
- அண்மைக்காலங்களில் ஈழத்தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட கடவுச்சீட்டு வழக்குகள் விரைந்து முடிக்கப்பட்டு அவர்களுக்கு அகதிப்பதிவுகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை சமர்ப்பித்தேன்.
குறிப்பாக, ஒன்றிய அரசின் 01.09.2025 தேதியிட்ட Immigration and Foreigners (Exemption) Order, 2025 - (2)படி, ஜனவரி 9, 2015 முன்னர் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஈழத்தமிழர்களுக்கு, Immigration and Foreigners Act. 2025 பொருந்தாது என்றும், அவர்களுக்கு அதிலிருந்து விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், சிறப்பு முகாமில் உள்ள 15 நபர்கள் உடனடியாக விடுதலை செய்வதற்கு தகுதி பெற்றுள்ளார்கள் என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். எமது கோரிக்கையினை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உறுதி அளித்தார்.
@CMOTamilnadu
விஜயை தவிர மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லோரும் ஊடக நிருபர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்கிறார்கள்,
விஜய் ஏன் பேசவில்லை அவரிடமே போய் கேளுங்கள் என்று நான்காம் தூணை அசிங்கப்படுத்திய அண்ணாமலை சார்.... @TVKVijayHQ