விளையாட்டுத்துறை திறமையாளர்களுக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பது நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் எண்ணம்.
எனவே, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையைத் தொடங்கி பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறோம்.
அந்த வகையில், தென் கொரியாவில் நடைபெறவுள்ள 17th World Soft Tennis Championship போட��டியில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த Soft Tennis வீராங்கனைகள் தங்கைகள் ராகஸ்ரீ, திருமங்கை, யாழினி ஆகியோரின் பயணம், விசா செலவு, தங்குமிடம், உணவு, பயிற்சி மற்றும் போட்டியில் பங்கேற்பதற்கான கட்டணம் போன்ற செலவினங்களுக்காக தலா ரூ.2.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.7.50 லட்சத்துக்கான காசோலைகளை இன்று வழங்கினோம்.
தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் நம் வீராங்கனைகள் த���ன் கொரியாவில் வெற்றிக்கொடி நாட்டட்டும்.
@SportsTN_ @Atulyamisraias #JMeghanathaReddyIAS
கடல் கடந்து சென்றால��ம் கவனமெல்லாம் தமிழ்நாட்டில்தான்!
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் பயண மடல்.
பறவையைப் போல சிறகுகள் முளைக்கவில்லையே என்று மனித இனம் எதிர்பார்ப்பது உண்டு. அத்தகைய மனித இனத்திற்கு சிறகுகள் போல முளைத்தன அறிவியலின் அற்புதக் கண்டுபிடிப்புகளில் ஒன்றான விமானம் என்கிற வானூர்தி. கடல் கடந்து பயணிக்கும் பறவைகள் போல, மனிதகுலம் பல நாடுகளுக்கும் பறக்கத் தொடங்கியது. தனிப்பட்ட மகிழ்ச்சிக்கான பயணங்கள் உண்டு. வேலை தேடி பல நாடுகளுக்கும் பறப்பவர்கள் உண்டு. அலுவல் சார்ந்த சந்திப்புகளுக்கான பயணங்கள் உண்டு. அன்னை நிலம் பயன் பெறுவதற்கான பயணங்களில் ஒன்றாக, உங்களில் ஒருவனான நான் அமெரிக்காவுக்குப் பயணிக்கிறேன்.
முந்தைய ஆட்சிக்காலத்தில் தேங்கிக் கிடந்த தொழில்வளர்ச்சியை மீட்டெடுத்து, அதற்கேற்ற வகையில் முதலீடுகளை ஈர்த்து, புதிய தொழிற்கட்டமைப்புகள் வாயிலா��, மாநிலத்தில் பரவலான அளவில் தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தமிழ்நாட்டைப் பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற பொருளாதார இலக்கை நமது திராவிட மாடல் அரசு நிர்ணயித்து, அதற்கான பணிகளை முனைப்பாகவும் சிறப்பாகவும் மேற்கொண்டு வருகிறது. அந்த முனைப்பின் தொடர்ச்சியாகத்தான் இன்று (ஆகஸ்ட் 27) தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற ��ுறையில் உங்களில் ஒருவனான நான் அமெரிக்காவுக்குப் பயணிக்கிறேன்.
திராவிட மாடல் ஆட்சி அமைந்ததிலிருந்தே தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கேற்ற கொள்கை வகுக்கப்பட்டு, பல்வேறு துறைகள் ��ார்ந்த முதலீடுகளைக் கொண்டு வந்தபடியே இருக்கிறோம். தேடி வருகின்ற முதலீடுகளைப் போலவே, தேடிச் சென்று முதலீடுகளை ஈர்க்கும் பணியையும், இன்றைய உலளாகவிய பொருளாதாரச் சூழலில் உள்ள போட்டிகளைக் கருத்திற் கொண்டு செயலாற்றி வருகிறது நமது அரசு.
தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு நம் மா��ிலத்திற்கான முதலீடுகளை ஈர்க்கும் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கும் வகையில் புகழும் தரமும் மிக்க பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. 2024 ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் பங்கேற்று, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டதன் வாயிலாகக் கடந்த மூன்றாண்டுகளில் ஏறத்தாழ 10 இலட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளைத் தமிழ்நாடு ஈர்த்துள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செயல்படுத்துகிற வகையில், ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டு, அவற்றை முறையாகக் கண்காணித்து, தொழிற்சாலைகளைத் தொடங்கி, வேலைவாய்ப்பு அமைக்கும் பணியையும் திராவிட மாடல் அரசு மேற்கொண்டு வருகிறது.
சொன்னதைச் செய்வோம் என்று நம் ��யிர்நிகர் தலைவர் கலைஞர் உருவாக்கித் தந்த ஆட்சி நிர்வாக இலக்கணத்தின்படி, தொழிற்சாலைகள் அமைப்பதற்கேற்ற சூழல்களை உருவாக்கிக் கொடுத்து, உடனடியாக அடிக்கல் நாட்டு விழாக்களையும், அதன் தொடர்ச்சியாக விரைவாக தொழிற்சாலைத் தொடக்க விழாக்களையும் மேற்கொண்டு வருகிறது திராவிட மாடல் அரசு. கடந்த 21-8-2024 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டில் மட்டும ரூபாய் 17,616 கோடி மதிப்ப���லான 19 நிறைவடைந்த திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டதுடன், ரூபாய் 51,157 கோடி மதிப்பிலான 28 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 1 இலட்சத்து 6 ஆயிரத்து 803 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனமான வின்ஃபாஸ்ட் மின்வாகன நிறுவனம் தனது தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டுவிழாவை ஏற்கனவே என் தலைமையில் தூத்துக்குடியில் நடத்தி, பணிகளை விரைவுபடுத்தியுள்ளது. திராவிட ம��டல் அரசின் தொடர்ச்சியான முயற்சிகளால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த 3 ஆண்டுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 31 இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டுள்ளன.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துகொண்ட பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதில் முனைப்பாக செயல்படுவதுடன், மேலும் பல நிறுவனங்களும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டும் வகையில், முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற அழுத்தமான அடையாளத்தைத் திராவிட மாடல் அரசு வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற பொருளாதார இலக்குடனானப் பயணத்தில் மற்றொரு கட்டம்தான், உங்களில் ஒருவனான நான் மேற்கொள்ளும் இந்த அமெரிக்கப் பயணம்.
ஆகஸ்ட் 29 அன்று சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளர் சந்திப்பில் பங்கேற்று உரை நிகழ்த்துவதுடன், ஆகஸ்ட் 31 அன்று புலம்பெயர்ந்த தமிழர்களைச் சந்தித்து பேச���கிறேன். அதன்பின், செப்டம்பர் 2-ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோவிலிருந்து சிகாகோ செல்கிறேன். 10 நாட்களுக்கு அமெரிக்காவில் உள்ள முக்கிய நிறுவன முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்து, தொழில் தொடங்கிட அழைப்பு விடுக்கிறேன். “ஃபார்ச்சூன் 500” நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகளை சந்தித்து உரையாடவிருக்கிறேன். இவையனைத்தும் அன்னைத் தமிழ்நாடு தொழில்வளம் பெறவும், தமிழர்களுக்க�� வேலைவாய்ப்பு கிடைத்திடவுமான முயற்சிகளாகும். தொழில்முதலீடு சார்ந்த பயணம் என்றாலும், அமெரிக்காவாழ் தமிழர்களுக்கென்று தனியாக நேரத்தை ஒதுக்கித்தராமல் இருக்க முடியுமா? செப்டம்பர் 7-ஆம் நாள் சிகாகோவில் தமிழர்களுடனான மாபெரும் சந்திப்பு நிகழவிருக்கிறது.
1971-ஆம் ஆண்டு நம் உயிர்நிகர் தலைவர் - தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த முத்தம��ழறிஞர் கலைஞர் அவர்கள் சிகாகோ பல்கலைக்கழகத்தின் அரசியல் மண்டபத்தில் அரிய உரை நிகழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவருடைய மனசாட்சியான திரு.முரசொலி மாறனும் அந்தப் பயணத்தில் உடன் சென்றிருந்தார். அன்றைய சிகாகோ வாழ் தமிழர்களும் அருகில் உள்ள மாநிலங்களைச் சேர்ந்த அமெரிக்க வாழ் தமிழர்களும் தலைவர் கலைஞரின் உரை கேட்டு மகிழ்ந்தனர். அதன்பின், நியூயார்க் நகருக்குச் சென்று அங்க�� தமிழ் மன்றத்தைத் தொடங்கி வைத்தார் முத்தமிழறிஞர் கலைஞர்.
அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுகளுடன், ஏறத்தாழ 43 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் அதுவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உங்களில் ஒருவனான நான் அமெரிக்கா வாழ் தமிழர்களைச் சந்திப்பது எனக்கும் அவர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சியாக அமையும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிர���க்கிறேன். அமெரிக்கப் பயணத் திட்டங்களை ஒருங்கிணைப்பதற்காக மாண்புமிகு தொழில்-முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தம்பி டி.ஆர்.பி.ராஜா முன்கூட்டியே அங்குச் சென்று ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்.
ஆகஸ்ட் 27 தொடங்கி செப்டம்பர் 14 வரையிலான இந்தப் பயண நாட்களின் நோக்கம், தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சி அடுத்து வரும் பல ��லைமுறைகளுக்குப் பயன் தருவதாக இருக்கவேண்டும் என்பதுதான். இந்தக் குறுகிய இடைவெளியில், தமிழ்நாடு அரசின் நிர்வாகப் பணிகள் தொய்வின்றித் தொடரவும், மக்கள் நலன் சார்ந்து திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களின் பயன்கள் தொடர்ந்து கிடைத்திடவும் அமைச்சர்களும் அதிகாரிகளும் சிறப்பான முறையில் செயல்பட வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன். கழகத்தின் மாநில அளவிலான பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் செப்டம்பர் 17-ஆம் நாள் நடைபெறவுள்ள கழகத்தின் பவளவிழா ஆண்டின் முப்பெரும் விழாவை எழுச்சியுடன் நடத்திடுவதற்கான பணிகளை இப்போதே தொடங்கியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
உங்களுடைய ஒருவனான என் ஒரு தோளில், ஆட்சித் தலைமைப் பொறுப்பைத் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றி வைத்திருக்கிறார்கள். மற்றொரு தோளில், கட்சித் தலைமைப் பொறுப்பை நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான நீங்கள் ஏற்றி வைத்திருக்கிறீர்கள். அந்தப் பொறுப்புகளைச் சுமந்தபடியேதான் அமெரிக்காவுக்குப் பறக்கிறேன்.
முதலமைச்சர் அயல்நாடு சென்றிருந்தாலும், தமிழ்நாட்டில் எந்தவொரு பணியும் தடைபடாமல் நடைபெறுகிறது என்று மக்கள் தரும் சான்றிதழே திராவிட மாடல் அரசுக்குப் பெருமை சேர்ப்பதாகும். அந்தச் சான்றிதழை மாண்புமிகு அமைச்சர்களும், ம��ிப்பிற்குரிய கழக நிர்வாகிகளும் பெற்றுத் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்தான் பொறுப்பை உங்களிடம் பகிர்ந்து செல்கிறேன். அமைச்சரவைக் கூட்டத்திலும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் ஏற்கெனவே இதனை வலியுறுத்தியிருக்கிறேன். ஆட்சிப் பணியும், கழகப் பணியும் தொய்வின்றித் தொடர்வதற்கு ஏற்ற வகையில் ஒருங்கிணைப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றுடன் ஒருங்கிணைந்து ஒவ்வொருவரும் தங்கள் கடமையினை கண்ணியத்துடன் நிறைவேற்ற வேண்டும். கட்டுப்பாடு காக்கின்ற வகையில், செயலில் வேகம் - சொற்களில் கவனம் என்பதை மனதில் நிறுத்தி செயலாற்றுங்கள்.
நம் மீது விமர்சனம் செய்ய விரும்புவோர், விவாதம் நடத்துவோர் ஆகியோருக்கு ஆட்சியிலும் கட்சியிலும் நாம் நிறைவேற்றும் பயனுள்ள செயல்களே பதில்களாக அமையட்டும். வார்த்தைகளால் பதில் சொல்லி அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கு���் வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டியதில்லை. தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான உங்கள் மீது உங்களில் ஒருவனான எனக்கு நிறைந்த நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கை செயல்வடிவமாக மாறுவதை ஒவ்வொரு நாளும் தொடர்பு கொண்டு விசாரிப்பேன். பணிகளைக் கண்காணிப்பேன். உடன்பிறப்புகளிடம் என் உணர்வுகளைக் கடிதம் வாயிலாகவும் காணொலிகளாகவும் பகிர்ந்து கொள்வ��ன். அமெரிக்காவில் இருந்தாலும் தாய்வீடான தமிழ்நாடு பற்றியேதான் என் மனது சிந்திக்கும். பார்வை கண்காணிக்கும்.
தமிழ்நாடு சிறக்க அயல்நாட்டுக்குச் சிறகு விரிக்கிறேன். உங்கள் வாழ்த்துகளுடன் பறக்கிறேன்.
அன்புடன்
மு.க.ஸ்டாலின்
திருவள்ளுவர் ஆண்டு 2055
ஆவணி 11
27-08-2024.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. @SPK_TNCC அவர்கள் சந்தித்து, பயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.
தமிழில் 'நா' நயமும் – பொதுவாழ்வில் நாணயமும் மிகுந்த நம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நினைவைப் போற்றி, கலைஞர் அவர்களின் திருவுருவம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் நாணயத்தை, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில், மாண்புமிகு ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் @rajnathsingh அவர்கள் வெளியிட்ட நிகழ்வில் இன்று பங்கேற்றோம்.
இந்திய அரசியலின் திசைகாட்டி – நவீன தமிழ்நாட்டின் தந்தை நம் கலைஞர் அவர்களின் திருவுருவம் பொறித்த இந்த 100 ரூபாய் நாணயத்தில், கலைஞரின் கையெழுத்தில் '#தமிழ்_வெல்லும்' என்ற லட்சிய முழக்கமும் இடம்பெற்றுள்ளது.
உலகெங்கும் வாழும் தமிழர்கள் பெருமை கொள்கின்ற உணர்ச்சித் திருவிழா இது.
நன்றிப் பெருக்கால் நிரம்பி இருந்தது கலைவாணர் அரங்கம்!
வாழ்க கலைஞர்! வெல்க தமிழ்!
#KalaignarCommemorativeCoin #Kalaignar100
அகவை-90 ல்
எனக்கு உடலும் ,உயிரும் தந்து,
புகழ் தந்து வறுமையிலும் செம்மையாக எங்களை வளர்த்து,தன் தாலாட்டில் எனக்கு இசை தந்து,அன்பான பேச்சில் என்னைப்பேச வைத்து உருவாக்கிய என்னைப் பெற்ற என் தாயார் #திருமதி_குளோரியாமேரி அன்பு தெய்வத்திற்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
திருப்பூர் தெற்கு மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நத்தக்காடையூர் ஊராட்சியுள் கழக நிர்வாகிகளுடன் இல்லம்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை சிறப்பாக நடைபெற்றது, நிகழ்வில் இளைஞர்கள் கலந்துகொண்டு தங்களை தி.மு.க இளைஞர் அணியில் இணைத்துக்கொண்டனர்.
சென்னை, கலைவாணர் அரங்க கூட்டரங்கில் இன்று (29.07.2024) எனது தலைமையில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
#DMK | #MKStalin | #KNNehru | #Trichy | #Chennai | #Dravidanmodel
கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர்
@mkstalin அவர்கள், "எல்லோருக்கும் எல்லாம்" என்ற #திராவிட_மாடல் அரசின் மூலம் எண்ணற்ற மக்கள் நலத்திட்ட திட்டங்களை செயல்படுத்தி, சாதனை புரிந்து வருகிறார்கள்.
கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டலில் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் மாபெரும் வெற்றிகளை குவித்து வருகிறது நம் தி.மு.கழகம்.
இந்த வெற்றிப் பயணத்தில் இன்னொரு மைல்கல்லாக அமையவிருக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் வரும் ஜூலை 7, 8 ஆகிய நாட்களில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளோம்.
சமூகநீதி, சமத்துவம் தழைக்க - நம் முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சிக்கு சான்றாக, விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் அண்ணன் அன்னியூர் சிவா அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம்.
#Vote4RisingSun
இன்று வட வல்லநாடு ஊராட்சிக்கு உட்பட்ட சேதுராமலிங்கபுரத்தில் நடைபெற்றுவரும் தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கயத்தாறு, கோவில்��ட்டி புதூர் மற்றும் விளாத்திகுளம் ஒன்றியங்களைச் சார்ந்த 363 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை ஆய்வு செய்தோம்.
@Jeganperiyasami @glpathy2011
இன்று தூத்துக்குடியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை MERF அறக்கட்டளை இணைந்து நடத்திய குழந்தைகளின் ச��வித்திறன் குறைபாட்டை கண்டறியும் மருத்துவர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களுக்கான பயிற்சி முகாமை துவங்கி வைத்தோம்.
(1/2)
@Jeganperiyasami @glpathy2011
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, சிவகங்கை, திருப்புவனம் மற்றும் மானாமதுரையில், கோடைகாலத்தில் மக்கள் தாகம் தீர்க்கும் வகையில் நீர், மோர் பந்தல் திறந்து வைத்தோம்.
பாசிசத்தை வீழ்த்துவதற்கான 7 ஆம் கட்ட பரப்புரையை மலைகளின் ராணியான உதக மண்டலத்தில் தொடங்கினோம். நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கழக துணை பொதுச் செயலாளர் அண்��ன் @dmk_raja அவர்களை ஆதரித்து உதகை - காஃபி ஹவுஸ் சதுக்கத்தில் இன்று வாக்கு சேகரித்தோம்.
கலவரத்தாலேயே கட்சியை வளர்க்கும் பாசிச பாஜக கூட்டத்திற்கு ஏன் வாக்களிக்க கூடாது என சுட்டிக்காட்டியும் – 3 ஆண்டுகளில் திராவிட மாடல் அரசு செய்துள்ள சாதனைகளை விளக்கியும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டோம்.
@Ramachandranmla #Mubarak
மக்கள் நீதி மையத்தின் தலைவர் திரு. கமலஹாசன் அவர்கள், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பெருமாநல்லூர் மற்றும் கோவை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பல்லடத்திலும் I.N.D.I.A கூட்டணியின் வேட்பாளர்களுக்கு வாக்குகளை கேட்டு பரப்புரை மேற்கொண்டார்.
#INDIAAlliance#DMK #MakkalNeedhiMaiam #CPI #Elections2024
சர்வாதிகார ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் மதவாத பா.ஜ.க அரசை தோற்கடித்து, ஜனநாயகத்தை வெற்றியடைய செய்வதற்கான இத்தேர்தலில் "தீப்பெட்டி" சின்னத்திற்கு வாக்களிக்குமாறு #அரியமங்கலம் பகுதி மக்களிடம் கேட்டுக் கொண்டோம்.
#INDIA கூட்டணி சார்பில் போட்டியிடும் @duraivaikooffl அவர்களை திருச்சி மக்களின் சார்பாக நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைப்போம்!
"தீப்பெட்டி" சின்னத்திற்கு ஆதரவளிப்போம்.
@arivalayam@mdmkofficial
#Vote4INDIA
#trichy_south_dmk