நமக்கு என்ன கிடைக்கிறது என்பதை கொண்டு வெறும் பிழைப்பை மட்டும்தான் நடத்த முடியும். நாம் எதை கொடுக்கிறோம் என்பதை கொண்டுதான் ஒரு வாழ்க்கையை உருவாக்க முடியும்.
#SadhguruTamil#SadhguruQuotes
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே, 3 வயது பெண் குழந்தை பாலியல் தாக்குதலுக்குள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமுமளிக்கிறது.
இந்தக் குற்றத்தில் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதே போல, காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில், பத்து வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த சில மாதங்களாகவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குற்றங்களில், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்பு இருப்பது அதிகரித்துள்ளது.
இந்த ஜூன் மாதத்திலேயே, சென்னையில் மூதாட்டியிடம் சங்கிலி பறிக்க முயன்ற ஒரு வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம், தாம்பரம் அருகே இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்த வழக்கு, திருவள்ளூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய வழக்கு, சென்னை வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே 61 வயது பெண், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, சென்னை வேளச்சேரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், 15 வயது சிறுவன் உட்பட மூன்று வடமாநில தொழிலாளர்கள் கைது, சென்னை மதுரவாயல் பகுதியில் அதிகாலையில் வீட்டிற்கு வெளியே கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்த வழக்கு என, தொடர்ந்து பல குற்றங்களில், வட மாநில இளைஞர்கள் கைது செய்யப்படுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
குற்றங்களில் ஈடுபடுபவர்களை, காவல்துறை உடனடியாகக் கண்டுபிடித்துக் கைது செய்வது பாராட்டத்தக்கது. ஆனால், குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது தமிழக அரசு?
பணி நிமித்தமாக, பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழகத்துக்கு வருவதும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், பல இடங்களுக்குச் செல்வதும் இயற்கை. ஆனால், பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் குறித்த சரியான விவரங்கள், அவர்களை பணியிலமர்த்தும் ஒப்பந்ததாரர்களிடமோ அல்லது, நிறுவன உரிமையாளர்களிடமோ இருக்கிறதா? இந்த விவரங்கள், தமிழக அரசிடம் வழங்கப்படுகிறதா? இதனை முறைப்படுத்த வேண்டாமா?
தமிழக அரசு உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்த எத்தனை தொழிலாளர்கள், எந்தெந்த நகரங்களில் இருக்கிறார்கள், அவர்கள் சொந்த ஊர் உள்ளிட்ட விவரங்கள், தற்போதைய பணியிடங்கள் மற்றும் தங்குமிடம் என, அனைத்து தகவல்களையும், வடமாநிலத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் உரிமையாளர்கள், தமிழக அரசுக்கு வழங்க வேண்டும். இதனை தமிழக அரசும் முறையாகக் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
சென்னையில், மொத்தம் விற்பனையாகும் சுமார் 14.75 லட்சம் லிட்டர் ஆவின் பாலில், கிட்டத்தட்ட 50%, சுமார் 7.5 லட்சம் லிட்டர் பால் விற்பனை, பச்சை நிற கிரீன் மேஜிக் பாக்கெட் பால் ஆகும்.
இந்த நிலையில், கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்பட்டு, குறைந்த அளவே தற்போது விற்பனைக்கு வழங்கப்படுகிறது என்ற செய்தி அறிந்து, அது குறித்து விசாரித்ததில், ஏற்கனவே சுமார் 50% விற்பனை குறைக்கப்பட்டிருப்பதாகவும், படிப்படியாக, கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை நிறுத்தப்படவுள்ளதாகவும், ஆவின் விற்பனை மையங்களிலேயே கூறுகின்றனர்.
ஆனால், தவெக அரசு தற்போது வெளியிட்டிருக்கும் செய்தி வெளியீட்டில், கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்படவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. அப்படியானால், ஏன் ஆவின் மையங்களில் முன்பு போல அது கிடைப்பதில்லை? கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளதை பொதுமக்களே அறிவார்கள். யாரை ஏமாற்ற இந்த பொய்யான விளக்கத்தை அளிக்கிறது தவெக அரசு?
கடந்த 2023 ஆம் ஆண்டு திமுக ஆட்சியிலும் இதே போல, 4.5% கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்தி விட்டு, 3.5% கொழுப்பு சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ய முடிவெடுத்த போது, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் அந்த முடிவை திமுக அரசு கைவிட்டது. ஆனால், தற்போதைய தவெக அரசும் அதே முடிவை மக்களிடம் திணிப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை குறைப்புக்கு, நிதி இழப்பைக் காரணமாகக் கூறுகிறார்கள். நிதி இழப்பைச் சரி செய்ய, பால் உற்பத்தியையும், பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனையையும் அதிகரித்து, அதன் மூலம் நிதி இழப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமே தவிர, ஏழை எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் பால் வகை விற்பனையை நிறுத்தக் கூடாது.
உடனடியாக, மீண்டும் போதுமான அளவு, பச்சை நிற கிரீன் மேஜிக் பாக்கெட் பால் விற்பனையைக் கொண்டு வர வேண்டும் என்றும், பால் உற்பத்தி, கொள்முதல் மற்றும் விற்பனை உள்ளிட்டவற்றை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்து, https://t.co/bpwUirWN1w இயக்கத்திற்கு நீங்கள் அளித்துள்ள பேராதரவு, பெரும் நெகிழ்ச்சியையும், அதைவிட பெரிய பொறுப்பையும் எனக்கு அளித்திருக்கிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு தனி மனிதனின் பயணம் அல்ல; நல்ல மாற்றத்தை விரும்பும் நமது மக்களின் கூட்டுப் பயணம். மாற்றம் வேண்டும் என்று நம்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலும், நீங்கள் வழங்கியிருக்கும் பேராதரவில் எதிரொலிக்கிறது. உங்கள் நம்பிக்கையை மதித்து, நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் இந்தப் பயணத்தை முன்னெடுப்போம்.
தமிழகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான இந்தப் பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.
பாஜக இன்னும் 30 ஆண்டுகள் மேல் இந்த தேசத்தை வழி நடத்தும்.. நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்பு இருந்த எந்த அரசும் ஏற்படுத்தாது பெரும் வளர்ச்சியை உருவாக்கி நகர்கிறது... அதை குறை சொல்பவர்கள் "மதம்" "மொழி" என்ற வார்த்தைகளில் முடித்து கொள்வர். ஆனால் ஆதாரத்தோடு கேளுங்கள் அவர் வருவதற்கு முன் இந்தியா வந்த பின் இந்தியா என வளர்ச்சி விகிதம் சொல்லும் உண்மையை...
ராணுவ தடவாள ஏற்றுமதி வெறும் 800 கோடி இல்லாத இந்தியாவை இன்று 24,000கோடிக்கு உயர்த்தியது.
உள் நாட்டு ராணுவ தேவைக்கான உற்பத்தியை 40,000 கோடி கிடையாது அவர் வரும் போது. இன்று 1,60,000 கோடி உள் நாட்டில் ராணுவ தேவைக்கான உற்பத்தி 224% வளர்ச்சி இதில் மட்டும்.
PSU 254 துறைகளின் வளர்ச்சியே கேள்விகுறியாக இருந்த நேரம் அவர் ஆட்சிக்கு வந்தார். பொது துறை வங்கிகள் வைத்திருந்த வாராக்கடன் மதிப்பு என்ன இன்று நிலை என்ன? மொத்த பொதுதுறை நிற்வனங்களையும் இணைத்தால் Net worth 9 லட்சம் கோடி அத்தோடு பெரும் கடன் நிர்வாகத் திறமை இல்லாமல் இருந்த இந்த மொத்த கட்டமைப்பையும் இன்று 18 லட்சம் கோடி மதிப்பிற்கு கொண்டு வந்து பல நிறுவனங்களை மேன்படுத்தி லாபமடைய செந்துள்ளது இந்த அரசு.
இந்த அரசுக்கு அல்ல எந்த அரசுக்கு மொழி எது தெரியுமா? வளர்ச்சி... நாட்டின் வளர்ச்சி அனைத்து மக்களின் வளர்ச்சி. இந்த அரசு வடகிழக்கு மா நிலங்களில் மொழியை வைத்து வெற்றி பெறவில்லை. நக்சல் பாதித்தப் பகுதியில் வளர்ச்சியை முன்னிறுத்தி வளர்ச்சி பெற்றது... அசூர பலத்தோடு இருந்த இடதுசாரி சிந்தனையை மாற்றியது.
நாட்டில் கட்டமைப்பு? என்ன செய்யவில்லை இந்த அரசு - கொஞ்சம் ஒப்பிட்டு சொல்லுங்கள் பார்க்கலாம் .
National Highways 60% வளர்ச்சி இது நீங்கள் தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் போது தெரியவில்லை?, Renewable energy துறையில் 76.38 GW இருந்த நாட்டை 275 GW உயர்த்தியவர். Airports கட்டமைப்பு 115% உயர்த்தினார். என்ன airport தேவையான என கேட்பவன் அங்கே போய் நின்று கொண்டு என்ன கூட்டாமா இருக்கு என்ன நிர்வாகம் செய்கிறார்கள் என அப்போதும் குறை சொல்வான். ரயில்வே துறைக்கு 50,000 கோடி அளவில் இருந்த பட்ஜெட் இன்று 3 லட்சம் கோடிக்கு நெருங்குகிறது.. என்ன சதவீதம் சொல்லுங்கள்?
Port capacity துரைமுகங்களின் சரக்கை கையாழும் திறன் மிக மிக குறைவாக இருந்த நாடு இந்தியா... சீனா அந்த ஒன்று தான் உலகம் முழுவதும் அவன் உற்பத்தி பொருட்கள் போய் சேர்வதற்கு காரணம்... இதை இன்று 800 MTPA இருந்து 2,600 MTPA உயர்த்தி நிறுத்தியது யார்? இன்னும் 5 ஆண்டு கழித்து இது இன்னும் 300% வளர்ச்சியில் இருக்கும்...
மொத்த உள் நாட்டின் கட்டமைப்பிற்கு இன்று 12 லட்சம் கோடி செலவிடும் இந்த மோடி அவர்களின் அரசு வரும் போது அது வெறும் 1.4லட்சம் கோடி கூட இல்லை..
இப்படி அரசு மொத்த நிர்வாகத்தில் வளர்ச்சியை எடுத்து ஒவ்வொரு துறையாக நான் பட்டியலிட தயார்...
ஏன் சொல்கிறேன் என்றால் - எது அரசின் மொழி? வளர்ச்சி தான் அரசின் மொழி... இதை இங்கே கொண்டு சேர்த்து நம்பிக்கையை பெருவதில் வேண்டும் என்றால் பின்னடைவு இருக்கலாம் ஒழிய - நரேந்த மோடி தலைமையிலான அரசு 100% நாட்டின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு நாளும் வேலை செய்துள்ளது. வேறு எந்த காலத்திலும் இவ்வளவு வேலைகள் நடந்த ஒரு அரசை பார்த்ததும் இல்லை படித்ததும் இல்லை.
எனவே அடுத்த 30 ஆண்டுகளும் நாட்டை பாஜக வழி நடத்தும் - இது அரசியலை தாண்டி தேசம் நல்ல வளர்ச்சியை அடைய வேண்டும் என்று விரும்பும் எந்த ஒரு தனி நபரின் மொழி...
(எழுத்து பிழைகள் இருந்தால் மன்னிக்க வேக வேகமாக அடித்து அப்படியே வெளியிடுகிறேன்.)
-மாரிதாஸ்
முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன்ட் ஜெனரல் என். எஸ். ராஜா சுப்ரமணி அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.
நாட்டின் பெருமையாகவும், உலகின் மிகச்சிறந்த படைகளில் ஒன்றாகவும் விளங்கும் பாரதத்தின் ஆயுதப்படைகள், உங்கள் திறமையான தலைமையின் கீழ் மேலும் வலிமையும் பெருமையும் பெறும் என்பது நிச்சயம் . உங்கள் சேவைக்கு தலைவணங்குகிறோம் - சத்குரு
தமிழக முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றிருக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. @TVKVijayHQ அவர்களுக்கும், அமைச்சர்களாகப் பொறுப்பேற்கவிருக்கும் அனைவருக்கும் மற்றும், தவெக தொண்டர்கள் அனைவருக்கும், எனது நல்வாழ்த்துக்கள்.
தமிழகத்தின் முதல்வராக உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் திரு.சி.ஜோசப் விஜய் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள். இந்த அற்புதமான மாநிலத்தின் மக்கள் வைத்திருக்கும் உயர்ந்த நோக்கங்களை நிறைவேற்ற பொறுப்பேற்கும் புதிய அரசாங்கத்திற்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்கள். – சத்குரு @TVKVijayHQ
The Pongal celebrations at Thiru L. Murugan Ji's residence reflected the warmth and vibrancy of Pongal. May this festival add joy in everyone's life.
@DrLMurugan
திரு எல். முருகன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டங்கள், பொங்கல் திருநாளின் உற்சாகத்தையும் அன்பையும் பிரதிபலித்தன. இந்தப் பண்டிகை அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியை அதிகரிக்கட்டும்.
@DrLMurugan