*திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி* க்கு உட்பட்ட 10 ஊராட்சி பகுதிகள் மற்றும் 29 மாநகராட்சி வார்டுகளை உள்ளடக்கிய *புதிய வருவாய் வட்டத்தை* உருவாக்கி தரவேண்டும் என்று இன்றைய கேள்வி நேரத்தின் போது தமிழக அரசை கேட்டுக்கொண்டேன்
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி வார்டு 6,7 மற்றும் 23 வது வார்டு கோல்டன் நகர் பகுதிகளில் அங்கன்வாடி மையங்களுக்கு கட்டிடம் அமைத்து தர வேண்டும் என்று சட்டசபையில் துணை கேள்வி நேரத்தின் போது கேட்டுக்கொண்டேன்.
ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சியில் முட்டியன்கிணறு பஸ் நிறுத்தம், லட்சுமி கார்டன், தட்டாங்குட்டை ஆகிய மூன்று இடங்களிலும் MLA தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூபாய் 13.50 லட்சம் மதிப்பீட்டில் மூன்று பயணியர் நிழற்குடை அமைப்பதற்கான பணிக்கு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தேன்.
*திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி* , திருப்பூர் ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சி, அய்யம்பாளையம் ரேஷன் கடை வீதியில் *15வது நிதிக்குழு மானிய* திட்டத்தின் மூலம் *ரூபாய் 7 லட்சம்* மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பணியினை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தேன்.
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர் மாநகராட்சியில் கழக வேட்பாளர்களாக களம் கண்டு வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்களுடன் சென்று கழக இணை ஒருங்கிணைப்பாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு @EPSTamilNadu அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்ற பொழுது
எதிர்வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர் மாநகராட்சியில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதலமைச்சரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் கழக இணை ஒருங்கிணைப்பாளருமான @EPSTamilNadu அவர்கள் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
எதிர்வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி *வார்டு எண் 25-ல்* கழக வேட்பாளராக போட்டியிடும் *ஏ தங்கராஜ்* அவர்களை ஆதரித்து வெற்றிச் சின்னமாம் *இரட்டை இலை* சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து பிரச்சாரத்தை துவக்கி வைத்தேன்.
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி, மாநகராட்சி வார்டு எண் 12ல், நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வெற்றி வேட்பாளர் *திருமதி வசந்தி விகேபி மணி* அவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதையொட்டி வாழ்த்தி பிரச்சாரம் மேற்கொண்ட பொழுது
திருப்பூர் ஒன்றியம், வள்ளிபுரம், தொரவலூர், மேற்குபதி சொக்கனூர் பட்டம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் ரூபாய் 32.20 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை, தார்சாலை, பள்ளி சமையல் கூடம், கழிப்பறை கட்டுதல் உள்ளிட்ட 7 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தேன்.
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி, மாநகராட்சி வார்டு எண் 21 S.V.காலனி ஜோதி நகர் முதல் வீதி மற்றும் வார்டு எண் 23 ஆசர் நகர் 60 அடி ரோடு ஆகிய சாலைகள் புதிதாக அமைக்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தேன்
மாநகராட்சி வா எண் 23/32, கேஜி லே-அவுட் 3, 4 வீதியில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்து தார் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியதை நேரில் சென்று பார்வையிட்டேன். 4-வது வீதி பகுதியில் இடிந்த கழிவுநீர் கால்வாய் சுவற்றினை எம்எல்ஏ தொகுதி வளர்ச்சி நிதி மூலம் உடனடியாக சரி செய்ய உத்தரவிட்டேன்.
உலகெங்கும் வாழ்கின்ற சகோதரத்துவத்தையும் சகிப்புத்தன்மையையும் உலகெங்கும் போதிக்கின்ற அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்....
தமிழக சட்டப்பேரவையின் 2022 ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடரில் புத்தாண்டு வாழ்த்துக்களையும் பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டு வடக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள பொது மக்களின் சார்பாக பள்ளிகளை தரம் உயர்த்தி தர வேண்டும் என்று உரையாற்றினேன்.
ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி, லட்சுமி கார்டன் பகுதியில் குறைவான மின் அழுத்தம் காரணமாக குடிநீர் வழங்கும் மோட்டார்கள் இயங்க முடியாமல் மக்களுக்கு குடிநீர் வினியோகம் தடை பட்டதை அறிந்து அதிகாரிகளிடம் பேசி போர்க்கால அடிப்படையில் 100 கேவி புதிய டிரான்ஸ்பார்மர் பெற்றுத்தந்தேன்.
அங்கேரிபாளையம் *அருள்மிகு மாகாளியம்மன் திருகோவில்* பொங்கல் விழாவில் இன்று இரவு 7.30 மணியளவில் திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் *திரு கே.என்.விஜயகுமார் MLA* அவர்கள் திரளான பொதுமக்களுடன் கலந்துகொண்டு தீர்த்த குடம் எடுத்து வந்தார்.
தமிழகத்தில் வெள்ளையனை எதிர்த்துப் போரிட்ட பாஞ்சாலங்குறிஞ்சியின் மன்னர் *வீரபாண்டிய கட்டபொம்மன்* அவர்களின் *263வது பிறந்தநாளை* முன்னிட்டு பாரப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் நிறுவப்பட்டுள்ள *வீரபாண்டிய கட்டபொம்மன்* அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி, மாநகராட்சி வார்டு எண் 33, மன்னரை சத்தியா காலனி கிழக்கு, சத்தியா காலனி 10 வது வீதி பகுதி பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன்.