விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக என்னைத் தேர்வு செய்த எழுச்சித்தமிழர் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்!
இதை ஒரு பொறுப்பாகவும், கடமையாகவும் காண்கிறேன். புரட்சியாளர் அம்பேத்கர் விட்டுச்சென்ற பணியை, அவர்வழியில் தொடரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தொடங்கும் இப்பயணம் மக்கள் சேவை, சமூக முன்னேற்றம் நோக்கியே இருக்கும் என்று உறுதியாக இருக்கிறேன்.
என்றுமே எனது அண்ணனாகவும், தலைவராகவும் இருந்து என்னை வழிநடத்தும் தலைவர் அவர்களுக்கும், பொதுச் செயலாளர்கள் திரு. து.ரவிக்குமார் அவர்களுக்கும், திரு. சிந்தனைசெல்வன் அவர்களுக்கும், கட்சியின் உயர்நிலைக் குழுவிற்கும் எனது மரியாதை கலந்த நன்றிகள்.
இன்றும் ஏழ்மை மற்றும் ஒருவரின் பிறப்பு போன்ற காரணிகளால் உயர்வு-தாழ்வு பார்க்கும் நம் சமூகத்தின் பகுதிகளைச் சீரமைக்கும் இந்தப் பயணத்தில் இளம் தலைமுறையோடு இணைகிறேன்!
@thirumaofficial #VCK
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக என்னைத் தேர்வு செய்த எழுச்சித்தமிழர் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்!
இதை ஒரு பொறுப்பாகவும், கடமையாகவும் காண்கிறேன். புரட்சியாளர் அம்பேத்கர் விட்டுச்சென்ற பணியை, அவர்வழியில் தொடரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தொடங்கும் இப்பயணம் மக்கள் சேவை, சமூக முன்னேற்றம் நோக்கியே இருக்கும் என்று உறுதியாக இருக்கிறேன்.
என்றுமே எனது அண்ணனாகவும், தலைவராகவும் இருந்து என்னை வழிநடத்தும் தலைவர் அவர்களுக்கும், பொதுச் செயலாளர்கள் திரு. து.ரவிக்குமார் அவர்களுக்கும், திரு. சிந்தனைசெல்வன் அவர்களுக்கும், கட்சியின் உயர்நிலைக் குழுவிற்கும் எனது மரியாதை கலந்த நன்றிகள்.
இன்றும் ஏழ்மை மற்றும் ஒருவரின் பிறப்பு போன்ற காரணிகளால் உயர்வு-தாழ்வு பார்க்கும் நம் சமூகத்தின் பகுதிகளைச் சீரமைக்கும் இந்தப் பயணத்தில் இளம் தலைமுறையோடு இணைகிறேன்!
@thirumaofficial #VCK