The controversy surrounding Jr NTR and director Trivikram Srinivas' upcoming Telugu film has intensified after Naam Tamilar Katchi (NTK) chief Seeman called for the film to be banned in Tamil Nadu over its Lord Murugan theme and the growing backlash for the producer's 'Born in the North', which triggered conversation regarding the deity's origins.
Read More: https://t.co/TZ2HHeu2Fc
#Seeman #JrNTR
ஜனநாயக சோபாவில் அமர்ந்திருக்கும்
பக்கா மாஸ் கட்சியின் தலைவரே!
மகத்தான மங்குனி முதல்வரே!
என்னாச்சு உங்களுக்கு?
உலக மானுடக்கூட்டத்தின் ஆணவத்தையும், அகம்பாவத்தையும் ஒட்டுமொத்தமாகக் குத்தகை எடுத்ததுபோல, பரப்புரைக்கூட்டங்களில் மிதப்போடும், இறுமாப்போடும் ஆவேசம் பொங்கப் பேசும் (!) நீங்கள், சட்டமன்றத்தில் அமைதியின் திருவுருவாய், தன்னடக்கத்தின் மனித வடிவமாக அமர்ந்திருப்பது ஏனோ? சாந்தச்சொரூபியாக மாறிப் போன மர்மம் என்ன? எங்கே போனது உங்கள் ஆவேசம்? எங்கே போனது உங்கள் கோபக் கணைகள்? எங்கே போனது உங்களது சீற்றக்குரல்?
சட்டம் ஒழுங்கு குறித்துக் கேட்டால் உள்துறை அமைச்சகத்தைக் கையில் வைத்திருக்கும் நீங்கள் பதில் சொல்லாது, கல்வித்துறை அமைச்சரைப் பதில் சொல்ல வைப்பது ஏன்? திரைப்படங்களில் உங்களது ‘பஞ்ச் டயலாக்குகளை’ துணை நடிகரை வைத்துப் பேசவிட்டால், அமைதியாக நிற்பீர்களா முதல்வரே? அதனைவிட அபத்தமாக அல்லவா இது இருக்கிறது. திரையில் காணும் ஆவேசமெல்லாம் தரையில் காணாமல் போனதேன்? ‘அவ்ளோ வொர்த் இல்ல’ என உங்களது கட்சியின் மகளிர் தினக் கூட்டத்தில் பேசினீர்களே, அதுபோல வொர்த் இல்லாத உங்களை உச்சாணிக் கொம்பில் அமரவைத்ததன் விளைவா இது?
‘வாரிசு’ அரசியலை எதிர்க்கிறேன்பேர்வழி எனக் கூறிக் கொண்டு, காங்கிரசின் அனுசரணையோடு அரியாசனத்தில் அமர்ந்திருக்கிற ரீல்ஸ் ‘மாஸ்டரே’ !
சட்டமன்றத்தில் நீங்கள் திரைப்படம் போல, ‘கத்தி’ எடுத்து சுழற்றி சண்டையிட வேண்டாம்; ‘சர்கார்’ நடத்தும் நீங்கள், எதிர்க்கட்சிகளின் கேள்விகளைப் பொறுப்புணர்வோடு எதிர்கொண்டு பதில் சொல்லி ‘ஜனநாயகனாக’ செயல்பட வேண்டாமா? அதனைவிடுத்து, கேள்விகேட்டாலே, ‘மெர்சல்’ ஆகலாமா? திரையில் மட்டும்தான் ‘புலி’ ஆகப் பாய்வீர்களா? ‘லியோ’ ஆகக் கர்ஜிப்பீர்களா? நிஜத்தில் மூச்சுவிடும் சத்தம்கூட கேட்க மறுக்கிறதே? எங்கே போனது உங்களது ‘பீஸ்ட்’ மோடு? பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா என ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ ஆக இருக்கும் பெரும் பெரும் தலைவர்கள் அமர்ந்திருந்த அவையிலே இப்படிப்பட்ட ஒருவரா? எனக் கேட்கும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டீர்களே? சட்டமன்றத்தில் ‘தெறி’க்க விடுவீர்கள் என உங்களுக்காக ‘பிகில்’ ஊதியவர்களை ஏமாற்றலாமா? ‘தலைவா’ என உங்களை விளித்தவர்களைத் தலைகுனியச் செய்திடலாமா? தமிழ்நாட்டின் மொத்த ‘ஜில்லாக்களையும்’ கட்டியாளும் உயர் பதவியிலிருக்கும் நீங்கள், சட்டமன்றத்தில் இப்படித் தூங்கி வழியலாமா?
மாண்புமிகு மங்குனி முதல்வரே!
நீங்கள் நிகழ்த்திய ‘விசில் புரட்சியே’ போதும். இந்த மௌனப்புரட்சி எல்லாம் வேண்டாம். இனியும் நாடு தாங்காது. கொஞ்சமாவது வாய்திறங்கள்! @CMOTamilnadu
சட்டமன்றத்தில் நீங்கள் திரைப்படம் போல, ‘கத்தி’ எடுத்து சுழற்றி சண்டையிட வேண்டாம்; ‘சர்கார்’ நடத்தும் நீங்கள், எதிர்க்கட்சிகளின் கேள்விகளைப் பொறுப்புணர்வோடு எதிர்கொண்டு பதில் சொல்லி ‘ஜனநாயகனாக’ செயல்பட வேண்டாமா? அதனைவிடுத்து, கேள்விகேட்டாலே, ‘மெர்சல்’ ஆகலாமா? திரையில் மட்டும்தான் ‘புலி’ ஆகப் பாய்வீர்களா? ‘லியோ’ ஆகக் கர்ஜிப்பீர்களா? நிஜத்தில் மூச்சுவிடும் சத்தம்கூட கேட்க மறுக்கிறதே? எங்கே போனது உங்களது ‘பீஸ்ட்’ மோடு? பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா என ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ ஆக இருக்கும் பெரும் பெரும் தலைவர்கள் அமர்ந்திருந்த அவையிலே இப்படிப்பட்ட ஒருவரா? எனக் கேட்கும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டீர்களே? சட்டமன்றத்தில் ‘தெறி’க்க விடுவீர்கள் என உங்களுக்காக ‘பிகில்’ ஊதியவர்களை ஏமாற்றலாமா? ‘தலைவா’ என உங்களை விளித்தவர்களைத் தலைகுனியச் செய்திடலாமா? தமிழ்நாட்டின் மொத்த ‘ஜில்லாக்களையும்’ கட்டியாளும் உயர் பதவியிலிருக்கும் நீங்கள், சட்டமன்றத்தில் இப்படித் தூங்கி வழியலாமா?
Epic 🤭
@TVKVijayHQ
அஜித்குமாரின் காவல் படுகொலைக்கு எதிராகப் பேசிவிட்டு, ஆகாஷின் காவல்நிலையப் படுகொலைக்கு நீதியைப் பெற்றுத் தர மறுத்து, அடக்குமுறையை ஏவிவிடுவதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
மானாமதுரையில் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட தம்பி ஆகாஷின் மரணத்துக்கு நீதிகேட்டு, அவரது உடலை வாங்க மறுத்து, மூன்று மாதங்களுக்கு மேலாகக் குடும்பத்தினரும், உறவுகளும் போராடி வரும் நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவைக் காரணமாகக் காட்டி, பெற்றோரைக் கைதுசெய்து, உடலைக் காவல்துறையினரே அடக்கம் செய்திருப்பது அரசப்பயங்கரவாதத்தின் உச்சமாகும். திமுகவின் ஆட்சியில் காவல்துறையினரால் நிகழ்த்தப்பட்ட தம்பி அஜித்குமாரின் படுகொலைக்கு எதிராக அன்றைக்கு நீதிகேட்டு பேசிய முதல்வர் விஜய் அவர்கள், அதே திமுக ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட தம்பி ஆகாஷின் படுகொலைக்கு நீதியைப் பெற்றுத் தர மறுத்து, அடக்குமுறையை ஏவிவிடுவது கடும் கண்டனத்திற்குரியது.
ஆகாஷ் குற்றமிழைத்திருந்தால் சட்டப்படி நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டுமே ஒழிய, அவரை அடித்துத் துன்புறுத்திக் கொலைசெய்வதற்கு காவல்துறையினருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? நல்ல உடல்நலத்தோடு திடகாத்திரமாக இருந்த ஆகாஷ் காவல்துறை விசாரணைக்குப் பின்னர், ஒரேநாளில் உயிரிழக்கிறாரென்றால், அம்மரணத்துக்குக் காவல்துறையினர்தான் முழுப்பொறுப்பு. இதனை நீதிமன்றம்கூட கேட்க மறுத்திருப்பது ஏமாற்றமும், வேதனையுமளிக்கிறது. திமுகவை அரசியல் எதிரி என மேடைதோறும் பேசிவிட்டு, திமுகவின் ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட காவல்நிலையப் படுகொலையை மூடி மறைக்கத் துணைபோவது வெட்கக்கேடானது இல்லையா?
பெற்றோர், குடும்பத்தினர் இல்லாது காவல்துறையே அடக்கம் செய்வதெல்லாம் ஏற்கவே முடியாதப் பேரவலம். தவெகவின் ஆட்சியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இறந்துபோன சூலூர் சிறுமியின் உடலைத் தாய்க்குத் தெரியாது, அடக்கம் செய்ததும், அதேபோல கும்மிடிப்பூண்டியில் இறந்துபோன சிறுமியின் உடலைப் பொன்னேரிக்கு கொண்டு சென்று அடக்கம் செய்திருப்பதும், இப்போது ஆகாஷின் உடலைப் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அடக்கம் செய்திருப்பதுமான காவல்துறையின் போக்குகள் தமிழ்நாட்டில்தான் வாழ்கிறோமா? இல்லை! உத்திரப்பிரதேசத்தில் வாழ்கிறோமா? எனும் கேள்வியை எழுப்புகிறது. உங்களது திரைப்படங்களில் வில்லன்கள்கூட செய்யத் துணியாத ஒன்றை, உங்களது ஆட்சியில் அதிகாரவர்க்கம் செய்யுமென்றால், இதுதான் மக்களுக்கான மாசற்ற ஆட்சியா முதல்வரே? திரைப்படங்களில் அநீதிக்கு எதிராகச் சண்டையிட்டு அந்த மாயப்பிம்பத்தைக் காட்டியே வாக்குகளைப் பெற்று, ஆட்சியதிகாரத்துக்கு வந்த நீங்கள், நிஜத்தில் கொடுங்கோன்மையைக் கட்டவிழ்த்துவிட்டு செய்யும் கொடுமையெல்லாம் வாக்குச் செலுத்திய மக்களுக்குச் செய்யும் சனநாயகத் துரோகமாகும்.
ஆகவே, தம்பி ஆகாஷ் மரணத்தைக் கொலை வழக்காகப் பதிவுசெய்து, தொடர்புடைய காவலர்களைக் கைதுசெய்ய வேண்டுமெனவும், ஆகாஷின் குடும்பத்தினருக்கு 50 இலட்ச ரூபாய் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
எவ்வளவு அறிவுப்பூர்வமான விளக்கம் லாரன்ஸ்... உங்க சித்தாந்தத்தில் மக்களை நீங்கள் தெருநாயாக சித்தரிப்பதையும் , பிஸ்கட்டும் பிரியாணியும் போட்டு மக்களை குறைக்கவிடாமல் பார்த்துக்கொள்ளனும் எனக்கூறி ஒரு வாக்காளனின் உணர்வை கேவலப்படுத்தும் உங்கள் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன்.. மக்களின் எதிர்ப்பு குரல்களுக்கு ஏதாவது போட்டு வாயை மூடவேண்டும் என நீங்கள் சொல்வதில் உங்கள் அரசியல் பயணம் எதை நோக்கி செல்கிறது என புரிந்துவிட்டது.. இதுவரை உங்களிடம் இருந்ததாக கருதப்பட்ட மனிதாபிமானத்தின் மீது சந்தேகம் கொள்ளச்செய்கிறது உங்கள் பேச்சு.. ஆனால் உங்களுக்கும் இந்த மக்கள் ஓட்டு போடுவார்கள்.. கவலை வேண்டாம்..
இப்படிக்கு..
பிஸ்கட்டு பிரியாணிக்காக கையேந்தி நிற்காத மக்களில் ஒருவன்..
அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடும் அரசு மருத்துவமனைகளின் அலட்சியப்போக்கு தொடர்வதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
இராமநாதபுரம் மாவட்டம் பால்கரை கிராமத்தைச் சேர்ந்த சகோதரி தமிழ்ச்செல்வி, மூக்கு தண்டுவட அறுவை சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போது வரை சுயநினைவை இழந்த நிலையில் தள்ளப்பட்டுள்ள செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. மருத்துவக் கல்லூரி நிர்வாகம் எந்த தகவலையும் கூற மறுத்து உண்மையை மூடி மறைப்பது வன்மையான கண்டனதுக்குரியது.
அடுத்தடுத்து அரசு மருத்துவ மனைகளின் அலட்சியப்போக்கும், தவறான மருத்துவமும் தொடர்வது பெரும் கவலை அளிக்கிறது. அரசு மருத்துவமனைகளின் தூய்மையையும், பாதுகாப்பையும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகையையும், மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகளின் இருப்பையும், அளிக்கப்படும் மருத்துவத்தின் தரத்தையும் உறுதிசெய்ய தமிழ்நாடு அரசு இனியாவது தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். அதனை முறையாகச் செய்யத் தவறுவதாலேயே அடுத்தடுத்து இதுபோன்ற துயரங்கள் நிகழ்கின்றன. கடந்த ஆட்சிகாலங்களில் நடைபெற்ற அதே அலட்சிய செயல்பாடு தற்போதைய ஆட்சியிலும் தொடர்வது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. அரசு மருத்துவமனைகளில் தரமற்ற மருத்துவமும், அரசுப்பள்ளிகளில் தரமற்ற கல்வியும் தொடர்வதை தவெக அரசு வேடிக்கை பார்ப்பது, மாற்றம் வரும் என்று நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றும் பெருந்துரோகமாகும்.
ஆகவே, அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் இது போன்ற கொடுமைகள் இனி வருங்காலங்களிலாவது நடைபெறாமல் தடுக்க, தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
அன்பிற்கினிய நண்பர் @Madeshjournali1 அவர்களே! உங்களது அன்பை முழுமையாக அறிவேன். அதுபோலவே, நானும் உங்கள் மீது அன்புகொண்டிருக்கிறேன். அந்த நட்பும், உறவும் எப்போதும் இருக்கும். அது வேறு.
காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர்/அமைச்சர் @drtkprabhu_TVK அவர்களை நெருங்கிப் பார்த்தபோதுதான் அவர் நல்லவரெனத் தெரிந்தது எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்! அவர் நல்லவரா? கெட்டவரா? எனும் முடிவுக்கும், மதிப்பீடுக்கும்கூட நான் செல்லவில்லை. அவரது அரசியலையும், அரசியலை அவர் அணுகும் முறையையும்தான் விமர்சிக்கிறேன்; எதிர்க்கிறேன்.
அப்புறம், நல்லவர் என அவரைக் கட்டமைக்க நடந்த PR Strategies, Narratives, Paid Interviews எல்லாவற்றையும் 'நன்றாக' அறிவேன். திரைக்கவர்ச்சியாலும், தனிநாயகப் பிம்பத்தாலும் வெற்றியை ஈட்டினாலும், சில தொகுதிகளில் தவெகவும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தது. அதில் இந்த 'நல்லவர்' பிரபுவும் அடக்கம் என்பதைத் தாங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன். காரைக்குடி தொகுதியில் நல்லவர் செய்த சாதிரீதியிலான அணிதிரட்டலையும், பணப்பட்டுவாடாவையும் மறுக்க முடியுமா?
போகட்டும்! கனிமவளத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று இருக்கிறார். வளக் கொள்ளையைத் தடுத்து, மண்ணின் வளத்தைக் காக்கும் வேலையைச் செய்யட்டும். முழுமையாக வரவேற்கலாம். அதனைவிடுத்து, ரீல்ஸ் மூலம் ஊரை ஏமாற்றும் அற்பத்தனம் வேண்டாம் என்பதுதான் என்னுடைய தாழ்மையான கருத்து!
அப்புறம், ஈழப்பெருநிலத்தில் மாவீரர் தெய்வங்கள் செய்த இனமானப் பணிகளில் கோடியில் ஒரு துளியாவது செய்து, புலிக்கொடி போர்த்தப்பட்டு பூமிக்குள் செல்லுவதே எனது வாழ்வின் உயரமாகவும், உச்சமாகவும் கருதுகிறேன் என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிரிழந்த செவிலியர் மாணவி சீதாலட்சுமி மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
புதுக்கோட்டை மாவட்டம் தொண்டைமாநல்லூரைச் சேர்ந்த விவசாயிகளான சேட்டு – கலைச்செல்வி இணையரின் அன்புமகள் சீதாலட்சுமி அரசு மருத்துவமனையின் தவறான மருத்துவ சிகிச்சை காரணமாக உயிரிழந்த துயரநிகழ்வு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. செவிலியர் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்துவந்த அன்புமகளை இழந்து வாடும் பெற்றோருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரினை பகிர்ந்துகொள்கிறேன்.
அன்புமகள் சீதாலட்சுமி மூக்கில் வளர்ந்த சதையை அகற்றுவதற்காக, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சைக்காக அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து அளித்து மாணவி உயிரிழக்க காரணமாகியுள்ள மருத்துவர்களின் அலட்சிய செயல்பாடு வன்மையாக கண்டிக்கதக்கதாகும்.
உயிர்காக்கும் மருத்துவம் என்பது தனியார் முதலாளிகள் இலாபமீட்டும் பெரும் விற்பனை சந்தையாகிவிட்ட தற்காலச் சூழலில், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அரசு மருத்துவமனைகளையே முற்றுமுழுதாக நம்பி மருத்துவம் மேற்கொள்ள வேண்டிய நிலையுள்ளது. கோடிக்கணக்கான ஏழை மக்களின் உயிர் காக்கும் பெரும்பொறுப்பைச் சுமந்து நிற்கும் அரசு மருத்துவமனைகள் பெரும் தொண்டுள்ளத்தோடும், கவனத்தோடும் மருத்துவச்சேவை புரிய வேண்டியது இன்றியமையாததாகும். ஆனால், நடைமுறையில் அவ்வாறு செயல்படுவதில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளை அவமானப்படுத்துவதும், படிக்காத பாமர மக்கள்தானே என்ற அலட்சியத்தோடு மருத்துவம் அளிப்பதுமே தொடர் உயிரிழப்புகளுக்கு அடிப்படை காரணமாகும்.
தமிழ்நாடு அரசும், அரசு மருத்துவமனைகளின் தூய்மையையும், பாதுகாப்பையும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகையையும், மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகளின் இருப்பையும், அளிக்கப்படும் மருத்துவத்தின் தரத்தையும் உறுதிசெய்ய, தொடர்ச்சியாகத் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டிருக்க வேண்டும். அதனை முறையாகச் செய்யத் தவறுவதாலேயே தற்போது அநியாயமாக ஓர் உயிர் பறிபோயுள்ளது. கடந்த ஆட்சிகாலங்களில் நடைபெற்ற அதே அலட்சிய செயல்பாடு தற்போதைய ஆட்சியிலும் தொடர்வது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. அரசு மருத்துவமனைகளில் தரமற்ற மருத்துவமும், அரசுப்பள்ளிகளில் தரமற்ற கல்வியும் தொடர்வதை தவெக அரசு வேடிக்கை பார்ப்பது, மாற்றம் வரும் என்று நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றும் பெருந்துரோகமாகும்.
ஆகவே, அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் இது போன்ற கொடுமைகள் இனி வருங்காலங்களிலாவது நடைபெறாமல் தடுக்க, தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். அன்புமகள் சீதாலட்சுமி உயிரிழக்க காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
மேகதாதுவில் கர்நாடக அரசு அணைகட்ட முயற்சிப்பதா? காவிரியில் தமிழர்களுக்கு உரிமை இல்லையா?
@CMOTamilnadu@TVKVijayHQ
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்க்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை எனப் பேசியிருக்கும் கர்நாடகத் துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் பேச்சு அடாவடித்தனத்தின் உச்சம்; காவிரி நதிநீர் உரிமையை முழுமையாகத் தங்களுக்கென சொந்தமாக்கத் துடிக்கும் மோசடித்தனத்தின் வெளிப்பாடு.
கன்னடம் எனும் மொழி பிறப்பதற்கும், கர்நாடகா எனும் மாநிலம் பிறப்பதற்கும் முன்பிருந்தே, காவிரிக்கும், தமிழ்நாட்டுக்கும் வரலாற்றுவழி உயிர்த்தொடர்பு இருக்கிறது. அதனை முற்றாக அறுத்து, உலக நதிநீர் பங்கீட்டு விதிகளுக்கு நேர்மாறாக, காவிரி நதிநீர் உரிமையை கர்நாடகத்துக்கு மட்டுமானதாக உரிமை கொண்டாடத் துடிக்கும் சூழ்ச்சியின் வெளிப்பாடே மேகதாதுவில் அணைகட்டும் வஞ்சகச்செயல். அதனை தமிழர்கள் நாங்கள் தட்டிக் கேட்காது, வேறு யார் கேட்பார்? காவிரியில் தமிழர்கள் எங்களுக்கில்லாத உரிமை வேறு யாருக்கு இருக்கிறது?
காவிரி நதிநீர் உரிமை என்ன கர்நாடகத்துக்கு மட்டுமான சொத்தா? ஒரு ஆற்றின் தலைப்பகுதியில் வாழ்பவர்களைவிட கடைமடைப் பகுதியில் வாழ்பவர்களுக்கே ஆற்றின் மீது அதிக உரிமை எனும் நதிநீர் பங்கீட்டு விதிகளின்படி, காவிரியின் மீது கர்நாடகத்தைவிட தமிழ்நாட்டுக்குத்தான் அதிக உரிமை இருக்கிறது. அப்படியிருக்கையில், டி.கே.சிவக்குமாரின் பேச்சு ஆணவத்தின் வெளிப்பாடு. அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஆகவே, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் ஆணவப்பேச்சை முதல்வர் விஜய் அவர்கள் கண்டித்து, மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழ்நாட்டு அரசின் சார்பாக எதிர்ப்பினைத் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
கோவை சிறுமியின் படுகொலைக்குக் காரணமானக் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த பத்து வயது சிறுமி கடத்திச்செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். ஒரு பச்சிளம் பிள்ளை கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டு, கொல்லப்பட்டிருப்பது நெஞ்சத்தைப் பதைபதைக்கச் செய்கிறது. ஆற்ற முடியா பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஆட்சி மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்பது போல, தவெகவின் ஆட்சியிலும் குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பது வெட்கக்கேடானது. பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பையும், சுதந்திரத்தையும், தனியுரிமையையும் உறுதிசெய்ய முடியாத ஒரு நாடு நாடல்ல; அது சுடுகாடு. தொடரும் பாலியல் வன்கொடுமைகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் இச்சமூகம் குற்றச்சமூகமாக மாறிவிட்ட பேராபத்துக்கான அறிகுறியாகும். ஒட்டுமொத்தச் சமூகமும் வெட்கித் தலைகுனிய வேண்டிய பேரவலம் இது. இதற்குக் குற்றங்கள் நடந்தேறிவிட்டப் பின்னர், குற்றவாளிகளைக் கண்டறிந்து கைதுசெய்வது மட்டும் போதாது; குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பே, முன்னுணர்ந்து தடுக்கக் குற்றத்தடுப்புக் காவல்துறையும் அமைக்கப்பட வேண்டும். எவ்விதக் கொடூரக் குற்றத்தையும் செய்வதற்குரிய குரூரச்சிந்தனையையும், துணிவையும் தரும் போதைப்பொருட்களின் புழக்கத்தையும், பரவலையும் முற்றாக ஒழிக்க வேண்டும். இனியொரு சிறுமியோ, பெண்ணோ ஒருபோதும் பலியாகக்கூடாது.
ஆகவே, சிறுமியின் படுகொலைக்குக் காரணமானக் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்குக் கடும் தண்டனைக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும், சிறுமியின் குடும்பத்தினருக்கு 50 இலட்சம் துயர்துடைப்புத்தொகை வழங்க வேண்டுமெனவும் ஆளும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, மருத்துவத்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
புதிதாக 8,000 மருத்துவமனைகளைத் திறப்பதற்கு இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனும் தவெக அரசின் அறிவுப்பு அதிர்ச்சியளிக்கிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தரம் உயர்த்துவோம் எனவும், கிராமப்புற மருத்துவமனைகளை நவீனமாக்குவோம் எனவும் தேர்தலில் வாக்குறுதியளித்துவிட்டு, இப்போது மருத்துவத்துறையில் கண்மூடித்தனமாகத் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் அரசின் செயல்பாடு வாக்குச் செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யும் சனநாயகத் துரோகமாகும். தனியார் முதலாளிகளின் இலாபவெறிக்கு மருத்துவத்துறையை தாரைவார்த்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனவும், ஆய்வுக்குப் பிறகு, நிரந்தர அனுமதி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருப்பது மருத்துவத்துறையில் சீர்கேடுகள் பெருகவே வழிவகுக்கும். அரசு மருத்துவமனைகளின் குறைபாடுகளையும், போதாமைகளையும், சிக்கல்களையும் தீர்த்து, அவற்றைத் தரம் வாய்ந்ததாக மாற்ற முயற்சி எடுக்காது, 8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு இப்போது எதற்கு திடீர் அனுமதி? ஏன் இந்த அவசரகதியிலான ஏற்பாடு? யாரைத் திருப்திப்படுத்த நடக்கிறது? யாருக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக இந்த தான்தோன்றித்தனமான அனுமதியும், உள்நுழையும்? ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், மாநிலத்தை ஆண்ட முந்தைய திமுக, அதிமுக அரசுகளும் தனியார்மயத்தை அரசின் நிர்வாகக்கொள்கை முடிவாகக் கொண்டதையே தவெக அரசும் அடியொற்றுமென்றால், எங்கிருக்கிறது மாற்று அரசியல்? எங்கிருக்கிறது மக்களுக்கான ஆட்சி? வெட்கக்கேடு!
ஆகவே, மருத்துவத்துறையை தனியார்மயமாக்கும் செயலை கைவிட்டு, அரசு மருத்துவமனைகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் தரம்உயர்த்தி, அனைவருக்கும் தரமான மருத்துவச்சிகிச்சைக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#400யூனிட்ரத்தம் NTK கொடுத்து உள்ளது இதை எல்லாம் பரப்ப தெரியாது உங்களுக்கு
இதை வெளியே சொல்ல மனம் இல்லாத செய்தி ஊடகம்
நல்லதை நாம் தான் வெளியே சொல்லவேண்டும்
Share max💥
#நாம்_தமிழரே_மாற்று
இந்த post repost செய்ங்க...
விட்ராதீங்க நண்பர்களே...
உறவுகளே...
அண்ணனின் கணக்கு 1M வரும் வரை நாம் இதை தொடர வேண்டும்
@Seeman4TN@_ITWingNTK@NaamTamilarOrg@NTKLiveNews
அண்ணனின் instagram https://t.co/GcjttY5krV…
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையைச் சேர்ந்த செய்தியாளரும், நாம் தமிழர் கட்சியின் மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளருமான அன்புத்தம்பி ஹாஜா முகைதீன் அவர்கள் தனது வீட்டின் வாசலிலேயே போதைக் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். தம்பிக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, முழு உடல்நலம் பெற்று மீண்டுவர துணைநிற்கிறேன்.
போதைப்பொருட்களின் விற்பனைக்கு எதிராக நிற்கும் ஒரு ஊடகவியலாளருக்கே இவ்வளவு பெரிய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, வன்முறைத்தாக்குதல் தொடுக்கப்படுகிறதென்றால், எளிய மக்களின் நிலை என்னவாக இருக்கும்? நாள்தோறும் போதைக்கும்பலின் அட்டூழியமும், பெண்களுக்கு எதிரான தாக்குதல்களும், வன்முறை வெறியாட்டங்களும் தொடர்ந்தவண்ணம் உள்ளன. திமுகவின் ஆட்சியில் நிகழ்ந்த கொடுமைகள்தான் தொடருமென்றால், நடப்பது தவெகவின் ஆட்சியா? இல்லை! திமுகவின் ஆட்சியா? இதுதான் மாற்று அரசியலா? முதல்வராகப் பதவியேற்றதும், ‘போதைப்பொருள் தடுப்புக்கான சிறப்பு அதிரடிப்படை அமைப்பு’ எனக் கையெழுத்திட்டாரே விஜய், என்ன செய்கிறது அந்தப் படை?
@CMOTamilnadu@TVKVijayHQ
இக்கொடூரத் தாக்குதல் நடத்தியவர்களை தமிழ்நாடு அரசு உடனடியாக கைது செய்து, கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
The Hindu YouTube Channel has exposed Vijay’s TVK’s narrative setting fraudulent activities to cheat the people of Tamilnadu. Link to video below!
விஜயின் தவெக-வின் தேர்தல் பொய் கருத்துருவாக்கத்தைத் தோலுரித்துள்ளது The Hindu வலையொளி.
காணொலியல் இருந்து: சமூக வலைத்தளங்களில் தவெக சார்பில் பொதுத்தொகுதியில் 28 தலித் MLAக்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டதாகப் பரப்பப்பட்டது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் அறிக்கைப்படி, உண்மையில், தவெக பொதுத்தொகுதயில் ஒரு SC வேட்பாளரை மட்டுமே நிறுத்தியது, அவர் வெற்றி பெறவில்லை. இக்கருத்துக்கு மாற்றாக, நிறைய பொதுத்தொகுதியில் SC வகுப்பினரை வேட்பாளர்களாக நிறுத்தியது நாம் தமிழர் கட்சி மட்டுமே ஆகும்.
இது ஒரு எடுத்துக்காட்டு. இது போன்று தவெக சார்பில் தேர்தல் நேரத்தில் பதியப்பட்ட பல்வேறு பித்தலாட்டக் கருத்துருவாக்கங்களை இக்காணொலி அலசுகிறது.
முழுக் காணொலி இணைப்பு: https://t.co/J40owVGXsD