வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ‘அரசு தங்கும் விடுதிகள்’ அமைக்கப்படும் என்ற அறிவிப்பு!!
"மெட்ராஸ்ல வேல கெடச்சா எங்க தங்குவ?
“நீ வேலைக்கு போக வேண்டாம்” ....
என்கிற கடைக்கோடி சமூகத்தின் அவல குரல் இனி கேட்க வாய்ப்பில்லை!!!
நன்றி திரு.@mkstalin 🟥⬛💥
நெல் சேமிப்பு கிடங்கு பத்தி பேசுறாரே, அவரு யாரு? விவசாயத் துறை அமைச்சரா ??
இல்ல, அறநிலையத்துறை அமைச்சர்...
அப்ப கரும்பு சாகுபடி பத்தி பேசுறாரே, அவர்தானே விவசாயத் துறை அமைச்சர்??
இல்ல, அவர் விளையாட்டுத் துறை அமைச்சர்...
அப்ப காவிரி நீர் வடிகால் பத்தி பேசுற அந்த அம்மாவா ??
இல்ல, அவங்க தொழில் துறை அமைச்சர்...
அப்ப நெல் மானியம் பத்தி பேசுறாரே அவரு???
வருவாய்த்துறை அமைச்சர்....
கடன் நிலைமை பத்தி சொல்றாரே , நிதியமைச்சரா ???
இல்ல, மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர்....
12,400-அ பன்னிரெண்டு ஆயிரத்து நாலாயிரம்-னு படிக்கிறாரே, நிதியமைச்சர் வரலையா???
அவர்தான் நிதியமைச்சர்....
எல்லா சப்ஜெக்ட்க்கும் எழுந்து நின்னு பேசுறாரே, முதலமைச்சரா ???
இல்ல, பள்ளி கல்வித்துறை அமைச்சர்...
எந்த கேள்விக்கும் பதில் சொல்லாம அமைதியா உட்கார்ந்து இருக்காரே ???
அவர்தான் முதலமைச்சர்....!!!
1.கலைஞர் மகளீர் உரிமை தொகை =மகளீர் உரிமைத்தொகை
2.நான் முதல்வன் = திறன் மேம்பாட்டுத்திட்டம்
3. முதல்வர் படிப்பகம் = படிப்பகம்
4. நெமிலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் =ஸ்டாலின் பெயரை மறைத்தது!
5. மகளீர் விடியல் பயணம் =மகளீர் பயணம்
6. மின்சார வாரியத்தில் 30 to 40 சதவிகிதம் கமிசன்= அதை சம்பந்தமாக புகார் வந்தால் நடவடிக்க்கை எடுப்போம்
7. தனியார் பள்ளிகள் உரிமை வழங்குவதில் ஊழல் - புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம்
8. டாஸ்மாக் பார்ட்டி fund : ன்னு பேசியது விஜய் , எந்த கட்சிக்கு fund யாருக்கு யார் கொடுத்ததுன்னு இதுவரை சொல்லவில்லை !
9. தொழிற்துறையில் பல தொழிற்சாலை, கமிசன் கேட்டதால்,ஆந்திராவுக்கு போயிட்டு என்று கீர்த்தனா சொல்லுது ,ஆனா ஆந்திர அமைச்சர் ; தமிழ்நாட்டில் இருந்து எந்த ஒரு முதலீட்டார்களும் எங்களிடம் வரவில்லை மேலும் புகாரும் தெரிவித்ததில்லை என்று சொல்கிறார்!
10.கஜானாவை துடைத்து எடுத்துட்டு போய்ட்டாங்கன்னு சொன்னது விஜய் ஆனா அடுத்தது திமுக திட்டங்களை செயல்படுத்தினார்!
11. கடந்த ஆட்சியில் உதயநிதிக்கும் , சபரீசனுக்கும் எல்லா துறைகளில் இருந்து கமிஷன் போனது ஆளுக்கு 16 துறைகள் என்று பிரித்துக்கொண்டார்கள் என்று பேசுவது ஆதவ் -ஆனா ஆதாரம் இல்லையாம்!
12. தமிழ்நாடு தீயணைப்புத்துறை ஆணைய தலைவராக மாற்றம் செய்யப்பட்ட சங்கர் ஜிவால் ராஜினாமா செய்தார் (17 JUNE 2026)
13. தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரிய தலைவராக மாற்றம் செய்யப்பட்ட சுனில்குமார் ராஜினாமா செய்தார் (17 JUNE 2026)
14. தமிழ்நாடு தகவல் ஆணையராக நியமிக்கப்பட்ட அபய் குமார் சிங்கும் ராஜினாமா செய்தார் (17 JUNE 2026)
15. மாதம் மாதம் மின் கட்டணம் -சொல்லினர் ஆனால் தற்பொழுதும் இரெண்டு மாதம் ஒருமுறை தான் நடக்கிறது
16. விஜய் தினமும் தலைமை செயலகத்தில் அவர் மேஜையில் ஒக்காந்து வீட்டில் இருந்து எடுத்து வரும் உணவை சாப்பிடுறார் : முழு பொய்
17. விஜய் அமரும் நாற்காலியில் இருந்த வெள்ளை துண்டு சம்பந்தமான அழுகுணி பரப்புரை
18. சிங்கப்பெண் திட்டம்ன்னு சொல்லி பரப்புரை ஆனா திமுக ஆட்சியில் கொண்டுவந்த அதே ரோந்து வாகனத்தில் ஸ்டிக்கர் ஒட்டி அம்பலப்பட்டது
19. முதல் பெண் அமைச்சர் கீர்த்தனா என்ற முழு பொய் பரப்புரை
20. 26 பட்டியல் சமுதாய மக்களை பொதுத்தொகுதியில் நிறுத்தியதாக பொய் பரப்புரை
21. வெள்ளை அறிக்கை நாங்க தான் கொடுக்குறோம் முதலில் என்று பரப்பி அசிங்கப்பட்டது, திமுக அரசு விதிகளுக்கு உட்பட்ட கடன் வாங்கியதாக ஒப்புதல்
22. விஜய்யின் சொந்த ஆஸ்தான ஜோசியருக்கு அரசு பதவி பிறகு பல்ட்டி
23. தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநருக்கு சேவகம்
24. எண்ணிலடங்காத பாலியல் குற்றங்கள் சாதிய கொலைகள்
25. டன் கணக்கில் போதை பொருட்கள் எரித்ததாக பரப்புரை காணொளி ஆனால் நடந்தது முந்தைய ஆட்சியில்
26. கீர்த்தனா அமைச்சரின் ரீலிஸ் சர்ச்சை மற்றும் பள்ளி மாணவியை அவமானப்படுத்தும் விதமாக நடந்தது
27. 2024ல் ஸ்டாலினால் மீண்டும் துவங்கப்பட்ட போர்ட் தொழிற்சாலையை தான் தொடங்கியதா விஜய் கும்பல் பரப்புரை
28. மாநிலங்களுக்கிடையே சரக்குப் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் எடுக்கப்பட்ட முயற்சிகளின் அடிப்படையில் கடலோர மாநிலங்களுக்கான பிரிவில் 2025க்கான ‘முன்மாதிரி மாநிலமாக’ (EXEMPLAR STATE) தமிழ்நாடு தேர்வு.அதை எடுத்துக்கொண்டு தங்கள் சாதனையாக விஜய் கும்பல் பரப்பியது
29. பத்திரிக்க்கையாளர்கள் ஒருங்கிணைப்பில் உருவான திருப்பரங்குன்றம் ஆவணப்படத்திற்கு தடை
30. மதம் மாறிய இசுலாமிய மக்களின் இடஒதிக்கீட்டிற்கு நீதிமன்றம் தடை விதத்தை கண்டுக்காமல் விட்டது !
31. பக்ரீத் (Bakrid) பண்டிகை மற்றும் இதர பொது நிகழ்வுகளில், பொது இடங்களில் ஆடு, மாடு போன்ற விலங்குகளைப் , வெட்டுவதற்கும் தடை விதித்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம் இதற்கும் தலையாட்டி அமைதி .
32. பொது இடத்தில் போதை பொருள் பயன் படுத்திய ஒரு அமைச்சர் அதற்கும் நடவடிக்கை இல்லை
33.சென்னை அருகே உள்ள தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு விவகாரத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு ,இந்த விவகாரம் என்ன ஆனதுன்னு தெரியாது
34. விஜய் கட்சிக்காரர்களால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அதே கட்சி சார்ந்த பெண் கட்சியில் இருந்து நீக்கம் அவர்கள் சுகந்திரமாக சுற்றிவருகிறார்கள்!
35. சென்னையில் போக்சோவில் கைதான இன்னொரு விஜய் கட்சிக்காரன் சில நாட்களில் விஜய் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கிறான்
36.தினகரன் கட்சி சட்டமன்ற உறுப்பினரை தங்கள் பக்கம் இழுத்து
37. அதிமுகவில் வென்ற ஆறு சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யவைத்து தன் கட்சிக்குள் இணைத்து
38. விஜய் கட்சிக்காரர்கள் பள்ளிக்கூடம் உள்ளே போய் விஜய் பாடலுக்கு மாணவர்களை ஆடவைத்தது
1/2 please come to 1st comment 🙏
⚖️ ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
❌ குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
"உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா?" என்று தமிழ்நாட்டுப் பெண்களை எல்லாம் கொதிப்படைய வைத்துள்ளது ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகை ஒருவருக்கு நடந்துள்ள அநீதி.
அந்தப் பெண்ணை ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ. சரவணனுக்கு நெருக்கமான அக்கட்சி நிர்வாகிகள் இருவர், வேலை வாங்கித்தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி உனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று எம்.எல்.ஏ சரவணன் சமரசம் பேச முயன்றதாக பாதிக்கப்பட்டப் பெண் கூறியுள்ளார்.
இதேபோல், இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பெண் கூறுகிறார்.
இன்னொரு அமைச்சருக்கும் இந்தப் பிரச்சினை தெரியும் என்கிறார். எல்லாம் மேலிடத்துக்கு தெரியும் என்று குற்றவாளிகள் கூறியதாகவும் சொல்லி உள்ளார்.
ஆளுங்கட்சியில் "யார் அந்த மேலிடம்" என்று மக்கள் கேட்கின்றனர்.
'தனிமனித ஒழுக்கம்' பற்றி பாடமெடுத்துள்ள முதலமைச்சரின் ஒட்டுமொத்த #SofaModel அரசும், இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்றுள்ளது.
குற்றத்தை செய்தவர்களை பாதுகாக்க முயன்றதோடு மட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்தும் நீக்கி இருக்கிறார்கள்.
பாலியல் வன்கொடுமை செய்திகளை கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் கலங்குகிறது - பதறுகிறது என்று 2 நாட்கள் முன்பு முதலமைச்சர் பேசினார்.
ஆனால், தன் கட்சியைச் சேர்ந்த த.வெ.க. ஆட்களே பாலியல் வன்கொடுமை செய்தால், பாதிக்கப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கிறார்.
Reels எடுத்து Post செய்ய தான் 'சிங்கப்பெண்' பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா?
இந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் என்ன பதில் வைத்திருக்கிறார்?
ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
அவருக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.