Welcome back, @Ford - my first car in which I learnt to drive was a Ford Fiesta which I held on to till 2022.
Thank you @TRBRajaa for all your efforts.
Hard work and dedicated follow up of #TeamCMMKStalin pays off !
#Ford is officially back to Chennai! 🎊
Today, Ford and the Government of Tamil Nadu signed an MoU in the presence of Honourable @CMOTamilNadu Thiru. @MKStalin avargal and our Honourable DyCM Thiru @Udhaystalin avargal.
Ford will invest Rs. 3,250 crore and create over 600 new direct jobs as it restarts its Chennai facility with production of next-generation, all-new engines with advanced technology.
True to his style, Honourable Chief Minister did not rest on his laurels and urged Ford to add more jobs with more products and increase their GCC presence in Chennai too ! Tamil Nadu is always ready for more !
#InvestInTN #BullishOnTN #JobsForTN #DravidianModel
அரசுப் பள்ளியில் ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் வெளியிட்டு மாணவியை அவமதித்த தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவைக் கண்டித்து கழக மகளிரணி சமூக வலைதளப் பொறுப்பாளர் மரு.யாழினி அவர்களது பத்திரிகையாளர் சந்திப்பு
அமைச்சர் கீர்த்தனா செய்தது Emotional Abuse & Harassment. சமூக புரிதலில்லாமல் குழந்தைகளிடம் அராஜகம் Victim card பிளே பண்ணாதீங்க, அந்த இடத்தில் அந்தக் குழந்தை தான் Victim
தவெக கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தங்களின் பிரச்சாரத்திற்கு குழந்தைகளைப் பயன்படுத்தி பெற்றோர்களைப் பிளாக் மெயில் செய்து வாக்களிக்க வைத்தனர். தற்போதும் தாங்கள் செய்யும் குற்றங்களை மறைக்க குழந்தைகளைக் கேடயமாக பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் தவெக அமைச்சர் சரத்குமார் அவர்கள் போதை பொருளை பயன்படுத்தியது போல ஒரு வீடியோ வெளியானது எதிர்ப்பு கிளம்பியதும் உடனடியாக அவரது குழந்தையை கேடயமாக்கி அதில் இருந்து தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறார். நிறைய தவெக நிர்வாகிகள் தொடர்ச்சியாக குழந்தைகளை இது போன்று எமோஷனலா அப்யூஸ் பண்ணிட்டு இருக்காங்க. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
நேற்று அமைச்சர் கீர்த்தனா அவர்கள் செய்ததும் அந்த மாதிரியான ஒரு ஹராஸ்மெண்ட்தான். அவங்க அரசு பள்ளிக்கு சென்று அவர்களின் கருத்தை நிரூபிப்பதற்காக எல்லோர் முன்பும் ஒரு மாணவியை அவமானப்படுத்தி இருக்காங்க. இது அமைச்சர் கீர்த்தனாவிற்கு அசிங்கமான செயலா இல்லையா.? அது தப்பாவே தெரியலையா அவங்களுக்கு.?
நீங்க அந்த வீடியோ பார்த்தாலே தெரியும் அவங்க அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்ற முன் முடிவுடன் அங்கு சென்றிருக்கிறார். அவர் சில ஆங்கில சொற்களுக்கு தமிழ் அர்த்தம் கேட்கிறார் . அதற்கு அந்த குழந்தைகள் பதில் அளிக்கும் முன்பே மாணவர்களுக்கு தெரியவில்லை பார்த்தீங்களா என பேசுகிறார். ஆசிரியர் தெளிவாக மாணவர்களிடம் கேட்கும் போது அதற்கு சரியான தமிழ் அர்த்தம் கூறுகிறார்கள் மாணவர்கள். ஒரு மாணவி எழுந்து எவர்லாஸ்டிங்னா கடைசி வரைக்கும் என பதில் அளிக்கிறார். மாணவி பதில் அளித்ததும், நாம் கூறியதை மாணவிகள் பொய்யாக்கி விட்டனர் என அமைச்சர் பதறுகிறார். ஒரு நல்ல அமைச்சராக இருந்தால் மாணவி பதில் அளித்ததை ஊக்கப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக மாணவி பதில் அளித்ததை தனக்கு நேர்ந்த அவமானமாகக் கருதி உங்க அப்பா என்ன செய்கிறார் என அடுத்த கேள்வியைக் கேட்கிறார். ஒரு சமூக புரிதல் உள்ள யாரும் எந்த மாணவர்களிடமும் உடனடியாக அப்பா பற்றி கேட்க மாட்டார்கள். எத்தனையோ குழந்தைகள் அப்பா இன்றி பள்ளியில் படிக்கின்றனர். அப்பாவின் பணியை வெளியே சொல்ல அசௌகரியமாக நினைக்கும் குழந்தைகள் உள்ளனர். இப்படி கேள்வி கேட்பது அவர்களை உளவியல் ரீதியாக கடுமையாக பாதிக்கும். சமூக புரிதல் இன்றி இப்படி கேள்வி கேட்பது அபத்தமான ஒன்று.
இன்னொன்று அமைச்சரிடம் ஆரம்பத்தில் அந்த மாணவி நார்மலாக நின்று மிக தைரியமாக பேசிக்கொண்டு இருக்கிறார் . ஆனால் அமைச்சரின் நடவடிக்கையால் அந்த குழந்தை பயந்து போய் கை கட்டி பேச ஆரம்பிக்கிறது. நம்ம திராவிட இயக்கத்தில் யார் முன்னாடியும் கை கட்டி நிக்க கூடாது என சொல்லிக் கொடுத்துள்ளோம். இவர்கள் பெரியாரை பெயரளவிற்கு கொள்கைத் தலைவராக வச்சிருக்காங்க ஆனா அந்த விவரம் எதுவுமே அவங்களுக்கு தெரியாது. அந்த குழந்தை பயந்து போய் நிற்கும் போது குழந்தையின் பயத்தை போக்கி இயல்பாக்க கூட அவர் முயற்சிக்கவில்லை. ஆனாலும் அந்த நேரத்தில் மறுபடியும் மறுபடியும் உனக்கு தெரியாது உனக்கு தெரியாது என்று மட்டம் தட்டும் எண்ணத்தோடு நடந்து கொண்டுள்ளார். இந்த சமூகத்தில் உனக்கு படிப்பு வராது படிப்பதற்கு தகுதி உனக்கு இல்லைன்னு சொல்லி படிக்க விடாம இருந்த இந்த சமூகத்துல படிப்பு எல்லாருக்குமானது என்ற கொள்கையை எடுத்து அதற்காக நூற்றாண்டு காலம் போராடி கல்வியை எல்லாரிடமும் கொண்டு போய் சேர்த்திருக்கோம். அப்படி இருக்கிற ஒரு சமூகத்தில் எந்தவிதமான வரலாறும் தெரியாது, என்னென்ன போராட்டங்கள் நடந்துச்சுன்னு எதுவுமே தெரியாம பள்ளிக்கு போய் குழந்தைகளை எல்லார் முன்னாடியும் மட்டம் தட்டி பேசுறீங்க அப்படின்னா உங்களோட நோக்கம் என்ன.?
நல்லா படிச்ச மேதாவிகளுக்கே நிறைய பேர் இருக்கிற இடத்துல பயம் ஏற்பட்டு சில வார்த்தைகள் அவங்களுக்கு மிஸ் ஆகதான் செய்யும் அதுக்குன்னு உடனே அவங்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்று சொல்ல முடியாது இல்லையா.? அந்த குழந்தைக்கும் அப்படி தான் ஆசிரியர் கேட்டவுடன் சரியான பதில் அளிக்கிறார். அதற்கு முன்பு வரை தைரியமாக பதில் அளித்து வந்தவர் உங்க அப்பா என்ன செய்யறாங்க என கேட்டவுடன் அதற்கு கூலித்தொழிலாளர் என சொல்லும் போது அவரது குரல் தளர்கிறது. அந்த இடத்தில அந்த குழந்தையை சைக்கலாஜிக்கலா அமைச்சர் எப்படி ட்ரமடைஸ் பண்ணி இருக்காங்க என்று இப்ப வரை அவர்களுக்கு புரியவில்லை.
இன்றுமே அவங்கள தற்காத்துக்க தான் பேசுறாங்க, அவங்களோட தற்பெருமையை மட்டும் தான் பேசுறாங்களே தவிர்த்து அந்த குழந்தை மேல அவங்க உருவாக்கின பாதிப்பு என்ன என அவங்க கொஞ்சம்கூட யோசிக்கவே இல்லை.
இன்னொரு முக்கியமான விஷயம் இரண்டு கேள்விக்கு குழந்தை பதில் சொல்லிய உடன் அமைச்சர் தனக்கு இன்சல்ட் ஆனதாக நினைத்து ‘இதே கேள்வியை கடைசி பெஞ்ச் மாணவர்களிடம் கேட்டால் தெரியாது’ என கூறுகிறார். கடைசி பெஞ்சில் இருக்கும் மாணவர்களுக்கு அது தெரியாது என இவர்களுக்கு எப்படி தெரியும்.? முதல் பெஞ்ச் கடைசி பெஞ்ச் என்ற பாகுபாடு எல்லாம் இருக்க கூடாது என கற்பித்தல் முறையிலேயே மாற்றம் கொண்டு வந்து இப்போது அனைவரும் நன்றாக படிக்கும் சூழலை உண்டாக்கி வருகிறோம். இப்போது வந்து கடைசி பெஞ்ச் மாணவர்களுக்கு தெரியாது அவர்கள் படிக்க மாட்டார்கள் என்பது போல பேசி மாணவர்களை மட்டம் தட்டுகிறார். கடந்த திமுக ஆட்சியின் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இது மாதிரி ஒரு பள்ளிக்கு சென்றிருந்த போது அங்கு மாணவர்கள் மத்தியில் பேச தயங்கிய மாணவனை ஊக்கப்படுத்தி அவரது பயத்தை போக்கி பேசவைத்தார். அதன பிறகு அந்த மாணவனும் அழகா பேசுவார்.
உனக்கு படிப்பு வராது நீ முட்டாள் உனக்கு எதுவுமே தெரியாதுன்னு சொல்றது இந்த தவெக அரசு. உன்னால முடியும் நாங்க இருக்கோம் என தட்டிக்கொடுத்து படிக்க வைத்தது திராவிட மாடல் அரசு.
ரீல்ஸ் மோகம் ரீல்ஸ் ஆட்சினு சொன்னா மட்டும் அவங்களுக்கு கோபம் வருது ஆனா ரீல்ஸ்னால தான் நேற்று மருத்துவர்கள் , செவிலியர்கள் போராட்டம் செஞ்சு இருக்காங்க. தவெக நிர்வாகிகள் ரீல்ஸ் எடுத்து இடையூறு செய்வதால் எங்க வேலையைப் பார்க்க முடியவில்லை என கூறி இந்த ரீல்ஸ் கலாச்சாரத்தை நிறுத்த சொல்லி போராட்டம் செஞ்சிருக்காங்க.
தவெக நிர்வாகிகள் தொடர்ச்சியாக ஹாஸ்பிடல்ஸ், ஸ்கூல்ஸ் என்று அனைத்து இடங்களிலும் போய் ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் போட்டுட்டு இருக்காங்க. அவங்களுக்கு தைரியம் இருந்தால் கமிஷ்னர் ஆபீஸ்ல , கலெக்டர் ஆபீஸ்ல போய் ஆய்வு செய்து ரீல்ஸ் போடுங்களேன் பார்ப்போம். பள்ளிகள் , மருத்துவ மனைகளில் ரீல்ஸ் எடுத்து பதிவிடுவதை உடனே நிறுத்த வேண்டும்.
இப்போது அமைச்சர் கீர்த்தனா விக்டிம் கார்ட் பிளே பண்றாங்க இது எந்த விதமான மனநிலை அந்த இடத்தில் விக்டிம் அந்த குழந்தை தான். அந்த வீடியோவ அந்த குழந்தையின் பெற்றோர்கள் , நண்பர்கள் , உறவினர்கள் பார்த்து என்ன பேசுவாங்க நாளைக்கு அந்த குழந்தைக்கு என்ன கான்ஃபிடன்ஸ் இருக்கும். இந்த அரசால குழந்தைகளுக்கு கான்ஃபிடன்ஸ் பில்ட் பண்ண முடியலனா கூட பரவாயில்லை ஆனால் நாங்க கஷ்டப்பட்டு பில்ட் பண்ணி வச்சிருக்க அந்த கான்பிடன்ஸ தயவு செஞ்சு உடைக்காதீங்க.
திமுக ஆட்சியின் போது பள்ளிக்குழந்தைகளை பல்வேறு வகையில் ஊக்கப்படுத்தினோம். எண்ணும் எழுத்தும் , இல்லம் தேடி கல்வி, மாடல் ஸ்கூல்ஸ்னு அத்தனை திட்டங்கள் கொண்டு வந்து மாணவர்களின் லிட்ரசிய இம்ப்ரூவ் பண்ணி இருக்கோம். அவங்களை என்கரேஜ் செய்யனும் என்று கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற ஒரு விழாவை எடுத்து அவங்களைப் பெருமைப்படுத்தினோம். ஜாப்பனீஸ், பிரெஞ்சு, கொரியன் எல்லா லாங்குவேஜ்லயும் பேச வச்சிருக்கோம். அவர்களை கல்வி சுற்றுலாவிற்காக வெளிநாடு அழைத்து சென்றோம். அப்படி கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கின அந்த குழந்தைகளோட கான்ஃபிடன்ஸ தயவு செஞ்சு உடைச்சிராதீங்க. உங்க துறையில கவனம் செலுத்துங்க. ஆட்சிக்கு வந்து 50 நாள் ஆயிடுச்சு. இதுவரை என்ன இன்வெஸ்ட்மென்ட் இங்க கொண்டு வந்திருக்காங்க எனற தகவல் இல்லை.
கடந்த ஆட்சியில் தொழில் தொடங்க பணம் கேட்கபட்டது என புகார் சொன்னதற்கு ஆதராம் எங்கே என கேட்டபோது என் ட்வீட்ல ஒருத்தர் கூறினார் அதை ரீ டிவிட் செய்துள்ளேன் பாருங்க என சொல்லும் அளவு நாலேஜ் வச்சிருக்க மினிஸ்டர் எப்படி எங்க ஸ்டூடண்ட்ஸ பார்த்து இந்த மாதிரியான கேள்வி கேட்கலாம். குழந்தைகளை பார்த்து கேட்கறது ஹீரோயிசம்னு நினைச்சுட்டு இருக்கீங்க. அது ஹீரோயிசம் கிடையாது. 2000 கோடி கல்வி நிதி கொடுக்கலனாலும் எங்க குழந்தைகளோட கல்வியை நாங்க பார்த்துப்போம். அவங்களுக்கான திட்டங்களை நாங்க கொண்டு வருவோம்னு சொல்லி குழந்தைகளுக்காக தொடர்ச்சியான திட்டங்களைக் கொண்டு வந்து ஒன்றிய அரசை எதிர்த்து போராடுனார் எங்க கழக தலைவர் அவர்தான் ஹீரோ. ஹீரோயிசம் ரீல்ஸ்ல இல்ல. நிஜமா நீங்க இறங்கி மக்கள் சேவை பண்ணுறது தான் ஹீரோயிசம். சூட்டிங் எல்லாம் பிறகு பார்த்துக்கலாம். குழந்தைகளை தயவு செய்து இந்த மாதிரி ரீல்ஸ்களில் இருந்து கீப் தெம் அவுட்.
***
மின்துறை வெள்ளை அறிக்கை வெளியிட்டு திமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்த மின்துறை அமைச்சருக்கு திமுக முன்னாள் அமைச்சர் திரு.செந்தில் பாலாஜி அவர்கள்
இன்று தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளனர். கடந்த ஐந்தாண்டுகள் திராவிட மாடல் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் நலிவடைந்து கிடந்த மின்சார வாரியம் காப்பாற்றப்பட்டது.
கடந்த ஐந்தாண்டுகளில் எங்களின் கழக தலைவர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது மின்துறைக்கு தேவையான நிதிகளை ஒதுக்கி சீரான மின் விநியோகத்திற்கு வித்திட்டார்.
கடந்த ஐந்தாண்டு திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் மின் தேவையானது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தே வந்துள்ளன. அப்படி மின் தேவை அதிகரித்த போதும் மக்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இப்போது வெளியிடப்பட்டுள்ள வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள வருவாய் பற்றாக்குறையானது 2011-16 இல் 56,361 கோடி , 2016-21 இல் 58,534 கோடி ரூபாய். முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் மூன்று கட்டங்களாக மின்சார கட்டணம் ஏற்றப்பட்டது. 37% , 3.5% , 16% என அந்த கட்டண உயர்வு இருந்தது. அப்படி மின் கட்டணம் ஏற்றப்பட்ட போது கூட வருவாய் பற்றாக்குறை என்பது ரூ. 56,000 கோடி. அதற்கடுத்து ரூ58,000 கோடி என்ற அளவிற்கு உயர்ந்திருந்தது. ஆனால் கடந்த எங்களின் ஐந்தாண்டு ஆட்சியில் வருவாயானது ரூ 1,48,77, 856 உயர்ந்து ரூ.4,97,996 ஆக இருந்தது. வருவாய் பற்றாக்குறை ரூ 34,447 கோடியாக குறைக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் 58,000
வருவாய் அதிகரித்த போது செலவும் அதிகரித்துள்ளது பற்றி கூறும் மின்சாரத்துறை அமைச்சர் அந்த செலவுகள் எதற்காக செய்யப்பட்டுள்ளன என்ற தகவலை மட்டும் மறைத்து விட்டார். அதையும் வெளிப்படையாக மக்கள் முன் கூறி இருக்க வேண்டும் ஆனால் அதை தவெக அரசு மறைத்துவிட்டது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் 13.5% வட்டி க்கு பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கப்பட்டிருந்தது. அதை எல்லாம் சீர் படுத்தி 9.5% வட்டி என்ற அளவிற்கு குறைக்கப்பட்டது. இதன் மூலம் ஆண்டுக்கு 1200-1500 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டது. அதேபோல பிளை ஆஸ் (fly ash) விற்பனை ஆண்டுக்கு 90 கோடி ரூபாய் என்றிருந்ததை ஆண்டுக்கு 160 கோடி ரூபாய் என்ற அளவிற்கு வருவாய் உயர்த்தப்பட்டது.
2019 - 20 ஆம் ஆண்டு தமிழ் நாட்டின் மின் தேவை என்பது 94,947 மில்லியன் யுனிட் அதுவே 2020-21 இல் 93,344 , 2021-22 இல் 98,674 மில்லியன் யுனிட், 2022-23 இல் 1,03,546 மில்லியன் யுனிட், 2023-24 இல் 1,11,504 மில்லியன் யுனிட், 2024-25 இல் 1,16,813 மில்லியன் யுனிட் ஆக 94,947 மில்லியன் யுனிட் லிருந்து 1,16,813 மில்லியன் யுனிட் ஆக மின் தேவை அதிகரித்துள்ளது. ஏறத்தாழ 25,000 மில்லியன் யுனிட் அதிகரித்துள்ளது. அப்படி அதிகரிக்கும் போது அதற்கான கொள்முதலை அதிகரிக்க வேண்டும் , உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதற்கான செலவினம் என்பதும் அதிகரித்துள்ளது இதனை வெள்ளை அறிக்கையில் வெளியிட்டிருக்க வேண்டும்.
அதேபோல இந்த வெள்ளை அறிக்கையில் திமுக வின் திட்டங்களையே பட்டியலிட்டுள்ளனர்.
2021 இல் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற போது மின்சார வாரியத்தின் கடன் 1,59,731கோடி இருந்தது. ஆண்டுக்கு 15,000 கோடி வட்டி மட்டுமே கட்டி வந்தோம். ஐந்தாண்டுகளில் முந்தைய ஆட்சியில் வாங்கிய கடனுக்கான வட்டி மட்டுமே 75,000 கோடி கட்டி உள்ளோம். இதை கூறாமல் மறைத்துள்ளனர்
அதே போல அறப்போர் இயக்கம் தொடர்ந்துள்ள வழக்கில் ராஜஸ்தான் மின் மாற்றி கொள்முதலோடு தமிழ்நாட்டை ஒப்பிடுவதே தவறானது. நமது டெண்டர் முறை வேறு அவர்களுடையது வேறு. நாம் 25 ஆண்டுகள் நிலைத்திருக்க கூடிய தரமான மின் மாற்றிகளை வாங்குகிறோம். ஆனால் அவர்களுடைய மின்மாற்றி வாழ் நாள் 16 ஆண்டுகள் தான். அதே போல ஐந்தாண்டுகள் மெயிண்டனன்ஸ் அந்நிறுவனங்களின் பொறுப்பு அதற்காக நாம் 5% நிதியை பிடித்தம் செய்து வைத்துள்ளோம். ஆனால் ராஜஸ்தான் அரசு மூன்று வருடங்கள் மெயிண்டனன்ஸ், 0.5% நிதி மட்டுமே பிடித்தம் செய்கிறார்கள். தரமான பொருளுக்கும் டூப்ளிகேட் பொருளுக்குமான விலை வேறு வேறு ஆக தான் இருக்கும். நாம் தரமான மின் மாற்றியை வாங்குகி உள்ளோம். அனைத்து டெண்டர்களும் ஆன்லைன் முறையில் வெளிப்படையாக நடந்துள்ளது. நாம் நிர்ணயித்துள்ள தர அளவுகளை குறைக்காமல் , நிபந்தனைகளை மாற்றாமல் புதிய அரசு எவ்வளவு ரூபாய்க்கு கொள்முதல் செய்வார்கள் என்பதை பார்ப்போம்.
அதேபோல கடந்த ஆட்சியில் எந்த கட்டமைப்பும் செய்யவில்லை என சொல்கிறார் அமைச்சர் ஆனால் அவர் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையிலேயே எங்களது ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்பு நடவடிக்கைகளும், புதிய மின் உற்பத்தி நிலையங்களும் இடம் பெற்றுள்ளன. 99,573 மின்மாற்றிகள் புதியதாக நிறுவப்பட்டுள்ளதை வெள்ளை அறிக்கையிலேயே கூறியுள்ளார்கள். 423 துணை மின் நிலையங்கள் அறிவிக்கப்பட்டு பல துணை மின் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
இப்படி வெள்ளை அறிக்கையிலேயே நாங்கள் செய்த திட்டங்கள் இடம் பெற்றிருந்தும் அதை திரித்து அமைச்சர் பேசி உள்ளார்.
வட சென்னை அனல் மின் திட்டம் நிலை 3 , உடன் குடி மின் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டன.
எண்ணூர் அனல் மின் நிலைய பணிகள் 75% நிறைவு பெற்றது.;
குண்டாறு மின் திட்ட பணிகள் 85% முடிந்துவிட்டது; கொல்லிமலை மின் திட்டம் 90% முடிந்துவிட்டது.
சமீபத்தில் தவெக அரசு வெளியிட்ட 300 ஊழியர்களுக்கான பதவி உயர்வு என்பது திமுக ஆட்சியில் இறுதி செய்யப்பட்டது. அதேபோல சமீபத்தில் வழங்கிய பணி ஆணைகள் கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் tnpsc தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இப்படி திமுக அரசு செய்த செயல்களுக்கு தங்களின் ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை செய்து வருகின்றனர். ஏன் இதனை வெளிப்படையாக இந்த அரசு தெரிவிக்கவில்லை.
மேலும் கடந்த ஆட்சியில் மின்வாரியத்துறை தொடர்பாக எங்கள் தலைவரது
குடும்பத்தையோ, எதிர்க்கட்சி தலைவர் அவர்களின நண்பர்களையோ இணைத்து அவதூறு பரப்பினால் அவர்கள் மீீீது
வழக்கு தொடுக்கப்படும்.
இப்போது முதல்வரின் தனி செயலர் ஆக நியமிக்கப்பட்டுள்ள அவரது சினிமா pro வான ஜெகதீஷ் தான் தமிழ்நாட்டின் மொத்த நிர்வாகத்தையும் பார்க்கிறார் என சொன்னால் அதை ஏற்றுக்கொள்கிறார்களா.?
மின் வெட்டு பிரச்சினையால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். அதை தீர்க்க ஆய்வுக் கூட்டமே நடத்தவில்லை . அதை நான் எடுத்து சொல்லி கேள்வி கேட்டும் இன்று வரை பதில் இல்லை. தங்களின் நிர்வாகத் திறமை யின்மையை மூடி மறைக்க திமுக மீது ஆதாரமற்ற அவதூறுகளை கூறிக்கொண்டு இருக்காமல் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க இந்த அரசு நவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரேயொரு போஸ் தான் குடுத்தாரு CM Sir..
மொத்த திமுக வும் ஆக்டிவ் ஆகி முன்னாள் அமைச்சர்கள் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்ல முடியாம தற்குறி கட்சி முழி பிதுங்கி நிக்குது..
வடிவேலு சொல்ற மாதிரி இரண்டு கழுத்துல ஏறுது, இரண்டு மூக்குல ஏறுது, இரண்டு கடவாய்ல ஏறுதுனு ...🤣🤣🤣
உலகளாவிய முதலீடுகளுக்கான போட்டி மிகக் கடுமையானது; முதலீட்டாளர்களுக்கு பல்வேறு தேர்வுகள் உள்ளன. இந்நிலையில் இன்றைய ரீல்ஸ் மாடல் அரசு சொல்லும் ஊழல் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்திருந்தால், இந்தியாவின் அதிவேகமாக வளர்ந்து 2024-25ல் 11.2% ஆகவும் 2025-26ல் 13.16% ஆகவும் இரட்டை இலக்க வளர்ச்சியைக் கொண்ட மாநிலப் பொருளாதாரமாக நாம் உருவாகியிருக்க முடியாது. இந்தியாவின் மொத்த உற்பத்தி வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு ஏறத்தாழ 14.5% ஆகவும் இருந்திருக்காது. தமிழ்நாட்டின் அனைத்து மண்டலங்களுக்கும் தொழில் வளர்ச்சி கிடைத்திருக்காது. இதெல்லாம் இன்றைய ஆட்சியாளர்கள் முதலில் புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும். மாண்புமிகு தலைவர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் செயல்பாடுகளை பார்த்து கற்றுக்கொண்டு அதில் 10% பணியை தற்போது பொறுப்பில் உள்ளவர்கள் செய்தாலே தமிழகத்தில் இன்று நிலவும் அசாதாரண முதலீட்டுச் சூழல் சற்று சரியாகும்.
உண்மைகளை மறைத்து, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பரப்பப்படும் அவதூறுகளால் தனிப்பட்ட முறையில் திமுக பாதிக்கப்படப் போவதில்லை. ஆனால், இப்படி பொறுப்பற்ற முறையில் தமிழ்நாட்டின் முதலீட்டு ஊக்குவிப்பு செயல்பாடுகள் மீது சேற்றை அள்ளி வீசினால் தமிழ்நாடு என்கிற இந்த மகத்தான மாநிலத்தின் வளர்ச்சிதான் பாதிக்கப்படும். புதிய முதலீடுகளை ஈர்க்கும் வாய்ப்பு பறிபோகும். தமிழ்நாட்டிலிருந்து வாய்ப்புகளை அண்டை மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல உதவுவதே இந்த அரசின் நோக்கம் அல்ல என்று நான் இன்னமும் மனப்பூர்வமாக நம்புகிறேன். எங்கள் தலைவரும் அவர் வழியிலான இயக்கமும் நானும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டவர்கள்.
ரீல்ஸ் மாஃபியா கோஷ்டிகளை வைத்து பொய்களைப் பரப்பி, தி.முக.வை குறை சொல்வதை இனியாவது விட்டொழியுங்கள். 2016-21 அ.தி.மு.க ஆட்சியை விட 5 மடங்கு அதிகமான முதலீடுகளை தி.மு.க அரசு ஈர்த்த நிலையில், அந்தளவில் கூட அல்ல, உங்கள் ஆட்சிக்காலத்தில் எங்களைவிட இரண்டு மடங்கு அளவிலாவது முதலீட்டை ஈர்க்க முடிகிறதா என்கிற வேலையை உருப்படியாகப் பாருங்கள். அர்த்தமற்ற அரைவேக்காட்டு அரசியல் காழ்புணர்ச்சியோடு குறை பேசுவதை விட்டு, கொஞ்சமாவது செயல்படட்டும் த.வெ.க. அரசு.3/3
முதலீடுகள் அரசியலாக்கப்படக் கூடாது என்பதில் எங்கள் தலைவர் தலைமையிலான அரசும் அதில் அமைச்சராக இருந்த நானும் உறுதியாக இருந்தோம். முதலீட்டு ஊக்குவிப்பைச் சுற்றியுள்ள அற்ப அரசியல் தாக்குதல்கள் மாநிலத்திற்குத்தான பாதிப்பை ஏற்படுத்தும். எனது பதவிக் காலம் முழுவதும் முதலீடுகள் தொடர்பாக பல தரப்பிலிருந்தும் விமர்சனங்களை எதிர்கொண்டேன். தேவையானபோது மட்டுமே பதிலளித்தேன். ஆனால் எந்த முதலீட்டாளரையும் சிரமமான நிலைக்கு தள்ளாதிருப்பதில் எப்போதும் கவனமாக இருந்தேன். அமைச்சரான எனக்கு அந்த முதிர்ச்சியை வழங்கக்கூடிய தகுதியுடையவராக எங்கள் முதலமைச்சர் இருந்தார். புதிய ஆட்சியாளர்கள் இனியாவது இதை உணர்ந்து, ஒரு அரசியல் வாதத்தில் வெற்றி பெறுவதற்காக பல முதலீட்டாளர்களின் பெயர்களை சேற்றில் இழுத்து விடாமல் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
நேற்று முதல், பல தொழில் துறையினர் எனக்கு தொலைபேசி மூலமாக பேசி இந்த புதிய அரசின் பிரதிநிதிகள் விமர்சனங்களை கையாளும் விதமும், பொதுவெளியில் சேறு வாரி இறைக்கும் விதமும் குறித்து அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். உலகளாவிய முதலீட்டாளர்களின் முன்னிலையில் தமிழ்நாடு அவமானப்படுத்தப்படுகிறது. எல்லாவற்றையும் அரசியல் பார்வையோடு பார்க்காமல் மாண்புமிகு முதலமைச்சர் தொழில் துறையில் தனி கவனம் செலுத்தவேண்டும். இதில் அரசியல் சாயம் பூசப்பட்டால் தமிழகத்தில் நிலவிய மிகுந்த ஆரோக்கியமான முதலீட்டு சூழல் முற்றிலும் சீர்குலைக்கப்படும். இது மற்ற மாநிலங்களுக்கு சாதகமாக அமைந்துவிடும்.
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாநிலத்தை விட்டு முதலீடுகள் வெளியேறுவது குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், முதலீடுகள் வெளியேறாமல் தடுக்க என்ன நடவடிக்கைள் எடுத்தது என்பதை விளக்க வேண்டியதே புதிய அரசின் கடமை. அதற்கு பதிலாக, முந்தைய அரசின் கடின உழைப்பின் மீது தங்களது பெயர் ஒட்டும் செயலில் அவர்கள் ஈடுபடக் கூடாது.
ஊடகங்களின் சில பிரிவுகள் மூலம் பரப்பப்பட்ட பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகள், அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடத்தக்க வகையில் இடம்பெறவில்லை என்பது உண்மை என்னவென்று உரக்க சொல்கிறது. ஏனெனில் 12.50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு மூலமாக 30லட்சத்திற்கும் மேலான வேலைவாய்ப்புகள் உருவாகியது மாண்புமிகு திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு என்பது உலகம் அறிந்த உண்மை. ஆகவே தான் மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசில் இதுவரை இந்தியாவில் எந்த மாநிலமும் நடத்த முடியாத “கன்வர்ஷன் கான்க்ளேவ்” நடத்தப்பட்டு அதில் நானே பவர் பாயிண்ட் பிரசன்டேஷன் மூலமாக முதலீடு விவரங்களை எடுத்துரைத்தேன். இந்தியாவில் மற்ற மாநிலங்களில் பல இதர காரணங்களினால் முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் லிஸ்டை வைத்துக்கொண்டு 3 இலட்சம் கோடி இழப்பு என்பது பொய்யான குற்றச்சாட்டு. இதில் நகைப்பிற்குரிய விடயம் என்னவென்றால் அவர்களது அறிக்கையிலேயே அந்த நிறுவங்களின் முடிவுக்கு விளக்கம் உள்ளது !
முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் 3 இலட்சம் கோடிக்கும் குறைவாகவே முதலீடுகள் வந்துள்ள நிலையில் எங்கள் ஆட்சிக் காலத்தில் ரூ.12.6 லட்சம் கோடி முதலீட்டு உறுதிமொழிகளையும், 36 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளையும் தமிழ்நாடு பெற்றிருக்கிறது. இது 2016-21 காலகட்டத்தைவிட 5 மடங்காகும். திராவிடர் மாடல் அரசு தொடர்ந்திருந்தால் இம்முறை குறைந்தபட்சம் 25 லட்சம் கோடி முதலீடு வந்திருக்கும். இன்று இந்த அரசு சிறுபிள்ளைத்தனமான பேச்சுகளை குறைத்து தலைவர் முக ஸ்டாலின் அவர்களின் இந்த சாதனையை திராணியிருந்தால் முறியடித்து காட்டட்டும் பார்போம். இல்லை இதில் பாதியாவது செய்யட்டும் பார்ப்போம்.2/3
🤦♂️🤦♂️🤦♂️
During my tenure as IT Minister, I had no role in IT promotions. Sole responsibility was with this Minister's Department of Industries and Investment Promotion.
How could the IT Minister have demanded anything?
So who is lying here - the Minister, or @SouthMatters ?
தொடர் பயணத்தில் இருந்தபோதும், சமீபத்தில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை குறித்து விமான நிலையத்தில் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தேன்.
2021ஆம் ஆண்டு நான் நிதியமைச்சராக இருந்தபோது வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கைக்கும் தற்போதைய அறிக்கைக்கும் இடையிலான அடிப்படை வேறுபாடுகளை சுட்டிக்காட்டியதோடு, நிதி நிலையில் ஏற்பட்ட முன்னேற்றம் தானாக நிகழ்ந்ததல்ல; கழக ஆட்சியின் முதல் இரண்டு ஆண்டுகளில் நாங்கள் மேற்கொண்ட திட்டமிட்ட சீர்திருத்தங்களின் விளைவு என்பதை, தரவுகளின் அடிப்படையில் எவருடனும் விவாதிக்கத் தயார் என்பதை தெரிவித்தேன்.
மேலும், கட்டமைப்பு ரீதியான மாற்றங்களால் மட்டுமே நீடித்த முன்னேற்றத்தை உருவாக்க முடியும் என்பதையும் வலியுறுத்தி, அதிகாரிகள் புதிய அரசை தவறாக வழிநடத்த அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தினேன்.
சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றினோம்.
தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு - அறிவிக்கப்படாத மின்வெட்டு - பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் - விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி பேசினோம்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான road map ஆளுநர் உரையில் இல்லை என்பதை உணர்ந்து, அரசின் தொலைநோக்கு திட்டங்களையும், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளையும் முதலமைச்சர் தனது பதிலுரையில் வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொண்டோம்.
#TNAssembly
நீங்கள் #நான்_முதல்வன் Social Media பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை delete செய்யலாம்.
ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக Archive செய்யப்பட்டுவிட்டன.
கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான் #நான்_முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்!
தற்குறிகளே ..
இந்தப் பெண்ணுக்கு இருக்கும் அறிவில் ஒரு 5% ஆவது உங்களுக்கு இருந்திருந்தால் சத்தியமாக நீங்கள் TVK கட்சிக்கு ஓட்டு போட்டு இருக்க மாட்டீர்கள்
நண்பர்கள் இந்த பதிவை காப்பி செய்து பரப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
🙏🙏🙏
2021 - தி.மு.கழக ஆட்சியின் முதல் 30 நாட்களின் சாதனைகள்!
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 4000 கொரோனா நிவாரண நிதி!
ஆவின் பால் லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு!
பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா விடியல் பயணம்!
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைப் பெறும் மக்களின் கட்டணத்தை காப்பீடு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசே ஏற்கும்.
மக்களின் புகார்கள் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் & அதற்கென தனித்துறை
முன்களப்பணியாளர்களாக பத்திரிகையாளர்கள் அறிவிப்பு!
கொரோனா சிகிச்சை பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ஒருகிணைந்த கட்டளை மையம்.
கோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ரா. வுக்கு சிலை!
இந்த சாதனை பட்டியல் மிக நீளமானது..
https://t.co/CnKB61nEm6
Finally!
The #ThanjavurAirport will soon become a reality! 🚀
AAI has cleared the terminal design for the new passenger terminal, link taxiway, and aircraft parking bays at Thanjavur Airport.
The project will be developed on the 55 acres handed over by Thalaivar then CM Thiru @MKStalin’s #DravidiansModel Govt to the Union govt, about 2 years ago.
The project picked up serious pace after we met with the Defence Secretary and Secretary of Civil Aviation in Nov 2023. The same month I also visited the proposed airport site along with TIDCO officials and district administration and also facilitated AAI’s request for a four-lane approach road. Following this we also held meetings with the Civil Aviation Minister and his team in 2024 and 2025. Special thanks to the Dir Trichy Airport for his efforts on data collection on passengers from the Thanjavur belt🙏🏾
Great to see infrastructure push given by #DMK govt continue to deliver results♥️🌄
https://t.co/Yf7gafuWhm