சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
I think at some point of time Vijay has to behave like a CM. Utterly disappointed and utterly shameful what he is doing. Is this worthy of being done inside the Assembly? Utter disgrace TVK Vijay.
#NewsUptate | பள்ளி மாணவர்களை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துவதை ஏற்க முடியாது - தவெக அரசுக்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்
#SunNews | #TVKVijay | #Premalatha
கல்விக் கூடங்கள் என்பவை அறிவை வளர்க்கும் ஓர் இடம், அவை எதிர்காலத் தூண்களை உருவாக்கும் புனிதமான இடங்கள். ஆனால், சமீபகாலமாக தமிழ்நாட்டில் அரங்கேறி வரும் சில அரசியல் கூத்துகள் ஒட்டுமொத்த சமூகத்தையும் தலைகுனிய வைத்துள்ளன.
தவெக தலைவர் பிறந்தநாள் என்ற பெயரில், தவெகவினர் பள்ளிகளுக்குள் நுழைந்து, பிஞ்சு மாணவர்களைத் தங்களின் சுயவிளம்பரத்திற்காகப் பயன்படுத்தி வாழ்க கோசம் போட வைப்பது ஆபாச வரிகள் கொண்ட பாடலுக்கு நடனம் ஆட வைப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இன்னும் விவரம் தெரியாத பிஞ்சு உள்ளங்களில் இப்போதே உங்களின் அரசியல் நஞ்சை விதைக்க உங்களுக்கு எப்படி மனசு வந்தது?
தவெகவின் அமைச்சர் ஒருவர் கல்வி கற்கும் இடத்தில், ஆபாச வரிகள் கொண்ட சினிமா பாடல்களுக்கு மாணவர்களை நடனமாட வைப்பதுதான் நீங்கள் கற்றுக்கொடுக்கும் ஒழுக்கமா? உங்கள் அரசியல் புகழைப் பாடுவதற்கு அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் தான் உங்களுக்குக் கிடைத்த பகடைக்காய்களா?
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவது நல்ல ஒழுக்கத்தையும் கல்வியையும் கற்கத்தான். ஆனால், ஊரான் வீட்டு நெய்யில் தங்கள் சுய புகழைப் பாட நினைக்கும் இந்த கேடுகெட்ட அரசியல், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் செயலாகும்.
பள்ளிக் கல்வித்துறை இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பள்ளி வளாகங்களுக்குள் எந்தவொரு அரசியல் கட்சியின் தலைவரையோ, நடிகரையோ முன்னிறுத்தி நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது. மாணவர்களைத் தங்கள் அரசியல் சுயலாபத்திற்குப் பயன்படுத்தும் தவெகவினர் மீது சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இனிமேலும் பள்ளிக்கூடங்களை அரசியல் வியாபாரக் களமாக மாற்ற நினைத்தால், தமிழ்நாட்டு பெற்றோர்களும் பொதுமக்களும் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என எச்சரிக்கிறோம்!
#TVKFails
நான் வெளியிட்ட புகைப்படம் AI என சொல்லி அதன் பின்னால் பெண் என்ற காரணம் சொல்லி ஒளிந்து கொள்ளும் அமைச்சர் தரப்பு மற்றும் விஜய் அரசுக்கு என் கேள்வி - சரி அது AI எனில் இதெல்லாம் ? இந்த புகைப்படம் எல்லாம்? இதுவும் AI எனில் இவன் மீது விசாரணை இல்லை ? கைது இல்லை ஏன் ?
அமைச்சர் பெண் என சொல்லி அதன் பின்னால் ஒளிந்து வேலை செய்வது லாட்டரி மாபியா தான்..
எனக்கு அமைச்சர் தனிபட்ட வாழ்வு பற்றி கேள்வி எழுப்ப எதுவும் இல்லை. என் கேள்வி அமைச்சராக ஒருவர் தன் protocols மீறி செல்வது தமிழகத்திற்கு ஆபத்தா இல்லையா ?
ஒரு நிறுவனம் முதலீடு செய்வதற்கு பல சலுகைகள் கொடுத்து நாம் அழைத்து வரும் அந்த பாலிசி மற்றும் ரகசிய விவரம் - முதலீடு வருவதற்கு முன்பே அருகே இருக்கும் மாநிலத்திற்கு தெரியவரும் எனில் , அதில் அருகே இருக்கும் மாநிலம் இன்னும் வசதியாக இப்படி முதலீடுகளை வேறு பல சலுகை கொடுத்து அவர்கள் மாநிலத்திற்கு எடுத்து செல்லும் நிலை ஏற்படும் நிலையில் விஜய் அரசு இருந்தால் கேள்வி கேட்க தானே மக்கள் செய்வர் ?
சமீபத்தில் அந்த காரணத்தால் இங்கே வரவேண்டிய முதலீடுகள் ஆந்திரா சென்றது? இந்த அமைச்சருக்கு ஆந்திராவில் இருந்து வரும் ஆதரவு சந்தேகத்தை வலுவாக அதிகரிக்கிறது. இவர் முன் வேலை செய்யவும் அங்கே தான். இந்த அமைசர் கூடவே இருப்பவன் தமிழ் சுத்தமா தெரியாது. இப்படி இருக்க கேள்வி கேட்பது தமிழக நலன் சார்ந்தது.
ஆனால் நான் எழுப்பிய கேள்வியை மறைத்து, பிரச்சனையை புகைப்படம் AI என்பது தான் என்றும் பெண் என்றும் ஒளிந்து கொள்வது வெக்கக்கேடு - விசாரணையே இல்லாமல் வழக்கு பதிவு செய்வோம் என்பதும் - வெளியிட்ட அந்த மதன் என்பவனை பாதுகாப்போம் என்பதும் பேரும் சந்தேகத்தை இன்னும் அதிகரிக்கிறது..
பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்று வெளியிட்ட வெற்று அறிக்கையே இந்த ஒண்ணுமில்லாத வெள்ளை அறிக்கை!
அனைத்து அமைச்சர்களும் ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் அலப்பறை போடுகிறார்களே, நாம் பல் பிடுங்கப்பட்ட பாம்பாக இருக்கிறோமே என்ற விரக்தியில் “வெள்ளை அறிக்கை” என வெற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நிதியமைச்சர் மரியவில்சன் அவர்கள்.
தி.மு.கழகத்தின் இடைக்கால நிதிநிலை அறிக்கையிலேயே வருவாய் & நிதிப் பற்றாக்குறை, அரசின் கடன், வருவாய் வரவினங்கள், மாநில அரசின் சொந்த வரி வருவாய், ஒன்றிய வரிகளில் மாநில அரசின் பங்கு, வருவாய் செலவுகள்,மூலதனக் கணக்கு எவ்வளவு, வரும் காலங்களில் இவை எவ்வளவு இருக்கும் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை கவனித்திருந்தாலே இந்த வெற்று அறிக்கையின் தேவை இருக்காது; இதைத்தாண்டி இந்த அறிக்கையில் வேறு என்ன இருக்கிறது?
கடந்த காலங்களில் வெளியான வெள்ளை அறிக்கைகளை படித்து இருந்தாலே வெள்ளை அறிக்கை என்றால் என்ன என அறிந்திருக்கலாம்.
கடன்கள் எதற்காக வாங்கப்பட்டது - அது மாநிலத்தின் வளர்சிக்கு உதவியுள்ளதா? அதன் தாக்கம் என்ன? என ஒரு வார்த்தைகளும் இல்லை. மேலும், ஒன்றிய அரசின் நிதி பகிர்வு குறித்து நிதியமைச்சர் மரியவில்சன் அவர்கள் ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
டெல்லி எஜமானர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என்ற பயமா? அவர்கள் செய்யும் அட்டுழியங்களை கேள்வி கேட்க துப்பில்லையா? இல்லை கடந்த மூன்று நாட்களில் நடைபெற்ற 19+ பாலியல் குற்ற சம்பவங்களில் இருந்து மக்களை திசைதிருப்ப உங்கள் DUMMY CM வழிகாட்டுதலில் போடும் நாடகமா?
எது எப்படி இருப்பினும், தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்தபோது அரசுப் பேருந்துகள் 1 KM ஓடினால் ரூ.59.15 நஷ்டம் ஏற்பட்டது - தற்போது அந்த நஷ்டம் தற்போது 1 KM க்கு ரூ.53 ஆக உள்ளது.. அதாவது திமுக அரசின் நிர்வாக சீர்திருத்தங்களால் 1 KM க்கு 6.15 ரூபாய் நஷ்டம் குறைந்துள்ளது என உண்மையை பேசியுள்ளீர்கள்.
அதுபோல, 2021 ஆம் ஆண்டில் 2021-22 - 27.05% ஆக இருந்த தமிழ்நாட்டின் Debt-to-GSDP Ratio தற்போது 26.43% ஆக குறைத்தும் தி.மு.கழக அரசுதான்.
மேலும் நிதி ஆயோக் கூட்டத்தில் உங்கள் தலைவர் பட்டியல் போட்ட சாதனைகளும் நாங்கள் செய்ததுதான்.
எனவே, தேனைத் தடவித் தேர்தல் வாக்குறுதியாக கொடுத்தவர்கள் மக்களை ஏமாற்றாமல், ஆக்கபூர்வமான நிர்வாகத்தில் கவனம் செலுத்தி, அடுத்தவர்களின் மேல் பழிபோடாமல் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபடுங்கள்!
#TVKFails
MKS ஒரு படம் பாத்தா, ஒரு மாசத்துக்கு ஒப்பாரி வைப்பானுங்க !!!
இப்ப என்ன நடந்திட்டு இருக்கு , ஒரே நாள்ல 5 பச்சபிள்ளைங்க, ஆனா அவன் டெய்லி பத்து சினிமாகாரங்களப் பாத்துட்டு இருக்கான். மீடியாவும், புரட்சியாளர்களும் வேடிக்கை பாத்துட்டு இருக்கானுங்க 👌👌