மந்திரத்தால் மாங்காய் விழுந்த கதையாய், சினிமா கவர்ச்சியெனும்
வெற்று விளம்பரத்தால்
கற்றுக் குட்டிகள் பெற்ற
தரமற்ற வெற்றியை கற்றறிந்தோர் ஏற்கவில்லை!
போராட்டங்களால் விளைந்த சமூகநீதி மண்ணில்..
மக்களுக்காக போராடாமல்,
சிறை கொட்டடிகளில் சித்திரவதை அனுபவிக்காமல்,
மாநில உரிமைக்கு குரல் கொடுக்காமல், மாய ஜாலத்தால் மகுடம் சூடிய
காளான்களின் ஆட்சியை
காலம் கரையேற்றாது! 😡
@mkstalin@Udhaystalin
#LeaderOfOpposition
#DMK
#TVKFails
தற்குறியின் ஆட்சியில் தவிக்குது தமிழ்நாடு.
வெற்று விளம்பரங்களையும் 'ரீல்ஸ்'களையும் மட்டுமே நம்பி நடக்கும் இந்த "சிரிச்சா போச்சு" ஆட்சிக்கு மக்கள் கூடிய விரைவில் முடிவுகட்டுவார்கள்!
#TVKFails
Several of you have been tagging the @dmkitwing and posting clips of the TVK IDs which have as usual been putting out completely false and baseless allegations against the DMK and its leadership in a desperate attempt to cover up the present governments massive failures. All such posts have been forwarded to the DMK Legal Wing and Arivalayam. We are confident that the Legal Wing @arivalayam will take necessary steps now to curb this fake news menace in the society. Please note that we have always taken all such malicious fake news to the knowledge of HQ and the Legal Wing Advocates. Please forward all such clips to @DMKLegalWing 🙏🏾
கழகம் நிரந்தரமானது. நம் கொள்கைகள் நிரந்தரமானது. கழக உடன்பிறப்பு எனும் கொள்கையுணர்வோடு கழகத் தலைவர் @mkstalin அவர்களின் தலைமையில், இளைஞர் அணிச் செயலாளர் - எதிர்க்கட்சித் தலைவர் @udhaystalin அவர்கள் வழிகாட்டலில், கழகப்பணி, மக்கள் பணி தொடர்வோம்!
#DMKYW
தஞ்சைத் தரணியில் அன்புச் சகோதரர் பூண்டி கலைவாணன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.
பூண்டி கிருஷ்ணசாமி அவர்கள், பூண்டி கலைச்செல்வன் அவர்கள் எனக் கழகத்துக்காகவே தம் வாழ்வை ஒப்படைத்துக் கொண்ட கழகக் குடும்ப விழா இது!
சிறிய இடைவெளிக்குப் பிறகு, வெளியூர் வருகிறேன். நேற்று, திருச்சியில் இறங்கியது முதலே கழக உடன்பிறப்புகளும் மக்களும் என்னைக் கண்டதும் வெளிப்படுத்திய உணர்வினை நான் புரிந்துகொண்டேன். உங்களை நானறிவேன். என்னை நீங்கள் அறிவீர்கள். நமக்குள் வார்த்தைகள் தேவையில்லை.
ஒரு புதிய அரசு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆட்சி நடத்த நாம் தொந்தரவாக இருக்கப் போவதில்லை. நடத்தட்டும்!
ஆனால், இயலாமையை மறைக்க நம் மேல் அவதூறுகள் கொண்டு தாக்கினால் விளக்கம் அளிப்போம். சமூக ஊடகங்களில் பொய்களைப் பரப்பினால் உண்மையைப் போட்டுடைப்போம் என உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன்.
பெற்றோர்கள் பேச்சை கேட்கும் பிள்ளைகள் தற்போது கிடையாது. பிள்ளைகள் பேச்சை கேட்டு ஓட்டு போடும் பெற்றோர்களால் தமிழ்நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது
கோவை இருகூர் அருகே 13 வயதே ஆன பள்ளிச் சிறுவன் நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மனதைப் பதைபதைக்க வைக்கிறது.
பெற்றோர்கள் நம் பிள்ளைகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும். குழந்தைகள் எதைப் பார்க்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் எனக் கண்காணித்து, அவர்களிடம் ஏற்படும் உளவியல் மாற்றங்களை அறிந்து, நாம்தான் நல்வழிப்படுத்த வேண்டும்.
பள்ளியில் மாணவர்களுடன் அதிக நேரம் செலவிடும் ஆசிரியப் பெருமக்களும் அவர்களிடம் கல்வியறிவோடு பொறுமையையும் அன்பையும் மனதில் விதைக்க வேண்டும் என்பதையே இந்தக் கொடிய நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.
நம் மாநிலத்தின் வருங்காலமே குழந்தைகள்தான். அவர்களைப் பொறுப்புடன் வளர்த்தெடுப்பது நம் அனைவரின் சமூகக் கடமை!
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
“தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது” என்ற எனது நிலைப்பாட்டுக்கேற்ப திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.
அதேபோன்று சட்டமன்றத்தில் இருக்கும் எங்கள் தோழமை இயக்க உறுப்பினர்களான சகோதரி திருமதி. பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர் தமிமுன் அன்சாரி, சகோதரர் நித்தியானந்தம் ஆகிய உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய தோழமைக் கட்சிகள், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அவர்களின் நிலைப்பாட்டையும் நாங்கள் மதிக்கிறோம்.
ஆனால், இந்த ஆட்சி அமைய வழிவகுத்த எல்லாரோட நம்பிக்கையையும் சிதைக்கும் வேலையில தமிழக வெற்றிக் கழகம் இறங்கியிருக்கு.
அதற்கு சாட்சி, ஆளுங்கட்சியின் கடந்த 3 நாட்களின் செயல்பாடுகளும், அதற்கு எங்க தோழமைக் கட்சியினர் கொடுத்த அறிக்கைகளும்!
ஆட்சி நிலைக்கத் தேவையான எண்ணிக்கை எங்கள் தோழமை இயக்க நிலைப்பாட்டால் இருந்தாலும், இன்றைய ஆளுங்கட்சி என்ன செய்திருக்கிறது?
Clean Politics-னு சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க, Dirty Politics பண்ணிட்டிருக்காங்க.
பிளவுபட்ட அ.தி.மு.க. எனும் குழம்பிய குட்டையில மீன் பிடிக்க முயற்சி பண்ணி, அவங்க உறுப்பினர்களை விலைக்கு வாங்கியிருக்காங்க.
“உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இருக்கும்? இது தூய சக்தியா இல்ல, அடுத்த கட்சி MLA-க்களைத் தூக்குற சக்தியா?” எனத் தமிழக வெற்றிக் கழகத்துக்கு வாக்களிச்ச மக்களே வருந்திப் பேசும் நிலை உருவாகிடுச்சு.
மாண்புமிகு முதல்வர் அவர்களே,
உங்க செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்க்குறாங்க. அடுத்து, பிளவுபட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு நீங்க என்ன Return Gift கொடுக்கப் போறீங்க என்பதையும் மக்கள் பார்க்கத்தான் போறாங்க.
எங்களைப் பொறுத்தவரை,
திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து தன் கொள்கையில உறுதியா இருந்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியா செயல்படும்!
மக்களின் துயரை எண்ணிப் பார்த்து தீர்வு காணுங்கள்!
தேர்தலுக்கு முன்பே கணித்ததுபோல், தேர்தல் முடிந்தவுடன் #LPGPrice-ஐ உயர்த்தியிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, அதன் பலனை மக்களுக்கு அளிக்கவில்லை. இப்போது #WestAsiaWar என்ற நெருக்கடியை வைத்து, மக்களின் நலனை எண்ணாமல், விலையை ஏற்றுவது சரியல்ல.
இந்த #LPGPriceHike ஏற்படுத்தும் தாக்கங்களை உணர்ந்து, இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்.
Act with the people’s pain in mind.
As predicted, the Union BJP Government raised #LPGPrice the moment elections ended.
When global crude prices fell, the benefit was not passed on to the people. Now, using the #WestAsiaWar crisis to raise prices, without regard for public welfare, is unacceptable.
Recognise the impact this #LPGPriceHike will unleash. Reverse it immediately. Protect livelihoods.
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன்.
காணுங்கள்…
#வெல்வோம்_ஒன்றாக !
BJP can never grow in Tamil Nadu. We have taken up the ‘TN vs NDA’ campaign only to tear off the BJP’s AIADMK mask. They have been repeatedly rejected by the people.
There is a pro-incumbency wave in Tamil Nadu, and we will confidently win over 200 seats with people’s backing.
Read my interview in @DeccanHerald: https://t.co/8yCQEetMGP
#VoteForDMK #SayNoToNDA @sivaetb
This is not just an election; it’s a battle for the very soul of our land!
The ink on your finger is more than a mark, it’s a shield for the next generation and a promise of unhindered progress. The power to protect our identity rests right at your fingertip.
For our rights, our language, and a brighter tomorrow, let your ink write the future. Choose the light! 🖤❤️
#VoteForDMK 🌄
எங்களைப் போல உங்கள் மேல் அக்கறை செலுத்த எவரும் இல்லை. அனைத்துத் தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியே வெற்றி வாகை சூட வேண்டும்.
#ChennaiWithDMK#வெல்வோம்_ஒன்றாக#VoteForDMK
சென்னை என்றாலே தி.மு.க.தான் என மீண்டும் காட்டுவோம்!
🌄 வடசென்னையை வளர்ந்த சென்னையாக மாற்றி வரும் பெருமிதத்தோடு திரு. வி.க. நகர், எழும்பூர், துறைமுகம், ராயபுரம், ஆர்.கே. நகர், பெரம்பூர் தொகுதிகளில் கழக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தேன்.
🌄 கண்கவர் பேருந்து நிலையங்கள், ஏழை மக்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகள், முதல்வர் படைப்பகங்கள், நூலகங்கள், விளையாட்டு அரங்கங்கள், பாலங்கள், பூங்காக்கள், ஜிம், திருமண மாளிகைகள், மழைநீர் வடிகால்கள் என வடசென்னை மொத்தமும் #DravidianModel அரசு செய்துள்ள வளர்ச்சிப் பணிகள் முழுவதுமாக வாக்குகளாக மாற வேண்டும்!
🌄 எங்களைப் போல உங்கள் மேல் அக்கறை செலுத்த எவரும் இல்லை. அனைத்துத் தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியே வெற்றி வாகை சூட வேண்டும்.
#ChennaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK
This is not just an election; it’s a battle for the very soul of our land!
The ink on your finger is more than a mark, it’s a shield for the next generation and a promise of unhindered progress. The power to protect our identity rests right at your fingertip.
For our rights, our language, and a brighter tomorrow, let your ink write the future. Choose the light! 🖤❤️
#VoteForDMK 🌄
தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு மொத்தமாகத் திரும்பப் பெற வேண்டும்!
தமிழ்நாட்டின் அரசியலுக்கு மிக முக்கியமான நாள் இன்று. தொகுதி மறுவரையறைக்கு எதிரான நம் போராட்டங்களின் முடிவினை அறியப் போகும் நாள்.
நம்முடைய கடும் எதிர்ப்பினையும் போராட்டத்தினையும் தொடர்ந்து, தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் தொகுதி அளவு குறையாது என மாண்புமிகு பிரதமர் அவர்களும் உள்துறை அமைச்சர் அவர்களும் நேற்று நாடாளுமன்றத்தில் வாய்மொழி உத்தரவாதம் அளித்துள்ளனர்.
ஆனால், சொல் ஒன்று – செயல் வேறு என்பதாக, இவர்கள் தாக்கல் செய்துள்ள சட்டமுன்வடிவு முழுக்க முழுக்க ஏமாற்றுத் திட்டமாக இருக்கிறது. இதை நம்பவும் முடியாது, ஏற்றுக்கொள்ளவும் முடியாது எனத் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்.
இந்தச் சட்டமுன்வடிவில் தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்துக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மூலம், இவர்கள் நினைத்தால் நினைத்த நேரத்தில், நினைத்த முறையில், எப்போது வேண்டுமானாலும் எதிர்காலத்தில், இவர்களுக்குச் சாதகமான வகையில், இந்திய மாநிலங்களின் தொகுதியளவை மாற்றியமைத்துக் கொள்வதற்கான வழிவகைகள் இந்தக் கருப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன. பெரும் சூழ்ச்சியை உள்ளடக்கியதாக இந்தச் சட்டமுன்வடிவு இருக்கிறது.
அவசரகதியில் இதனை நிறைவேற்றக் கூடாது. ஒன்றிய அரசு இதனை முழுவதுமாகத் திரும்பப் பெற வேண்டும். எண்ணிக்கை பலம் இருக்கிறது என்ற திமிரில், எங்களின் எதிர்ப்பை மீறி இதனை நிறைவேற்றினால், அதற்கான விளைவுகளைத் தமிழ்நாட்டில் நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.
நேரு அவர்கள் இந்தியைத் திணிக்க மாட்டோம் என்றார், இருந்தவரை அந்த உறுதிமொழியைக் காப்பாற்றினார். ஆனால், தற்போதைய ஒன்றிய ஆட்சியாளர்களோ மாநில உரிமைகளைக் காப்பாற்றுவோம் எனச் சொல்லிக்கொண்டே அதனைச் சில்லு சில்லாக நொறுக்கும் வேலையில் ஈடுபடுகின்றனர்.
நாம் கோருவது, முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி அவர்களும், வாஜ்பாய் அவர்களும் அரசியலமைப்புச் சட்டத்திலேயே திருத்தம் செய்து, 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுசீரமைப்பை நிறுத்தி வைத்ததைப் போன்ற சட்டப் பாதுகாப்பு.
#WithdrawDelimitationBill: தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு செவிசாய்த்தே ஆக வேண்டும்!
#SayNoToNDA #TNWillFightTNWillWin #Delimitation #வெல்வோம்_ஒன்றாக
#WithdrawDelimitationBill
Today is a defining moment in Tamil Nadu’s political history. It is the day we will see the outcome of our relentless resistance against delimitation.
In the face of our sustained protests and uncompromising opposition, the Hon’ble Prime Minister and the Union Home Minister have, on the floor of Parliament, offered a verbal assurance that Tamil Nadu’s representation will not be reduced.
But their words say one thing, their actions reveal another. The Bill they have introduced is nothing but a calculated deception. We reject it outright. It cannot be trusted. It will not be accepted.
The sweeping powers granted to the Delimitation Commission under this Bill make one thing clear. At any time, in any manner they choose, they can alter the representation of states to suit their political interests. This so called legislation is a carefully crafted trap, loaded with dangerous intent.
This Bill must not be rushed through in haste. The Union Government must withdraw it in full. If they attempt to bulldoze it through Parliament, emboldened by the numbers they have stitched together, and in complete disregard of our opposition, they will face the consequences in Tamil Nadu.
Jawaharlal Nehru assured that Hindi would never be imposed, and he honoured that promise as long as he lived. The present Union regime, however, speaks of protecting state rights even as it systematically dismantles them piece by piece.
What we demand is clear. The same constitutional safeguard that former Prime Ministers Indira Gandhi and Atal Bihari Vajpayee provided by freezing delimitation through constitutional amendment must be restored.
The Union BJP Government must listen to the voice of Tamil Nadu.
I am also sharing for your attention my detailed article published in today’s edition of @TimesOfIndia, explaining the grave dangers posed by this delimitation exercise:
#SayNoToNDA #TNWillFightTNWillWin #Delimitation #வெல்வோம்_ஒன்றாக
@TOIChennai@Arun_Ram
On the Women’s Reservation Bill: read the fine print.
The BJP called for a Special Session in the middle of state elections, over two and a half years after the Women’s Reservation Bill was passed in 2023, only to confirm that it cannot be implemented without a Census and delimitation.
Let us be very clear:
We want the Women’s Reservation Bill to be implemented NOW. Tamil Nadu was among the earliest to implement reservation for women in local bodies.
Our concern is with delimitation, which requires careful thought to ensure it is fair, especially for southern states. We asked for consultation, clarity, and consensus. At the very least, the Bill could have been delinked and implemented.
The NDA could have delinked it. They chose not to.
They could have used this time to consult states on delimitation. They chose not to.
They could have addressed these concerns in the Bill. They chose not to.
This is not justice. This is not intent. This is optics.
Women in Tamil Nadu see through this.
Women across India are not a vote bank. They are watching.
The truth is simple: the BJP could have delivered. It chose not to.
#WomenReservation
மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவைப் பொறுத்தவரையில், என்ன நடந்தது என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்.
“இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டம், 2023”-ஐ மக்கள்தொகைக் கணக்கெடுப்பும், தொகுதி மறுவரையறையுமின்றி நிறைவேற்ற முடியாது என்பதை உறுதிசெய்யவே, மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நேரத்தில் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டினார்கள்.
மகளிர் இடஒதுக்கீடு இப்போதே உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் நமது நிலைப்பாடு. உள்ளாட்சிகளில் மகளிர் இடஒதுக்கீட்டை முன்னோடியாகச் செயல்படுத்தியது தமிழ்நாடுதான்.
எங்களுடைய கவலை என்பது, தென்மாநிலங்களைப் பாதிக்கும் தொகுதி மறுவரையறை மசோதா இத்துடன் உள்நோக்கத்துடன் இணைக்கப்பட்டதுதான். மறுவரையறை என்பது தென்மாநிலங்கள் பாதிப்படையாத வகையில் கவனத்தோடு செய்யப்பட வேண்டியது. அதனால்தான், அனைவரோடும் கலந்து பேசி, கருத்தொற்றுமையுடன் இதனைச் செய்யக் கோரினோம்.
குறைந்தபட்சம், தொகுதி மறுவரையறை மசோதாவையும் மகளிர் இடஒதுக்கீட்டையும் பிரித்திருக்கலாம். ஆனால், பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசு அதனைச் செய்யவில்லை.
இதேநேரத்தில், அவர்கள் மாநிலங்களுடன் தொகுதி மறுவரையறை குறித்து ஆலோசித்திருக்கலாம். ஆனால், அதனையும் செய்யவில்லை.
நாம் தெரிவித்த கவலைகளுக்குத் தீர்வு கண்டிருக்கலாம். அதனையும் செய்யவில்லை.
இது நீதியல்ல;
இது உண்மையான நோக்கமல்ல;
இது வெறும் காட்சிப்பிழை!
இதனைத் தமிழ்நாட்டுப் பெண்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.
இந்தியப் பெண்கள் வாக்கு வங்கி அல்ல. அவர்களும் பா.ஜ.க. நடத்தும் நாடகங்களைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.
உண்மை எளிமையானது: பா.ஜ.க. நினைத்திருந்தால் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்கியிருக்கலாம். ஆனால், அவர்கள் வழங்கக் கூடாது என முடிவெடுத்துவிட்டனர்.
#TNWillFightTNWillWin