@PttvNewsX நேத்து வரைக்கும் லியோ லியோ ன்னு போதை போட்டு நடிச்சிட்டு இன்னைக்கு சட்ட ஒழுங்கு பிரச்சனையை திசை திருப்ப இன்னொரு அரிதாரம்
இன்னும் நடிகர் வேலை தொடர்கிறது போல
திராவிட இயக்கம் தோன்றாத வடக்கே உதித்த சமூகநீதிக் காவலர் திரு. வி.பி. சிங் அவர்களின் பிறந்தநாள்!
இந்தியா எத்தனையோ பிரதமர்களைக் கண்டிருக்கிறது. குறுகிய காலமே அப்பதவியில் இருந்தாலும் சமூகநீதியை நிலைநாட்டுவதற்காகப் பிரதமர் பதவியையே துச்சமாகக் கருதி #VPSingh அவர்கள் காட்டிய உறுதி என்றென்றும் நாம் நினைத்துப் போற்றத்தக்கது.
தி.மு.க.வைப் போலவே, 'ஆட்சியும் பதவிகளும் முக்கியமல்ல; சமூகநீதிக் கொள்கையே முக்கியம்' என வாழ்ந்து காட்டியவர் திரு. வி.பி. சிங் அவர்கள். தமிழ்நாட்டை விரும்பிய, தமிழர்கள் விரும்பிய பிரதமராகத் திகழ்ந்தார்.
நெருக்கடியான சூழலிலும் தலைவர் கலைஞருக்குத் தோள் கொடுத்த உண்மையான கொள்கைத் தோழமையான அவருக்கு என் வீரவணக்கம்!
🔹ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்!
🔹தி.மு.க. தலைமைக்கும், தோழர்களுக்கும் உரிமையுணர்வோடு
திராவிடர் கழகத் தலைவர் விடுக்கும் உருக்கமான வேண்டுகோள்!
திராவிடத்தை உயிர் மூச்சாகக் கொண்ட திராவிட அரசியல் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகம் பவள விழா (75 ஆண்டு) கண்ட ஓர் இணையற்ற இயக்கம்.
1916 இல் தொடங்கப் பெற்றது 110 ஆண்டுகளுக்கு முன்னே, சர் பிட்டி தியாகராயர், டாக்டர் நாயர், டாக்டர் நடேசனார் போன்ற திராவிடர் தலைவர்களால் பார்ப்பனரல்லாதார் இயக்கம். (The Non-Brahmin Movement) தந்தை பெரியார் அவர்கள், 1926 இல் காங்கிரசில் பார்ப்பன ஆதிக்கம், சமூகநீதிக்கு எதிரான நிலைப்பாடு காரணமாக வெளியேறி, சுயமரியாதை இயக்கம் என்று ஜாதி ஒழிப்பு, தீண்டாமை அழிப்பு, பெண்ணடிமை நீங்கிய சமத்துவம், சமதர்ம மூட நம்பிக்கைகளுக்கு எதிரான புதியதோர் பகுத்தறிவுச் சிந்தனைப் பண்ணையாக உருவாக்கினார்.
பழைய நீதிக்கட்சி அரசியலில் சந்தித்த தேர்தல் தோல்வி காரணமாகவும், பதவி அரசியல் உள்ளடிகளாலும், 1937 இல் படுதோல்வி அடைந்த நிலையில், காங்கிரஸ் பார்ப்பனர்கள் நீதிக்கட்சி என்ற திராவிடர் இயக்கத்தை 500 அடி ஆழத்தில் குழிதோண்டி புதைத்துவிட்டோம் என்று ஆர்ப்பரித்தனர்.
🔸நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம்,
தி.க.; தி.மு.க.வின் அரிமா நடை!
1944 இல் நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும் இணைந்து, பண்பாடு, கல்வி மற்றும் சமூகப் புரட்சி கொள்கைகள், சுயமரியாதை இயக்கக் கொள்கை, கோட்பாடுகளை உள்ளடக்கி, சேலத்தில் 1944 இல் திராவிடர் கழக பெயர் மாற்றம் செய்யப்பட்ட மாநாட்டில், ‘அண்ணாதுரை தீர்மானம்’ என்றே தந்தை பெரியார் பெயரிட்டு ஒரு புத்தெழுச்சி புதுமுறுக்குடன் சமூக இயக்கம் கண்டார்.
1949 இல் அதன் அரசியல் பிரிவாகி, திராவிடர் கழக இணையான இரட்டைக் குழலாக திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றி, பத்தாண்டுகள் – எதிர்க்கட்சியாகப் பணியாற்றி, 1967 இல் அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சியும் அமைத்தது. ஒரு புதிய அரசியலை, திராவிடர் உரிமைகளை அடிக்கட்டுமானத்தை எழுப்பிய நீதிக்கட்சி, தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்க கொள்கைகள், திட்டங்களை – தனது அரசியல் இலக்கு ஆக்கிக் கொண்டு, முறையே அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோருக்குப் பின், தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில், ‘திராவிட மாடல்’ ஆட்சியாக 5 ஆண்டில், 50 ஆண்டுக்கான சாதனை, சமூக மாற்ற வளர்ச்சி என்ற முந்தைய தலைவர்களின் மாண்பை இணைத்து மேலும் வலுவான கொள்கைச் சாதனைகளைச் செய்த சரித்திரம் இன்றும் மாற்றி எழுதப்பட முடியாத வரலாற்றுப் பெட்டகமாகும்.
தேர்தல் வெற்றி, தோல்வி என்பது அவ்வப்போது வாக்காளர்களின் மனநிலையைப் பொறுத்து ஏற்படும் தீர்ப்பே தவிர, ஆழ்ந்து அடுத்த தலைமுறைப்பற்றிச் சிந்தித்து, அறிவிக்கும் முடிவாக இருப்பதில்லை.
🔸93 ஆண்டுகளில், 83 ஆண்டு அனுபவம்!
தி.மு.க.வும், அதன் அரசியல் எதிரிகளால் ஏற்றுக்கொள்ள முடியாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது தோல்வியும் அதிர்ச்சிக்குரியதுதான் என்றாலும், அதனால், சில ஆரிய அல்லது அவர்களுக்குக் குத்தகைக்குப் போன ஊடகங்கள் வர்ணிப்பதைப்போல திராவிடக் கொள்கைகளே இல்லாமற் போய்விட்டன என்பது அற்ப சந்தோஷமே!
93 ஆண்டுகாலத்தில் 83 ஆண்டு அனுபவத்தில், முதல் தேர்தல் முதல் கடைசியாக நடந்த தேர்தல்வரை பார்த்து, வெற்றி– தோல்வி சரித்திரம் கண்ட ஒரு ஒரு பொது வாழ்க்கைத் தொண்டன் – தந்தை பெரியாரின் மாணவன் – என்றும் தாய்க் கழகம், தன் குஞ்சுகளைத் தூக்கும் பருந்தை எதிர்க்கும் தாய்க்கோழி போன்று களத்தில் நின்று, சில பல நிலைகளை, உரிமையோடும், கொள்கை உறவு நிலையோடும், மலை குலைந்தாலும், மனங்குலையா மாவீரன் தளபதி சகோதரர் மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் உடன்பிறப்புகளுக்கு நினைவூட்ட வேண்டிய கடமையைச் செய்வது இவ்வறிக்கையின் நோக்கம். ஊன்றி படித்து உணரவேண்டுகிறோம்.
1969 இல், முதலமைச்சர் அண்ணா மறைந்தவுடன், ஆரியம் கொக்கரித்தது.
‘‘இனி தி.மு.க. கலைந்த சீட்டுக் கட்டு – சரிந்த மணல் வீடு – பதவிச் சண்டையால் அக்கழகம் ஒழிந்துவிடும்’’ என்று நினைத்தது.
தந்தை பெரியார் ஒரு மாதம் சென்னையில் தங்கி, அறிக்கை மற்றும் தக்கவர்கள் மூலம் முந்தைய நீதிக்கட்சி நிலைபற்றி முன் உதாரணங்களை எல்லாம் கூறி, கலைஞரை வற்புறுத்தி முதலமைச்சர் பொறுப்பை ஏற்கச் செய்தார்.
அப்போது அவர் தந்த அறிவு (அனுபவ) உரை இரண்டு.
🔸தி.மு.க.வுக்கு தந்தை பெரியார் வலியுறுத்திய அந்தக் ‘‘கட்டுப்பாடு!’’
1. ‘‘தி.மு.க. என்பது ஒரு கெட்டியான பூட்டு; அதை எவராலும் அவ்வளவு எளிதில் அழித்துவிடவோ, உடைத்துவிடவோ முடியாது. ஆனால், அந்தப் பூட்டிற்குள் யாராவது கள்ளச்சாவி போட்டுத் திறந்துவிடக் கூடாது. அதில் தான் தோழர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்!’’
(1/2)
தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever
மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. @VanniTamizhVCK அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்!
தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.
பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க.
இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன்.
சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல.
கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம்.
மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன்.
பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன்.
நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் .
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel