ஜூன் 20 வாச்சாத்தி வன்கொடுமை நடைபெற்ற தினம்!
இந்த நாட்டில் ஆதிவாசி மக்களும் போராடி நீதியை நிலைநாட்ட முடியும் என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு வாச்சாத்தி ஆவணப்படம்.
Vachathi - The Long March For Justice Watch Full Video on Youtube: https://t.co/x9eFtvco40
#ComradeTalkies #வாச்சாத்தி #vachathi #CPIM
தென் மாவட்டங்களில் தொடரும் ஆணவப் படுகொலைகள்!
கே.என். பாஷா ஆணையத்தின் அறிக்கையைப் பெற்று சட்டம் இயற்றவேண்டும்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
~~~~~~~~~~~~~~~~
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி கிராமத்தைச் சார்ந்த இராமலட்சுமி என்பவர் தலித் சமூகத்தைச் சார்ந்த இளைஞரைக் காதலித்ததால், அவரை அவரது தம்பி முத்துக்கிருஷ்ணன் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்திருக்கிறார். அதனையொட்டி கொலையாளி முத்துக்கிருஷ்ணனை காவல்துறையினர் உடனடியாக கைதுசெய்துள்ளனர்.
அதேபோல, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே மயிலோடை கிராமத்தைச் சார்ந்த அபி செல்வி என்பவர் ஒரு தலித் இளைஞரைக் காதலித்தார் என்பதால், அவரது அண்ணன் சிவஞானம், அம்மா எஸ்தர் பாலின் மற்றும் அவரது உறவினர் சங்கரலிங்கம் ஆகியோர் அவருக்கு நஞ்சு கொடுத்தும் கடுமையாகத் தாக்கியும் படுகொலை செய்துள்ளனர். ஆனால், அபிசெல்வி தற்கொலை செய்துகொண்டார் என நாடகமாடியுள்ளனர். பின்னர், விசாரணையில் 'இது தற்கொலையல்ல; கொலை' என உடற் கூராய்வு அறிக்கை' அம்பலப்படுத்தியுள்ளது. அதனடிப்படையில், அவரது தாயார் எஸ்தர் பாலின் மற்றும் சிவஞானத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்துறையினரின் விரைவான நடவடிக்கை ஆறுதல் அளிக்கிறது. தமிழ்நாட்டில் குறிப்பாக, தென்மாவட்டங்களில் தொடர்ந்து ஆணவப் படுகொலைகள் அதிகரித்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. இத்தகைய சாதி ஆணவப்படுகொலைகளைத் தடுப்பதற்கு ஏதுவாக ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்பது விடுதலைச் சிறுத்தைகளின் நீண்டநாள் கோரிக்கையாகும்.
ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை இயற்றிட வேண்டும் என ஒன்றிய - மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால், அந்த வழிகாட்டுதலை இந்திய ஒன்றிய அரசும் பெரும்பாலான மாநில அரசுகளும் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்பது கவலையளிப்பதாகும்.
இந்தியாவிலேயே முதன்முறையாக 2019ஆண்டு, இராஜஸ்தான் அரசு ஆணவக் கொலைகளுக்கு எதிராக ஒரு சட்டத்தை இயற்றியது. அடுத்து, கர்நாடகாவில் கடந்த ஏப்ரல் மாதம் ஆணவக் கொலைகளுக்கு எதிராக 'கௌரவம் மற்றும் பாரம்பரியம் சார்ந்த வன்முறை தடுப்புச் சட்டம்-2026 நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்கென கடந்த நவம்பர் மாதம் திமுக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா அவர்களின் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்தது. அதன் அறிக்கை இன்னும் அரசிடம் ஒப்படைக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு நெல்லையில் மென்பொறியாளர் கவின் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதற்கென ஒரு சட்டத்தை இயற்றிட வேண்டுமென தவெக சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போதைய தவெக அரசு 'கேஎன் பாஷா ஆணையத்தின்' பரிந்துரைகளைப் பெற்று ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்:
தொல்காப்பியன் திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
தென் மாவட்டங்களில் தொடரும் ஆணவப் படுகொலைகள்!
கே.என். பாஷா ஆணையத்தின் அறிக்கையைப் பெற்று சட்டம் இயற்றவேண்டும்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி கிராமத்தைச் சார்ந்த இராமலட்சுமி என்பவர் தலித் சமூகத்தைச் சார்ந்த இளைஞரைக் காதலித்ததால், அவரை அவரது தம்பி முத்துக்கிருஷ்ணன் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்திருக்கிறார். அதனையொட்டி கொலையாளி முத்துக்கிருஷ்ணனை காவல்துறையினர் உடனடியாக கைதுசெய்துள்ளனர்.
அதேபோல, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே மயிலோடை கிராமத்தைச் சார்ந்த அபி செல்வி என்பவர் ஒரு தலித் இளைஞரைக் காதலித்தார் என்பதால், அவரது அண்ணன் சிவஞானம், அம்மா எஸ்தர் பாலின் மற்றும் அவரது உறவினர் சங்கரலிங்கம் ஆகியோர் அவருக்கு நஞ்சு கொடுத்தும் கடுமையாகத் தாக்கியும் படுகொலை செய்துள்ளனர். ஆனால், அபிசெல்வி தற்கொலை செய்துகொண்டார் என நாடகமாடியுள்ளனர். பின்னர், விசாரணையில் 'இது தற்கொலையல்ல; கொலை' என உடற் கூராய்வு அறிக்கை' அம்பலப்படுத்தியுள்ளது. அதனடிப்படையில், அவரது தாயார் எஸ்தர் பாலின் மற்றும் சிவஞானத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்துறையினரின் விரைவான நடவடிக்கை ஆறுதல் அளிக்கிறது. தமிழ்நாட்டில் குறிப்பாக, தென்மாவட்டங்களில் தொடர்ந்து ஆணவப் படுகொலைகள் அதிகரித்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. இத்தகைய சாதி ஆணவப்படுகொலைகளைத் தடுப்பதற்கு ஏதுவாக ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்பது விடுதலைச் சிறுத்தைகளின் நீண்டநாள் கோரிக்கையாகும்.
ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை இயற்றிட வேண்டும் என ஒன்றிய - மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால், அந்த வழிகாட்டுதலை இந்திய ஒன்றிய அரசும் பெரும்பாலான மாநில அரசுகளும் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்பது கவலையளிப்பதாகும்.
இந்தியாவிலேயே முதன்முறையாக 2019ஆண்டு, இராஜஸ்தான் அரசு ஆணவக் கொலைகளுக்கு எதிராக ஒரு சட்டத்தை இயற்றியது. அடுத்து, கர்நாடகாவில் கடந்த ஏப்ரல் மாதம் ஆணவக் கொலைகளுக்கு எதிராக 'கௌரவம் மற்றும் பாரம்பரியம் சார்ந்த வன்முறை தடுப்புச் சட்டம்-2026 நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்கென கடந்த நவம்பர் மாதம் திமுக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா அவர்களின் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்தது. அதன் அறிக்கை இன்னும் அரசிடம் ஒப்படைக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு நெல்லையில் மென்பொறியாளர் கவின் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதற்கென ஒரு சட்டத்தை இயற்றிட வேண்டுமென தவெக சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போதைய தவெக அரசு 'கேஎன் பாஷா ஆணையத்தின்' பரிந்துரைகளைப் பெற்று ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்:
தொல்காப்பியன் திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
சேலத்தில் 50க்கும் மேற்பட்ட
பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை! சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!
நெட்டூர்க்கு தென்காசி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஏன் செல்லவில்லை?
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற திருக்குறளைப் பெருமையாகப் பேசுகிறோம். எல்லா உயிரும் சமம்தான் என்று பேசுவது உண்மையானால், பெருமைப்படுவது உண்மையானால், பட்டியலின சாதி மக்களும் பழங்குடியின மக்களும் இத்தகைய கொடுமையான தாக்குதலுக்கு உள்ளாவதை எந்த விதத்தில் நியாயப்படுத்த முடியும்?
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சாதிய மோதல்களைத் தடுப்பதற்குரிய பல்வேறு நல்ல ஆலோசனைகளை, நீதியரசர் சந்துரு தலைமையிலான ஆணையம் தமிழ்நாடு அரசுக்கு வழங்கியிருக்கிறது. ஏற்கனவே இருந்த தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை!
கோட்டக்குப்பம் தலித் மக்கள் மயானப் பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் உடனே தீர்வு காண வேண்டும்
====
கோட்டக்குப்பத்தில் வாழும் தலித் மக்களின் மயானத்தில் தனியார் ஒருவர் அனுமதியின்றி விடுதி கட்டி வாடகைக்கு விட்டிருப்பதாலும், கடல் அரிப்பின் காரணமாக மீனவர்கள் அங்கே படகுகளை நிறுத்துவதாலும் சில ஆண்டுகளாகவே பிரச்சினை இருந்து வருகிறது. அதை சுமுகமாகத் தீர்ப்பதற்கு நானும் மாவட்ட நிர்வாகமும் எடுத்த முயற்சிகளுக்கு மீனவர் தரப்பினர் ஒத்துழைக்கவில்லை. இதனால் தலித் பகுதியில் யாராவது இறந்துபோனால் அங்கே சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு அங்கே ஒரு இறப்பு ஏற்பட்ட நேரத்தில் தேர்தல் முடிந்தபின் இதில் தீர்வு காண்பதாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் உறுதியளித்தார். நேற்று மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு சவ அடக்கத்துக்காக மயானத்துக்குப் போன தலித்துகள் நடுக்குப்பம் மீனவர்களில் சிலரால் தா*கிக் கா*ப்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், டிஎஸ்பி ஆகியோரிடம் பேசினேன். அதன்பின் நேற்றிரவு சவ அடக்கம் நடந்துள்ளது. வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
வருவாய்த்துறை ஆவணங்களின்படி அந்த இடம் ஆதிதிராவிடர் மயானம் என்றே உள்ளது. எனவே அதில் தனியாரால் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டடம் அகற்றப்படவேண்டும். மீனவர்கள் படகு நிறுத்த வேறு இடம் ஒதுக்கித் தரப்பட வேண்டும். காவல்துறையினர் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மாவட்ட நிர்வாகம் இதில் காலம் தாழ்த்தாமல் வன்முறையாளர்களைக் கைதுசெய்து அமைதித் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்.
மீன் பிடிப்பதற்கு லைசென்ஸ் வாங்க வேண்டும் என்ற கொடுமையான சட்டத்தை பாஜக அரசு கொண்டுவந்தபோது நாடாளுமன்றத்தில் அதை எதிர்த்துப் போராடித் தடுத்து நிறுத்தியது விடுதலைச் சிறுத்தைகள் எம்பிக்களான தலைவர் @thirumaofficial அவர்களும் நானும்தான்.
மீனவ மக்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்றும்; மீன்பிடித் தடைக் காலத்தில் அவர்களுக்கான நிவாரணத் தொகையை 18 ஆயிரமாக உயர்த்த வேண்டுமென்றும் நாடாளுமன்றத்தில் குரலெழுப்பி வருவதும் விடுதலைச் சிறுத்தைகள் எம்பிக்களான நாங்கள்தான்.
நடுக்குப்பம் மீனவர்கள் இதையெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும். தலித்துகளை எதிரிகளாகக் கருதக்கூடாது என அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
- ரவிக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர்
படங்கள் : சவ ஊர்வலத்தில் நடந்த தா*குதல்
பள்ளிக் கல்வியில் பின்னடைவு
விழுப்புரம் மாவட்டத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்ததைப் பற்றி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் விசாரித்தேன். மாவட்ட ஆட்சியரிடமும் கலந்தாலோசித்தேன். நிரந்தர ஆசிரியர்கள் நியமனம் உட்பட விழுப்புரம் மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் @imrajmohan அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
- ரவிக்குமார்
நாடாளுமன்ற உறுப்பினர்
மேகேதாது அணை விவகாரம் : அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை
~~~~~~~~~
மேகேதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன் தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி கருத்துகளைக் கேட்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.
காவிரி பிரச்சினை என்பது தமிழ்நாடு தழுவிய பிரச்சினையாக இருப்பதாலும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுபூர்வமான பிரச்சினையாக இருப்பதாலும் அனைத்துத் தரப்புக் கருத்துகளையும் கேட்டு முடிவெடுப்பது நல்லது. எனவே, சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி அதனடிப்படையில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு அமையவேண்டும்.
தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, தமிழ்நாடு தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி மட்டுமே செய்துள்ளது.
இதன் மூலம் உச்ச நீதிமன்றம் 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது. அதில் மேக்கேதாட்டு அணை கட்டுமானத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி எதுவும் அளிக்கவில்லை. விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு ( DPR) அனுமதி மட்டுமே வழங்கப்பட்டது. அன்றைய தலைமை நீதிபதி கவாய் வழங்கிய அந்தத் தீர்ப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:
“கர்நாடக மாநிலத்தால் தயாரிக்கப்படவுள்ள விரிவான திட்ட அறிக்கையானது (DPR), காவிரி மேலாண்மை வாரியத்தின் (CWMA)-ஒப்புதலைப் பெற்றால் மட்டுமே காவிரி நதிநீர் ஆணையத்தால் (CWC) பரிசீலிக்கப்படும்; ஏனெனில், விரிவான திட்ட அறிக்கையைப் பரிசீலிப்பதற்கு காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தின் (CWMA) முன் ஒப்புதல் ஒரு முன்நிபந்தனையாக இருக்க வேண்டும்.“ என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
எனவே, விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கும் நிலையிலேயே அணை கட்ட ஒப்புதல் கிடைத்ததாக அர்த்தம் கிடையாது.எனவே, கர்நாடக அரசால் பூமி பூஜை நடத்த இயலாது. இது கர்நாடக துணை முதலமைச்சர் டி. கே. சிவக்குமாரின் ஒரு அரசியல் நாடகமே தவிர வேறொன்றும் இல்லை.
திரு டி.கே.சிவக்குமாரின் பேச்சின் அடிப்படையில் நாம் பதற்றமடைய வேண்டாம். காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்திடம் நமது தரப்பு நியாயங்களை ஆதாரங்களோடு எடுத்துக் கூறி, கர்னாடக அரசு தயாரிக்கும் விரிவான திட்ட மதிப்பீட்டுக்குக்கு ஒப்புதல் அளிக்காமல் தடுக்க வேண்டியதே நம் முன்னால் இருக்கும் முக்கியமான உடனடிக் கடமையாகும்.
காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளிடையே ஒன்றுபட்ட அரசியல் நிலைபாடு தேவை. அதை ஏற்படுத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதே சாலச் சிறந்த வழியாகும். இதை மாண்புமிகு முதலமைச்சர் பரிசீலிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்
தொல்.திருமாவளவன்
நிறுவனர் - தலைவர்
விசிக.