#DelimitationBill
National Mediaல இருந்து Social Media வரைக்கும் ஒட்டுமொத்த இந்தியாவும் திமுக இப்போ என்ன பண்ண போகுதுனுதான் Debate பண்ணுது
யார் ஆண்டாலும் ஹீரோ அங்க நாங்கதான்
The Aura of DMK 😎😎😎♥️🖤
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இன்ப அதிர்ச்சி
கொடுத்த திமுக:-
தொகுதி மறு சீரமைப்பு சட்ட திருத்த மசோதாவிற்கு
🌹திமுக ஆதரவு 🌹
தெரிவிப்பதாக திமுகவின் திருச்சி சிவா அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அறிவிப்பு .
தமிழகத்தின் விகிதாசார அடிப்படையிலான தொகுதி ஒடுக்கீட்டில் தமிழகத்தின் நலன் காக்க மத்திய அரசு ஒத்துக் கொண்டதால் இந்த முடிவை திமுக எடுத்துள்ளது.
அதாவது 59 முதல் 61 தொகுதிகள் திமுக தமிழகம் பெறும். (7.2%)
Delimitation மசோதா... அதாவது தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிக்குமா? அளிக்காதா?....
இது தான் இன்றைய ஒட்டுமொத்த தவெக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளின் ஒரே கேள்வி அல்லது பதற்றம் அல்லது பயம் என்றே கூட சொல்லலாம்.
காரணம் , இந்த மசோதாவுக்கு திமுகவின் 22 எம்பிக்கள் ஆதரவு அளித்தால் மட்டுமே அல்லது வெளிநடப்பு செய்தோ அல்லது நடுநிலை காத்தோ இருந்தால் தான் வெற்றிபெற்று சட்டமாகும் என்கிற நிலை.
இந்த மசோதா உருவான போது அதை அகில இந்திய அளவில் முதன்முறையாக கண்டுணர்ந்து மிகக் கடுமையாக எதிர்த்து போராட்டங்கள் பொதுக்கூட்டங்கள் எல்லாம் நடத்தி... இந்த மசோதாவால் தென்னிந்திய மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புக்களையும் அநீதிகளையும் புட்டுப் புட்டு வைத்து, நாடு முழுவதும், முக்கியமான ஐந்து பெரிய மாநிலங்கள் தவிர்த்து மற்ற மாநிலங்கள் அனைத்தும் இந்த மசோதாவை எதிர்க்கும் சூழ்நிலையை உருவாக்கியது திமுக மட்டும் தான்.
இந்த விவகாரத்தில், காங்கிரஸோ, கம்யூனிஸ்டுகளோ சிம்பிளான அறிக்கைகளோடு வேறு எந்த ஆணியையுமே புடுங்கவில்லை. திமுக என்ற ஏவலாளி அல்லது ஏமாளி இருக்கிறான், நமக்காக களமாடுவதற்கு என்று எண்ணி கைகளைக் கட்டிக் கொண்டு தேவைப்படும் போது மட்டும் "ஸ்வாகா" சொல்லிக் கொண்டிருந்தனர்.
அடுத்ததாக இந்த மசோதாவை மகளிர் இடஒதுக்கீடோடு சேர்த்து அதன் பின்னனியில் ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்தபோது, திமுக எதிர்த்து வாக்களித்ததால் இது தோற்றுப் போனது.
அந்த மசோதாதான் இப்பொழுது மீண்டும் வருகிறது. இப்போ தான் "கடவுள் இருக்கான் கொமாரு" கதையே துவங்குகிறது. அதாவது காங்கிரஸ் மற்றும் அதன் தமிழக கூட்டணிக் கட்சிகள் மீது கொலை காண்டில் இருக்கும் திமுக இந்த மசோதாவை ஆதரித்தால், அது சட்டமாகிவிடும். அப்படி சட்டமானால், அத்தோடு சேர்த்து ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவும் சட்டமாகிவிடும்....
இதெல்லாம் நடந்தால் காங்கிரஸ் ஆளும் பல மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்குமே ஆயுள் குறைந்து விடும் என்பதோடு, இன்னும் பலப்பல சிக்கல்களையும் எதிர்கொள்ள நேரிடும் என்பதாலும், இந்த மசோதா வெற்றியானது காங்கிரஸுக்கு அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பது தான் இன்றைய நிலை..!
இதற்காகத் தான் காங்கிரஸும் அதன் தமிழ்நாடு கூட்டணிக் கட்சிகளும்... நேரடியாகவும், தவெக இவர்கள் பின்னால் நின்று கொண்டு தூண்டி விட்டும், திமுக இந்த மசோதாவை தோற்கடிக்க வேண்டும் என்று படாதபாடு பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், திமுக தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களோ, தங்கள் எம்பிக்களிடம், காங்கிரஸை துரத்தித் துரத்தி அடியுங்கள் என்று தெள்ளத்தெளிவாக உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு, தமிழர்கள், மாநில சுயாட்சி போன்ற விவகாரங்களில் திமுகவுக்கு வேறு யாருடைய பிராண்டும் தேவையில்லை... திமுக இருக்கின்ற கூட்டணி தான் இந்த விவகாரங்களில் மட்டுமல்லாது, சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சமரசமில்லாத போராளிக் குழு என்ற நம்பகத்தன்மையையும் பெறும். இதையெல்லாம் விளக்கிக் கொண்டிருக்க தேவையில்லை, சம்பந்தப்பட்ட மக்கள் அனைவரும் இதை நன்றாக உணர்வார்கள்.
இந்தியா கூட்டணி கட்சியினர் எழுதிய SIRக்கு எதிரான கடிதத்தில் திமுக கையெழுத்திட்ட நிலையில்... அமைச்சர் பதவிக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்த காங்கிரஸால் தவெகவிடமிருந்து கையெழுத்து பெற முடிந்ததா..? முஸ்லிம் லீக்கோ, கம்யூனிஸ்டுகளோ, விசிகவோ அதற்கான அழுத்தத்தை தவெகவிடம் வைக்க முடிந்ததா?
அப்படிச் செய்தால் அமைச்சரவையில் இருந்து நடிகர் விஜய் உதைத்துத் தள்ளிவிடுவார் என்ற அச்சமா? அல்லது கொடுத்த சோஃபாவை திரும்பக் கேட்பார் என்ற பயமா?
இப்பொழுது திமுகவிடம் மட்டும் இந்த விவகாரத்தில் இவர்கள் அழுத்தம் கொடுப்பதன் காரணம் என்ன..?! திமுக இளித்தவாயர்கள் உள்ள இயக்கம் என்ற எண்ணமா..?!
நேருவில் இருந்து இந்திரா காந்தி தொடர்ந்து ராஜீவ் காந்தி வரையிலும் திமுக எதிரியாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்தவர்கள். அவர்களுக்கு திமுகவின் பலம் தெரியும். சோனியா காந்திக்கும் திமுகவின் பலம் தெரியும். ஆனால் ராகுல்காந்தி திமுகவை எதிரியாகப் பார்த்ததில்லை... இனிமேல் பார்ப்பார். இனி அவர் எதிர்க்கட்சித் தலைவர் என்ற கோதாவில், மாநிலக் கட்சிகளை கதம் செய்யும் வேலையை கெத்தாகச் செய்ய முடியாது.
திமுகவின் கோரிக்கைப் படி, மக்கள் தொகை அடிப்படையில் என்று இல்லாமல், இந்த மசோதா அனைத்து மாநிலங்களுக்குமே ஐம்பது சதவிகித எம்பிக்கள் எண்ணிக்கை உயர்வை அளித்தால் நிச்சயமாக திமுக அதற்கு ஆதரவாகத்தான் வாக்களிக்கும்.
Issue base இல் தங்கள் நிலைப்பாட்டை எடுப்போம் என்று திமுக தலைவர் அறிவித்து விட்டார். ஆனால் எந்த Issue ஆக இருந்தாலும் காங்கிரஸை எதிர்ப்போம் என்றும் அறிவித்து விட்டார்..!
ஸோ... புரிஞ்சவன் பிஸ்தா..!
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
#ReelsMinister #School
தங்களின் தவறை சுட்டிக்காட்டியதால், எனக்கு பதில் சொல்கிறேன், நேரடியாக கேள்வி கேட்கிறேன் எனும் பெயரில் மறுபடியும் அரசுப் பள்ளிகள் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகிறீர்கள். மீண்டும் கார்ப்பரேட் மனநிலை வெளியே வருகிறது.
“அரசுப் பள்ளிகள் என்பது வறுமையின் அடையாளம் அல்ல! அது பெருமையின் அடையாளம்” எனும் நம்பிக்கையை ஐந்தாண்டுகளாக விதைத்துள்ளோம். அதை பல்வேறு வகைகளில் நிரூபித்தும் உள்ளோம். Reels-ஐ மட்டும் பார்க்காமல் எங்கள் மாணவச் செல்வங்களின் சாதனைகளையும் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். அரசுப் பள்ளிகள் மீதான வன்மம் இதோடு நிற்கட்டும்! இது தமிழ்நாட்டு கல்விச் சூழலுக்கு உகந்தது அல்ல.
மாண்புமிகு அமைச்சர் கீர்த்தனா,
தூரம் ஆன காலத்துல வைக்கிற துணியை யாரும் பார்க்க கூடாது,
பார்த்துட்டா வயிறு வலிக்கும்,
தீட்டு நிக்காம போகும் என கற்பிக்கப்பட்ட மூடத்தை விஞ்ஞானம் என நம்பி,
ஓட்டுச் சாரத்திலும் புழக்கடை புதற்றிலும் பதுக்கி வைத்து உபயோகித்த பெண்கள்,
பிறப்புறுப்பில் பூரான், தேள் சமயத்தில் பாம்பு என விசக்கடிகளால் மாண்டு போனவர்கள் ஏராளம்.
அப்படி அறியாமையில் மாண்டு போன ஏதோ ஒரு பெண்ணின் நான்காம் அல்லது ஐந்தாம் தலைமுறை பெண்ணைத் தான் நேற்று நீங்கள் அரசுப்பள்ளியில் சந்தித்து இருக்கிறீர்கள்.
அவர்களை பள்ளிக்கூடத்திற்குக் கூட்டிக் கொண்டு வரவும்,
வயசுக்கு வந்த பின்பும் சைக்கிள்களில், பொதுப் பேருந்தில் கிராமம் தாண்டி நகரத்திற்கு அழைத்து வரவும் ,
ஆண் பிள்ளைகளோடு சேர்ந்து அமர்ந்து படிக்க வைக்கவும்,
இங்கே தமிழ்நாட்டில் நூற்றாண்டு கால போராட்ட வரலாறு இருக்கிறது.
தமிழ்நாட்டில் வாழ்ந்த பெரியவர்கள் ; தலைவர்கள் பட்ட பாட்டை ; தீட்டிய திட்டங்களை அந்த வரலாற்றில் தேடிப் படியுங்கள்.
அரசுப் பள்ளியில் தமிழ்வழியில் படிக்கும் மாணவியிடம் எதற்காக எடுத்தவுடன் ஆங்கிலப் பாடத்தில் கேள்வி எழுப்புகிறீர்?
அமைச்சரிடம் பேசுகிறோம் எனும் பயத்தில், கையைக் கட்டுக்கொண்டு பதில் சொல்ல தயங்கி நிற்கும் அந்த சிறுமியை அரவணைத்து உற்சாகம் தந்து ஊக்குவிக்க வேண்டிய தாங்கள்,
அங்கே அனைவர் முன்னிலையிலும் அவளுடைய இயலாமையை கோடிட்டுக் காட்டி அப்பெண்ணை தாழ்வு மனப்பான்மைக்கு தள்ளுவது முறையா?
வாட் இஸ் யுவர் பாதர்? என்னும் கேள்விகல்லூரி முடித்தவர்களுக்கு தெரியும். புரியும்.
வாட் இஸ் யுவர் பாதர் ப்ரொஃபசன் ? என்னும் கேள்வி தான் பள்ளி சிறுவர்களுக்கு தெரியும். புரியும்.
பள்ளி மாணவர்களிடத்தில்,
குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்களிடத்தில் எப்படிக் கேள்விகளைக் கேட்க வேண்டுமென்பதை முதலில் நீங்கள் படியுங்கள் கீர்த்தனா.
உண்மையில் நீங்கள் தயங்கி நிற்கும் அந்த சிறுமியிடம் அறிவியலில், கணக்குப் பாடத்தில் கேள்வி எழுப்பி,
அப்பெண்ணின் கல்வியறியை ஒரு அமைச்சராக சோதித்து அதை ரீல்ஸ் ஆக வெளியிட்டிருக்க வேண்டும்.
மாறாக,
ஆங்கில மொழி அறிந்தவரே அறிவார்ந்தவர் எனும் மேட்டுக்குடி எண்ணத்தை உங்கள் செயல் வழியே கண்டு திகைத்தோம்.
அதிலும் முதல் வரிசை மாணவர்கள் நன்றாக படிப்பவர்கள், பதில் சொல்ல வல்லவர்கள்.
கடைசி வரிசை மாணவர்களால் இயலாது என்பதை ஒரு அமைச்சராக நீங்கள் அந்த ரீலஸ்-ல் வெளிப்படுத்தி இருப்பது முறையா ?
அரசுப் பள்ளிகளில் கல்வித் தரமில்லை ; ஆங்கில அறிவு குறைவு என்பதை உலகுக்கு சொல்ல,
தமிழ்நாட்டின் அமைச்சர் ஒருவரே லீல்ஸ் மூலம் முயல்வது சரியா? என்கிற கேள்வியோடு கூட இன்னொரு கேள்வியும் கேட்கிறேன் .
கீர்த்தனா எனும் தொழில்துறை அமைச்சர் அரசுப் பள்ளிக்கூடத்தில் ஆய்வு நடத்தலமா ?
தாரளமாக நடத்தலாம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரநிதியான அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் என்கிற அங்கீகாரத்தின் கீழ் அவர்பளுக்கு அந்த உரிமை உள்ளது எனில்,
தமிழ்நாட்டில் இயங்கும் தனியார் பள்ளிகளிலும் அதற்கான ஆய்வை நடத்த உரிமை உள்ளது தானே ?
இப்போது வரை நீங்கள் உட்பட எந்தவொரு அமைச்சரோ , சட்டமன்ற உறுப்பினரோ தனியார் பள்ளிகளில் ஆய்வு செய்யவில்லையே ஏன்?
ஆட்சிக்கு வந்தவுடன் தவெக அரசாங்கம் கொடுத்த 1,000 தனியார் பள்ளிகளுக்கான அனுமதிக்கு அடுத்து,
அந்த தனியார் பள்ளிகளின் அட்மிசனை ஊக்குவிக்கத் தான் ,
தாங்கள் அரசுப்பள்ளி மாணவர்களை சிறுமைப்படுத்தும் நோக்கில் ரீல்ஸ் வெளியிடுவதாக பொதுமக்கள் பேசத் துவங்கி இருப்பதை அறிந்தீர்களா ?
அரசுப் பள்ளி என்பது அரசாகத்தின் உடைமை.
சொந்த வீட்டின் உடைமையை ரீல்ஸ் வழியே உதாசீனம் செய்யாதீர்கள் பிளீஸ் .
ஒரே ஒரு கேள்வி கடைசியா நமக்கு இருக்கிற ஒரே ஒரு கேள்வி என்னென்னா...
என்ன மயிருக்கு கைகட்டி பதில் சொல்லணும் அப்படிங்கறது தான்.
இந்திராகாந்தி 404 இடங்கள் வெற்றிபெற்றார் out of 545. இந்தியா என்றால் இந்திரா, இந்திரா என்றாலே இந்தியா தான் என்றார்கள் காங்கிரஸ்காரர்கள். அதன் பின் இந்திராகாந்தியே ஒரு எம்பி தொகுதியில் தோற்றும் போனார்.
டெல்லி ஷீலா தீட்ஷித் மூன்று முறை முதலமைச்சர். அதன் பின் அவரே தோற்று, காங்கிரஸும் காணாமலேயே போனது.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் வந்தபின் இந்த கெஜ்ரிவால், தான் நடத்துவது தூய ஆட்சி என உருட்டாத உருட்டு இல்லை டெல்லியில். இரண்டு முறை வென்றவர், கடந்தத் தேர்தலில் தோற்றார்.
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி, அண்ணா என்று அழைக்கப்பட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றார்.
கிட்டத்தட்ட தெலுங்கு தேச கட்சியை சின்னாபின்னமாக்கினார்.
ஆந்திரா முழுவதும் இனியொரு 30 வருடங்களுக்கு எவரும் அசைக்க முடியாது என எல்லாப் பத்திரிக்கைகளும், கட்சி கடந்து அனைவருமே நம்பினர். ஆனால் இன்று எதிர்க்கட்சி கூட கிடையாது.
இங்கு விஜய் வெற்றி பெற்றதாக சொல்லும் 107 இடங்கள் தனி மெஜாரிட்டி அளவு கூட இல்லை.
அதுவும் பேக்கரி டீலிங் மூலம் பெற்றது.
இது ஒன்றும் புரட்சியோ புண்ணாக்கோ அல்ல. இது ஒரு அரசியல் பேரிடர்.
இன்னொரு 500 ஆண்டுகளுக்கு விஜய் தான் ஜெயிப்பார் என்கிற ரேஞ்சில் உருட்டுவது, அவர் கட்சிக்கு ஓடுவது, ஒளறிப் பிதற்றுவது, வரலாறு அறியாமல் வார்த்தைகளை வீசுவது, என எல்லாமே, ஒரு 'அரைவேக்காட்டுதனமான வெற்றியின்' விளைவுகளால் வெளிப்படுபவை. இந்தத் தேர்தலோடு இனி உலகமெல்லாம் அழிந்து விடாது இனிமேலும் தேர்தல் நடக்கும்.
இந்த ரூட் மாஃபியாவின் போலி முகத்திரை கிழியும்.
மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா.
இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்.
“தொட மாட்டேன் - தொட்டா விட மாட்டேன்” என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்?
#SofaModel அரசின் இந்த Washing Machine அரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.
திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
தலைமைக் கழக அறிவிப்பு
தி.மு.க. மாணவர் அணி சார்பில் பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ வெளியிட்ட த.வெ.க. அமைச்சர் திரு. சரத்குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம்
இளைஞர்களையும் சமுதாயத்தையும் சீரழிக்கும் போதைப் பொருட்கள் பயன்பாட்டைத் தடுத்து நிறுத்துவதோடு, அதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது சமூகப் பொறுப்புள்ள ஒவ்வொருவரின் கடமை. ஆனால், ஆளும் த.வெ.க. அரசில் இடம்பெற்றுள்ள மாண்புமிகு அமைச்சர்களின் செயல்பாடுகள் அவ்வாறானதாக இல்லை. குறிப்பாக, மனிதவள மேலாண்மைத் (Human Resources Management) துறை அமைச்சர் திரு. டி.சரத்குமார் அவர்கள், போதைப் பொருளைப் பயன்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று, போதைப்பொருள் ஒழிப்பு நாளன்று வெளியாகி சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அமைச்சரும் அதற்கு விளக்கமளிக்கிறேன் பேர்வழி என்று, த.வெ.க.வின் பாரம்பரியப்படி, குழந்தைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு அரசியல் செய்வதாகவே தோன்றுகிறது. அவர் போதைப் பொருள் பயன்படுத்தினரா இல்லையா என்று அவரைக் காக்க பட்டிமன்றம் நடத்துவதைவிட, பொதுவெளியில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது போல் வீடியோ எடுத்து, அதனை “Thug Life Moment” என்று Reels-ஆக வெளியிட்டு தவறான செயலைச் செய்ய இளைஞர்களை ஊக்குவிக்கும் அவரது செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
எனவே, இத்தகைய ஒருவர் அமைச்சரவையில் தொடர்வது, எவ்விதத்திலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நன்மை தரக்கூடியது அல்ல என்பதால், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.டி.சரத்குமார் அவர்களை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி, தி.மு.க. மாணவர் அணிச் சார்பில் 29-06-2026 (திங்கட்கிழமை) அன்று கழக மாவட்டத் தலைநகரங்களில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் கழக மாணவரணி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், “பூமியில் இருக்குது மூனு பங்கு தண்ணிடா, தண்ணிய அடிப்பத்தில் தப்பு ஒன்னும் இல்லடா” - “பத்தாது பாட்டில் நான் குடிக்க, அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க” போன்ற தத்துவப் பாடல்கள் மூலம் ரசிகக் கூட்டத்தை உருவாக்கிய முதலமைச்சர் அவர்களின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள், இன்னுமும் ரசிக மனநிலையிலேயே இருக்கின்றனர். அதிலும் அமைச்சர் ஜெகதீஸ்வரி அவர்களது கையில் முதலமைச்சர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற “டாட்டூ”-வைப் போட்டுக்கொண்டு, அவரது தத்துவப் பாடல்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்து கொண்டிருக்கிறார். இதனையெல்லாம் கண்டிக்க வேண்டிய முதலமைச்சரோ, இதையெல்லாம் ரசிக்கின்ற மனநிலையில் தேங்கி நிற்கிறார் என்பதை வேதனையோடு பதிவு செய்து, அமைச்சர்களின் இத்தகைய மாண்பற்ற போக்குகளை முதலமைச்சர் கண்டித்து இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தி.மு.க. மாணவரணி வலியுறுத்துகிறது.
- தி.மு.க. மாணவர் அணி
Fake Corruption Allegations Alert !!
DMK will be targeted with more corruption charges via known & unknown faces from multiple directions !!
The agenda is not anti-corruption but anti-DMK & weaken DMK with fake allegations to damage the credibility of DMK!!
DMK ians should analyse those fake narratives & give sharp factual response to stalemate the opponents!!
திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் - முன்னாள் அமைச்சர் அன்புச் சகோதரர் திரு. எ.வ. வேலு அவர்களின் வீட்டில் தமிழ்நாடு அரசின் DVAC ரெய்டு நடத்தி வருகிறது. அதற்கு அவர் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறார். சட்டப்படி எதிர்கொண்டு, நீதிமன்றத்தில் அவர் தரப்பு நியாயத்தை நிரூபிப்பார்.
அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன், திமுக ஆட்சிக்காலத்தில் ஊழல் என இதுவரை தொடரப்பட்ட ஒரு வழக்கில் கூட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடிந்ததில்லை என்பதே வரலாறு.
ஆளும்கட்சியினரின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக! இதைவிடப் பெரிய அடக்குமுறைகளையே பார்த்தவர்கள் நாங்கள். இதையும் எதிர்கொண்டு வெற்றிபெறுவோம்!
@evvelu