STOP ECOCIDE
STOP MEKEDATU DAM
மாற்றங்களின் மூலாதாரமாக திகழும் இளைஞர்களே....
மாபெரும் இனப்படுகொலையையும், சூழலியல் பேரழிவையும் தடுத்து காவிரியைக் காக்க வாருங்கள்.
கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால், அது காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக்கி, தமிழ்நாட்டில் பட்டினிச் சாவுக்கு வழிவகுக்கும். இதுவும் ஒரு வகையில் தமிழர் இனப்படுகொலை தான்.
அடுத்ததாக, 12,500 ஏக்கரில் வனம், விலங்குகள் சரணாலயம் ஆகியவை நீரில் மூழ்கி அழியும். இது சூழலியல் படுகொலை. இதை விட கொடூரமான சுற்றுச்சூழல் தாக்குதல் இருக்க முடியாது.
கர்நாடகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகளின் லாபத்திற்காக தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும், உணவாதாரத்தையும், சுற்றுச்சூழலையும் அழிக்க முயல்வது அநீதி.
எங்கெல்லாம் அநீதி தலை தூக்குகிறதோ, அங்கெல்லாம் ஆபத்பாந்தவனாக அவதாரம் எடுப்பவர்கள் இளைஞர்களாகிய நீங்கள் தான்.
பல மாற்றங்களை நிகழ்த்திய உங்களால் தான் மேகதாது அணையை தடுக்க முடியும்.
வாருங்கள்.... மேகதாது அணையை தடுப்போம்..... இனப்படுகொலையையும், சூழலியல் பேரழிவையும் தடுப்போம்!
#காவேரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #CauveryRights #TamilNadu
The DMK ecosystem is attacking me that the school issue I reported was a lie I concocted to help the TVK government. Let me state the facts.
We run two rural schools, both free NIOS schools under the Kalaivani Kalvi Maiyam umbrella, one in rural Tenkasi and the other in rural Theni.
The Theni school was originally started and run by a retired IPS officer, a honest and upright man. He built very nice facilities but had to shut down his CBSE school because the state government demanded too much money to issue the NOC. He told me that as a honest retired officer he did not have the money to pay and they would not issue the NOC otherwise.
He urged us to take over his trust so we could run our free NIOS school in the premises. That is how we started our NIOS school in Theni.
Unlike in Tenkasi, where I live, the Theni school faced occasional harassment from the DMK government because we did not have a state government registration, so we tried getting state government approval again (this time for the state board) and that of course would also cost money. So it was in a limbo.
Meanwhile in Tenkasi we wanted to build new school facilities (we were operating in make-shift facilities, the ones that came in frequent photos) and we applied for DTCP approval to construct the new buildings. Everyone who knows DTCP in our state knows what kind of corruption happened there under the DMK.
We waited patiently for DTCP approval for the new school buildings but the approval never came as long as the DMK was in power. The approval came automatically once the government changed.
It is this DTCP approval that I posted about in X. I want to once again appreciate the refreshing change.
Not only did the approvals come, government people told us not to pay money to anyone for any approvals. I have to appreciate this in public, having endured what we had endured before.
This is the "lie" that DMK wants to attack me on.
I do not need their certificate on my character.
They can examine their conscience and ask why a technology nerd like me who is mostly immersed in code would post these.
If they think I would back down by their vile personal attacks because I am a Brahmin or TVK Stooge or Sanghi or whatever, I will tell them this: unlike you dynasts I grew up with nothing. I studied in Tamil medium schools. I know how to live on nothing. I have dedicated the remainder of my life to make Bharat self reliant in technology while reviving our rural areas, the soul of our eternal sanatana civilization.
I will not be intimidated by their attacks. I am unafraid of death, why would I be afraid of the mere DMK?
And if they had any conscience they can return the money they looted (they know there they keep it) and then they can attack my character.
I will now go back to optimizing the code of our compiler!
Another CBSE School leader opens up. She did not have my prominence so the suffering inflicted on their school was much more.
I encourage people who silently suffered the disgusting corruption of the DMK era to come out.
We voted them out. Now let us tell the truth.
"மாபெரும் வரலாற்று சாதனை: இந்த ஆண்டே நடக்கிறது சாதிவாரி சர்வே!"
------
சமூநீதி சர்வே என்கிற பெயரில் சாதிவாரி சர்வே நடத்தப்படும். மத்திய அரசு நடத்தும் கணக்கெடுப்பு பணி முடிந்ததும் தமிழக அரசின் சர்வே தொடங்கும் என ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது."
விளக்கம்: மத்திய அரசின் கணக்கெடுப்பு பணிகள் இந்த ஆண்டே முடிவதால், மாநில அரசின் சாதிவாரி சர்வே இந்த ஆண்டின் இறுதியில் நடக்கும்.
இது ஒரு மாபெரும் சாதனை! இதில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் பங்களிப்பே முதன்மையானது.
#PMK #CasteCensus #CasteSurvey
தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த வேண்டியதன் தேவை குறித்து, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி மற்றும் சமுதாயத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தை தலைமையேற்று நடத்திய போது.!
#CasteCensus #PMK
தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சாதிவாரி சர்வே
நடத்தக் கோரி பா.ம.க நடத்திய அனைத்துக் கட்சி மற்றும்
சமூகத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களுக்கு
நன்றி!
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக மாநில அரசே சமூகநீதி சர்வே எனும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.
இந்தக் கோரிக்கையை தமிழக அரசு அதன் இலக்குகள் பட்டியலிலும் சேர்த்திருக்கிறது. இது சமூகநீதி சர்வேயை சாத்தியமாக்குவதில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய முன்னேற்றம் ஆகும்.
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் என்ற முறையில் எனது அழைப்பை ஏற்று அனைத்துக் கட்சி மற்றும் சமூகத் தலலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட
ஆளும் த.வெ.க.வின் திரு. வீர. விக்னேஷ்வரன் அவர்கள்,
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திரு. அக்ரி. கிருஷ்ணமூர்த்தி அவர்கள், திரு. இராமச்சந்திரன் அவர்கள்,
காங்கிரஸ் கட்சியின் திரு. எம்.ஏ.முத்தழகன் அவர்கள்,
பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள், துணைத் தலைவர் திரு. கரு.நாகராஜன் அவர்கள்,
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இயக்குனர் திரு.சோழன் மு. களஞ்சியம் அவர்கள்,
அ.ம.மு.க.வின் முன்னாள் அமைச்சர் திரு.செந்தமிழன் அவர்கள், திருமிகு. சி.ஆர். சரஸ்வதி அவர்கள்,
தே.மு.தி.க.வின் திரு. வி.சி. ஆனந்தன் அவர்கள்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு.தி.வேல்முருகன் அவர்கள்,
கொ.ம.தே.க பொதுச்செயலாளர் திரு. ஈ.ஆர். ஈஸ்வரன் அவர்கள்,
த.மா.கவின் திரு.விடியல் சேகர், திரு.முனவர் பாஷா அவர்கள்,
புரட்சி பாரதம் கட்சித் தலைவர் திரு.பூவை. ஜெகன் முர்த்தி அவர்கள்,
பெருந்தலைவர் மக்கள் கட்சியின் திரு. என்.ஆர். தனபாலன் அவர்கள்,
மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் டாக்டர் இராஜா அவர்கள்,
தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் திரு. கே.சி. திருமாறன்ஜி அவர்கள்,
தமிழர் தேசம் கட்சியின் நிறுவனர் திரு. கே.கே.செல்வக்குமார் அவர்கள்,
இந்திய ஜனநாயகக் கட்சியின் திரு. சண்முகம் அவர்கள்,
புதிய தமிழகம் கட்சியின் திரு. சங்கர் குரு அவர்கள்,
இந்திய தேசிய லீக் கட்சியின் திரு. தடா ரஹீம் அவர்கள்,
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் திரு. உ.தனியரசு அவர்கள்,
வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு.அண்ணா சரவணன் அவர்கள்,
பறையர் பேரவைத் தலைவர் திரு. ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள்,
தமிழ்நாடு யாதவ மகாசபை இணைப் பொதுச் செயலாளர் திரு. என்.எஸ்.சேதுமாதவன் அவர்கள்,
நாடார் மகாஜன சங்கத்தின் திரு. ஏ.வி.எஸ். மாரிமுத்து அவர்கள்,
விஸ்வகர்மா சமூக மக்கள் கூட்டம்மைப்பின் திரு. சண்முக சுந்தர பாபுஜி சுவாமிகள் அவர்கள்,
குறவர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்த திரு. கே.செல்வராசன் அவர்கள் ,
மிழலை நாடு மக்கள் கட்சியின் திரு. விவேகானந்தன் அவர்கள்,
கொங்கு மக்கள் முன்னணி கட்சியின் திரு. சி.ஆறுமுகம் அவர்கள்,
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திரு.சிரஞ்சீவி அவர்கள்,
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் திரு.முத்து கிருஷ்ணன் அவர்கள்,
ஆதித்தமிழர் பேரவையின் திரு.கோவை ரவிக்குமார் அவர்கள்,
வீரபத்திர ராஜகுல பேரவையின் திரு.தா. வசந்தன் அவர்கள்,
தமிழ்நாடு நாடார் சங்கத்தின் திரு. சௌந்திரகுமார் நாடார் அவர்கள்
ஆகியோருக்கு எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கைக்கும் முழு ஆதரவு தெரிவிப்பதாக தொலைபேசி மூலம் தெரிவித்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், கூட்டத்தின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ். பாலாஜி அவர்களுக்கு நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலை நிறுத்துவதற்காக இந்த அமைப்புகளுடன் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சியின் பயணம் தொடரும் என்பதையும் இந்தத் தருணத்தில் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#SocialJustice
மாவீரன் ஜெ.குரு உடலால் மறைந்தாலும், நமது உள்ளங்களில் வாழ்கிறார்; அவரது கனவை நனவாக்க கடுமையாக உழைப்போம்!
எனது மரியாதைக்கும், அன்புக்கும் உரிய அண்ணன் மாவீரன் ஜெ.குரு அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று. இந்த நாளில் நான் அவருக்கு எனது வணக்கத்தையும், மரியாதையையும் செலுத்துகிறேன். அவரது எட்டாம் ஆண்டு நினைவு நாளில் அவரது உழைப்பையும், தியாகத்தையும் போற்றுவோம்.
மாவீரன் ஜெ.குரு அவர்கள் இந்த மண்ணை விட்டு மறைந்திருக்கலாம். ஆனால், அவர் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். அவர் மறைந்தது முதல் இன்று வரையிலான 8 ஆண்டுகளில் அவரை நினைக்காத நாளில்லை. அந்த நினைவுகள் தான் அவரது மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டிருக்கின்றன.
கட்சியும், சமூகமும் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பது தான் அவரது கனவு. அதை நோக்கித் தான் அவர் உழைத்தார். அவரது கனவை நனவாக்குவதற்காக கடுமையாக உழைக்க இந்த நாளில் உறுதியேற்போம். அது தான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை.
சட்டசபையில் மட்டுமல்லாமல், முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து உரையாடினால், அது பாமகவிற்கு மக்களிடையே கூடுதல் ஈர்ப்பை ஏற்படுத்தும். ஊடகங்களின் கவனமே நகர மற்றும் பேரூர் பகுதிகளில் அரசியலைத் தீர்மானிக்கிறது.
காணொளி: https://t.co/cQUoUWN2XT
சட்டசபையில் முனைவர் சௌமியா அன்புமணி அவர்களின் செயல்பாடுகள் வைரலாகி வருகின்றன.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு சட்டசபையில் தொடர்ந்து முத்திரை பதிக்கப் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், எனது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது. உடன் முனைவர் சௌமியா அன்புமணி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்.!
தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள த.வெ.க.வின் தலைவர் விஜய் அவர்களுக்கு
வாழ்த்து!
தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது. இதற்காக தவெக தலைவர் விஜய் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@TVKVijayHQ
தமிழக மக்களின் நலன் - உரிமைகளுக்காக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து உழைக்கும்!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு, கடுமையாக உழைத்து வெற்றி வாய்ப்பை இழந்த வேட்பாளர்களுக்கும் அவர்களின் உழைப்பு ஒருபோதும் வீணாகாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.
தமிழ்நாட்டில் ஐந்தாண்டுகளாக மிக மோசமான ஆட்சியை நடத்தி வந்த திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி பல்வேறு போராட்டங்களையும், பரப்புரைகளையும் மேற்கொண்டு வந்தது. திமுகவுக்கு எதிராக மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பலையை உருவாக்கியதில் பாட்டாளி மக்கள் கட்சியின் பங்கு மகத்தானது. திமுகவுக்கு எதிரான அலையை பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணி அறுவடை செய்யும்; அமோக வெற்றி பெறும் என்று உறுதியாக நம்பினோம். ஆனால், தமிழக மக்களின் விருப்பமும், தீர்ப்பும் வேறாக அமைந்திருக்கிறது. மக்களின் இந்த முடிவை பா.ம.க. ஏற்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாள் முதலாகவே மக்களின் நலன்களுக்காகவும், கல்வி, சுகாதாரம், சமூகநீதி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தமிழக மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும், உழவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உறுதியாக போராடி வருகிறது. இனி வரும் காலங்களிலும் மக்களின் நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து உழைக்கும்.
சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் பாமக வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கும், பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும், களத்தில் கடுமையாக உழைத்த கூட்டணி கட்சிகளின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக பா.ம.க - கூட்டணி கட்சிகளுக்காக கடுமையாக உழைத்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை அளவிலான அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து இணை மற்றும் சார்பு அமைப்புகளைச் சேர்ந்த அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
@EPSTamilNadu@NainarBJP@TTVDhinakaran@GK__Vasan@jaganmoorthy_m
மாற்றம் உறுதியானது.... மகிழ்ச்சி பெருக்கெடுக்கிறது: வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விறுவிறுப்பாக வாக்குகள் பதிவாகி வரும் நிலையில், ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறிகள் உறுதியாகத் தெரிவதாகவும், பாட்டாளி மக்கள் கட்சி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டதாகவும் களத்தில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு எனது மனதின் அடி ஆழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை 10 மாதங்களுக்கு முன் தொடங்கிய போதே, தமிழ்நாட்டில் ஆட்சியாளர்களுக்கு எதிரான அதிருப்தி அலை உருவாகியிருப்பதாகவும், இது அடுத்து வரும் மாதங்களில் வலுவடைந்து தேர்தலில் போது சுனாமிப் பேரலையாக மாறி ஆட்சியைத் தூக்கி எறியும் என்று கூறினேன். அது தான் இன்று நடந்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டு மக்கள் கடந்த ஐந்தாண்டுகளாக, கட்டுப்படுத்தப்படாத கஞ்சா போதை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான தொடர் பாலியல் வன்கொடுமைகள், வேளாண் துறை வீழ்ச்சி, வேலைவாய்ப்பின்மை. தாங்க முடியாத அளவுக்கு வரி மற்றும் கட்டண உயர்வுகள், விலைவாசி உயர்வு, கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளின் சீரழிவு என நரக வாழ்க்கையைத் தான் அனுபவித்து வந்தனர். அவர்களின் விடுதலைக்கான விதை இன்று ஊன்றப்பட்டு விட்டது; மே 4-ஆம் தேதி விடுதலை மலரும்.
ஆட்சி மாற்றத்தை எண்ணி மக்கள் மகிழ்ச்சியில் திளைப்பதை வாக்குச்சாவடிகளில் இருந்து வெளியில் வரும் மக்களின் முகங்களில் பார்க்க முடிகிறது. இந்த நாளுக்காகத் தான் ஒட்டுமொத்த தமிழ்நாடும் காத்திருந்தது. மே 4-ஆம் தேதி முழுமையான வெற்றியைக் கொண்டாடுவோம். பாட்டாளி மக்கள் கட்சி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும், அதற்காக கடுமையாக உழைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் எனது நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
காட்டுமன்னார்குடி சட்டமன்ற தொகுதி குமராட்சி கிழக்கு ஒன்றியம் வடக்கு மாங்குடி கிராமத்தில் கூட்டணி கட்சி நிறுவனர் வீடு வீடாக மாம்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு
#NDA கூட்டணி சார்பில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் மருத்துவர். அன்புசோழன் அவர்களின் பிரச்சார சுற்றுப்பயன அட்டவணை..!
நாள் : 17.04.2026 (வெள்ளிக்கிழமை)
#Election2026#PMK#NDA#ADMK#DrAnbuSozhan