#BREAKING | சென்னை நொளம்பூரில் வீடு புகுந்து தந்தை, 2 மகன்களை கொடூரமாக வெட்டிய கொலை வழக்கில் 3 பேர் தவெகவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது
#SunNews | #Chennai | #Crime | #TVK | #சட்டம்ஒழுங்கு
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் வெளிவந்த தமிழக அமைச்சரின் "Thug Life Moment" வீடியோ - போதைப்பொருள் ஒழிப்புக்காகத் தனது முதல் கையெழுத்திட்ட முதலமைச்சர் இதற்கேனும் நடவடிக்கை எடுப்பாரா?
இன்றைய தமிழக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள், இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற IPL கிரிக்கெட் போட்டியின்போது தன்னுடைய "Thug Life Moment" வீடியோ ஒன்றை எடுத்து, தனது நெருக்கமான நண்பர்கள் மட்டும் பார்க்கும்படி அவரது INSTA பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் வெளியான அமைச்சரின் இந்த "Thug Life Moment" வீடியோவும், அதனைத் தொடர்ந்து அமைச்சர் அவர்கள் "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தனது உடல்நலக் குறைவான கைக் குழந்தையோடு IPL போட்டியில் பங்கேற்றதாகவும், குழந்தைக்கு தனது செல்போன் மீது வெள்ளை நிற மாத்திரையை வைத்து, ATM கார்டு மூலம் crush செய்து, பறக்காமல் இருக்க 500 ரூபாய் நோட்டை வைத்து மறைத்ததாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உடல்நிலை சரியில்லாத குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக ஐ.பி.எல் போட்டிக்கு அழைத்துச் சென்றதோடு, அக்குழந்தைக்கு மருந்து தயாரிப்பதையே Thug life Moment ஆக பெருமை கொண்டிருக்கும் அமைச்சர் அவர்களின் வீடியோ பதிவில் அவரின் மனைவியையும், உடல்நலக் குறைவு ஏற்பட்ட குழந்தையையும் எங்கே என்று மக்கள் சமூக வலைதளங்களில் எழுப்பும் கேள்விகளையும் அவ்வளவு எளிதாக புறந்தள்ள முடியாது. அதே நேரத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் என்பதால் இதனை விசாரிக்காமல் கடந்த கால ஆட்சியின் மீது பழி போட்டு கடந்து செல்வாரா தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
போதைப்பொருள் ஒழிப்புக்காக மூன்று கிலோமீட்டர் வரை ஓடி, தனது சக அமைச்சரை அவைப் புலவராக மாற்றிப் புகழ் பாட வைப்பதும், மற்றொரு அமைச்சருக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறைக்க குழந்தைகளைப் பயன்படுத்தி INSTA REELS-களை வெளியிடுவதன் மூலமாக மட்டும் போதைப்பொருள்களின் புழக்கத்தையும் பயன்பாட்டையும் மறைக்கவோ தடுக்கவோ முடியாது. போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்திட பாகுபாடற்ற நடவடிக்கையே அவசியம் என்பதை முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
எனவே, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகளை மேற்கொள்ளும் TNPSC உள்ளிட்ட மனிதவள மேம்பாட்டுத் துறையை வைத்திருக்கும் அமைச்சர் மீது எழுப்பப்பட்டிருக்கும் இந்தக் குற்றச்சாட்டை முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு முழுமையான விசாரணையை மேற்கொண்டு, அவர் பயன்படுத்தியது போதைப்பொருள்தான் என்பது உறுதியாகும் பட்சத்தில் அமைச்சர் மீது எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கையே போதைப்பொருள் ஒழிப்புக்கான ஆரம்பப் புள்ளியாக அமையும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
TN அமைச்சர் ஜெகதீஸ்வரி 'ராக்கெட்' ராஜாவுடன் (சர்ச்சைக்குரிய பின்னணி) போஸ் கொடுப்பது கவலை அளிக்கிறது.
MLA ஆகும் முன்பே அவரை அறிந்திருந்ததாகத் தெரிகிறது. ரவுடி தொடர்புகளில் இருந்து தலைவர்கள் தூரம் வைக்க வேண்டாமா?
அல்லது இது ஒரு சாதி உணர்வா இது? தமிழ்நாடு சிறந்த ஆட்சி தரத்திற்கு தகுதியானது.
உங்கள் கருத்து?
#TamilNaduPolitics #PublicAccountability
ஜனநாயகனை லீக் செய்து பழியை திமுகமேல போட்டு தேர்தல்ல ஜெயிச்சு
இப்போஅதை லீக் செய்தவன்மேல எந்த நடவடிக்கையும் இல்லை னு அவன ரிலீஸ் பண்ணிட்டாங்க
ஆக ஒட்டுமொத்தமா முட்டளாக்கியிருக்கனுக… master plan 🔥
எந்த மோசடியை நாம் வெளியிட்டாலும் திமுக அதிமுக கட்சிகளிடம் இருந்து ஒரே பதில் தான் வரும். இதெல்லாம் எங்க ஆட்சியில் மட்டுமா நடந்தது? அந்த ஆட்சியில் கூட தான் நடந்தது. அவர்களை போய் கேளுங்க என்பார்கள். ஆனால் மாறி மாறி இவர்கள் ஆட்சிகளில் நடக்கும் மோசடிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்விக்கு மட்டும் பதில் வராது.
மக்கள் வரிப்பணத்தில் படித்துவிட்டு காணாமல் போன இந்த மருத்துவர்கள் குறித்து TVK அரசு என்ன செய்ய போகிறது? இவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்து கண்டுபிடித்து தர சொல்வீர்களா? இவர்களது மருத்துவ அங்கீகார பதிவை நிறுத்தி வைப்பீர்களா? அல்லது திமுக - அதிமுக ஆட்சியாளர்கள் போல கள்ளத்தனமாக கடந்து செல்வீர்களா?
@arunraajkg@CMOTamilnadu