அமோனியா கசிவு நிகழ்ந்த தொழிற்சாலைக்கு ஆய்வுக்குச் செல்லாத தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா?
@CMOTamilnadu@TVKVijayHQ@Keerthana4VNR
அரசுப்பள்ளியை ஆய்வு செய்வதாகக் கூறிக்கொண்டு, தவெக அரசின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா அவர்கள் அரசுப்பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தையிடம் கேள்விகேட்டு நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியளிக்கிறது. குழந்தைக்குத் தன்னம்பிக்கையும், உத்வேகமும் அளிக்கும் வகையில் பேசாது, அக்குழந்தையைக் கூனிக் குறுக வைத்து, தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளும் விதத்தில் நடந்துகொண்டிருப்பது மிகவும் மலினமான விளம்பர அரசியலாகும். தங்களது அரசியல் ஆதாயம் தேடலுக்காகவும், விளம்பர மோகத்திற்காகவும் குழந்தைகளைக்கூட பலிகடாவாக்கத் துடிக்கும் தவெக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
ஆங்கிலம் என்பது ஒரு மொழிதானே ஒழிய, அறிவல்ல எனும் அடிப்படை உண்மையைக்கூட உணராத அமைச்சர் கீர்த்தனா, தன்னை அதிமேதாவியாகக் காட்டிக்கொள்வதற்காக ஆங்கிலமறியாத அக்குழந்தையைக் குற்றப்படுத்தலாமா? கடைசி இருக்கைக் குழந்தைகள் நன்றாகப் படிக்க மாட்டார்கள் எனும் பொருளில் பள்ளியில் பேசலாமா? அப்படிப் பார்த்தால் சட்டமன்றத்தில் கடைசி வரிசையில் இருப்பவர்கள் எல்லாம் அறிவில்லாதவர்களா என்ன? சட்டமன்றத்தில் முதல் வரிசையில் அமர்ந்து இருப்பவர்களுக்குக்கூட அறிவுப்பேரொளி சுடர்விட்டு எரிவது போல தெரியவில்லையே? ஒரு குழந்தையிடம் என்ன பேச வேண்டும்? எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? எனும் அடிப்படைப் பண்புகளைக்கூட கற்காத இவர் அக்குழந்தைக்குப் பாடமெடுப்பது கேலிக்கூத்து இல்லையா? வெள்ளை அறிக்கை வெளியிடும்போது அமைச்சர் மரிய வில்சன் தமிழைப் படிக்கவே தடுமாறி நின்றதை நாடே பார்த்ததே, தாய்மொழி தமிழை உச்சரிக்க முடியாது ஒரு அமைச்சரே திணறி நின்றது அவமானமில்லையா? இந்த இலட்சணத்தில் அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் வைத்துக் கொண்டு, ஒரு அரசுப்பள்ளிக் குழந்தையைக் கைகட்டி நிற்கச் செய்து, கேள்வி எனும் பெயரில் அத்துமீறுவது அக்குழந்தையின் மீதான உளவியல் வன்முறை!
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே அமோனியா கசிவால் இதுவரை 18 பேர் இறந்துபோயிருக்கிறார்கள். தனக்குத் தொடர்பே இல்லாத துறையில் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறும் தொழிற்துறை அமைச்சரான கீர்த்தனா, அமோனியா கசிவால் உழைக்கும் மக்கள் இறந்துபோன அந்தத் தொழிற்சாலையைப் பார்வையிட ஏன் செல்லவில்லை? வடசென்னைப் பகுதிகளில் இருக்கும் தொழிற்சாலைகள் பல சூழியல் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில், அத்தொழிற்சாலைகளில் விதிகள் சரியாகக் கடைபிடிக்கப்படுகிறதா என என்றைக்காவது ஆய்வுக்குச் செய்யச் சென்றிருக்கிறாரா? அமோனியா கசிவு நிகழ்ந்த தொழிற்சாலைக்கு ஆய்வுக்குச் செல்லாத தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிகளில் குழந்தையிடம் கேள்வி எனும் பெயரில் அத்துமீறலாமா? எல்லாம் விளம்பரமோகம் படுத்தும் பாடு! வெட்கக்கேடு!
ஆகவே, தவெக அரசின் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் அரசுப்பள்ளிகளில் அத்துமீறுவதையும், அரசியலைப் புகுத்துவதுமான மோசமானப் போக்கைக் கைவிட்டு, ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகளில் இனியாவது கவனம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
''விஜய் ஐயா எங்களை வாழவிட மாட்டேங்கிறாங்க.. பணம் கொடுத்தா தான் வீடு கட்ட முடியும்னு தவெக கட்சியிலிருந்து 3 நாளா எங்களை மிரட்டுறாங்க.. ரூ.50,000 கொடுன்னு கேட்டா எங்க போறது.. தினமும் வந்து தொல்லை பண்றாங்க..'' - பாதிக்கப்பட்ட பெண் பேட்டி
Tiruvallur | TVK | Police | Complaint
#Newstamil24x7 #ConstructionIssues
"மருத்துவமனை வளாகத்தில் ரீல்ஸ் எடுக்கிறார்கள்.. மருத்துவர்கள், ஊழியர்களின் செயல்திறன் பாதிக்கிறது” - பாதுகாப்பு வழங்கக்கோரி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை வாசலில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டம்
#Trichy | #Srirangam | #GovtHospital | #Reels
இன்று சிலர், "அரசு பள்ளி மாணவியை கேலி செய்தார்" என்று ஒரு பொய்யான கதையை பரப்புகிறார்கள்.
உண்மை என்ன தெரியுமா?
நானே ஒரு அரசு பள்ளி மாணவி. நானே தமிழ் வழிக் கல்வியில் படித்தவள்.
இன்று என் ஆங்கிலத்தை வைத்து என்னை கேலி செய்கிறவர்கள், உண்மையில் என்னை மட்டும் அல்ல... என்னைப் போன்ற அரசு பள்ளி மாணவர்களையும், தமிழ் வழியில் படிக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளையும் கேலி செய்கிறார்கள்.
நான் பள்ளியில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் அனைத்தையும் தமிழில்தான் படித்தேன். எனக்கு இரண்டாம் மொழியாக பிரெஞ்ச் படிக்கும் வாய்ப்போ, உயர்தர தனியார் பள்ளியில் படிக்கும் வசதியோ இல்லை.
கார்ப்பரேட் உலகிற்குள் சென்றபோது ஆங்கிலத்தில் தடுமாறினேன். தவறுகள் செய்தேன். கற்றுக்கொண்டேன். இன்னும் கற்றுக்கொண்டே இருக்கிறேன். அதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை.
இன்று என்னை ஆங்கிலத்திற்காக இணையத்தில் கூட்டமாக கேலி செய்கிறவர்கள், நாளை அதேபோல் ஆங்கிலத்தில் தடுமாறும் ஒரு அரசு பள்ளி மாணவனையும், ஒரு தமிழ் வழி மாணவியையும் இதேபோல அவமானப்படுத்த மாட்டார்கள் என்று யார் உறுதி தர முடியும்?
ஒரு அரசு பள்ளி மாணவன் உலக மேடையில் நிற்க வேண்டும். ஒரு தமிழ் வழி மாணவி எந்த மேடையிலும் தலையை நிமிர்ந்து பேச வேண்டும். அதற்கான சூழலை உருவாக்குவதே என் நோக்கம்.
என்னை விமர்சியுங்கள். என் பணியை கேள்வி கேளுங்கள். ஆனால் ஒரு தலைமுறையின் தன்னம்பிக்கையை கேலி செய்யாதீர்கள்.
மேலும், பரப்பப்படும் அந்த வீடியோவை நான் எடுக்கவில்லை. அது ஊடகங்கள் எடுத்த காட்சி. நான் யாரையும் படம் எடுக்கச் சொல்லவில்லை. ஊடகங்கள் செய்தி சேகரிப்பது அவர்களின் பணி. உண்மையை அறிய விரும்பினால் அவர்களிடமே கேளுங்கள்.
இன்னொரு கேள்வி...
இன்று என்னை கேலி செய்கிற அரசியல்வாதிகள் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்கள் அவர்களின் சொந்த குழந்தைகள் எத்தனை பேர் அரசு பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கிறார்கள்?
அரசு பள்ளியை நம்பாதவர்கள், அரசு பள்ளியில் படித்த ஒரு பெண்ணை கேலி செய்வது எளிது.
ஆனால் அந்த அரசு பள்ளியில் படித்த பெண் இன்று இந்த இடத்தில் நிற்பதே என் பதில்.
"Hands off to all of you" அல்ல.
அது "Hats off to all of you".
"Stand such a wonderful" அல்ல.
அது "Stand in front of such a wonderful...".
மூன்று பேரின் பெயர்களைச் சொன்னால், அதற்கடுத்து பயன்படுத்த வேண்டியது 'has' அல்ல, 'have'.
"Any of the sports minister" அல்ல.
அது "Any of the sports ministers".
"have a breakfast" அல்ல.
அது "have breakfast".
அமைச்சர் @Keerthana4VNR அவர்கள் மேடைகளில் பேசும் ஆங்கிலத்தில் பல அடிப்படைப் பிழைகள் இருந்தாலும், திமுக தரப்பில் இருந்து யாரும் அதை ஒரு குறையாகச் சுட்டிக்காட்டி விமர்சிக்கவில்லை. ஏனென்றால், மொழி என்பது வெறும் தொடர்பு சாதனம் மட்டுமே. ஒருவருக்கு மொழியை விடச் செயல்பாடுகளே முக்கியம் என்பது எங்களுடைய நம்பிக்கை.
ஆனால், இவ்வளவு பெரிய பொறுப்பில் இருக்கும் ஒரு அமைச்சர், பள்ளிகளுக்கு ஆய்வுக்குச் செல்லும்போது குழந்தைகளிடம் எப்படிப் பேச வேண்டும் என்கிற அடிப்படைப் பக்குவம் கூட இல்லாமல் நடந்துகொள்வதுதான் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பள்ளிகளுக்குச் செல்லும்போது மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். பெண் குழந்தைகளுக்குக் கல்வியின் அவசியத்தை உணர்த்தி அவர்களின் எதிர்காலத்திற்குத் தன்னம்பிக்கை கொடுக்க வேண்டும்.
அதை விடுத்து, மாணவர்களின் தன்னம்பிக்கையை உடைக்கும் வகையிலும், அவர்கள் பள்ளிக்கே வர பயப்படும் வகையிலும் நடந்துகொள்வது ஒரு அமைச்சருக்கு அழகல்ல. மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்கும் இதுபோன்ற அமைச்சர்கள் பள்ளிகளுக்குள் செல்லாமல் இருப்பதே நல்லது.
குழந்தைகளிடம் எப்படிப் பேச வேண்டும், அவர்களுக்கு எவ்வாறு நம்பிக்கை கொடுக்க வேண்டும் என்பதை தவெக அமைச்சர்கள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்!
தங்களின் தவறை சுட்டிக்காட்டியதால், எனக்கு பதில் சொல்கிறேன், நேரடியாக கேள்வி கேட்கிறேன் எனும் பெயரில் மறுபடியும் அரசுப் பள்ளிகள் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகிறீர்கள். மீண்டும் கார்ப்பரேட் மனநிலை வெளியே வருகிறது.
“அரசுப் பள்ளிகள் என்பது வறுமையின் அடையாளம் அல்ல! அது பெருமையின் அடையாளம்” எனும் நம்பிக்கையை ஐந்தாண்டுகளாக விதைத்துள்ளோம். அதை பல்வேறு வகைகளில் நிரூபித்தும் உள்ளோம். Reels-ஐ மட்டும் பார்க்காமல் எங்கள் மாணவச் செல்வங்களின் சாதனைகளையும் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். அரசுப் பள்ளிகள் மீதான வன்மம் இதோடு நிற்கட்டும்! இது தமிழ்நாட்டு கல்விச் சூழலுக்கு உகந்தது அல்ல.
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
#ReelsMinister #School
Totally horrifying💔🥹
>A 13-year-old girl was kidnapped by an e-rickshaw driver in Rajasthan.
>She was held for 5 days and assaulted by 32 men.
>The girl was forced to drink alcohol.
>Police rescued her on June 22.
>12 people, including the driver, have been arrested.
>All involved hotels have been demolished.
Can our "so-called" constitution and judiciary actually deliver justice, or is this just another mockery of the system?
பொட்டு மாமாவை TNPSC தேர்வுக்கு படிப்பவர்கள் விட்டு வெளுக்குறாங்க 😂
நாங்க வருஷ கணக்கா உக்காந்து படிக்குறோம் , நீ உன்ன பாக்க வந்து செத்தவங்களுக்கு அரசு பணி தருவியா?
Dear @Chinmayi
It is okay to have disagreements with people but this ???
We can feel outraged with things happening around us that we feel deeply concerned about but sending such messages to people? See a Doctor. Hope you Heal.
நிருபர்: தமிழ்நாட்டில் இருந்து தொழில் வாய்ப்புகள் வேறு மாநிலங்களுக்கு செல்வதற்கு திமுக லஞ்சம் கேட்டது தான் காரணம்னு சொல்றீங்க. என்ன ஆதாரம் இருக்கு?
அமைச்சர்: என்னோட டிவிட்டர் போஸ்ட்ல அப்படி கமெண்ட்ஸ் போட்ருந்தாங்க
அப்பசரி அப்பசரி 🤦♀️🤦♀️🤦♀️