திருச்சியிலிருந்து சென்னைக்கு ரயிலில் பயணித்தபோது, திராவிடர் கழகத் தலைவர்
கி.வீரமணியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
#KVeeramani | #MinisterRamesh
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (29.6.2026) தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
#CMJosephVijay
Honourable @CMOTamilnadu
உங்களுக்கான என் நன்றியை 26 அல்லது
247-க்குள் எப்படி அடக்கிவிட முடியும்?
மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது.
என் திருமணத்திற்கு தாலி எடுத்து தந்து என் மகிழ்ச்சித் திருநாளைத் துவக்கி வைத்தீர்கள். அதற்கே நானின்னும் நன்றி சொல்லித் தீரவில்லை
அதற்குள் என் வாழ்வின் துரதிருஷ்ட துக்க தினமான என் தந்தையின் மறைவிற்கு ஆறுதல் சொல்ல வந்த நீங்கள், பதவி சார்ந்த அந்தஸ்தை ஒதுக்கிவிட்டு, பதவிசாக மண்டியிட்டு அம்மாவிடம் ஆறுதல் சொன்னதில் நான் நெகிழ்ந்து விட்டேன்.
அரசு மரியாதை!
மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம். பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு நீங்கள் தந்ததை
என் இறுதிக்குள்ளும் நன்றியோடு நினைத்துக் கொள்வேன்.
இப்போதைக்கு வேறென்ன சொல்ல?
இதயம் கூப்பிய நன்றி Anna @actorvijay@TVKVijayHQ@TVKHQITWingOffl
திரையுலகமே என் தந்தையின் உலகம் என்றிருந்து, பின் அது எனக்குமான உலகமாக இன்னும் அகலமாக விரிந்து
ஒரு குடும்பமாக நெருங்கி, உயர்வான உறவாக உருவாகிவிட்டது.
விழுது மரமாகுமுன் விழுந்துவிட்ட ஆலமரமாய் என் தந்தையை இழந்த அன்று நான் பற்றிக்கொள்ள படர்ந்த அன்புக் கரங்களாகவும், தடுமாறிய என் கால்களை தாங்கிக் கொண்ட பூமியாகவும், வெடித்து விடுமுன் எனக்காக துடித்த மாற்று இதயமாகவும் இருந்த/ இருக்கின்ற / இருக்கப் போகின்ற திரையுலக ஜாம்பவான்களுக்கும், நண்பர்கள் அனைவருக்கும்
நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தவிர வேறென்ன சொல்லி என்னை நான் சமாதானபடுத்திக் கொள்ள? 🙏🏻
ஐந்து பைசா செலவில்லாமல் த.வெ.க. ஆட்சிக்கு வந்துள்ளது; இது மிகப்பெரிய மாற்றம்
இந்த மாற்றம் தொடர வேண்டும் - துரை வைகோ
#DuraiVaiko | #MDMK | #TVK | #CMVijay
தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த திரு. கே. பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த திரு.கே. பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும்.
அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனிதநேயம் மற்றும் சமூக விழுமியங்களை பேசும் காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரு.கே.பாக்யராஜ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
திரைத்துறையில் திரு. கே.பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.
"போலியோ இல்லாத உலகத்தை உருவாக்குவோம்" என்ற குறிக்கோளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு சார்பாக மாநிலம் முழுவதும் குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ராஜமங்கலம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையம், அயனாவரம் மகப்பேறு மருத்துவமனையில் இன்று நடைபெற்ற சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாமில் பங்கேற்றேன்.
பிறந்த குழந்தைகள் தொடங்கி ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இதன்மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதுவரை தங்கள் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து பெறாத பெற்றோர்கள், உங்கள் அருகில் உள்ள முகாமுக்குச் சென்று தங்கள் குழந்தைகளுக்கான சொட்டு மருந்தினை கொடுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.