இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ரஷ்ய
விண்வெளி வீரர்கள் இந்திய தேசியக் கொடியுடன் வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.
#independenceday#india#russia#InternationalSpaceStation#CHANAKYAA
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/1cR5clpCne
திருப்பத்தூரில் சென்ற வருடம் டேம்னிக் சேவியர் என்ற தனியார் பள்ளியில் மர்மமான முறையில் கிணற்றில் இறந்து கிடந்த 15 வயது சிறுவன் முகிலன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவரின் மரணம் குறித்து மறைக்கப்பட்ட முக்கியமான தகவல் ஒன்றை ஊடகத்துடன் பகிர்ந்து கொண்ட காணெளி..
#Gladiators Will be an Unkown side of Sir ❤️—the Man we all love and admire the most #AK sir
Sir’s love, passion, dedication, and relentless commitment to motorsport are truly inspiring and beyond words💥I was fortunate enough to watch a few clips, and I was absolutely blown away🫡
Visually stunning, beautifully captured by the entire team #Vijay sir & Powerful @gvprakash sir’s music 🔥
I’m sure each and every one of you is going to love this amazing film. Congratulations Producer #Shalini Mam , Wishing the whole team the very best! ❤️🏁🎬
#JustNow || காவிரியில் அணை கட்ட தமிழ்நாடு ஒப்புதல் தேவை என 2021ல் மத்திய அமைச்சர் கூறியிருந்த நிலையில் இன்று நிலைப்பாட்டை மாற்றியது ஏன்..? மத்திய அரசுக்கு வீ தி லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை கேள்வி..
#KaveriRiver | #CentralGovt | #WeTheLeader | #Annamalai | #PolimerNews
கடந்த 16.02.2018 அன்று, மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கிய காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டமைப்பையும் புதிதாக ஏற்படுத்த, காவிரி நதி பாயும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என நேற்றைய தினம், மாநிலங்களவையில், காவிரி நதி தொடர்பாக, மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் அளித்துள்ள பதில் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த 05.08.2021 அன்று அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்கள், அணைக் கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க, கர்நாடக மாநிலத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி நிபந்தனைக்குட்பட்டது என்றும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு சட்டத்தின்படி, காவிரி கடைமட்டத்தில் பாயும் மாநிலங்களின், (குறிப்பாக தமிழ்நாட்டின்) ஒப்புதல் இன்றி, நதியின் குறுக்கே அணை உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைக்க முடியாது என்றும் நாடாளுமன்றத்திலேயே தெளிவாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமைகளையும், நலன்களையும் புறக்கணித்து, மத்திய அரசு தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து திடீரென பின்வாங்கியிருப்பது, கர்நாடகத் தேர்தல் அரசியலுக்காகவா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்தகைய முக்கியமான விவகாரங்களில், மத்திய அரசு, நேர்மையாகவும், வெளிப்படையாகவும், ஒரே நிலைப்பாட்டிலும் செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பது தவறா?
தமிழ்நாட்டு மக்களை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு சகோதர மாநிலங்களுக்கிடையேயான நல்லுறவை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவிரி விவகாரத்தில் சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டு செயல்படுமாறு, மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
ஒரு நடிகனோட படம் ரிலீஸ் ஆச்சுன்னா அவன் படத்தை ₹100 கோடி ரூபாய் வசூல் செய்யவா நாம இருக்கோம்.
இளைஞர்கள் மத்தியில் தலைவர் அண்ணாமலை அண்ணா 🔥
@annamalai_k#Annamalai#Tamilnadu
தன் குழந்தையின் உடல்நிலை சரியில்லாததால் பிரபல தாதா மணிகண்டன் சிறைச்சாலையில் இருந்து பரோலில் வீட்டுக்கு வந்து மீண்டும் ஜெயிலில் சென்ற போது சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். 🥺
கட்சிகாரர்கள் பேச்ச கேட்டு கத்*திய தூக்கிட்டு சுத்துற இளைஞர்களுக்கு இது ஒரு பாடம் 💯
இவ்வளவு தான் வாழ்க்கை 🤷♂️
சில நேரங்களில் சில தீர்ப்புகள் பாக்கும்பொழுது சட்டம் நமக்கு நல்லது தான் செய்யுதா ன்னு ஒரு மாதிரி சந்தேகத்தை உருவாக்குது..
ஒரு நபர் திருமணம் செஞ்சுகிறார்..
Life நல்லா போய்க்கிட்டு இருக்கு...சந்தோஷமா வாழுறாங்க..wife pregnant ஆகுறா...குழந்தை பிறக்குது...
சில வருடங்களில்..wife க்கு gulf ல ஒரு job கிடைக்குது..
குடும்பம் மேலும் சந்தோஷமா கொண்டாடுது..
புள்ளய நான் பாத்துகிறேன் நீ போ..போய் நிம்மதியா உன் job ல concentrate பண்ணுன்னு கணவனும் மாமியாரும் அனுப்பி வைகறாங்க..
சில மாதம் ஓர் ஒன்னு ரெண்டு வருடம் நல்லா தான் போச்சு..
அப்றம் பாத்தா அந்தம்மா leave க்கு வர்றது குறையுது..
Ph call குறையுது ..குடும்பத்துடன் இருக்கும் அந்த touch கொஞ்சம் கொஞ்சமா விட்டுப்போகுது...
அப்றம் ஒரு நாள் தலையில் இடி இறங்கியது போல..
அந்த ஆள் க்கு செய்தி வருது..
அவர் மனைவி வேறொருவரை திருமணம் செஞ்சுகிட்டாங்கனு..
வீட்ல புருஷன் இருக்கான்..
உன்னோட dreams நிறைவேற கூட நின்ன மாமியார்.. புள்ளய நான் பாத்துகிறேன் னு அனுப்பி வெச்ச ரெண்டு பேர்..
அம்மா எப்போ வருவாங்க ன்னு காத்திருக்கும் மகள்
எதுவுமே அந்த பெண்ணுக்கு நியாபகம் வரல..🥺
இதுல சோகம் என்னன்னா..அந்த கணவன் அதிலிருந்து மீண்டு வந்துட்டான்..
பக்கத்தில் யாருக்கும் சொல்லாமல் தன் சோகத்தை மனசுல வெச்சுட்டு வெளியே சிறிச்சு..மகளுக்காக வாழ ஆர்பிக்கிறான்..
ஊர்ல wife எங்க ன்னு கேட்டா gulf ல..னு சொல்லி சிரிச்சு கடந்து போய்...
தான் கஷ்டப்பட்டு தன் அம்மாவையும் மகளையும் நல்ல படி யா பாத்துகிட்டான்..
ஊர்ல அந்தாளுக்கு அம்புட்டு நல்ல பெயர்..
எல்லோரிடமும் சிரித்து பேசும் குணம் கொண்டவர்..
இப்படியே 8 வருடம் போயிடுச்சு...
திடீர்னு ஒரு நாள் ஒரு notice வருது..மகளின் custody கேட்டு அம்மா case போற்றுக்கு ன்னு..
அதிலிருந்து சில மாதங்களில் மகளின் custody அம்மா மற்றும் ரெண்டாவது கணவருக்கே என்ற தீர்ப்பும்..
அவரை சுக்குநூறா உடைத்து போடுது..🥺🥺
அவருக்கு இருந்த ஒரே நம்பிக்கை ஒரே பிடிப்பு அந்த மகள் ..அவளும் போய்ட்டா..
இனி என்ன இருக்கு னு
su!c!de பண்ணிக்கிறார் அந்த நபர்..
ரெண்டு நாளா சோசியல் மீடியா வில் எங்கு பார்த்தாலும் அவரின் சிரித்த முகமே🥺
Private bus conductor ஆன
38எ வயது ரஞ்சிஷ்🥺
அவுங்க அம்மா இன்னும் அதிர்ச்சியில் இருந்து வெளியே வரல..
அம்மாவை விடுங்க ஊர்மக்கள் ..bus ல அடிக்கடி அவர மீட் பண்ணவங்க எல்லோருக்கும் ஒரே கருத்து தான்
"இவர் மனசுல இவ்ளோ வேதனை இருந்ததா?
சிரிச்சு சிரிச்சு பேசுவாரெ..
எங்க கூட share பண்ணிருந்தா..appeal க்கு நாங்க உதவிருப்போமே..🥺
என்ன சட்டமோ..
புள்ளய வளர்க்க வேண்டிய சமயத்தில் வேணா னு போனவளுக்கு..
புள்ளய கொடுத்த சட்டம்..
உசுர கொடுத்து வளர்த்த அப்பா விடம் இருந்து புள்ளய புடுங்கி எவனோ ரெண்டாவது அப்பா (step father)கிட்ட கொடுத்த சட்டம்..
ரஞ்சிஷ் ஆன்மா சாந்தி அடையட்டும்..🙏🥺
இன்று மாலை பொள்ளாச்சியில், @WTLFoundation சார்பில் நடைபெற்ற 'போதை இல்லா தமிழகம்' – We the Leaders மாநாட்டில் பங்கேற்று என்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஜூலை 2026 முழுவதும் 'White Band மாதம்' என்ற மக்கள் இயக்கத்தை முன்னெடுக்க, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரண்டு வந்த ஆயிரக்கணக்கான We the Leaders தலைவர்கள், குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், சகோதர, சகோதரிகள் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நமது இயக்கத்தில் இணைந்திருப்பவர்களில் 17% பெண்கள் என்பது, சமூக மாற்றத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் மிகப்பெரிய சான்றாகும்.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக சமரசமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது. போதைப்பொருளை ஒழிக்க வேண்டுமெனில் அதன் தேவையையே வேரோடு அழிக்க வேண்டும். இந்தப் போராட்டம் அரசின் பொறுப்பு மட்டுமல்ல; ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு குடிமகனும் ஏற்க வேண்டிய சமூகப் பொறுப்பு. அதனால்தான் இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் "போதை விழிப்புணர்வு மாதம்" ஆகக் கடைப்பிடித்து, இந்த விழிப்புணர்வு இயக்கத்தை ஒவ்வொரு வீடு, தெரு, கிராமம், குடியிருப்பு மற்றும் கல்வி நிலையம் வரை எடுத்துச் செல்ல உறுதி எடுத்துள்ளோம்.
சமூக மாற்றம் போதை ஒழிப்போடு முடிவடைவதில்லை. ஆகஸ்ட் மாதம், "சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாதம்" ஆகக் கடைபிடித்து, தமிழகம் முழுவதும் 50 லட்சம் மரக்கன்றுகள் நடும் மக்கள் இயக்கத்தை முன்னெடுக்கிறோம். மேலும், வரும் அக்டோபர் 15, 2026, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளில் "A.P.J. Abdul Kalam Centre for Ethics and Politics" தொடங்கப்பட்டு, நற்பண்புகளையும், சமூக மாற்றத்திற்கான பயிற்சியையும் கொடுத்து, 1.5 லட்சம் தலைவர்களை அடுத்த ஆண்டுக்குள் உருவாக்கும் பயணத்தைத் தொடங்குகிறோம்.
அடுத்த ஆறு மாதங்களில் We the Leaders இயக்கம், சமூகத்தின் பல முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் மக்களுடன் இணைந்து பணியாற்றும். ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மூலம், ஆளும் அரசைப் பொறுப்பேற்கச் செய்வதோடு, மக்களின் நலனையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவோம்.
மாற்றம் என்பது யாரோ ஒருவர் மட்டுமே உருவாக்குவது அல்ல; ஒவ்வொரு குடிமகனும் தலைமைப் பொறுப்பை ஏற்கும் தருணத்தில்தான் அது தொடங்குகிறது. பாதுகாப்பான, போதை இல்லாத, பசுமை நிறைந்த, நேர்மையான, வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை நாம் அனைவரும் இணைந்து உருவாக்குவோம்.
மாறுவோம்... மாற்றுவோம்! (1/3)
போதைக்கு எதிரான விழிப்புணர்வு வீடியோ குமரியில் இருந்து .
தலைவர் @annamalai_k அவர்கள் வழியில்.
மாற்றம் நம்மிடமிருந்து துவங்கட்டும்.
மாறுவோம் மாற்றுவோம் 🫰
@WTLFoundation
தமிழகம் முழுவதும், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகே உள்ள, டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தையும் மூட வலியுறுத்துவோம்.
சென்னை நகரின் சில பகுதிகளில் நாம் மேற்கொண்ட கள ஆய்வின்படி, பல டாஸ்மாக் மதுக்கடைகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாகவே இயங்கி வருகின்றன.
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், இது போல, பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாக இயங்கும் டாஸ்மாக் கடைகளை மூட, மக்கள் நேரடியாகவோ, அல்லது நமது We the Leaders அமைப்பின் மூலமாகவோ, மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுப்போம். மது அரக்கனை ஒழிக்க ஒன்றிணைவோம். தமிழ்நாட்டைக் காப்போம்.
மாறுவோம், மாற்றுவோம்!
#WTL_WhiteBandMonth
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியம், கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 27 அன்று போட்டித் தேர்வை நடத்தியது. சுமார் 42,000 தேர்வாளர்கள் பங்கேற்ற இந்தத் தேர்வுகள், 48 பாடப்பிரிவுகளுக்கு நடைபெற்றன. கடந்த 25.06.2026 அன்று வெளியிடப்பட்ட இந்தத் தேர்வுகளின் முடிவுகள், பல குழப்பங்களையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளன.
பாடப்பிரிவுகளுக்கு 150 மதிப்பெண்களுக்கான தேர்வும், விளக்கவுரைக்கு (Descriptive) 50 மதிப்பெண்களுக்கான தேர்வும் நடைமுறைப்படி நடத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழ்த் துறையில், 150 மதிப்பெண்களுக்கு 111 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த தேர்வாளருக்கு, விளக்கவுரை தேர்வில், பூஜ்ஜியம் மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதே போல, கணினி அறிவியல் துறையில் 107/150 மதிப்பெண்கள் பெற்றவருக்கு, விளக்கவுரை தேர்வில், 1/50 மட்டுமே கிடைத்திருக்கிறது. அதே நேரத்தில், இயற்பியல் பாடப்பிரிவில், 54/150 பெற்றவர், விளக்கவுரை தேர்வில், 49/50 பெற்றிருக்கிறார்.
இப்படி, மொத்தம் 43 பாடப்பிரிவுகளில், பாட மதிப்பெண் அதிகம் பெற்றவர்களுக்கு, விளக்கவுரை தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண்ணும், பாட மதிப்பெண் குறைவாகப் பெற்றவர்களுக்கு, விளக்கவுரை தேர்வில் மிக அதிக மதிப்பெண்களும் வழங்கப்பட்டுள்ளது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. மேலும், விளக்கவுரை மதிப்பெண்களில், 8.25, 24.75 என தசம, எண்ணிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. இது எப்படி சாத்தியம் என்ற கேள்வியும், தேர்வாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இப்படி, தேர்வு மதிப்பீட்டு முறையின் குழப்பத்தால், பல தேர்வாளர்களின் தரவரிசையில், பல நூறு இடங்கள் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த மதிப்பீட்டு முறையின் வெளிப்படைத் தன்மை குறித்தும், நம்பகத்தன்மை குறித்தும் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது.
உதவிப் பேராசிரியர் பணிக்காக, தமிழக இளைஞர்கள் பல ஆண்டுகளாக தங்கள் கடுமையான உழைப்பை வழங்கியிருக்கிறார்கள். தேர்வு மதிப்பீட்டில் இத்தனை குழப்பங்கள் ஏற்புடையது அல்ல. எனவே, இந்த விளக்கவுரை (Descriptive) தேர்வு மதிப்பீடு முறையை ஆய்வுக்குள்ளாக்க வேண்டும் என்றும், இந்தத் தேர்வை முழுமையாக மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும், தமிழக அரசை வலியுறுத்துகிறேன். மேலும், கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில், 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், 2708 பணியிடங்களுக்கு மட்டுமே தேர்வு நடைபெற்றுள்ளது. மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம், கடந்த மே மாதம், 4000 பணியிடங்களையும் ஆறு மாதங்களில் நிரப்ப உத்தரவிட்டுள்ளது. எனவே, மீதமுள்ள பணியிடங்களையும் நிரப்ப தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த மூன்று மருத்துவக் கல்லூரிகள், தற்போது "நிகர்நிலைப் பல்கலைக்கழகம்" (Deemed University) அந்தஸ்தைப் பெற்றுள்ளதால், இந்தக் கல்வியாண்டிலேயே 650 மருத்துவக் கல்வி இடங்கள் மாநில ஒதுக்கீட்டிலிருந்து விலகியிருப்பது, மிகவும் அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஆகும். இதனால், 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்விக் கனவோடு இருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களே முதலில் பாதிக்கப்படுவார்கள். மேலும், இந்தக் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம், குறைந்தபட்சம் நான்கு மடங்கு உயரக்கூடும்.
நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றுள்ள கல்லூரிகளான, செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி (250 இடங்கள்) மற்றும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம் & சீனிவாசன் மருத்துவக் கல்லூரி (400 இடங்கள்) ஆகிய கல்வி நிறுவனங்களை யார் நடத்துகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ரகசியம்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், இந்த மூன்று கல்லூரிகளுக்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெறுவதற்காக எந்தவிதமான தடையில்லாச் சான்றிதழையும் (NOC) வழங்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்ட மறுப்புக் கடிதம் குறித்தான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஆனால், பல்கலைக்கழக மானியக் குழு, UGC (Institutions Deemed to be Universities) Regulations, 2022-இன் 5.02(i) மற்றும் 5.02(ii) விதிகளின்படி, இணைப்புப் பல்கலைக்கழகம் 60 நாட்களுக்குள் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால், மாநில அரசுக்கும் இணைப்புப் பல்கலைக்கழகத்திற்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று பல்கலைக்கழக மானியக் குழு கருதி, நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தை வழங்க முடியும்.
இந்நிலையில், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி இரண்டுக்கும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தடையில்லாச் சான்றிதழ் வழங்கவில்லை என்று கூறியுள்ளது.
எனவே, தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் சீனிவாசன் மருத்துவக் கல்லூரியின் விண்ணப்பத்தை முந்தைய திமுக அரசு, 60 நாள் காலக்கெடு முடியும் வரை திட்டமிட்டு கண்டுகொள்ளாமல் இருந்ததா என்ற முக்கியமான கேள்வி எழுகிறது.
இந்த விவகாரம் குறித்து தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு முழுமையான விசாரணை நடத்தி, வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்காமல் கண்டுகொள்ளாமல் இருந்தவர்கள் யார் என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவக் கல்வியை குறைந்த கட்டணத்தில் பெற வேண்டும் என்ற ஆயிரக்கணக்கான மாணவர்களின் கனவை, எதிர்காலத்தை, நிர்வாக அலட்சியம் மற்றும் யாருடைய சுயநலத்துக்கும் பலிகடாவாக்க அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
கலிலியோ எனும் மகான்,400 வருடம் முன்..இரு வேறு எடையுள்ள பொருள்கள் காற்றுத்தடை இல்லாத இடத்தில் மேலிருந்து விழும் போது ஒரே நேரத்தில் பூமியைத் தொடும்னு சொல்லிட்டு போய்ட்டார்,இப்போ அதை நவீன வசதியில் பரிசோதித்து மகிழ்ந்து வியந்திருக்கிறார்கள்..படிக்கும் குழந்தைகளுக்கு காட்டவும்!