இன்று அறிவிக்கப்பட்டுள்ள 72 ஆவது தேசிய விருதுகளில், தமிழகத் திரைத்துறையில் இருந்து, சிறந்த தமிழ்த் திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராயன் திரைப்படக் குழுவினர் மற்றும் சமூக மற்றும் தேசிய நலன் பிரிவில் சிறப்பு விருது வென்றுள்ள கேப்டன் மில்லர் திரைப்படக் குழுவினருக்கும், சிறப்பு விருது வென்றுள்ள திரு @dhanushkraja அவர்களுக்கும், அமரன் திரைப்படத்துக்காக தமிழ் மொழியில் சிறந்த இயக்குநர் விருது வென்றுள்ள திரு. @Rajkumar_KP, சிறந்த பின்னணி இசையமைப்பாளர் விருது வென்றுள்ள திரு. @gvprakash, சிறந்த படத்தொகுப்பு விருது வென்றுள்ள திரு. கலைவாணன் ஆகியோருக்கும், மகாராஜா திரைப்படத்துக்காக சிறந்த சண்டை பயிற்சியாளருக்கான விருது வென்றுள்ள திரு அனல் அரசு, சிறந்த துணை நடிகை விருது வென்றுள்ள செல்வி. சச்சனா நமிதாஸ் ஆகியோருக்கும், மெய்யழகன் திரைப்படத்துக்காக சிறந்த ஒலிக்கலவை விருது வென்றுள்ள திரு. சுரேன் ஜி உள்ளிட்ட அனைவருக்கும், மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், “BLUE” (non feature) படத்துக்காக சிறந்த ஒலி வடிவமைப்பு தேசிய விருது பெற்ற டி.எஸ். ஹரிஹர சுதன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்த் திரையுலகின் பெருமையை உயர்த்திய உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
ஆனைமலை Long Distance Runners குழுவின் நிறுவனர் திரு. லிங்கேஷ் காமாட்சி மற்றும் அவரது குழுவினர், 28 கி.மீ. தூரம் மாரத்தான் ஓடி வந்து, நமது 'போதை இல்லா தமிழகம்' மாநாட்டில் பங்கேற்றது, சமூகத்தின் மீதான அவர்களின் அக்கறையைக் காட்டுகிறது.
இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் இந்த இளைஞர்களின் அர்ப்பணிப்புக்கும் விழிப்புணர்வு முயற்சிக்கும், எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிப்பட்ட இளைஞர்களே மாற்றத்தின் உண்மையான தூதுவர்கள்.
மாறுவோம், மாற்றுவோம்!
எளிமையே அடையாளமாகவும், மக்கள் சேவையே அரசியலாகவும் வாழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த தினம் இன்று.
அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன், ஆயிரக்கணக்கான பள்ளிகளை உருவாக்கி, மதிய உணவுத் திட்டத்தின் மூலம் ஏழை குழந்தைகளின் கல்விப் பயணத்திற்கு உறுதுணையாக இருந்த அவரது தொலைநோக்கு பார்வை, பல தலைமுறைகளின் வாழ்க்கையை மாற்றியமைத்தது.
பதவியை விட மக்கள் நலனையே பெரிதாகக் கருதிச் செயலாற்றி, தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும், விவசாய வளர்ச்சிக்கும், வலுவான அடித்தளத்தை அமைத்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் புகழ், என்றும் நிலைத்திருக்கும்.
Looking forward to joining our @WTLFoundation leaders in Pollachi this evening as we gather together, united by our shared resolve to build a drug-free Tamil Nadu.
போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் உறுதியுடன், இன்று மாலை பொள்ளாச்சியில் நடைபெறும் மாநாட்டில், @WTLFoundation தலைவர்களுடன் பங்கேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
போதை இல்லா, பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்குவோம்.
மாறுவோம், மாற்றுவோம்!