திமுகவின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணம் சபரீசன் . அது போல இந்த பதிவை இட்டவரை போன்ற சொம்பு தூக்கிகளும் காரணம் . மருமகன் என்றால் வீட்டுக்குள் அவருக்கு முக்கியத்துவம் கொடுங்கள் . கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவருக்கு கட்சி நிர்வாகிகள் “மதிப்புக்குரிய மாப்பிள்ளை” , “திராவிட மாப்பிள்ளை” என்றெல்லாம் படத்தோடு பதிவிடுவது சாமானியர்கள் மத்தியில் எவ்வளவு எரிச்சலையும் கேலியையும் உண்டாக்கும் என்பது ஸ்டாலினுக்கும் , உதயநிதிக்கும் புரியாதென்றால் இவர்கள் லட்சக்கணக்கில் வாங்கிய ஆலோசனைகள் புரிந்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கில்லை .
தோற்றுப் போனவுடன் சொந்த கட்சிக்காரர்களே முதுகில் குத்துவார்கள்.
ஆம் ஆத்மியின் அர்விந்த் கெஜ்ரிவால், திரிணாமூலின் மம்தா, அதிமுகவின் எடப்பாடியார் வாங்காத குத்துக்கள் இல்லை.
அவ்வளவும் பச்சை துரோகங்கள்.
அர்விந்த் கெஜ்ரிவாலின் எம்.பிக்களும், மம்தாவின் எம்.பிக்களும் கைகோர்த்து சங்கிகளுக்கு அளிக்கும் ஆதரவைப் பார்த்தால், பீஜேபீ மைனாரிட்டி ஆட்சி என்கிற அவலம் தொலைந்து போய்விடும் போல ?
மம்தா தோற்கடிக்கப்பட்டவுடன், வீழ்த்தப்பட்டவுடன், இன்று எதிர்கட்சியாகக் கூட தீதி இல்லை. அந்தளவு கொடூரங்கள் அங்கு நிகழ்கின்றன !
இங்கோ ஸ்டாலினை முறைப்படி சந்தித்துவிட்டுத்தான் விசிக, கம்யூக்கள், இயூமு போன்றோர் தவெக ஆட்சியமைக்க உதவப் போயினர் என்றாலும் ;
அவர்கள் அப்படி போனதுமே, இனி ஒருபோதும் அவர்கள் அறிவாலயம் இருக்கும் திசையில் கூட தலைவைத்து படுக்க மாட்டார்கள் எனப் புரிந்துக் கொண்டோம். எளிதாக அதை ஏற்றும் கொண்டோம் !
எங்களுக்கு வலியைத் தந்தது காங்கிரஸ், மதிமுக போன்றோர்தான் !
ஏனெனில் காங்கிரஸ் துளி கூட கூட்டணி அறமின்றி தன்னிச்சையாக ஓடிப்போனது. கிட்டத்தட்ட சொந்தக் கட்சிக்காரன் செய்யும் துரோகத்திற்கு நிகரானது அது.
மாறாக, அய்யோ எங்களை திமுக சின்னத்தில் நிற்க வைத்து கழுத்தறுத்துவிட்டார்களே ? சோஃபா போச்சே ? என்று வெளிப்படையாக மதிமுகவும், மமகவும் ஒப்பாரி வைப்பதுதான் அருவருப்பாக உள்ளது.
சரி, அப்படி ஒத்துக்கொண்டு கூட்டணி வைக்கும் போது திமுகவின் பலம் அளப்பரியதாக இருந்தது. இப்பத்தான் இல்லையே ? இப்ப ரிசைன் பண்ணிட்டு அங்கே போய் பச்சையாக சோஃபா ஆஃபர் பண்ணுவதை யார் தடுக்கப் போகிறார்கள் ? இவர்கள் இப்படி கழன்று ஓடுவதால் யாருக்கு நட்டம் ?
போக வேண்டியதுதானே ?
தோற்ற அத்தனை கட்சிகளிலும் இத்தகைய பச்சைத் துரோகங்கள் நிகழ, அசல் திமுககாரன் ஒருத்தனாவது இப்படி தலைமைக்கு துரோகம் செய்ய முயன்றானா ?
அட ஒரு புரளியாவது கிளர்ந்ததா ?
சவுக்கு சங்கர் போன்ற வாய் வேசன்கள் கூட கற்பனை செய்ய முடியவில்லை பார்த்தீர்களா ?
திமுக தலைமை இதைப் பெருமையாக மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது. கட்சிக்கென, கொள்கைக்கென உழைக்கும் அசல், அக்மார்க் திமுககாரர்களுக்கு இனி வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்.
அழியும் பட்டியலிலுள்ள மதிமுக, கம்யூக்கள், காங் போன்ற அல்லு சில்லு கட்சிகளுக்கு வாழ்வளித்து, அவர்களை அழிந்து விடாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை வேறெவன் கையிலாவது ஒப்படைத்துவிட்டு, அதிக வாய்ப்புகளை சொந்தக் கட்சிக்கே அளித்தல் நலம் !
யாவும் நல்லதற்கே.
கட்சிக்கென அயராதுழைக்கும் தங்க உ.பிகளுக்கு இத்தகையத் துரோகிகளால் கிட்டும் பாடம், நலனை விளைவிக்கவுள்ளது !
பகிர்வு 🙏
#திமுக🖤♥️🔥
அதிமுக ஓட்டு = அமித்ஷா ஓட்டு!
நேற்று மதுரை மத்திய தொகுதியின் வெற்றி வேட்பாளர் மதிப்பிற்குரிய அண்ணன் முனைவர் @ptrmadurai அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்த போது!
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன்.
காணுங்கள்…
#வெல்வோம்_ஒன்றாக !
ஏப்ரல் 23 – தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்!
5 ஆண்டுகள் எனக்கு அளிக்கப்பட்ட கடமையை நான் சரியாகச் செய்திருக்கிறேன்; தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக உயர்த்தியிருக்கிறேன்.
எது அடிமைத்தனம், எது தைரியம்? எது நடிப்பு, எது உழைப்பு?
சிந்தித்து வாக்களிப்பீர்! ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை! 🌄
#DMKWinningBig #VoteForDMK #SayNoToNDA #வெல்வோம்_ஒன்றாக
“மனித முட்டாள்தனத்தின் அடிப்படை விதிகள்” - கார்லோ சிப்போலா
#தவெக தற்குறிகளுக்கு சமர்ப்பணம் 👇
🔥முதல் விதி:
முட்டாள்களின் எண்ணிக்கையை எப்போதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்!
தமிழ்நாடு மக்கள் அரணியல் புரிதல் உள்ளவர்கள் என்பதற்கு நேரெதிராக
அரசியலில்:
#தவெக கூட்டம் - மாஸ்,கெத்து என்று வெத்து பந்தா தான் இருக்கு..
…அறிவுபூர்வமான அரசியல் பக்குவமுள்ள கூட்டமாக இருக்காது .
சத்தம் அதிகம் என்பதால் அங்கு சிந்தனை இருக்கணும் என்பதில்லை.
🔥இரண்டாவது விதி:
முட்டாள்தனம் எல்லா தரப்பிலும் இருக்கும்.
பட்டதாரியா இருக்கலாம்.
IT வேலை இருக்கலாம்.
டாக்டரா கூட இருக்கலாம்
பத்திரிக்கையாளரா் கூட இருக்கலாம்
ஆனா…
படிப்புக்கும் வேலைக்கும் தற்குறித்தனத்துக்கும் துளி கூட சம்பந்தமிருக்காது !
🔥மூன்றாவது விதி:
ஒரு முட்டாளின் செயல் – மற்றவரையும் தன்னையும் கெடுக்கும்.
பன்ச் டயலாக்கை political knowledge என்று நம்புறது
வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்று
Hero Hype-க்கு ஓட்டு போடுறது
இது மாற்றம் இல்ல… நமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் தான் தரும் …
🔥நான்காவது விதி:
புத்திசாலிகள் பொதுவாக இவர்களின் முட்டாள்தனத்தின் சக்தியை / விளைவை குறைத்து மதிப்பிடுவார்கள் !
“இது ஒரு fan wave தான்”ன்னு ஆரம்பத்தில் அலட்சியமாக கடந்து செல்வார்கள் ஆனால் அது காலப்போக்கில் narrative ஆகி conspiracy theories ஆக உருவெடுத்து தேர்தல் முடிவுகளை
மாற்றக்கூடும்
🔥ஐந்தாவது விதி:
இவன் முட்டாள்தனம் criminal-ஐ விட ஆபத்தானவர்கள் !
Criminal-க்கு குறைந்தது ஒரு நோக்கம் இருக்கும். ( சங்கிகள் இந்த வகையரா)
ஆனால் இதுங்களோட கண்மூடித்தனமான ஆதரவுக்கு எந்த ஒரு logic க்கும் இருக்காது.
அது தான் உண்மையான அபாயம்.
#பாஜக வும் இதே போல் தான்
12 வருடங்களுக்கு முன்பு , 37% முட்டாள்கள் ஓட்டு போட்டு 2014ல் ஒருவரை பிரதமர் ஆக்கினார்கள் …
அதன் விளைவை 12 வருடங்களாக அவருக்கு ஓட்டு போடாத 67% பேரும் சேர்ந்து அனுபவிக்கிறோம் !
பிரச்சனை என்ன தெரியுமா ?
#விஜய் ஒரு குட்டி #மோடி
இந்தியாவின் நிலை தமிழ்நாட்டுக்கு வர வேண்டாம் …
ஓட்டு போடும் போது…
பக்தியை ஒதுக்கி வைத்துவிட்டு … பகுத்தறிவுடன் வாக்களிப்பீர்
🙏
#VoteForDMKAlliance
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
கேள்வி: DMK-க்கு ஒட்டு போடுறதா இல்லை TVK-க்கு ஒட்டு போடுறதா? ( கடும் குழப்பத்தில் இருக்கும் ஒருவர் கேட்ட கேள்வி)
பதில்: குழப்பமில்லாமல் தெளிவாக முடிவெடுக்க மிக சுலபமான வழி ஒன்று இருக்கு! உங்களுக்கு தெரிந்த வட்டாரத்தில் இருக்கும் அதிதீவிர RSS சங்கியிடம் போய் “DMK,TVK” இந்த இரண்டில் எது ஆபத்தான கட்சின்னு கேளுங்க! அவன் எந்த கட்சி ஆபத்தான கட்சின்னு சொல்றானோ அந்த கட்சிக்கு வாக்கை செலுத்துங்கள்! அவனுக்கு எது ஆபத்தோ அது உங்களுக்கு பாதுகாப்பு கவசம்.... 🙌🙌🤙