கார் வாங்க, புதிய தலமைச் செயலகம் கட்ட பல்லாயிரம் கோடி காசு இருக்கும்.. உழைக்கும் மக்கள் கோரிக்கைக்கு மட்டும் கஜானா காலியாக இருக்கும்.. ஏற்கனவே ஆண்ட நாடகக் கம்பெனிகள் போலவே #தவெக அரசும் அடித்தட்டு மக்கள் விரோத, தொழிலாளர்கள் விரோத புதிய நாடகக் கம்பெனியே…
“கல்வியே ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான முதன்மை ஆயுதம்” என்பதை உணர்ந்து வாழ்நாள் முழுவதும் போராடியவர்
பெரும்தலைவர்,ஐயா எம்.சி.ராஜா ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளுக்காக இரவுப் பள்ளிகளையும், மாணவர் விடுதிகளையும் உருவாக்கி கல்வி ஒளியை ஏற்றிய முன்னோடி.(1/ @beemji
"Certificateல தான் ஜாதி வாழுது"னு சொல்லும் தறுதலைகளையும்,
"எனக்கு தலித் நண்பர்கள் இருக்காங்க"னு சொல்லும் பொறுக்கிப்பயல்களையும்
மிஞ்சும் முட்டாப் பயலாக இருக்கானே இவன். க்ரா...த்தூ💦
சென்னையில் ஒரு ஆணவக்கொலை நடந்து இருக்கிறது. பிரவீன் என்கிற இளைஞர் தான் காதலித்த பெண்ணின் தந்தையால் கொலை செய்யப்பட்டு இருக்கிறார் .
அந்த ஆள் தவெக பிரமுகர்.
அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இருந்தாலும் இப்படி ஒரு கொடுமை முதல்வரின் பார்வைக்கு கீழே நடந்து இருக்கிறது. ஆனால் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எப்படி ஆணவக்கொலைகளுக்கு வாயை திறக்காமல் இருந்தாரோ அப்படியே @CMOTamilnadu இருக்கிறார்.
இது தான் மாற்றமா சார்?
ஆணவக்கொலைக்கு எதிராக எப்பொழுது பேச போகிறீர்கள் முதல்வர் அவர்களே?
I highly condemn your silence.
சென்னை, கோவளத்தில் நடைபெற்ற தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டிற்கு வருகை தந்த தெலங்கானா துணை முதல்வர் திரு.மல்லு பாட்டி விக்ரமார்க்கா @Bhatti_Mallu அவர்களை, நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனத் தலைவர், இயக்குநர் பா.இரஞ்சித் @beemji அவர்கள் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து உரையாடினார்.
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டம்: முழுமையான தீர்வை எட்ட
நீலம் பண்பாட்டு மையம் கோரிக்கை!
தமிழ்நாடு அரசு வெளிநாடுகளில் உயர்கல்வி படிப்பதற்காக ‘அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை’ பெயரில் நிதியுதவி வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் 385 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. 2026–2027ஆம் ஆண்டில் 375 மாணவர்கள் தகுதி பெற்றுள்ள நிலையில், அவர்களுக்கு நிதியுதவி கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 316 பேர் இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு அரசிடமிருந்து @CMOTamilnadu@TVKVijayHQ
நிதியுதவி கடிதங்களைப் பெற்று, விசா பெறுவதற்கான அதிகாரப்பூர்வ நடைமுறைகளை மேற்கொள்ளும்போதுதான், இங்கிலாந்தின் பல பல்கலைக்கழகங்கள் தமிழ்நாடு அரசின் நிதியுதவி கடிதத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்காமல், CAS எனப்படும் Confirmation of Acceptance for Studies சான்றிதழை நிலுவையில் வைத்திருப்பது தெரியவந்துள்ளது. ஒரு மாணவருக்கு விசாவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், Academic Technology Approval Scheme (ATAS) சான்றிதழ் பெற ஏழு முதல் எட்டு வாரங்கள் வரை ஆகும் நிலையில், ஒட்டுமொத்த நடைமுறைகளும் தாமதமாக முன்னெடுக்கப்பட்டதே இத்தகைய குழப்பங்களுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
இதுமட்டுமின்றி, கடந்த காலங்களில் நிதியுதவி பெற்ற மாணவர்களுக்கும் உரிய நேரத்தில் வழங்கப்பட வேண்டிய நிதி வழங்கப்படாததால், வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது.
பாபாசாகேப் அம்பேத்கர் பெயரில் நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இத்திட்டம், உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல், பணிகளைச் சரியான காலத்திற்குள் முடிக்காமல் செயல்படுத்தப்படும்போது, அதன் நோக்கம் சிதைந்து, பெயரளவிலான திட்டமாக மாறும் அபாயம் உள்ளது. ஆகையால், தமிழக வெற்றிக் கழக அரசு கீழ்கண்ட பரிந்துரைகளை ஏற்று, இப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வை ஏற்படுத்த வேண்டும்.
1. விண்ணப்ப நடைமுறையானது ஜனவரி மாதத்தில் தொடங்கி, பிப்ரவரி மாதத்திற்குள் முழுமையாக முடிக்கப்பட்டிருக்க வேண்டும். நடப்பாண்டில் இப்பணி தாமதமாகத் தொடங்கி, ஜூலை இறுதியில்தான் முடிவடைந்துள்ளது. எதிர்வரும் ஆண்டு முதல் இந்தத் தாமதம் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
2. தமிழக அரசின் நிதியுதவி சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற வேண்டும். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் தமிழக அரசின் நிதியுதவியை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் வகையில், தேவையான ஒப்பந்தம் அல்லது தெளிவான அங்கீகாரம் பெற வேண்டும்.
3. மாணவர்கள் விசா, பல்கலைக்கழகங்களுக்கு செலுத்த வேண்டிய வைப்புத்தொகை, தங்குமிடம், பயணச் செலவு போன்றவற்றுக்கு தங்களது சொந்தப் பணத்தை முன்கூட்டியே செலவழிக்க வேண்டிய நிலை தவிர்க்கப்பட வேண்டும். Scholarship sanction மற்றும் payment schedule ஆகியவை முன்கூட்டியே தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும்.
4. அரசின் தாமதத்தால் மாணவர்கள் தங்களுக்குக் கிடைத்த கல்வி வாய்ப்புகளை இழக்க நேரிட்டால், அவர்கள் மீண்டும் ஆரம்பத்திலிருந்து விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடாது.
5. மகாராஷ்டிரா மாநிலம் பல நிலைகளில் இந்த உதவித்தொகைத் திட்டத்தில் முன்னோடியாகத் திகழ்கிறது. தமிழ்நாடு அரசும் வெளிநாட்டுக் கல்வி உதவித்தொகையில் கல்விக் கட்டணம் மட்டுமின்றி, வாழ்க்கைச் செலவு, மருத்துவக் காப்பீடு, பயணச் செலவு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய செலவுகளையும் உள்ளடக்கிய முழுமையான நிதியுதவித் தொகுப்பை வழங்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு, அடுத்த பட்ஜெட்டில் அதற்கான நிதியுதவி உயர்த்தி அறிவிக்கப்பட வேண்டும்.
6. கடந்த ஆண்டுகளில் நிதியுதவிக்குத் தேர்வு செய்யப்பட்டும், உரிய நிதி வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள மாணவர்களின் பட்டியலைத் தயாரித்து, அவர்களுக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள குழப்பங்கள் இனி எந்த ஆண்டிலும் ஏற்படாத வகையில், நடப்பாண்டு பிரச்சனைகளை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும். நிதியுதவிக்குத் தேர்வு செய்யப்பட்ட பின்னரும் பல்வேறு காரணங்களால் அதன் முழுப் பயனைப் பெற முடியாமல் மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படும் மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என
நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்துகிறது. @Neelam_Culture
காசு குடுத்து குவாட்டர் பிரியாணி குடுத்து மாநாட்டுக்கு கூட்டிட்டு வந்தா அவன் செவனேனு ஒரு சேர பிடிச்சி உட்கார்ந்துட்டு தான் இனுப்பான். இது தலைவர் திருமா மீதுள்ள பற்றுதலால் அவரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட சிறுத்தைகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் தான் இருக்கும். உனக்கு எதுக்கு எரியுது.?
ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரல், இந்திய துணைக்கண்டத்தின் தனித்துவ அரசியல் ஆளுமை, எழுச்சித் தலைவர், முனைவர் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்🌸💙 @thirumaofficial 🌸❤️
https://t.co/dIFsbuOb7e
10 years of NEET - Countless lives lost - Systemic exclusion with a different MASK.
We stand with the students. We demand the abolition of NEET.
Watch this powerful drama unfold and join the movement to make medical education accessible to ALL.
@dhamma_the_band
@samuvel.maragatham
@santhosh_krishnan01
@arampa_buddhar
@trendganasanjay
@imman_sagayaraj
@vey.ra.parthi
#dhammatheband
#banNEET
#NEETExposed
#StandTogether
#SaveOurStudents
#JusticeForStudents
#VoiceOfThePeople
#VoiceOfVoiceless
#DTBoriginals
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி 6-வது நாளாக காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தோழர்கள் ஜீவா, தனசேகர், புளியந்தோப்பு மோகன் ஆகியோரை நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் @beemji அவர்கள் நேரில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்து நலம் விசாரித்தார்! #BanNEET#JaiBhim
#NeelamMovements
congratulates💙
Heartiest congratulations to @PraveenChithra1 on winning the Silver Medal & #SelvaPrabhuThirumaran on securing the Bronze Medal in the Men's Triple Jump at the Commonwealth Games 2026.
Your remarkable achievements have made the entirenation proud and inspired millions with your dedication, determination, and excellence. Wishing you both many more successes on the global stage.
@beemji@Neelam_Culture
#NeelamMovements #CommonwealthGames2026 #TeamIndia #PraveenChithravel #SelvaPrabhuThirumaran #TripleJump