போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!
த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!
- இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம்
நீண்டகாலம் நீடிக்காது!
அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!
“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!
ஒரு மனிதனுக்கு இவ்வளவு ஆணவம் இருக்கக் கூடாது. ஒவ்வொரு கட்சியின் அலுவலகமாகச் சென்று சீட்டுப் பிச்சை எடுத்து அவர்களைக் காட்டி மெஜாரிட்டி இருப்பதாகச் சொல்லிவிட்டு, இப்போது யார் தயவிலும் நான் ஆட்சியில் இல்லை, மக்கள் தயவால்தான் ஆட்சியில் இருக்கிறேன் என்று முதலமைச்சர் விஜய் சொல்வது ஆணவம் அல்லாமல் வேறு என்ன?
#முரசொலி
மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சரின் இன்றைய Script பேப்பரில், அரசுப் பள்ளிகளில் நடக்கும் த.வெ.க. அட்ராசிட்டி பற்றிய வசனங்கள் இருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் அதை எழுத மறந்துவிட்டார்கள்போல!
கல்வியை தேடிக் கொண்டிருக்கும் மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தையும் பெருமையின் அடையாளங்களான அரசுப்பள்ளிகளின் செயல்பாடுகளையும்
சிதைக்கும் வகையிலான களேபரங்களுக்கு முடிவு கட்டுங்கள் சி.எம்.சார்.
ஆட்சியாளர்களின் 'சமூக நீதி வேடம்' கலைகிறது..
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு,
"சாதிவாரிக் கணக்கெடுப்பைத்தான் ஒன்றிய அரசு நடத்த வேண்டும். ஆனால், அதற்கு முன்னோட்டமாகத் திகழும் Caste Survey என்ற ஆய்வை மாநில அரசே நடத்தலாமே? அதற்கும் தங்களிடம் அதிகாரம் இல்லை என்று தற்போதைய ஆட்சியாளர்கள் சொல்லப் போகிறார்களா" என வீரவசனம் பேசினார் விஜய்.
இன்று ஆட்சிப்பெறுப்பேற்ற பின், சமூகநீதி கணக்காய்வினை மேற்கொள்ளாமல் ஒன்றிய அரசின் பின்னால் பதுங்கிக் கொள்வது ஏன்?
இதற்குப் பெயர் இரட்டை வேடமா? அல்லது பச்சோந்தித்தனமா?
7 ஆயிரம் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தது திமுக அரசு, Covid காலத்தில் கூட திமுக ஆட்சியின் முதல் start best start ஆக இருந்தது!
கழக மருத்துவர் அணிச் செயலாளர் திரு Dr.எழிலன் நாகநாதன் அவர்கள்
#TVKFails
திமுக ஆதரவாளர்களுக்கு திமுக சட்டத்துறை 100% உறுதுணையாக இருக்கும்!
உண்மையை பேசியதற்காக சட்ட விரோதமாக Social media accounts முடக்கப்பட்டால் மற்றும் பொய் புகார்கள் அளிக்கப்பட்டால் கண்டிப்பாக திமுக உதவும்!